Jump to content

சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்“ என்ற நூலின் அறிமுக நிகழ்வு


Recommended Posts

2019சென்னை புத்தகக் கண்காட்சியில் விடியல் பதிப்பக வெளியீடாக வெளிவந்த சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்“ என்ற நூலின் அறிமுக நிகழ்வு நேற்று பாரிசில் இடம்பெற்றது.
நீண்டகால தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் முகுந்தன்,அரசியல் விமர்சகரும் பொதுவுடைமை செயற்பாட்டாளருமாகிய ரயாகரன்,நூலாசிரியரின் மகனும் அரசியல் தத்துவத்துறையை சோர்ந்தவருமான வசந்த ரூபன்,எழுத்தாளரும் இடதுசாரி செயற்பாட்டாளருமாகிய வி.ரி. இளங்கோவன் ஆகியோர் இந்த நூல் சார்ந்தும் ,இந்த நூலில் குறிப்பிடப்படும் சமூகப் பிரச்சனை சார்ந்தும் தமது மதிப்புரைகளைத் தெரித்தனர்.
வரலாற்றுப் பதிவுகளை நேர்மையுடனும் துணிச்சலுடனும் பதிவு செய்துள்ள இந்த நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிசம் என்று பாராட்டிய முகுந்தன் இந்த நூலின் 5 ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்படும் கந்த முருகேசனாருடைய கல்வி முறையை நமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இலங்கைத் தமிழர்கள் எழுதியுள்ள நூல்களில் "நினைவாயா வடுக்கள்" என்ற சிவா சின்னப்பொடியின் நூல் தனித்துவமிக்கது. ஈழத்துச் சாதிய அனுபவத்தைப் பதிவாக்கியுள்ள முதல் நூல் என்று குறிப்பிட்ட ரயாகரன் தமிழ்ச் சமூகத்தின் அக ஒடுக்குமுறைகளை வரலாற்றுரீதியான அதன் பன்முகத்தன்மையைப் பற்றிப் பேசும், நூலாக இருக்கிறது என்றும் “இந்த நூல் சாதிய ஒடுக்குமுறையையொட்டிய பல புதிய தரவுகளைக் கொண்டு இருப்பதுடன், அவை வரலாற்றுக்கு புதியவை”. என்றும் கூறினார் இதன் உண்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க யாராலும் முடியாது. என்று குறிப்பிட்ட ரயாகரன்
“இலங்கை வாழும் தமிழ் மக்களும், இலங்கை வாழ் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என்றும் . சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டமின்றி, இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டமும் சரி, இலங்கையில் வர்க்கப் போராட்டமும் வெற்றி பெற முடியாது என்பதையும் வலியுறுத்தினார்.
1981 ல் தனது தந்தை உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியாத நிலையில் வாழ்ந்த தான்,1983 ல் அவரது குரல் போராளிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழத்தின் குரல் வானொலியில் ஒலித்த போது, தன்னுடைய நண்பர்கள் தன்னை போராளியின் மகன் என்று தோளில் தூக்கிக் கொண்டாடியதை நினைவு கூர்ந்த நூலாசிரியரின் மகன் வசந்த ரூபன்1980 களின் நடுப்பகுதியில் தஞ்சாவூரிலிருந்த தனது தந்தையின் வீரியத்தையும் போர் குணத்தையும் ஆளுமையையும் அவர் பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து வந்தபின்னர் பார்க்க முடியவில்லை என்றும்  குறிப்பிட்டார்.தனக்கு ஊர் மற்றும் சாதிய அடையாளங்கள் கிடையாதென்றும் தமிழ்த் தேசிய அடையாளம் என்ற ஒன்றுதான் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். 
தமிழீழத்தில் இப்போது சாதிக்கொரு கோவில்,சாதிக்கொரு திருமண மண்டபம், சாதிக்கொரு மயானம் கூட கட்டப்படும் நிலையை விரி.இளங்கோவன் எடுத்துரைத்தார்.
இறுதியாக ஏற்புரை வழங்கிய சிவா சின்னப்பொடி அவர்கள் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்ததுடன் தன்னுடைய மகனின் குற்றச்சாட்டைத் தான் ஏற்பதாகவும் புலத்தில் நேர்மையற்ற போலிகளை வெல்லமுடியாமல் போனது தனது தோல்வி என்பதையும் ஒத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வை முன்னாள் போராளி அமலன் தொகுத்து வழங்கினார்.

https://www.facebook.com/pg/நினைவழியா-வடுக்கள்-2122148908082914/photos/?ref=page_internal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு சிவா அண்ணை. யாழ் அன்பர்களுக்குப் புடுங்குப் பட வேறு விடயங்கள் இருப்பதால், உங்கள் சொந்தப் படைப்புகள் பற்றி வாழ்த்துச் சொல்ல நேரமில்லாமல் இருக்கிறார்கள். 

வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ....நினைவழியா வடுக்கள் அனைவராலும் விரும்பி வாசிக்க பட வேண்டும்......!   🌺

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஐயா.

7 minutes ago, Justin said:

நன்றி பகிர்வுக்கு சிவா அண்ணை. யாழ் அன்பர்களுக்குப் புடுங்குப் பட வேறு விடயங்கள் இருப்பதால், உங்கள் சொந்தப் படைப்புகள் பற்றி வாழ்த்துச் சொல்ல நேரமில்லாமல் இருக்கிறார்கள். 

ஏன் அண்ணா?!

Link to comment
Share on other sites

17 hours ago, Justin said:

நன்றி பகிர்வுக்கு சிவா அண்ணை. யாழ் அன்பர்களுக்குப் புடுங்குப் பட வேறு விடயங்கள் இருப்பதால், உங்கள் சொந்தப் படைப்புகள் பற்றி வாழ்த்துச் சொல்ல நேரமில்லாமல் இருக்கிறார்கள். 

வாழ்த்துக்கள். 

நன்றி ஜஸ்டின் 

17 hours ago, suvy said:

வாழ்த்துக்கள் ....நினைவழியா வடுக்கள் அனைவராலும் விரும்பி வாசிக்க பட வேண்டும்......!   🌺

 

நன்றி சுவி 

எனது நூலுக்கு வந்தவிமர்சனங்கள் 

 

தங்களின் நூலை வாசித்தேன். ஏற்கெனவே வாசித்துள்ள 'அனார்யா'இ 'உச்சாலியா' முதலிய - மராத்திய தலித்துகளின் தன்வரலாற்று நூல்களைப்போல்இ சிறப்பான நூலாக உள்ளது. ஈழத்தின் வடபிரதேசத்தில் முன்னர் நடைபெற்ற சாதிய ஒடுக்குமுறைகள் பற்றிஇ அவ்வப்போது வாசித்தும் செவிவழி கேள்விப்பட்டும் அறிந்துள்ளேன். உங்கள் அனுபவங்களூடாக அக்காலச் சூழல் பதியப்பட்டிருப்பதில் புதியனவற்றை அறிய முடிந்தது. அவற்றுக்கு வரலாற்று ஆவணத்தன்மையையும் கொடுத்துள்ளீர்கள். எவ்வளவு கொடூரங்களைத் தமிழர்களே தம்மில் ஒருபிரிவினருக்குச் செய்துள்ளார்கள் என்பதுஇ வெட்கத்தையும் மனவலியையும் ஏற்படுத்துகின்றது! கதிர்காமர் ஆசிரியரின் சின்னத்தனங்கள்இ சிறுவனாக நீங்கள் கையில் பிழாவில் பாலை வைத்துக்கொண்டு பாண்துண்டைப் பெறப் பட்ட சிரமம்இ சின்னாச்சி என்ற கன்னிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அவமானமும் அதனால் ஏற்பட்ட தற்கொலையும்இ குடிசையுடன் மூவர் எரித்துக்கொல்லப்பட்டதுஇ நெல்லியடிச் சந்தியில் எம். சி. சுப்பிரமணியம் குழுவினருக்குச் செய்யப்பட்ட அவமரியாதைஇ இணுவில் சாப்பாட்டுக் கடையில் உங்களுக்கும் ஐயாவுக்கும் நடைபெற்ற கொடுமைகள்இ விறகுமலையைக் கொத்தி அடுக்கும் குரூரத் தண்டனை போன்றவை எல்லாம்இ மனத்தில் பதிந்தவை. அதுபோல் பொன் கந்தையாஇ கந்தமுருகேசனார்இ மேரி ரீச்சர்இ நாகர்கோவில் சம்மாட்டியார் போன்ற ஏனைய சமூகத்து நல்ல மனிதரின் ஆதரவான செயல்கள் பதியப்பட்டுள்ளமையும் முக்கியமானது! சாதிய மாற்றங்கள்இ சாதிக்குள் சாதி பார்த்தல் பற்றிய குறிப்புகளும் (கே. வி. நடராஜன் 'ஒன்றுக்குள் ஓராயிரம்' சிறுகதையை எழுதி 'மல்லிகை'க்குக் கொடுத்தபோதுஇ டொமினிக் ஜீவா அதனை வெளியிட மறுத்துவிட்டாராம்!) முக்கியமானவை.
இணுவில் சம்பவத்தில் மகனுக்கு முன்னால் தந்தை அடிவாங்கி அவமானமுறுவதன் வலிபற்றிய சித்திரிப்பு கவனத்துக்குரியது. இத்தாலிய நவயதார்த்தவாத திரைப்பட நெறியாளரான 'விற்றோறியோ டி சீக்கா'வின்இ 'பைசிக்கிள் தீவ்ஸ்' என்னும் புகழ்பெற்ற திரைப்படத்திலும்இ இவ்வாறான நிகழ்வும் துயரும் சித்திரிக்கப்படுகின்றன. தனது சைக்கிள் களவுபோனபின் – அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் – இன்னொருவரின் சைக்கிளைத் திருடும்போது பிடிபடும் ஒருவர்இ மகனான சிறுவனின் முன்னாலேயே கும்பலால் தாக்கப்படுகிறார். அவர்படும் வேதனையும்இ மகனின் அழுகையும் மனத்தை உருக்குவன! 
நூலின் அட்டைப்படங்களை வரைந்த வீரக்கொடிகே வசந்த பெரேராவைப் பாராட்டவேண்டும்; அட்டையைச் சிறப்பாக வடிவமைத்துள்ளார். பொதுவில் புத்தகம் நன்றாக வந்துள்ளது.

மேலும்இ தங்களின் தந்தையார் வாசகர் மனதில் நிச்சயம் இடம்பிடிப்பார். நீங்கள் (நாங்களும்) மரியாதை கொடுக்கும் அவரின் ஒளிப்படம் கட்டாயம் இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அக்காலத்தில் ஒளிப்படம் எடுக்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்டிருக்கும்; ஆயினும்இ 2000 இல் இறக்கும் அவர்இ பிந்திய காலத்தில் இடம்பெறும் ஒளிப்படம் ஒன்றாவது கிடைக்கவில்லையா! இரண்டாவது பதிப்பில்இ தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள். 
சாதி வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் இடதுசாரிகளின் - குறிப்பாக சீனசார்பு கொம்யூனிஸ்டுகளின் பாத்திரம் முக்கியமானதே; ஆயினும்இ அதே காலகட்டங்களில் பொதுவான (ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் உட்பட) தமிழ் மக்கள் இனவன்முறைகளினாலும்இ மொழிப் பாரபட்சங்களினாலும்இ சிங்களக் குடியேற்றங்களினாலும் பாதிப்புற்றதை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஸ்டாலினின் வரையறைகளில் ஒன்றான 'பொதுப் பொருளாதாரம்' ஈழத் தமிழருக்கு இல்லையெனஇ 'தேசிய இனம்' என்ற அடையாளத்தையே நீண்டகாலமாக மறுத்தார்கள். அதேபோலஇ பிழையான சமப்படுத்தல்களையும் பிரச்சாரம் செய்தனர். உ 10 ம் வெளிமடை நா. உ.இ கே. எம். பி. ராஜரத்தினாஇ 'தமிழரின் தோலில் செருப்புத் தைத்துப் போடுவேன்' என்று கூறியதைப் போல்இ அமிர்தலிங்கமும் சிங்களவரை வைத்துப் பேசியதாகப் பொய்யாய்ச் சமப்படுத்தினர். இரண்டு மாதங்களாக வடக்குக் கிழக்கில் அரசாங்க நிர்வாக அலுவல்களை முடக்கிய – வெகுஜனங்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற – சத்தியாக்கிரகப் போராட்டத்தை வெறுமனேஇ 'சப்பாணிப் போராட்டம்' என்று நக்கலடித்தார்கள்! இவைபோன்றவற்றை (விரிவாக இல்லாவிடினும்) கோடிகாட்டியாவது உங்கள் 'என்னுரை'யில் குறிப்பிட்டிருக்கவேண்டும் எனக் கருதுகிறேன்! இல்லையாயின்இ நமது கொம்யூனிஸ்டுகள் பற்றிஇ 'ஒருபக்க' - ஒளிவட்டத் தோற்றமே வாசகரின் மனதில் பதியும்!
எவ்வாறாயினும் உங்களின் எழுத்துப் பணி முக்கியமானது; உங்கள் வெளிப்பாட்டு மொழிநடை தெளிவுடனும் எளிமையுடனும் உள்ளது. வாழ்த்துகள்! 
அ. யேசுராசா
குருநகர்.

Link to comment
Share on other sites

New Democratic People's Front
6 பிப்ரவரி, பிற்பகல் 9:52 ·

2019 தை மாதம் தமிழகத்தில் நடந்த நூல் கண்காட்சியில் "நினைவழியா வடுக்கள்" நூல், விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, முழுப்பிரதியும் விற்றுவிட்ட நிலையில், இரண்டாவது பதிப்பு வெளிவர இருக்கின்றதை அறிய முடிகின்றது. இந்த நூல் குறித்து இரண்டு வருடத்துக்கு முன்பு டென்மார்க்கில் எமது தோழர் ஒருவரின் மரணச்சடங்குக்கு சென்று திரும்பிய போது, கடந்தகால சாதிய ஒடுக்குமுறையின் வரலாறு குறித்து சிவா சின்னப்பொடியுடன் விமான நிலையத்தில் நீண்ட நேரம் உரையாட முடிந்தது. நூலாக கொண்டு வருமாறு வேண்டினேன். நூல் வெளிவந்தவுடன், எனக்கு அதைக் கொண்டு வந்து தந்திருந்தார். நூலை வாசிக்க தொடங்கியவுடன், வாசிப்பை நிறுத்த முடியாத அளவுக்கு, நூல் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலுடன் இணைந்;துவிடுகின்றது.

"தமிழர்கள்" என்ற கூறிக் கொண்டவர்கள், தங்கள் தந்தையுடன் - தாயுடன் இணைந்து எமது இளமைக் காலத்தில் பிற மனிதர்களுக்கு இழைத்த கொடூரங்களையும், கொடுமைகளையும் இந்த நூல் பதிவாக்கி இருக்கின்றது. மறுக்க முடியாத ஆதாரங்களை, சாதிய சமூக அடிப்படையில் முன்வைத்து இருப்பதுடன், மனித மனச்சாட்சிக்கு முன் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது. இன்றைய சாதிய சமூகம், அன்றைய சாதியத்தின் நீட்சியாக இருப்பதை புரிந்துகொள்ள, இந்த நூல் முக்கியமான வரலாற்று நூலாகும்.

நீ யார் எனின், நீயொரு மனிதன், ஆனால் மனித வரலாறு என்பது, மனித வரலாறாக இல்லை. மாறாக மனிதனை மனிதன் ஒடுக்கும் வரலாறாக இருக்கின்றது. இந்த வகையில் சிவா சின்னப்பொடியின் "நினைவழியா வடுக்கள்" நூல், தமிழ் சமூகத்தினால் வெறுக்கப்படும் என்பது உண்மை. தமிழ் சமூகத்தின் அக ஒடுக்குமுறைகளை வரலாற்றுரீதியான அதன் பன்முகத்தன்மையை பற்றிப் பேசும், நூலாக இருப்பதே இதற்கான காரணமாகும்.

இந்த நூல் சாதிய ஒடுக்குமுறையையொட்டிய பல புதிய தரவுகளைக் கொண்டு இருப்பதுடன், அவை வரலாற்றுக்கு புதியவை. இதன் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்க யாராலும் முடியாது.

Link to comment
Share on other sites

•சிவா சின்னபொடியின் “ நினைவழியா வடுக்கள்”

கலை இலக்கியத்தின் பணி சதா சர்வகாலமும் அம்பலப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருப்பதுதான்.- தோழர் மாவோ சேதுங்

சிவா சின்னபொடி அவர்கள் ஏழதிய “ நினைவழியா வடுக்கள்” நூல் 1960 களில் இடம்பெற்ற சாதீய தீண்டாமைக் கொடுமைகளை நன்கு அம்பலப்படுத்தியுள்ளது.

அவர் அதனை தன் சொந்த அனுபவங்களினூடாக விபரித்துள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

சிவா சின்னபொடி அவர்களை நான் 1985ல் தஞ்சாவூரில் சந்தித்தேன். அப்போது அவர் புளட் இயக்கத்தில் இருந்தார். ஆனாலும் அவர் புரட்சிகர அமைப்புகளுடன் உறவுகளை கொண்டிருந்தார்.

என்;னை கேரளாவுக்கு அழைத்தச் சென்று அங்குள்ள நக்சலைட்டுகளுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்த சிவா சின்னபொடி அவர்களின் பங்களிப்பை என்னால் மற்க்க முடியாது.

நானும் சிவா சின்னபொடி அவர்கள் நூலில் குறிப்பிட்ட வடமராட்சிப் பிரதேசத்தை சேர்ந்தவன் என்பதால் அவர் எழுதிய தீண்டாமைக் கொடுமைகளை நன்கு அறிந்திருக்கிறேன்.

ஆனால் அக் கொடுமைகளை சிவா சின்னப்பொடி அனுபவித்திருக்கிறார் என்பதை அவரது இந்த நூலின் மூலமே அறிகிறேன்.

1960 களில் இடம்பெற்ற சாதீய தீண்டாமைக் கொடுமைகளும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் டானியல் போன்றவர்களினால் எற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக 1980 களுக்கு பின்னர் இளைஞர்களின் ஆயதப் போராட்டங்களின் போதும் அதன் பின்னரும் சாதீய மற்றும் தீண்டாமை கொடுமைகள் எந்தளவில் உள்ளன என்பது பற்றி போதிய பதிவுகள் இல்லை.

எனவே சிவா சின்னப்பொடி போன்றவர்கள் அவை குறித்து எழுத வேண்டும் என்பது என் போன்றவர்களின் விரும்பமும் வேண்டுகோளும் ஆகும்.

தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் பெற்றிருக்கும் உரிமைகள் யாவும் போராடிப் பெற்றவை என்பதையும் இனியும் போராட வேண்டும் என்பதையும் இந் நூலில் சிவா சின்னபொடி அவர்கள் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நண்பரே ..... நீங்கள் உங்களை யாழ் அரிச்சுவடியில் ஒரு சிறிய அறிமுகம் செய்யலாமே . அங்கு இந்த இணைப்பை கொடுத்து விட்டால் பலரும் வந்து பார்வையிடுவார்கள் .......!  😁

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நல்லது நண்பரே ..... நீங்கள் உங்களை யாழ் அரிச்சுவடியில் ஒரு சிறிய அறிமுகம் செய்யலாமே . அங்கு இந்த இணைப்பை கொடுத்து விட்டால் பலரும் வந்து பார்வையிடுவார்கள் .......!  😁

அவர் பழைய உறுப்பினர் :)

வாழ்த்துகள் ,புத்தகத்தை வாங்கி படிக்க முயற்சிக்கிறேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்ட கால வரலாற்றையே திரித்து எழுதி தம்மை நிலைநிறுத்த முன்னெடுக்கும் பலர் உள்ள இந்தக் காலத்தில் அதற்கும் முந்தைய காலகட்டத்தின் வரலாற்றை ஒளிவுமறைவின்றி கொண்டுள்ள நினைவழியா வடுக்கள் நூலை நானும் வாசிக்க ஆவலாக உள்ளேன்.

இலண்டனில் பெளசர் மூலம் எடுக்கமுடியுமா? அல்லது இணையவழியாக ஓர்டர் செய்யமுடியுமா?

Link to comment
Share on other sites

12 hours ago, Siva Sinnapodi said:

நன்றி ஜஸ்டின் 

நன்றி சுவி 

எனது நூலுக்கு வந்தவிமர்சனங்கள் 

 

தங்களின் நூலை வாசித்தேன். ஏற்கெனவே வாசித்துள்ள 'அனார்யா', 'உச்சாலியா' முதலிய - மராத்திய தலித்துகளின் தன்வரலாற்று நூல்களைப்போல், சிறப்பான நூலாக உள்ளது. ஈழத்தின் வடபிரதேசத்தில் முன்னர் நடைபெற்ற சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி அவ்வப்போது வாசித்தும் செவிவழி கேள்விப்பட்டும் அறிந்துள்ளேன். உங்கள் அனுபவங்களூடாக அக்காலச் சூழல் பதியப்பட்டிருப்பதில் புதியனவற்றை அறிய முடிந்தது. அவற்றுக்கு வரலாற்று ஆவணத்தன்மையையும் கொடுத்துள்ளீர்கள். எவ்வளவு கொடூரங்களைத் தமிழர்களே தம்மில் ஒருபிரிவினருக்குச் செய்துள்ளார்கள் என்பது வெட்கத்தையும் மனவலியையும் ஏற்படுத்துகின்றது! கதிர்காமர் ஆசிரியரின் சின்னத்தனங்கள் சிறுவனாக நீங்கள் கையில் பிழாவில் பாலை வைத்துக்கொண்டு பாண்துண்டைப் பெறப் பட்ட சிரமம் சின்னாச்சி என்ற கன்னிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அவமானமும் அதனால் ஏற்பட்ட தற்கொலையும்இ குடிசையுடன் மூவர் எரித்துக்கொல்லப்பட்டது, நெல்லியடிச் சந்தியில் எம். சி. சுப்பிரமணியம் குழுவினருக்குச் செய்யப்பட்ட அவமரியாதை, இணுவில் சாப்பாட்டுக் கடையில் உங்களுக்கும் ஐயாவுக்கும் நடைபெற்ற கொடுமைகள், விறகுமலையைக் கொத்தி அடுக்கும் குரூரத் தண்டனை போன்றவை எல்லாம், மனத்தில் பதிந்தவை. அதுபோல் பொன் கந்தையா, கந்தமுருகேசனார், மேரி ரீச்சர், நாகர்கோவில் சம்மாட்டியார் போன்ற ஏனைய சமூகத்து நல்ல மனிதரின் ஆதரவான செயல்கள் பதியப்பட்டுள்ளமையும் முக்கியமானது! சாதிய மாற்றங்கள், சாதிக்குள் சாதி பார்த்தல் பற்றிய குறிப்புகளும் (கே. வி. நடராஜன் 'ஒன்றுக்குள் ஓராயிரம்' சிறுகதையை எழுதி 'மல்லிகை'க்குக் கொடுத்தபோது, டொமினிக் ஜீவா அதனை வெளியிட மறுத்துவிட்டாராம்!) முக்கியமானவை.
இணுவில் சம்பவத்தில் மகனுக்கு முன்னால் தந்தை அடிவாங்கி அவமானமுறுவதன் வலிபற்றிய சித்திரிப்பு கவனத்துக்குரியது. இத்தாலிய நவயதார்த்தவாத திரைப்பட நெறியாளரான 'விற்றோறியோ டி சீக்கா'வின், 'பைசிக்கிள் தீவ்ஸ்' என்னும் புகழ்பெற்ற திரைப்படத்திலும், இவ்வாறான நிகழ்வும் துயரும் சித்திரிக்கப்படுகின்றன. தனது சைக்கிள் களவுபோனபின் – அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் – இன்னொருவரின் சைக்கிளைத் திருடும்போது பிடிபடும் ஒருவர், மகனான சிறுவனின் முன்னாலேயே கும்பலால் தாக்கப்படுகிறார். அவர்படும் வேதனையும், மகனின் அழுகையும் மனத்தை உருக்குவன! 
நூலின் அட்டைப்படங்களை வரைந்த வீரக்கொடிகே வசந்த பெரேராவைப் பாராட்டவேண்டும்; அட்டையைச் சிறப்பாக வடிவமைத்துள்ளார். பொதுவில் புத்தகம் நன்றாக வந்துள்ளது.

மேலும், தங்களின் தந்தையார் வாசகர் மனதில் நிச்சயம் இடம்பிடிப்பார். நீங்கள் (நாங்களும்) மரியாதை கொடுக்கும் அவரின் ஒளிப்படம் கட்டாயம் இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அக்காலத்தில் ஒளிப்படம் எடுக்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்டிருக்கும்; ஆயினும்இ 2000 இல் இறக்கும் அவர், பிந்திய காலத்தில் இடம்பெறும் ஒளிப்படம் ஒன்றாவது கிடைக்கவில்லையா! இரண்டாவது பதிப்பில், தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள். 
சாதி வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் இடதுசாரிகளின் - குறிப்பாக சீனசார்பு கொம்யூனிஸ்டுகளின் பாத்திரம் முக்கியமானதே; ஆயினும், அதே காலகட்டங்களில் பொதுவான (ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் உட்பட) தமிழ் மக்கள் இனவன்முறைகளினாலும், மொழிப் பாரபட்சங்களினாலும்இ சிங்களக் குடியேற்றங்களினாலும் பாதிப்புற்றதை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஸ்டாலினின் வரையறைகளில் ஒன்றான 'பொதுப் பொருளாதாரம்' ஈழத் தமிழருக்கு இல்லையென, 'தேசிய இனம்' என்ற அடையாளத்தையே நீண்டகாலமாக மறுத்தார்கள். அதேபோல, பிழையான சமப்படுத்தல்களையும் பிரச்சாரம் செய்தனர். உ 10 ம் வெளிமடை நா. உ.இ கே. எம். பி. ராஜரத்தினா, 'தமிழரின் தோலில் செருப்புத் தைத்துப் போடுவேன்' என்று கூறியதைப் போல்இ அமிர்தலிங்கமும் சிங்களவரை வைத்துப் பேசியதாகப் பொய்யாய்ச் சமப்படுத்தினர். இரண்டு மாதங்களாக வடக்குக் கிழக்கில் அரசாங்க நிர்வாக அலுவல்களை முடக்கிய – வெகுஜனங்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற – சத்தியாக்கிரகப் போராட்டத்தை வெறுமனே 'சப்பாணிப் போராட்டம்' என்று நக்கலடித்தார்கள்! இவைபோன்றவற்றை (விரிவாக இல்லாவிடினும்) கோடிகாட்டியாவது உங்கள் 'என்னுரை'யில் குறிப்பிட்டிருக்கவேண்டும் எனக் கருதுகிறேன்! இல்லையாயின்இ நமது கொம்யூனிஸ்டுகள் பற்றி 'ஒருபக்க' - ஒளிவட்டத் தோற்றமே வாசகரின் மனதில் பதியும்!
எவ்வாறாயினும் உங்களின் எழுத்துப் பணி முக்கியமானது; உங்கள் வெளிப்பாட்டு மொழிநடை தெளிவுடனும் எளிமையுடனும் உள்ளது. வாழ்த்துகள்! 
அ. யேசுராசா
குருநகர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், சின்னப்பெடி..

சாதீய கொடுமைகள், தமிழகத்தைவிட ஈழத்தில் அதிகமிருந்திக்கும் போல தெரியுதே!

Link to comment
Share on other sites

On 3/2/2019 at 4:31 PM, கிருபன் said:

விடுதலைப் போராட்ட கால வரலாற்றையே திரித்து எழுதி தம்மை நிலைநிறுத்த முன்னெடுக்கும் பலர் உள்ள இந்தக் காலத்தில் அதற்கும் முந்தைய காலகட்டத்தின் வரலாற்றை ஒளிவுமறைவின்றி கொண்டுள்ள நினைவழியா வடுக்கள் நூலை நானும் வாசிக்க ஆவலாக உள்ளேன்.

இலண்டனில் பெளசர் மூலம் எடுக்கமுடியுமா? அல்லது இணையவழியாக ஓர்டர் செய்யமுடியுமா?

நன்றி கிருபன் விரைவில் உங்களுக்கு கிடைக்க ஏற்பாடுசெய்கிறேன் 

21 hours ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் சின்னபொடி.

நன்றி ஈழப்பிரியன் 

16 hours ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள், சின்னப்பெடி..

சாதீய கொடுமைகள், தமிழகத்தைவிட ஈழத்தில் அதிகமிருந்திக்கும் போல தெரியுதே!

நன்றி ராஜவன்னியன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். அண்ணா

Link to comment
Share on other sites

23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாழ்த்துக்கள். அண்ணா சகோதரி 

நன்றி 

Just now, Siva Sinnapodi said:

நன்றி சகோதரி 

 

7 hours ago, சுவைப்பிரியன் said:

வாழ்த்துக்கள்.

நன்றி 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2019 at 7:53 PM, Siva Sinnapodi said:

நன்றி கிருபன் விரைவில் உங்களுக்கு கிடைக்க ஏற்பாடுசெய்கிறேன்

பெளசரிடம் இருந்து வாங்கிக்கொண்டேன்.  தெரிந்த ஊர்களின் தெரியாத வரலாறுகளை தெரிந்துகொள்ள உதவியது. 

ஹாட்லிக் கல்லூரி புட்டளைக்கு இடம்பெயர்ந்திருந்த காலத்தில் கந்தமுருகேசனார் சிலையைத் தாண்டி ஒவ்வொருநாளும் போயிருந்தாலும் அவரது முக்கியத்துவம் தெரியாமல்தான் இருந்தது. 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
On 3/2/2019 at 11:10 PM, Siva Sinnapodi said:

 

On 3/2/2019 at 11:10 PM, Siva Sinnapodi said:

 

நினைவழியா வடுக்கள் - சிவா சின்னப்பொடி

நான் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி யாழ்ப்பாணம் செல்லும் வரை எனக்கு யாழ்ப்பாணத் தமிழ் சாத்தியக்கூறுகள் பற்றிய எந்த அறிவும் கிடையாது. சாதியத்தின் தீவிரத்தன்மை, மற்றும் அதன் தாக்கங்கள் பற்றியும் தெரியாது. நான் அதுவரை வாழ்ந்த சமூகத்தில் வர்க்கம் சார்ந்த ஒடுக்கு முறைகளைப் பார்த்திருக்கிறேன் நேரடியாகவும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் தமிழர் வாழ்வியலில் சாதியம் பெரும் பங்கு வகிக்கின்றதென்பதை யாழ்ப்பாணம் வந்த பின்பே உணரத் தொடங்கியிருந்தேன்.

ஆனால் சாதியம் சமூகத்தில் எவ்வாறு வேறூன்றியிருக்கிறது அது இன்னும் தலைமுறைகளாக கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை யாழ்ப்பாணத்தில் அனுபவமாகவே உணர்ந்து கொண்டேன் இது தவிர விதை குழுமத்தால் மாதாந்தம் இடம்பெற்ற இலங்கை இன முரண்பாடு தொடர்பான கலந்துரையாடல்கள் பல விடயங்களை அறிந்துகொள்ளவும், விவாதிக்கவும் வாய்ப்பாக அமைந்தது.

‘நினைவழியா வடுக்கள்’ எனும் இப்புத்தகம் இவற்றுக்கெல்லாம் மேலாகவொரு புதிய தரிசனத்தையும் கூடவே மன உழைச்சலையும் தந்திருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தையும் மிகச் சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. சாதியத்தின் அடிப்படையில் நடந்த கொடூரங்களின் சாட்சிகளாய் சிவா சின்னப்பொடி அவர்கள் இருக்கிறார். சாதியப் பிரச்சினைகளுக்கு ஈழத்தில் இப்படியொரு வரலாறு இருந்திருக்குமென்பதை இதற்கு முன் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தின் முற்பகுதியில் நடந்த சம்பவங்கள் மற்றும் எழுபதுகளில் நடந்தவை தொடர்பில் படித்தும் கேட்டும் இருக்கிறேன். அதற்கு முன்பான காலங்கள் குறித்த மிக முக்கிய பதிவுசெய்தலாக ‘நினைவழியா வடுக்கள்’ இருக்கிறது.

நாம் காலம் காலமாக பேசிவரும் பெருமைமிகு தமிழர் வாழ்வியலும் வரலாறுகளும் வெட்கி நிற்கும் மிக மோசமான வரலாற்றுப் பக்கங்களும் நமக்குள்ளே நம் அண்மிய காலத்தில்தான் நடந்ததேறியிருக்கின்றது. அதன் வேறொரு பரிணாமமாக இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

என்னுடைய எட்டு வயது ஞாபங்களை நினைவுறுத்தும் போது முதல்நாள் பள்ளிக்கூடம் போனது அந்த வகுப்பறை கொஞ்சம் இருளாக இருந்ததால் பயந்து அழுதது மாதிரி மிகச் சொற்ப சம்பவங்களே நினைவிருக்கின்றன. ஆனால் வெறும் எட்டு வயதில் ஒரு சிறுவனுக்கு நடந்த விடயங்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் இத்தனை தெளிவாய் நினைவிருக்கிறதென்பது அந்த வயதில் இந்த சமூகம் அந்தச்சிறுவனுக்கு எவ்வளவு ஆறா வடுக்களை அளித்திருக்கின்றதென்பதை ஊகிக்க முடிகின்றது. அதிலிருந்து விடுபட்டு இன்று ஓரளவுக்கேனும் சமுக விடுதலை பெற்றதன் பின்னால் இருந்த வலிகளையும் அதற்காக அயராத போராட்டங்களையும் அவரது ஞாபக அடுக்களிலிருந்து விவரிக்கின்ற போது பெரும் ஆற்றமை எழுகிறது. அதற்காக அவரின் தந்தையின் போராட்டமும், வலிகளும், முனைப்புக்களுடனும் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வீரியத்துடன் அசராது நின்றதெல்லாம் அசாத்தியமானதொன்று.

மிகப் பிரதானமாக ஆதிக்க சாதிகளின் வெவ்வேறு வடிவங்களிலான ஒடுக்கு முறைகளையும், அவற்றுக்கெதிரான போராட்டங்களையும் சொல்லிச் சென்றாலும் அக்காலத்தில் இருந்த போலித் தமிழ்த் தலைவர்களின் உண்மை முகங்களையும் அவர்களின் போலி சமத்துவச் செயற்பாடுகள் பற்றியும் சொல்கிறார் மற்றும் ஆதிக்க சாதிகள் எவ்வாறெல்லாம் இந்த ஆண்டான் அடிமை முறையை தக்க வைக்கவும், தொடர்ந்தும் சாதி அடிப்படையில் ஒடுக்கப்படுகின்ற மக்களை சிந்திக்கவிடாமல், இவர்களின் அடக்குமுறை சரியானதே என எண்ணுமளவிற்கு வைத்திருக்க, அவர்களின் மூலதன உருவாக்கத்தை தடுக்க இன்னும் என்னவெல்லாமோ செய்து தமது மேட்டுக்குடி மனோபாவத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்தினார்கள் என்பதெல்லாம் வாசிக்கும் போது வியப்பேதுமெழவில்லை ஏனென்றால் அதன் வேறொரு வடிவ ஒடுக்கு முறையையும், மேட்டுக்குடி மனோபாவத்தையும் இப்போதும் பார்க்கிறோம் தானே. மனிதத் தன்மையற்ற மிக மோசமான இந்தச் சமூகங்களின் மத்தியில் தான் கந்த முருகேசனார், பசுபதி ஆசிரியர், மேரி ரீச்சர், நாகர்கோயில் கிராம மக்களென சக மனிதர்களைப் புரிந்து கொன்கின்ற சாதரண மனிதர்களும் இருந்தார்கள்.

தமிழ் மக்களிடையிலான இந்தப் பிரிவினைகளை வைத்து அதில் லாபமடைந்த இலங்கை அரசின் செயற்பாடுகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மற்றும் பௌத்த பேரினவாதச் சிந்தனையின் தோற்றம் பற்றியும் அங்கங்கு சொல்லிச் செல்கிறார். தோள்சீலைப் போராட்டம் எல்லாம் யாழ்ப்பாணத்தில் நடந்ததென்பது எனக்கு புதிய தகவலாயிருந்தது.

இந்தச் சம்பவங்களின் தொகுப்பில் ஒரு விடயம் இன்னமும் மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. 
பள்ளிக்கூடத்திற்கு புது சட்டை அணிந்து வந்த போது அதைப் பொறுக்காது வாழை மடலால் அடித்து ஆடையை கறை படச் செய்வதெல்லாம் எவ்வளவு வக்கிரம் அதுவும் ஒரு ஆசிரியர் அதைச் செய்வதெல்லாம் அபத்தத்தின் உச்சம் அல்லவா. இந்த தடித்தனம்தான் தங்களை ஆண்ட சாதிகளாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

நம் காலத்தின் முன்னால் நடந்த இந்த மோசமான அடக்கு முறை பற்றியும் எம் வலாற்றில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதாகவிருக்கிறது. அந்த வரலாற்றின் மிகச் சிறியதொரு பகுதியை பதிவு செய்த வகையில் சிவா சின்னப்பொடி அவர்களின் ‘நினைவழியா வடுக்கள்’ முக்கியம் பெறுகிறது. இன்றைய புத்தக தினத்தில் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

 
 
Dear friend, You are invited to the ”late Kalaichelven's Memorial Day” meeting . In this even :-we will be introducing three books:
1. Sri Ranjanai- Canada (short stories)
2. Siva Sinappodi- France (autobiography) 3. The Full Collection of Kalaichelven's work.
Sri Ranjanai(Canada ), Siva Sinappodi (France), Luxmy (France) will be participating. On Saturday 27th April '19, from 3pm to 7.30 PM at London Tamil Sangem ,
369, High Street North Manor Park, Eastham. E12 6PG (Near Eastham station on the high street road). Please come on time and participate in this event. For more information contact 07817262980
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ நீங்கள் சாதியத்தினூடாக அனுதாபத்தை பெற முயற்சிற்பதாக தெரிகிறது.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.