Jump to content

சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்“ என்ற நூலின் அறிமுக நிகழ்வு


Recommended Posts

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சிவா சின்னப்பொடியின் 'நினைவழியா வடுக்கள் '

In வாசிப்பு

 

Friday, March 13, 2020

ரு புத்தகம் பிடித்துவிட்டதாயின் புறச்சூழலையும் பொருட்படுத்தாது அதில் மூழ்கி வாசித்து முடித்துவிடுவது என் இயல்பு. 'நினைவழியா வடுக்கள்' அவ்வளவு முக்கியமான கடந்தகால அனுபவங்களைக் கொண்ட நூல் என்றாலும் மிக ஆறுதலாகவே வாசித்தேன். இவ்வாறு வாசித்த இன்னொருநூல் ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி'. நினைவழியா வடுக்களில் கூறப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் மனதை எங்கெங்கோ அலையவைத்து தொடர்ந்து வாசிக்க முடியாது செய்துவிடுகின்றது.

இன்று கடந்தகால நூல்களைப் பதிப்பிக்கின்றவர்களும், ஆய்வுகளைச் செய்பவர்களும் இந்த நூலை நிச்சயம் வாசிப்தோடு நின்றுவிடாது, இந்த நூலில் குறிப்பிடப்படும் அருமையான மனிதர்களையும் சம்பவங்களயும் மீள் வாசிப்பது/பதிப்பிப்பதன் ஊடாகத்தான் நமது வரலாற்றை சரிவரச் சொல்லமுடியும் என்பதை அறியவேண்டும்.
 
ninaivazhiyaa-vadukkal_FrontImage_880.jpg

ஆறுமுகநாவலர்களும், இராமநாதன்களும், பொன்னம்பலங்களையும் விட, விபுலானந்தர்களும், ஹண்டி பேரின்பநாயங்களும், பொன்.கந்தையாக்களும், கந்த முருகேசனர்களும், (தேவராளி இந்துக்கல்லூரி) சூரன்களுமே நமக்கு முக்கியமானவர்கள். இந்த மனிதர்களின் வரலாற்றைப் பேசுவதன் மூலமே நாம் நமது கடந்தகாலக் கறைகளைக் கொஞ்சமாவது நீக்கமுடியும். தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் போல, இவர்களை மீளக் கண்டுபிடிப்பதன் மூலமே  நாம்  உண்மையான செயற்பாட்டாளர்களாகவும், சமூகநீதி நோக்கிப் பயணிப்பவர்களாகவும் மாறமுடியும்.

இந்த நூலில் வரும் ஒன்றிரண்டு சம்பவங்கள்:

(1) சிவா சின்னப்பொடி பாடசாலைக்குப் படிக்கப்போகும்போது ஆதிக்கசாதி மேசை/வாங்கில் இருந்துபடிக்கும்போது, இவர்களைப் போன்ற தாழ்த்தப்பட்டவர்கள் நிலத்தில் இருந்து படிக்க வேண்டிய சூழல். புதிய சீருடை அணிந்து போகும் சிவா சின்னப்பொடி, நிலத்தில் அப்படியே இருந்து படித்தால் பேப்பரைக் கொண்டுபோய்ப் படிக்கின்றார். அது அங்கே படிக்கும் ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை. வாழைமட்டையால் விளாசுகிறார். அடிவாங்கியதைவிட தனது புதிய சீருடையில் 'கயர்' பிடித்துவிட்ட்து என்பது இன்னும் கவலையாக இருக்கின்றது.

ஒருநாள் ஆதிக்கச்சாதி மாணவன் வராதபோது, அந்த மாணவனின் மேசை,வாங்கில் வழமையாக நிலத்தில் அமர்ந்து படிக்கும் இவர் அமர்ந்துவிடுகின்றார். மற்ற மாணவர்கள் இவருக்கு அடி உதை கொடுத்து, அந்த கொடுமைக்கார ஆசிரியரைக் கூட்டிவர, ஆசிரியர் இவரின் தலையை சுவரில் மோதி அடிக்க, நெற்றி வெடித்து  இரத்தம் வரத்தொடங்குகின்றது. அந்தக் கோபத்தில் இவர் சிலேட்டை ஆசிரியர் மீது எறிந்துவிடுகின்றார்.

இது பிறகு பொலிஸ் கேஸாகி, இவரைப் பொலிஸ் கைது செய்வது வரை போகின்றது. இது நடக்கும்போது இவருக்கு 8 வயது. ஆசிரியர் எவ்வளவு சாதி வெறியராக இருந்தாலும் அதைக் கவனிக்காத பொலிஸ்/பாடசாலை இனி இவர் எங்கும் கல்விகற்கமுடியாத நிலையை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து மீண்டு எப்படி பாடசாலைக்குப் படிக்கப் போகின்றார் என்பதை ஒவ்வொருவரும் நிச்சயம் வாசித்துப் பார்க்கவேண்டும்.

(2) 1920களில் தாழ்த்தப்பட்ட பெண்கள் இரவிக்கையோ, உள்ளாடைகளோ அணியமுடியாது. சேலையை குறுக்குக்கட்டாகத்தான் கட்டவேண்டும்.  அதை உடைப்பதற்கான ஒரு போராட்டம் நடக்கிறது. முதன்முதலில் இந்த ஊர் பெண்கள் இரவிக்கை அணிந்து வல்லிபுரம் கோயிலுக்குப் போகின்றார்கள் (1960 வரை வல்லிபுரம் கோயில் உட்பட பெரும்பான்மையான கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையமுடியாது என்பது வேறுகதை). வெளிவீதியில் இரவிக்கை போட்டு கும்பிடும் பெண்களை சாதி இந்துக்கள் தாக்குகின்றனர். பலரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு அம்மணப்படுத்தப்படுகின்றார்கள். தான் நிர்வாணமாக்கப்பட்ட துயரந்தாங்காத ஒரு 15 வயதுச் சிறுமி குளத்தில் விழுந்து தற்கொலை செய்கின்றார்.

திரும்ப 1960களில் வல்லிபுரக் கோயிலுக்குள் நுழைய தாழ்த்தப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட் தோழர்களின் துணையுடன் திட்டமிடுகின்றார்கள். அதற்கான ஆயத்தப்படுத்தல்கள் நிகழும் முதல்நாள் மாலையில், சிவா சின்னப்பொடியும் அவரையொத்த சிறுவர்களும் (10 வயதுக்குள்தான் ) இவர்கள் தமது மாட்டுவண்டியில் தொட்டதால் 'தீட்டுப்பட்டுவிட்டது' என்று சொல்லி மற்றவர்களைக் கொண்டு அடித்துத் துவைக்கும் கோயில் ஐயரின் மாட்டுவண்டிலுக்குப் போய் தீ மூட்டிவிடுகின்றனர். அதைச் செய்துவிட்டு ஓடிவருகையில் சிவா சின்னப்பொடியின் நண்பன் ஒருவர் பிடிபட்டுவிடுகின்றார்.

எப்படியும் சந்திரனை வழமைபோல கட்டிவைத்து அடித்துவிட்டு, விட்டுவிடுவார்கள் என்று இந்தச் சிறுவர்கள் நம்புகின்றார்கள். இப்படி ஒரு சம்பவத்தை தாங்கள் செய்ததை அறிந்தால் பெற்றோர் அடித்துத் துவைத்துவிடுவார்கள் என்பதால் தீ வைத்த சம்பவத்தையோ, நண்பன் பிடிபட்டுவிட்டதையோ எவருக்கும் சொல்லாமல் வீட்டுக்குள் பதுங்குகின்றனர். அன்று விடிகாலையில் சந்திரன் கிணறொன்றில் பிணமாக மிதக்கின்றார். ஒரு சிறுவன் என்றும் பாராது, கொலையைச் செய்ததும் நம் 'மான'த் தமிழரேதான்.

(3) சிவா சின்னப்பொடி பிறந்து 10 வருடங்களுக்குப் பிறகு இவருக்கு ஒரு தங்கை பிறக்கின்றார். பிரசவம் பார்க்க இணுவிலுக்குச் செல்கின்றார்கள். அங்கே ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு கை கழுவும்போது அங்கே இருக்கும் ஒருவர் சிவா சின்னப்பொடியின் தந்தையின் கையில் இருக்கும் பனையேறும் சிராய்ப்புக் காயத்தைக் கண்டுவிட்டு இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர், எப்படி சரிக்குச் சமானமாய் எங்களோடு இருந்து சாப்பிடமுடியும் என்று அலற, அந்த உணவகத்து முதலாளி உட்பட எல்லோரும் என்ன திமிருந்தால் இப்படிச் செய்வாய் என என்று அடித்து உதைக்கின்றார்கள்.

அதுமட்டுமில்லாது ஒரு டிரக்டர் அளவிருக்கும் விறகை வெட்டிக்கொடுத்தால்தான் இவர்கள் இருவரையும் விடுவோம் என்கின்றார்கள். ஏற்கனவே அடிவாங்கி வேட்டி உருவப்பட்ட தகப்பனும், இவருமாக அதை மணித்தியாலக்கணக்காய்ச் செய்கின்றார்கள். களைப்பின் மிகுதியில் சிறுவனான சிவா சின்னப்பொடி ஓய்வெடுக்கும்போது, அப்படி இருக்கமுடியாது என அவரை உதைக்கின்றனர். தடுக்கவரும் தகப்பனையும் மீண்டும் தாக்குகின்றனர். தன் தகப்பன் முதன்முறையாக (அவர் ஒரு கம்யூனிஸ்ட்காரர், பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்) அழுவதை அன்றுதான் பார்த்தேன் என்கின்றார். எந்தத் தகப்பனும் தன் பிள்ளையின் முன் அழ விரும்புதில்லை, அதுமட்டுமின்றி தன் பிள்ளையை இந்தச் சாதி வெறியர்களிடம் இருந்து காப்பாற்ற முடியாத துயரமும் சேர்ந்து அதன்பிறகு தகப்பன் மனம்/உடல் உடைந்துவிடுகின்றார்.  இன்னொரு பொழுதில் ஊரில் சாதிச் சண்டியர்கள் முகத்தை மறைத்து, சிவா சின்னப்பொடியின் தகப்பனைத்தாக்கி அவரின் காலை முறிக்கின்றனர்.

இவ்வாறான அனுபவங்களைப் பெற்ற  ஒரு மனிதர் எவ்விதக் காழ்ப்புணர்வும் இல்லாது எழுதுகின்றார் என்பதை யோசிக்கும்போது வியப்பாகத்தான் இருந்தது. நினைவழியா வடுக்களை நான் இந்த வருடத்தில் வாசித்த நூல்களில்  அதிகம் பாதித்த நூலெனச் சொல்வேன்.

மீண்டும் சொல்ல விரும்புவது இதைத்தான். சமூக செயற்பாட்டாளர்களாகவும், சமூகத்தில் மாற்றங்களைச் செய்ய விரும்புகின்றவர்களாகவும் இருக்கும் எவரும் தவற விடாது வாசிக்கவேண்டிய நூல் இது .  இற்றைவரை எல்லா அடையாளங்களையுன் உதறவிரும்பினாலும் மொழி என்பதில் மிகப்பெரும் காதல் கொண்டவனாகவே இருக்கின்றேன் (அதனால்தான் பெரியார் எல்லா அபிமானங்களையும் விட்டுவிடச் சொல்கின்றபோது, மொழியையுமா கைவிடவேண்டும் என யோசிப்பதுண்டு). ஆனால் இதில் சிவா சின்னப்பொடி தன்னைவிட தனது பிள்ளைகள் இந்தச் சாதியைத்தாண்டுவார்கள், பேரப்பிள்ளைகள் இன்னும் முன்னே போவார்கள் என்கின்றபோது, (அவர் நம் தாய்மொழியைக் கைவிடவேண்டும் என்று சொல்லாதபோதும்) சாதி ஒட்டிக்கிடக்கும் மொழியின் மீதான அபிமானத்தையும்  நாம் கைவிட்டால்தான் என்னவென்று தோன்றியது.
.......................................................

(Dec 09, 2019)

 

http://djthamilan.blogspot.com/2020/03/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

சமூக செயற்பாட்டாளர்களாகவும், சமூகத்தில் மாற்றங்களைச் செய்ய விரும்புகின்றவர்களாகவும் இருக்கும் எவரும் தவற விடாது வாசிக்கவேண்டிய நூல் இது .

சிவா சின்னப்பொடி ஈழமுரசு பத்திரிகையில் பணியாற்றிய காலங்களில் அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறேன்.  அவரின் வலிகளை அறிந்திருக்கிறேன். அருமையான மனிதர். எனது அல்பத்தில் அவரின் படமும் இருக்கிறது.

0-DAE50-DD-DDAB-4-D9-D-A9-BE-D5-C03-F7-C

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.