Jump to content

கடைசி பந்தில் இந்திய அணியின் 'வெற்றிகரமான தோல்வி'!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே 24/02/2019 நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மே மாதம் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக, இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இதுவாகும். இதனால், இந்த சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126  ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 19.5வது ஓவரில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Aus vs Ind 1st T20: இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டி20

10:15 PM – கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5 பந்துகளில் 12 ரன்கள் அடிக்கப்பட்டது. ஆனால், கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

10:10 PM – 19 ஓவரை வீசிய பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

08:33 PM – முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக 36 பந்துகளில் லோகேஷ் ராகுல் 50 ரன்கள் எடுத்தார்.

06:35 PM – டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறக்கப்படுகிறார். அதேபோல், விஜய் ஷங்கருக்கு மாயன்க் மார்கண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

https://tamil.indianexpress.com/sports/india-vs-australia-t20-live-score/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது 20/20 போட்டியிலும் இந்தியா 7 விக்கெட்டுகளினால் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி.

Ind 190/4 20 over

Aus 194/3 19.4 over

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலிய தொடர்: முதல் முறையாக கோலி தலைமையில் சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா

கோலி - மேக்ஸ்வெல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

விராட் கோலி இந்திய அணிக்கு அணித்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது இந்திய அணி.

முன்னதாக மூன்று முறை சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளது இந்திய அணி. இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்தியாவில் டி20 தொடரை வென்றுள்ளன. கடைசியாக 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரியாக இந்தியா தொடரை இழந்தது. அதன் பின்னர் தற்போதுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தோல்வி கண்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த சுற்றுப்பயணத்தில், டி20 தொடரை 2-0 என வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தியா நிர்ணயித்த 127 ரன்கள் எனும் வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா ஆட்டத்தின் கடைசி பந்தில் சாதித்தது. அப்போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான 14 ரன்களை குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலிய படை. கிளென் மாக்ஸ்வெல் 43 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

பெங்களூரில் நேற்று இரவு நடந்த இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 190 ரன்கள் குவித்தது.

லோகேஷ் ராகுல் 26 பந்துகளில் மூன்று பௌண்டரி நான்கு சிக்ஸர்கள் விளாசி 47 ரன்கள் குவித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் 24 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ரிஷப் பந்த் ஆறு பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்தார். ஆனால் அதன் பின்னர் இணைந்த முன்னாள் கேப்டனும் இந்நாள் கேப்டனும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி 23 பந்துகளில் மூன்று பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் விளாசி 40 ரன்கள் குவித்தார்.

விராட் கோலி 38 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் இரண்டு பௌண்டரிகள் விளாசி 72 ரன்கள் குவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இலக்கை துரத்தத் துவங்கியது. முதல் ஓவரை தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் வீச பௌண்டரியுடன் ரன் கணக்கை துவங்கியது ஆஸ்திரேலிய அணி. ஆனால் மூன்றாவது ஓவரில் ஸ்டாய்னிஸ் விக்கெட்டை சாய்த்தார் சங்கர்.

மேக்ஸ்வெல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார். ஆட்டத்தின் நான்காவது ஓவரில் களமிறங்கிய அவர், இறுதி வரை களத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைத் தேடிதந்தார்.

கிளென் மாக்ஸ்வெல் 55 பந்துகளில் ஒன்பது சிக்ஸர்கள் ஏழு பௌண்டரி விளாசி 113 ரன்கள் குவித்தார்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளும் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு வழங்கப்பட்டன.

முன்னதாக இம்மாத துவக்கத்தில் நியூசிலாந்து மண்ணில் நடந்த டி20 தொடரையும் இந்தியா இழந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sport-47397814

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.