Jump to content

எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும்!


Recommended Posts

எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும்

காலம் தன்போக்கில் கடந்து செல்ல நாமும் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் கடந்து எம் குழந்தைகளின் வளர்ச்சிகளில் மகிழ்வை காணும் தருணம் இப்போது.

எம்மில் பலருக்கு வரும் ஏக்கம் எமது குழந்தைகளின் எதிர் காலம் எப்படியிருக்கும்? எந்த துறையை தெரிவு செய்யப்போகின்றர்கள் என்பது.

எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர்  என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. 

வைத்தியர்  வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண்டும் என்பது அதிகமான பெற்றோர்களின் ஆசை. பெற்றோர்கள் ஆசைப்படுவதில் தவறில்லை ஆனால் அதை தம் குழந்தைகளிடம் திணிப்பது மிகவும் கவலையான விடயம்.

கடந்த சில வருடங்களில் எத்தனை பிள்ளைகள் தம் பெற்றோரின் ஆசைக்காக அவர்களின் வற்புறுத்துதல்களால் சில துறைகளை தெரிவுசெய்து அதை அவர்களால் சரியாக படிக்க முடியாமல் மனவுளைச்சளாகி தற்கொலை வரை போயுள்ளார்கள்?. அதே நேரம் தம் பிள்ளைகளின் விருப்பத்திற்கு அவர்களின் கல்வியை தொடர விட்டிருந்தால் அநியாயமாக தம் குழந்தைகளை அந்த பெற்றோர்கள் இழந்திருக்கமாட்டார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் நிச்சயமாக இருக்கும் அதில் அவர்கள் சாதிக்க விரும்பும் போது நாம் அதற்கு தடையாக இருப்பது முற்றிலும் தவறானது.

நாம் படிக்கமுடியாததை நம் குழந்தைகள் மூலம் நிறைவேற்றவேண்டும் என்று நினைப்பது சரியா?. பெற்றோர்கள் ஆசைப்படும் துறையை எந்த வற்புறுத்தலும் இல்லாமல் குழந்தையும் விருப்பி படித்தால் எந்த பிழையும் இல்லை ஆனால் அப்படி எத்தனை வீட்டில் நடக்கின்றது?

பிடிக்காத துறையை படித்து மனவுளைச்சலுடன் தன் எதிர்காலத்தை நகர்த்துவதை விட அவர்களுக்கு பிடித்த துறையில் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வாக அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதை நம்மில் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

சில தொழில்களில் அதிக வருமானம் வரும் ஆனால் வருமானம் மட்டுமே வாழ்க்கையை மகிழ்வாக வாழ்ந்து விட வழிசமைக்காது. மனதுக்கு பிடித்த தொழில் செய்வதில் வரும் மகிழ்ச்சி வருமானத்தால் வரும் மகிழச்சியை விட பன்மடங்கு பெரியது.

எம்மில் பலர் எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்போம் என்று நம்புகின்றேன். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள் …..எதிர்காலத்தில் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!

 

Link to comment
Share on other sites

53 minutes ago, தமிழினி said:

பிடிக்காத துறையை படித்து மனவுளைச்சலுடன் தன் எதிர்காலத்தை நகர்த்துவதை விட அவர்களுக்கு பிடித்த துறையில் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வாக அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதை நம்மில் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

எம்மில் பலர் எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்போம் என்று நம்புகின்றேன். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள்.

குழந்தைப் பருவத்தில் நல்ல ஒரு ஆரம்பத்தைக் கொடுக்க விரும்பும் பெற்றோர் - முக்கியமாக நமது ஈழத்தில் உள்ள பெற்றோர் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். 

தேவையான பதிவு. தொடருங்கள் தமிழினி. 😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினியின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள். இப்பொழுதெல்லாம் எந்த முடிவையும் எம்மைவிட எம் பிள்ளைகள் சரியாக முடிவெடுக்க பழகிவிட்டார்கள். அவர்களைப் புரிந்து கொண்டு நாம் சேர்ந்து நடக்கலாம் இல்லாவிட்டால் எம்மை விட்டு அவர்கள் தம் பாதையில் நடப்பதை எம்மால் தடுக்க முடியாது. அவர்களின் சிந்தனை வித்தியாசமானது. பெற்றவர்களாகிய நாம் எம் பிள்ளைகளின் உணர்வுகளையும் விருப்பங்களையும் புரிந்து செயற்படுவது சாலச் சிறந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உயர்தரத்தில் வணிகவியல் கற்க இருந்தேன், பெற்றோரும் அதிபருமா உயிரியல் படிக்க வற்புறுத்தி அதோட முடிஞ்ச கதை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

52865297_389121391636982_123531514360102912_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-syd2-1.xx&oh=c8ba54a6d6194e36d874ede2cf90220d&oe=5D1C199Aகாலத்திற்க்கு ஏற்ற படைப்பு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கல்விமுறை அதிக வருமானத்தை நோக்கியே பிள்ளைகளை நகர்த்துகின்றது. அன்று டாக்டர் , என்ஜினியர் எல்லோரினதும் கனவு. ஆனால் இன்று அவற்றைவிட அதிக வருமானம் தரக்கூடிய அநேக தொழிற்துறைகள் வந்து விட்டன. அதனால் இன்று படிக்கும் பிள்ளைகளுக்கு அநேக தெரிவுகள் வேலை விடயத்தில் கிடைக்கின்றது......!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழினி said:

 

 

எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர்  என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. 

இது இன்னமும் எமது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.காலம் கடந்த பின்பு தான் கவலைப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2019 at 7:05 PM, தமிழினி said:

தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள் …..எதிர்காலத்தில் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!

எனக்கு தெரிந்த ஒரு சம்பவம்.

ஒரு குடும்பத்தில்  தந்தை பெரிய உத்தியோகம். தாயும் நல்ல வேலை. ஒரு களியாட்ட நிகழ்ச்சியில் பிள்ளைகளுக்கான போட்டி நிகழ்வு ஒன்று வந்தது. அதில் பெரிய உத்தியோககாரரின் மகனும் பங்கு பெற்றார். அப்போது நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தவர்  எல்லா பிள்ளைகளிடமும்....நீங்கள் பெரியவர் ஆனால் என்ன தொழில் செய்ய விருப்பம் கேட்டுக்கொண்டே வந்தார். அப்போது பெரிய உத்தியோகக்காரரின் மகனிடமும்....நீங்கள் பெரியவன்
 ஆனால் என்ன தொழில் செய்ய விருப்பம் என கேட்டார்.அதற்கு அந்த சிறுவன் நான் பெரியவன் ஆனால் கார் மெக்கானிக் ஆக வேண்டும் என்று சொன்னார். அப்போது அந்த பிள்ளையின் தாய் தந்தையரின் முகத்தில்  வந்த கடுப்பு வர்ணிக்க முடியாத கடுப்பு.
தற்போது சம்பந்தப்பட்ட பிள்ளையின் தாயார் அப்பாவை விட நீ நல்ல ஜொப்பிலை ஜொயின் பண்ண வேணுமெண்டு ஒரே நச்சரிச்சலாம்.

Link to comment
Share on other sites

பெற்றோர் பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறாக  தங்களின் விருப்பத்துக்கு தெரிவு செய்யும் துறை(கள்) இறுதியில் பெற்றோரையும் பிள்ளைகளையும் கவலையில் ஆழ்த்திய பல சம்பவங்களை பார்த்திருக்கிறோம். பிள்ளைகள் எத்துறையில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என சிறுவயதில் இருந்தே அவதானித்தால்  தெரியும்.அவர்களுக்கு விருப்பமான துறையை  தெரிவு செய்ய முழு உரிமையையும் வழங்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல்  மகிழ்சியாகவும் இருப்பார்கள். 

குறிப்பிட்ட துறையில் தான்  உழைக்கலாம் என்பது மேற்கு நாடுகளுக்கு பொருந்தாது. சகல துறைகளிலும் நிபுணத்துவம் பெறும் போது அதிக பணம் உழைக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு மட்டுமல்ல வாழ்க்கை விடயத்திலும் பிள்ளைகளை அவர்கள் போக்கில் அவர்களுக்கு பிடித்தவழியில் அவர்களைப்பயணிக்க விட்டால் நம் சமூகம் அதி விரைவாக முன்னேறும். விருப்பமில்லாத துறையில் பெற்றோருக்காக திணிக்கப்பட்ட பலர் அத்துறையில் எதையும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணப்பாங்கு இல்லாதவர்களாகவே உள்ளார்கள்.

விருப்பப்பட்ட  விடயத்தை மட்டுமே அதிகமாக தேடலுக்கு உள்ளாக்கும் தீவிரம் மனதில் தோன்றும்.

திணிக்கப்படும் விடயங்களில் தேடல் தோன்றாது. நல்ல விடயம் தமிழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் , இலங்கையில் தாய் தந்தையரின்  விருப்புக்களுக்குள் மட்டும் சிக்கி விடுறார்கள் பிள்ளைகள் அவர்கள் விருப்பமென்பது அமிழ்த்தி வைக்கப்படுகிறது  இந்த சமூகத்தின் நிலையை நிலையை காட்டி

 

கல்வி முறை இனிவரும் காலங்களில் மாறினாலும் ஆணும் பெண்ணும் கல்யாணம் முடிக்காமல் இருக்கும் வரைக்கும் அவர்கள் பெற்றோரை நாங்கள் அப்ப்டி இருக்க அவர்கள் விடவில்லை என குற்றம் சாட்டியவர்கள் அவர்கள் திருமணமாகி பெற்றோர்களாக ஆகும் போது அதே குற்றத்தையே செய்கிறார்கள் அவர்கள் பிள்ளைக்கும் இது சங்கிலி தொடராக வருகிறது ஒரே ஒரு காரணம் தான் எங்கள் பிள்ளைகளை நன்றாக படிப்பிக்க வேண்டும் இந்த சமுதாயத்தில் நல்ல பிள்ளையாக ஆக்க வேண்டும் என சிந்தனை மட்டுமே பிள்ளைகள் நலன் சார்ந்தது அல்ல

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2019 at 6:05 PM, தமிழினி said:

வைத்தியர்  வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண்டும் என்பது அதிகமான பெற்றோர்களின் ஆசை.

குழந்தைகள் தமக்கு விரும்பிய துறையில் படிப்பதற்கு பெற்றோர் துணைநிற்கவேண்டும் தமது விருப்பங்களைத் திணிக்கக்கூடாது என்பது உண்மைதான்.

ஆனால் முதிர்ச்சி அடையாத குழந்தைகளை சரியான துறைகளை இனங்காட்டும் பொறுப்பும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் உள்ளது.

ஆனாலும் தமிழ்ப் பெற்றோர்களில் பலர் தமது பிள்ளைகள் அதிக சம்பாத்தியமும் புகழும் தரும் வைத்தியத்துறைக்கும், பொருளாதார/கணக்கியல் துறைக்கும், அல்லது சட்டத்துறைக்கும் எந்திரவியல் துறைக்குமே அனுப்பவிழைகின்றனர். இது தமது குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்ற காரணம்தான். தன்னம்பிக்கையையும், சமூக அக்கறையையும் குழந்தைகளிடம் வளர்த்துவிட்டால் அவர்கள் 16- 18 வயதுகளில் சுயமாகவே முடிவுகளை எடுக்கும் முதிர்ச்சியை அடைவார்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மிக முக்கியமான, சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயத்தை எழுதியுள்ளீர்கள்.

பெற்றோர் கூறிய துறையை அவர்களுக்காக தேர்ந்தெடுத்து படிப்பில் கோட்டை விட்ட பலர் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

தற்போது தான் 'ஜீனியஸ்' என்ற தமிழ்த்திரைப்படம் ஒன்றைப் பார்த்து முடித்தேன். உங்களின் இந்தத் திரி ஞாபகத்துக்கு வந்தது, தமிழினி.

பிள்ளைகளின் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் அளவுக்கதிகமான அழுத்தங்களைப் பெற்றோர் கொடுப்பதன் எதிர்மறை விளைவுகளை இத்திரைப்படம் அழகாகச் சித்தரிக்கிறது. கண்டிப்பாக நமது பெற்றோர் பார்க்க வேண்டிய படம். 

(இருந்தாலும், சில பெற்றோர் இப்படியான படங்கள் தான் பிள்ளைகளைக் கெடுக்கிறது என வெகுண்டெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!) 😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.