Jump to content

எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும்!


Recommended Posts

எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும்

காலம் தன்போக்கில் கடந்து செல்ல நாமும் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் கடந்து எம் குழந்தைகளின் வளர்ச்சிகளில் மகிழ்வை காணும் தருணம் இப்போது.

எம்மில் பலருக்கு வரும் ஏக்கம் எமது குழந்தைகளின் எதிர் காலம் எப்படியிருக்கும்? எந்த துறையை தெரிவு செய்யப்போகின்றர்கள் என்பது.

எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர்  என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. 

வைத்தியர்  வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண்டும் என்பது அதிகமான பெற்றோர்களின் ஆசை. பெற்றோர்கள் ஆசைப்படுவதில் தவறில்லை ஆனால் அதை தம் குழந்தைகளிடம் திணிப்பது மிகவும் கவலையான விடயம்.

கடந்த சில வருடங்களில் எத்தனை பிள்ளைகள் தம் பெற்றோரின் ஆசைக்காக அவர்களின் வற்புறுத்துதல்களால் சில துறைகளை தெரிவுசெய்து அதை அவர்களால் சரியாக படிக்க முடியாமல் மனவுளைச்சளாகி தற்கொலை வரை போயுள்ளார்கள்?. அதே நேரம் தம் பிள்ளைகளின் விருப்பத்திற்கு அவர்களின் கல்வியை தொடர விட்டிருந்தால் அநியாயமாக தம் குழந்தைகளை அந்த பெற்றோர்கள் இழந்திருக்கமாட்டார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் நிச்சயமாக இருக்கும் அதில் அவர்கள் சாதிக்க விரும்பும் போது நாம் அதற்கு தடையாக இருப்பது முற்றிலும் தவறானது.

நாம் படிக்கமுடியாததை நம் குழந்தைகள் மூலம் நிறைவேற்றவேண்டும் என்று நினைப்பது சரியா?. பெற்றோர்கள் ஆசைப்படும் துறையை எந்த வற்புறுத்தலும் இல்லாமல் குழந்தையும் விருப்பி படித்தால் எந்த பிழையும் இல்லை ஆனால் அப்படி எத்தனை வீட்டில் நடக்கின்றது?

பிடிக்காத துறையை படித்து மனவுளைச்சலுடன் தன் எதிர்காலத்தை நகர்த்துவதை விட அவர்களுக்கு பிடித்த துறையில் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வாக அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதை நம்மில் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

சில தொழில்களில் அதிக வருமானம் வரும் ஆனால் வருமானம் மட்டுமே வாழ்க்கையை மகிழ்வாக வாழ்ந்து விட வழிசமைக்காது. மனதுக்கு பிடித்த தொழில் செய்வதில் வரும் மகிழ்ச்சி வருமானத்தால் வரும் மகிழச்சியை விட பன்மடங்கு பெரியது.

எம்மில் பலர் எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்போம் என்று நம்புகின்றேன். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள் …..எதிர்காலத்தில் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!

 

Link to comment
Share on other sites

53 minutes ago, தமிழினி said:

பிடிக்காத துறையை படித்து மனவுளைச்சலுடன் தன் எதிர்காலத்தை நகர்த்துவதை விட அவர்களுக்கு பிடித்த துறையில் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வாக அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதை நம்மில் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

எம்மில் பலர் எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்போம் என்று நம்புகின்றேன். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள்.

குழந்தைப் பருவத்தில் நல்ல ஒரு ஆரம்பத்தைக் கொடுக்க விரும்பும் பெற்றோர் - முக்கியமாக நமது ஈழத்தில் உள்ள பெற்றோர் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். 

தேவையான பதிவு. தொடருங்கள் தமிழினி. 😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினியின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள். இப்பொழுதெல்லாம் எந்த முடிவையும் எம்மைவிட எம் பிள்ளைகள் சரியாக முடிவெடுக்க பழகிவிட்டார்கள். அவர்களைப் புரிந்து கொண்டு நாம் சேர்ந்து நடக்கலாம் இல்லாவிட்டால் எம்மை விட்டு அவர்கள் தம் பாதையில் நடப்பதை எம்மால் தடுக்க முடியாது. அவர்களின் சிந்தனை வித்தியாசமானது. பெற்றவர்களாகிய நாம் எம் பிள்ளைகளின் உணர்வுகளையும் விருப்பங்களையும் புரிந்து செயற்படுவது சாலச் சிறந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உயர்தரத்தில் வணிகவியல் கற்க இருந்தேன், பெற்றோரும் அதிபருமா உயிரியல் படிக்க வற்புறுத்தி அதோட முடிஞ்ச கதை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

52865297_389121391636982_123531514360102912_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-syd2-1.xx&oh=c8ba54a6d6194e36d874ede2cf90220d&oe=5D1C199Aகாலத்திற்க்கு ஏற்ற படைப்பு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கல்விமுறை அதிக வருமானத்தை நோக்கியே பிள்ளைகளை நகர்த்துகின்றது. அன்று டாக்டர் , என்ஜினியர் எல்லோரினதும் கனவு. ஆனால் இன்று அவற்றைவிட அதிக வருமானம் தரக்கூடிய அநேக தொழிற்துறைகள் வந்து விட்டன. அதனால் இன்று படிக்கும் பிள்ளைகளுக்கு அநேக தெரிவுகள் வேலை விடயத்தில் கிடைக்கின்றது......!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழினி said:

 

 

எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர்  என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. 

இது இன்னமும் எமது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.காலம் கடந்த பின்பு தான் கவலைப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2019 at 7:05 PM, தமிழினி said:

தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள் …..எதிர்காலத்தில் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!

எனக்கு தெரிந்த ஒரு சம்பவம்.

ஒரு குடும்பத்தில்  தந்தை பெரிய உத்தியோகம். தாயும் நல்ல வேலை. ஒரு களியாட்ட நிகழ்ச்சியில் பிள்ளைகளுக்கான போட்டி நிகழ்வு ஒன்று வந்தது. அதில் பெரிய உத்தியோககாரரின் மகனும் பங்கு பெற்றார். அப்போது நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தவர்  எல்லா பிள்ளைகளிடமும்....நீங்கள் பெரியவர் ஆனால் என்ன தொழில் செய்ய விருப்பம் கேட்டுக்கொண்டே வந்தார். அப்போது பெரிய உத்தியோகக்காரரின் மகனிடமும்....நீங்கள் பெரியவன்
 ஆனால் என்ன தொழில் செய்ய விருப்பம் என கேட்டார்.அதற்கு அந்த சிறுவன் நான் பெரியவன் ஆனால் கார் மெக்கானிக் ஆக வேண்டும் என்று சொன்னார். அப்போது அந்த பிள்ளையின் தாய் தந்தையரின் முகத்தில்  வந்த கடுப்பு வர்ணிக்க முடியாத கடுப்பு.
தற்போது சம்பந்தப்பட்ட பிள்ளையின் தாயார் அப்பாவை விட நீ நல்ல ஜொப்பிலை ஜொயின் பண்ண வேணுமெண்டு ஒரே நச்சரிச்சலாம்.

Link to comment
Share on other sites

பெற்றோர் பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறாக  தங்களின் விருப்பத்துக்கு தெரிவு செய்யும் துறை(கள்) இறுதியில் பெற்றோரையும் பிள்ளைகளையும் கவலையில் ஆழ்த்திய பல சம்பவங்களை பார்த்திருக்கிறோம். பிள்ளைகள் எத்துறையில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என சிறுவயதில் இருந்தே அவதானித்தால்  தெரியும்.அவர்களுக்கு விருப்பமான துறையை  தெரிவு செய்ய முழு உரிமையையும் வழங்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல்  மகிழ்சியாகவும் இருப்பார்கள். 

குறிப்பிட்ட துறையில் தான்  உழைக்கலாம் என்பது மேற்கு நாடுகளுக்கு பொருந்தாது. சகல துறைகளிலும் நிபுணத்துவம் பெறும் போது அதிக பணம் உழைக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு மட்டுமல்ல வாழ்க்கை விடயத்திலும் பிள்ளைகளை அவர்கள் போக்கில் அவர்களுக்கு பிடித்தவழியில் அவர்களைப்பயணிக்க விட்டால் நம் சமூகம் அதி விரைவாக முன்னேறும். விருப்பமில்லாத துறையில் பெற்றோருக்காக திணிக்கப்பட்ட பலர் அத்துறையில் எதையும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணப்பாங்கு இல்லாதவர்களாகவே உள்ளார்கள்.

விருப்பப்பட்ட  விடயத்தை மட்டுமே அதிகமாக தேடலுக்கு உள்ளாக்கும் தீவிரம் மனதில் தோன்றும்.

திணிக்கப்படும் விடயங்களில் தேடல் தோன்றாது. நல்ல விடயம் தமிழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் , இலங்கையில் தாய் தந்தையரின்  விருப்புக்களுக்குள் மட்டும் சிக்கி விடுறார்கள் பிள்ளைகள் அவர்கள் விருப்பமென்பது அமிழ்த்தி வைக்கப்படுகிறது  இந்த சமூகத்தின் நிலையை நிலையை காட்டி

 

கல்வி முறை இனிவரும் காலங்களில் மாறினாலும் ஆணும் பெண்ணும் கல்யாணம் முடிக்காமல் இருக்கும் வரைக்கும் அவர்கள் பெற்றோரை நாங்கள் அப்ப்டி இருக்க அவர்கள் விடவில்லை என குற்றம் சாட்டியவர்கள் அவர்கள் திருமணமாகி பெற்றோர்களாக ஆகும் போது அதே குற்றத்தையே செய்கிறார்கள் அவர்கள் பிள்ளைக்கும் இது சங்கிலி தொடராக வருகிறது ஒரே ஒரு காரணம் தான் எங்கள் பிள்ளைகளை நன்றாக படிப்பிக்க வேண்டும் இந்த சமுதாயத்தில் நல்ல பிள்ளையாக ஆக்க வேண்டும் என சிந்தனை மட்டுமே பிள்ளைகள் நலன் சார்ந்தது அல்ல

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2019 at 6:05 PM, தமிழினி said:

வைத்தியர்  வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண்டும் என்பது அதிகமான பெற்றோர்களின் ஆசை.

குழந்தைகள் தமக்கு விரும்பிய துறையில் படிப்பதற்கு பெற்றோர் துணைநிற்கவேண்டும் தமது விருப்பங்களைத் திணிக்கக்கூடாது என்பது உண்மைதான்.

ஆனால் முதிர்ச்சி அடையாத குழந்தைகளை சரியான துறைகளை இனங்காட்டும் பொறுப்பும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் உள்ளது.

ஆனாலும் தமிழ்ப் பெற்றோர்களில் பலர் தமது பிள்ளைகள் அதிக சம்பாத்தியமும் புகழும் தரும் வைத்தியத்துறைக்கும், பொருளாதார/கணக்கியல் துறைக்கும், அல்லது சட்டத்துறைக்கும் எந்திரவியல் துறைக்குமே அனுப்பவிழைகின்றனர். இது தமது குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்ற காரணம்தான். தன்னம்பிக்கையையும், சமூக அக்கறையையும் குழந்தைகளிடம் வளர்த்துவிட்டால் அவர்கள் 16- 18 வயதுகளில் சுயமாகவே முடிவுகளை எடுக்கும் முதிர்ச்சியை அடைவார்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மிக முக்கியமான, சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயத்தை எழுதியுள்ளீர்கள்.

பெற்றோர் கூறிய துறையை அவர்களுக்காக தேர்ந்தெடுத்து படிப்பில் கோட்டை விட்ட பலர் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

தற்போது தான் 'ஜீனியஸ்' என்ற தமிழ்த்திரைப்படம் ஒன்றைப் பார்த்து முடித்தேன். உங்களின் இந்தத் திரி ஞாபகத்துக்கு வந்தது, தமிழினி.

பிள்ளைகளின் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் அளவுக்கதிகமான அழுத்தங்களைப் பெற்றோர் கொடுப்பதன் எதிர்மறை விளைவுகளை இத்திரைப்படம் அழகாகச் சித்தரிக்கிறது. கண்டிப்பாக நமது பெற்றோர் பார்க்க வேண்டிய படம். 

(இருந்தாலும், சில பெற்றோர் இப்படியான படங்கள் தான் பிள்ளைகளைக் கெடுக்கிறது என வெகுண்டெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!) 😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.