Jump to content

சாதியை மீறி நடந்த காதல் திருமணம் - அடித்து நொறுக்கப்பட்ட தலித் குடியிருப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனந்தூர் எனும் கிராமத்தில் தலித் இளைஞர் ஒருவர் சாதி இந்துப் பெண் ஒருவரை, திருமணம் செய்து கொண்டதால், அவர் வசித்து வந்த தலித் குடியிருப்பில் 30 வீடுகள், நான்கு வாகனங்கள் மற்றும் பிற சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டு, ஊரைவிட்டு வெளியேறியது.

புதன்கிழமை காலை சாதி இந்து ஆண்கள் சுமார் 300 பேர், ஒன்பது மணியளவில் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்கத் தொடங்கியதாகவும், அது 10.30 மணி வரை தொடர்ந்ததாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார்.

தலித் குடியிருப்பு தாக்கப்பட்டபோது நான்கு வயது குழந்தை ஒன்றும் காயமடைந்ததது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அங்கு இப்போது சுமார் 200 காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கியக் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்கிறது அந்தச் செய்தி.

https://www.bbc.com/tamil/india-47397284

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.