Jump to content

பேசப்படாதவற்றைப் பேசும் ஓவியங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேசப்படாதவற்றைப் பேசும் ஓவியங்கள்!

88.jpg

மதரா

சென்னை கவின் கலைக் கல்லூரியின் ஓவியத்துறை மாணவ, மாணவிகள் 10 பேர் இணைந்து லலித் கலா அகாடமியில் கடந்த வாரம் ‘அன் ஸ்போக்கன்’ (Un spoken) என்ற தலைப்பில் தங்களது ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர்.

சமூக நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாக, உள் மனப் போராட்டங்களாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மேல் வைக்கப்படும் கேள்விகளாக, உழைக்கும் மக்களின் மேல் உள்ள அக்கறையின் வெளிப்பாடாக அவர்களது படைப்புகள் அமைந்திருந்தன.

88a.jpg

தமிழகத்திலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்குக் கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் நூற்றாண்டு கடந்தும் அங்கே அதே நிலையிலே உள்ளனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் என அழைக்கப்படும் அவர்களது வாழ்க்கை சூழ்நிலையை படைப்பாக்கியுள்ளார் அருள்ராஜ். அவரது குடும்பம் உட்பட ஏராளமானோர் அடிப்படை வசதிகள் கூட பூர்த்தியாகாமல் உள்ளனர். அந்த வலியைத் தனது படைப்பின் வழி காட்சிப்படுத்தியுள்ளார்.

88b.jpg

ராஜேஷின் படைப்புகள் அத்தனையும் மனிதர்களின் நிறம் மாறும் குணத்தையே கருவாகக் கொண்டுள்ளன. எனவே பச்சோந்தியைத் தனது ஓவியங்களில் குறியீடாகக் கையாண்டுள்ளார். ஒவ்வொரு ஓவியமும் 6 X 3 எனப் பெரிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எனது எண்ணங்களைக் கடத்த இந்த அளவும் போதாது என்றே நினைக்கிறேன் என்று கூறுகிறார் ராஜேஷ்.

88c.jpg

கைத்தறிப் பட்டு நெசவில் ஈடுபட்டுள்ள காஞ்சிபுரம் நெசவாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது வரலாறு, அவர்கள் கைவண்ணத்தில் ஒரு பட்டுச் சேலை உருவாவதற்குப் பின்னுள்ள செயல்முறைகள், உழைப்பு ஆகியவற்றை அறிந்து வந்துள்ளார் சந்தியா. வண்ணமயமான நூல்களின் பின்னால் மறைக்கப்படும் நெசவாளர்களின் உழைப்பை இவர் தன் ஓவியங்கள் வழி வெளிக்கொண்டுவந்துள்ளார்.

88d.jpg

நாம் பார்க்கும் பொருள்களுக்கு உருவம் இருக்கிறது. உள்ளுக்குள் கொப்பளிக்கும் கோபம், மகிழ்ச்சி, வேட்கை ஆகிய உணர்வுகளுக்கு உருவம் இருக்கிறதா? இந்த உணர்வுகளுக்குத் தன் தூரிகை மூலம் உருவம் கொடுத்துள்ளார் மது வந்தன். “எனக்குள் எழும் உணர்ச்சிகளை நான் படைப்பாக மாற்றிவிடுகிறேன். அதன் மூலம் என் மனம் அமைதியடைகிறது. என் மன அழுத்தத்தை போக்கும் கருவியாகவும் ஓவியத்தை நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார் மதுவந்தன்.

88e.jpg

இலவசத் திட்டங்கள் நாட்டைச் சீரழிக்கின்றன என்று சமீபத்தில் ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டன. வீர வசந்த் இலவசத் திட்டங்களினால் விளைந்த நன்மைகளை தனது ஓவியங்கள் மூலம் வெளிக் கொண்டுவந்திருந்தார். “சிறு வயதில் டிவி பார்க்க ஒவ்வொரு வீடாக அலைந்துளேன். தோசைக்கு மாவு அரைப்பதற்காக கிரைண்டர் இருக்கும் பல வீடுகளில் நின்றிருக்கிறேன். அங்கு என் சுயமரியாதை கேள்விக்குள்ளாகியது. எனக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. அந்தத் தாழ்வு மனப்பான்மையை போக்கி என் சுயமரியாதையை மீட்டுத்தந்தது இந்த இலவச திட்டங்கள் தான்” என்று கூறினார் வீர வசந்த். உலகம் இயங்க அடிப்படைக் காரணமாக இருக்கும் விவசாயிகளின் உழைப்பைக் கண்டுகொள்ள மறுக்கும் சமூகத்தை வசந்த் தன் படைப்பின் வழி கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

88f.jpg

நிரஞ்சனின் படைப்புகள் அனைத்தும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மேல் உள்ள விமர்சனமாகவே அமைந்துள்ளன. இனி வரும் காலங்களில் பிரத்யேகமாக ஒவ்வொருவருக்கும் தங்கள் பெயர் பொறித்த மருந்துகளே உணவுக்குப் பதிலாக விற்கப்படும் என்பதாகத் தனது படைப்பை உருவாக்கியுள்ளார். இயற்கையை ரசிக்க நம் மனம் ஆர்வம் கொண்டாலும் நாம் வாழும் நகரம் இயற்கைக்குப் புறம்பான அத்தனை வளர்ச்சிகளையும் உள்ளடக்கியே இருக்கிறது. மனித மனம் அதையே எதிர்பார்ப்பதாக நிரஞ்சன் தன் ஓவியத்தில் ரயில் பயணக் காட்சி மூலம் விவரித்துள்ளார். “ஜன்னலோரம் ரசிக்கும்போது பசுமையை எதிர்பார்க்கிறோம். கதவைத் திறந்து இறங்கும் நம் இடம் இயற்கைக்கு புறம்பான வளர்ச்சிகளைக் கொண்டதாக இருக்க விரும்புகிறோம்” என்று தனது ஓவியம் குறித்து விளக்குகிறார் நிரஞ்சன்.

88g.jpg

ஜான்சி ராணி தனது உள் மன எண்ணங்கள், பார்வைகள், அபிப்ராயங்களை ஓவியத்தில் பிரதிபலிப்பதாகக் கூறுகிறார். மேலும் புகைப்படக் கலை, ஓவியம் இரண்டிலும் இயங்கிவரும் ஜான்சி இரு கலைகளின் நுட்பங்களும் மற்றொன்றுக்கு உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

88h.jpg

ப்ரியா தனது ஓவியங்களில் இயற்கையையும் பெண்ணையும் ஒப்பிடுகிறார். இரு தரப்பும் பரஸ்பரம் தங்களது இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதாகக் கூறுகிறார்.

88i.jpg

மருத்துவ தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பின்னர் சுகப் பிரசவத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக கூறுகிறார் திலீப். குழந்தை தாயின் கர்ப்பப்பையில் இருப்பதை தண்ணீர் குடம் என்று அழைப்போம். அதனால் திலீப் தனது ஓவியத்தில் கருவறையை குடமாக பாவித்துள்ளார். அதன் வாயிலை நவீன மருத்துவம் அடைத்துள்ளதாக தனது ஓவியத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். பெண்களுக்குள் எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் பிரசவித்த பெண்களுக்கு வயிற்றில் போடப்பட்டிருக்கும் தையல் மட்டும் ஒரே மாதிரியாக இருப்பதை மற்றொரு ஓவியத்தில் பிரதிபலித்துள்ளார்.

88j.jpg

சந்திரலால் காக்கைகளின் மேல் காதல் கொண்டவர். காக்கைகளின் வகைகள், அவற்றின் வெவ்வேறு உடல் மொழிகள், குண நலன்களை தனது ஒவ்வொரு ஓவியத்திலும் கொண்டு வந்துள்ளார். இயற்கையை உற்று நோக்கும் சந்திர லால் மனிதன் இயற்கையின் அங்கம் என்றும் விதை மரமாக உருவம் கொள்வது போல் கலையும் வளர்ச்சி கொள்வதாகக் கூறுகிறார்.

 

 

https://minnambalam.com/k/2019/02/28/88

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா ஓவியங்களும் நன்று.... பச்சோந்தி ஓவியம் கருத்துடன் இருக்கு.... கடைசி ஓவியத்தில் எத்தனை முகம் என்று ஒரு போட்டியே போடலாம்.....!  :293_hibiscus:

நன்றி கிருபன்....! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.