Jump to content

4G மற்றும் 5G வித்தியாசம் என்ன ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

4G மற்றும் 5G வித்தியாசம் என்ன ?

 
5g_tholilnutpam.com_.jpg

நமது நாட்டில்  4G தொழில் நுட்பத்தை தொடர்ந்து  5G தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது . இதனையடுத்து OnePlus, Huawei, Xiaomi, Nokia, Vivo, Oppo, HTC, Lenovo and Moto, Samsung Galaxy S10 , LGபோன்ற மொபைல் நிறுவனங்கள் 5G தொழில் நுட்ப முடைய ஸ்மார்ட் போன்களை களமிறக்கியுள்ளனர். கூடிய விரைவில் நம் அனைவரது கையிலும் 5G  ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த போகிறோம் என்ற ஆர்வத்தில் உள்ளோம். இருந்தாலும் 5G னா என்ன ? இப்போ நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும்  4G மற்றும் 5G தொழில்நுட்பத்திற்கு என்ன வித்தியாசம் ? இதனுடைய வேகம் எவ்வளவு இருக்கும் ?  இதன் நிறை குறைகள் மற்றும் இந்த 5G தொழில்நுட்பத்தை மொபைல் போன்களில் மட்டும் தான் பயன்படுத்த முடியுமா ? அல்லது வேறு ஏதாவது தொழிநுட்ப சாதனங்களில் பயன் படுத்த முடியுமா ? என்ற நிறைய கேள்விகள்  
எல்லாருடைய மனதிலும்  ஓடிக்கொண்டிருக்கும் இந்த  5G தொழிநுட்பம்  
என்ன என்பதை பற்றி காண்போம்.
 
5G என்றல் என்ன ?
 
( 5th Generation Of Internet ) என்பது தான் இதன் விரிவாக்கம் . 5G என்று சொன்னவுடன் நம் மனதில் தோன்றுவது அதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்பது தான். 5G யின் வேகம் 10 Gbps  அப்போது   இதன் வேகம் எவ்வளவு இருக்கும் நீங்கள் எவ்வளவு வேகமாக தகவல் மற்றும் தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும்  என்று நினைத்து பாருங்கள் . இதன் வேகம் உண்மையிலேயே அதிகம் தான்.
 
4G மற்றும்  5G  யின் வித்தியாசம் என்ன ?
 
4G மற்றும்  5G  தொழிநுட்பத்தின் என்ன  வித்தியாசம் என்பதை அடிப்படையில் இருந்து பார்ப்போம்.
 
1G சேவை :
 
முதன் முதலில் வர்த்தக ரீதியாக பயன்படுத்த பட்ட மொபைல் சேவை தான் 1G . இந்த  சேவையை பயன்படுத்தி அலைபேசியின் மூலம் ஒருவர் மாற்றுவருடன் பேசி கொள்ள  மட்டுமே முடியும்.
 
2G சேவை :
 
முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியை இந்த சேவையில் தான் கொண்டுவரப்பட்டன  ஒருவர் மற்றொவருடன் போனில் பேசமுடியும். குறுந்செய்திகள்( SMS ) மற்றும் காணொளிகளை ( MMS ) அனுப்பும் வசதியும் கொண்டு வரப்பட்டது இந்த சேவையில் தான்.

 
2g...3g...4g...5g..Tholilnutpam.com_.jpg
 
3G சேவை :
 
இந்த சேவையில் தான் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகின இதன் காரணமாக சிக்னல்களை சிறிய பாக்கெட்களாக பிரித்து அனுப்பும் பாக்கெட் ஸ்விட்சிங் முறை கொண்டு வரப்பட்ட்டன. இவை 3G   சேவை தான் ஒயர் இல்லாமல் வேகமான இன்டர்நெட்டை பயன்படுத்தும்  வசதி மற்றும் வீடியோ கான்ப்ரன்ஸ், ஐ.பி.எஸ் வசதி போன்றவை இந்த 3G சேவை தான் சாத்தியமாகின.
 
4G சேவை :
 
3G விடவேகமாக இன்டர்நெட்டை பயன்படுத்த 4G சேவை கொண்டு வரப்பட்டது அதிவேக இன்டர்நெட் வசதி ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வரை 4G சேவையை பயன்படுத்த முடியும் , வீடியோ கால் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ,மொபைல் டிவி என இன்டர்நெட் உலகையே மாத்தியமைத்தது தான் 4G.
 
2g...3g...4g...5g..Tholilnutpam.com_.jpg

 
5G சேவை :
 
4G விட நுறு மடங்கு டேட்டாக்களை வேகமாக பரிமாறிக்கொள்ள முடியும். உதாரணமாக ஒரு முழு திரைப்படத்தை 3G யில் டவுன்லோட் செய்யும் பொழுது 26 மணி நேரம் ஆகும் 4G யில் டவுன்லோட் செய்யும் பொழுது 6 நிமிடத்தில் டவுன்லோட் செய்ய முடியும்  ஆனால் 5யில் 3.6 வினாடியில் டவுன்லோட் செய்ய முடியும் 

 
2g...3g...4g...5g..Tholilnutpam.com_.png
 
 
இந்த சேவையானது நமது அன்றட வாழ்வில் நாம்  பயன்படுத்தும் அனைத்து கேஜெட்களிலும்  5G  சேவையை பயன்படுத்தும் வகையில் இருக்கும் . அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் தான் சேமித்து வைத்து தகவல் பரிமாற்றம் நடைபெறும்.

 
aa.png

 
 
5G சேவையின் நிறைகள் :
 
அதிவேகமாக வயர்லெஸ் தொழில்நுட்பத்தில்  இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் , அனைத்து கேஜெட்களிலும் பயன்படுத்தும் வைகையில் இருக்கும். 
 
எதிர்காலத்தில் புதிதாக நிறைய தொழில்நுட்ப கருவிகளை உருவாக்க  மற்றும் அதிவேகமாக பயன்படுத்த முடியும்.
 
குறைகள் :
 
ஒரு 4G மொபைல் போனை  பயன்படுத்த 10 கிலோமீட்டர் தொலைவில் சிக்னல் கம்பங்கள் அதாவது டவர் கம்பங்கள் இருந்தால் போதும் ஆனால்  5G னை பயன்படுத்த 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு டவர் கம்பங்களை அமைக்க வேண்டியிருக்கும். அப்பொதுதான் அதன் இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக அதிக அளவு  சிக்னல் அலை கற்றைகளை வெளிப்படுத்துவத்தால் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் பாதிப்பு எற்படும்.
 
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் பிடித்திருந்தால் ஷேர் செய்யவும் . நன்றி 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களுக்கு நன்றி ஏராளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரையாவது கேட்க வேண்டும் என்று இருந்தேன்.
பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி விரிவான தகவல்களை இணைத்துள்ளீர்கள் ஏராளன்.
இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

நானும் இதுபற்றித் தேடிக்கொண்டு இருந்தேன். எளிமையான விதத்தில் விளக்கம் தரப்பட்டுள்ள இந்த தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஏராளன். 

இது உங்கள் சொந்த வலைப்பக்கமா? 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவை இணைத்தமைக்கு... நன்றி ஏராளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

ஒரு 4G மொபைல் போனை  பயன்படுத்த 10 கிலோமீட்டர் தொலைவில் சிக்னல் கம்பங்கள் அதாவது டவர் கம்பங்கள் இருந்தால் போதும் ஆனால்  5G னை பயன்படுத்த 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு டவர் கம்பங்களை அமைக்க வேண்டியிருக்கும். அப்பொதுதான் அதன் இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக அதிக அளவு  சிக்னல் அலை கற்றைகளை வெளிப்படுத்துவத்தால் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் பாதிப்பு எற்படும்.

இது மிகவும் பாதகமாகவல்லவா இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மல்லிகை வாசம் said:

நானும் இதுபற்றித் தேடிக்கொண்டு இருந்தேன். எளிமையான விதத்தில் விளக்கம் தரப்பட்டுள்ள இந்த தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஏராளன். 

இது உங்கள் சொந்த வலைப்பக்கமா? 😊

இல்லை, வாசித்ததை பகிர்ந்தேன்.

Link to comment
Share on other sites

என்னுடைய தளத்தை பகிர்ந்தமைக்கு நன்றி .. ஏராளன் 

https://www.tholilnutpam.com/2019/03/4g-5g.html

புதிதாக ஆரம்பித்துளேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே 

தொழில்நுட்பம் இது எனது தளம்  https://www.tholilnutpam.com

On 3/5/2019 at 8:18 AM, ஈழப்பிரியன் said:

இது மிகவும் பாதகமாகவல்லவா இருக்கிறது.

என்னுடைய தளத்தை பகிர்ந்தமைக்கு நன்றி .. ஏராளன் 

https://www.tholilnutpam.com/2019/03/4g-5g.html

புதிதாக ஆரம்பித்துளேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே 

 தொழில்நுட்பம் இது எனது தளம்  https://www.tholilnutpam.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.