Jump to content

வடு - ஜெரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடு

Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:50 Comments - 0

-ஜெரா 

இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் பாதக விளைவுகள் மெல்லமெல்லமாகத் தலையெடுக்கின்றன என்கின்றனர் உளவியல் பணிசெய்வோர்.   

அண்மையில், உளவியல்துறை பேராசிரியர் தயா சோமசுந்தரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, முக்கிய விடயமொன்றைக் குறிப்பிட்டார்.    

“போர் நிறைவுற்றுப் பத்தாண்டுகள் கடந்துவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களில் பலர், அந்த நினைவுகளுக்கு உரிய உளச்சிகிச்சைகளைப் பெறாமலே, மறக்கச் செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆட்சிக்காலங்களில், உளச்சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகள்கூட, மறுக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. மக்கள் ஓரளவுக்கு இறந்தோரை நினைவுகூரவும், பொதுவெளியில் அழுவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளனர். இது முன்னேற்றகரமானது. இருந்தபோதிலும், கடந்தகாலப் பாதிப்புகள், நீண்டகால நோக்கில், சிலபல விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.  

அதற்கு உதாரணமான ஒருவர்தான், இந்தக் கட்டுரையில் வரும் மலரம்மா. (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)  

வன்னியில், போர் தாக்கிய கிராமங்களின் ஒன்றினூடாக, அந்த பஸ் பயணித்துக் கொண்டிருக்கிறது....
மர நிழலில் காத்திருந்த சிலர், பஸ்ஸை  வழிமறித்து ஏறுகின்றனர். அந்தக் கூட்டத்திலிருந்து, கடைசியாய் ஒரு பயணி ஏறுகிறார். கிட்டத்தட்ட, 60 வயதைத் தாண்டிய உடற்றோற்றம்! பஸ்ஸின் வாசலூடாகத் தவழ்ந்து ஏறுகிறார். நடத்துநரும் வேறுசிலரும் உதவிசெய்து, ஓர் ஆசனத்தில் அமர வைக்கின்றனர். 

யாரையும் நிமிர்ந்து பார்க்காத அந்த அம்மா, யன்னலுக்கு வெளியே, வேகமாகக் கடந்துபோகும் வெட்டைவெளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கண்ணீரின் கறை படிந்து, கறுப்பு வளையங்கள் கொண்ட கண்கள், மங்கி சுருங்கி இருக்கின்றன. வர்ணங்கள் நீர்த்துப் போன வாழ்வின் குறியீடாக, அந்தத் தாய் தெரிகிறாள்.  

அவரின் பெயர் மலரம்மா.  

“இந்த ஊரிலை இருக்கிறது என்ற பேருக்குத் தான் இருக்கிறா; யாரோடையும் கதைக்கமாட்டா; அவவுக்கு ஒரு மாதிரி எண்டு சொல்லுகினம்; தனியத்தான் திரியுறா; நல்லது கெட்டது ஒண்டுக்கும் வரமாட்டா; சிலவேளை, நடுவெய்யில்லை நிண்டு கத்துவா, வானத்தை அண்ணாந்து பாத்து, ஏதோ கதைச்சுக்கொண்டு இருப்பா” மலரம்மாவைப் பற்றி, அந்த ஊர் தந்த அறிமுகம் இது. 

அவருக்கு அப்பிடி என்ன பிரச்சினை? அதுவும் நீண்ட காலமாக இப்பிடியே இருக்கிறாராம். குடும்பம் எங்கே? கணவன், பிள்ளைகள் இருக்கிறார்களா? என்ன நடந்தது?  

2009ஆம் ஆண்டு, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும், கடந்த 30 ஆண்டுகளாகப் போரின் பல்வேறு வடுக்களை மக்கள் தாங்கி இருக்கின்றனர். உடல் காயமாக, உளக்காயமாக அது அவர்களைத் துருத்தி, வேதனை அளித்துக் கொண்டே இருக்கின்றது. 

இந்த இரண்டு வகையான பாதிப்புகளுக்குள்ளும் வசமாக அகப்பட்டவர்தான் “அவவுக்கு ஒரு மாதிரி” என, ஊர் அறிமுகம் செய்யும் மலரம்மா.  

1990ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் வடுக்களை, அவர் சுமந்திருக்கிறார். அந்த நாள்களில், கரையோரப் பிரதேசங்களில் கடலன்னையின் அரவணைப்பில் உழைத்துக்கொழித்த செல்வத்தோடு, இறைவன் கொடுத்த மக்கள் செல்வத்தின் பயன், நான்கு குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் அது.  

நீண்ட பிரயத்தனத்தின் பின்னர் மலரம்மா கதைக்கத் தொடங்கினார். “தொண்ணூறாம் ஆண்டு, தொடர்ச்சியாக ‘புக்காரா’வின் (குண்டு வீச்சு விமானம்) குண்டுமழைக்கு நடுவில், எங்கள் மக்கள் வீடு வாசல், ஊரின் மண் வாசத்தையெல்லாம் இழந்து, பிரிந்து, தூரதேசத்துக்கு நடந்து கொண்டிருந்தனர். ‘இஞ்சேரப்பா, எல்லாரும் போய்க் கொண்டிருக்கினம். நாங்கள் இந்தச் சின்னனுகளை வைச்சுக்கொண்டு என்ன செய்யப்போறம். அவங்கள், மாறி மாறி ஷெல்லடிச்சுக் கொண்டிருக்கிறாங்கள்’ எண்டு அவரிட்ட அடிக்கடி சொல்லியிருப்பன். என்ரை மூத்தவள் நிலா உண்மையா நிலவு முகம்தான்! ‘அம்மா பெரியம்மாக்கள் போயிட்டினம்; நாங்களும் போவம்; பயமாக்கிடக்கு’ என்று அவள் கேட்கத் தொடங்கி இருந்தாள். கடைசிச் சின்னவன் கைக்குழந்தை. எனக்கு எல்லாம் யோசிக்கப் பயமாக்கிடந்தது. அந்த மனநிலையை வார்த்தையாலை சொல்ல ஏலாது. பயமும் ஏக்கமும், அமைதியற்ற நிலையும் அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற அல்லாட்டம் தான் நிறைந்திருந்தது. ‘பொறடியப்பா! நீ சும்மா பயப்பிடுறாய், நிலைமையைப் பாத்து நாங்களும் வெளிக்கிடுவம்’. அவரின்ரை கண்ணிலும் பயம் தெரிந்தது. எனக்கு, ஏதோ நடக்கப்போகுது எண்டு விளங்கிட்டுது; என்ன நடந்தாலும் நான், என்ரை பிள்ளையளைக் கொண்டு, எப்படியாவது போயிடவேணும் எண்டு முடிவெடுத்திட்டன். காலமை பத்து மணியிருக்கும், எங்கட நாய் பதறிப்பதறி, ஓடிஓடி குலைக்கத் தொடங்கியது. எனக்கு நெஞ்சு பதறத்தொடங்கிட்டுது. சாப்பிட இடியப்பமும் அவிச்சு, கும்பிளா மீனில குழம்பும் வைச்சனான். இவர் கடற்கரைக்குப் போட்டார். ஒரு கிண்ணியிலை இடியப்பத்தை அடுக்கி வைச்சுப்போட்டு,பிள்ளையளை எல்லாரையும் கூட்டிக்கொண்டு, எனக்குப் பக்கத்திலை இருக்க வேண்டும், ஒருடமும் போகக்கூடாது என்று சொன்னன். பிள்ளையளும், அம்மா ஏதோ பிரச்சினை எண்டுதான் அப்பிடிச்சொல்லுறா எண்டு நினைச்சு, என்னைச்சுத்தி வரிசையா இருந்ததுகள். எனக்கு இப்பவும் நினைவிருக்கு! பிள்ளையள் என்ரை முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததுகள். பயத்திலை முகமெல்லாம் வெளிறிப்போச்சு; எனக்குத் தொடர்ச்சியாப் பக்கத்திலை கேட்ட வெடிச்சத்தத்திலை என்ன நடக்குது, என்று தெரிஞ்சாலும் அதைக்காட்டிக் கொள்ளாமல், செல்லங்களே ஒருத்தரும் பயப்பிடக்கூடாது, அம்மா இருக்கிறன் தானே! அப்பா இப்ப வந்திடுவார், நாங்கள் வெளிக்கிட்டுப் போவம், அதுவரைக்கும் அம்மாவை விட்டு ஒருத்தரும் அசையக்கூடாது என்று சொன்னன்! அப்பிடிச்சொல்லி, பிழை விட்டுட்டேன்! ஐயோ! நான் பெரிய பிழையவிட்டுட்டேன். கடற்கரையில ஒரே பெரிய வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் என்ரை சின்னனை, மடியிலை வைச்சுக்கொண்டு, சுத்தி எல்லாரையும் வைச்சுக்கொண்டு இருந்தன். (இரு கைகளையும் மடித்து, தன் மடியோடு அந்தக் குழந்தையை அணைத்து வைத்திருந்ததைச் செய்து காட்டுகிறார்) காதைப்பிய்க்கிற மாதிரி ஒரு சத்தம் கேட்டது. பக்கத்திலை தான் குண்டு விழுந்தது. எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எங்களைச்சுத்திப் பளீர் என்று ஒரு வெளிச்சம் வந்து போனது. என் வயிற்றில் சுரீரென்று ஏதோ குத்தியது போல இருந்தது. மயக்கம் வருமாப்போல இருந்தது. பிறகென்னத்தைச் சொல்ல; நான் என்ரை நாலு பிள்ளையளையும் கண்ணுக்கு முன்னாலே பறிகொடுத்துவிட்டேன். அம்மா என்று பெரிய அழுகைச்சத்தம் தான் கேட்டது. என்ர நாலு பிள்ளையளும் என்ர கண்ணுக்கு முன்னாலயே சிதறிப் போயிட்டினம். (சொல்லி முடிக்க முன், மலரம்மாவில் பெருகும் கண்ணீர், மேலும் பேசத் தடைவிதிக்கிறது) என் கண்ணீருக்கு யாரும் பதில் சொல்ல முடியாது. என்ரை கைக்குழந்தையையும் என்ரை நிலாவையும் எல்லாரையும் பறிகுடுத்திட்டேன்; இன்றைக்கு நான் நடைப்பிணமாகத் திரியுறேன்.. இன்றைக்கும் என் கண்முன்னே என்ரை பிள்ளைகள் கத்தியழுத காட்சிதான் வருகிறது. என்னவென்று நான் மறப்பேன். கண்ணுக்கு முன்னாலை கத்திக் கத்தி இரண்டுபேரும், ஒரு சத்தமும் இன்றி இரண்டுபேரும், ஐயோ.... இப்ப நினைச்சாலும் என்ரை நெஞ்சு பத்தியெரியுது”  

அந்த நாளிலிருந்து, அனைவரிடமும் ஒதுங்கி வாழ்ந்து, தன்னுடைய மனதின் ஆழத்திலுள்ள சோகங்களைக் கொட்டி அழாத, அந்த அம்மாவின் சோகங்களுக்கு, எங்களின் வருகை ஒரு வடிகாலாக அமைந்தது என்கிறார், அவருக்கு இப்போது உளச்சிகிச்சை அளித்து வரும் களப்பணியாளர் ஒருவர்.  

கிட்டத்தட்ட 60 வயது மதிக்கத்தக்க அந்த அம்மாவின் கைகள் இரண்டும் தன்னுடைய குழந்தைகளைக் காப்பாற்றப் போராடிய போராட்டத்தில் செயலிழந்து விட்டன. உடலின் பல்வேறு பகுதிகளிலும் போர் கொடுத்த வடுக்களைத் தாங்கியுள்ளார். 

தன்னுடைய பிள்ளைகளை, எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணவோட்டத்திலிருந்து சற்றேனும் இன்னும் அவர் விடுபடவில்லை.  “மூத்தவள் இப்ப எப்படியும் கல்யாணம் கட்டியிருப்பாள். என்ரை கடைசி இன்டைக்கு படிச்சுப் பெரிய நிலைமையிலிருப்பான்; ரெண்டாவது அப்பவே சொல்லுவான், அம்மா நான் படிச்சு பெரிய எழுத்தாளனா வருவேன் என்று” அடிப்படையில், படிப்பில் கெட்டிக்காரக் குழந்தைகள் போலும்! 

மலரம்மாவும் அந்தக் காலத்திலை எஸ்.எஸ்.சி (சாதாரணதரத்துக்கு நிகரானது) படித்தவர்தான்!  
“என்னையும் உந்தக் கொடிய ஷெல் கொண்டுபோயிருக்கவேணும். தப்பவிட்டு, இண்டைக்கு நான் அநாதையாக நிக்கிறேன். என்ரை அக்காவின்ர பிள்ளை வீட்டை சாப்பிடப்போவன்; அவன் ஒன்றும் சொல்ல மாட்டான். ஆனாலும், என்ரை மனம், அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டு வரும் வரைக்கும், உள்ளுக்குள்ளே அழுதுகொண்டேயிருக்கும். நாங்கள் எப்படியிருந்த குடும்பம்; நான் தனிய அலைஞ்சி கொண்டிருக்கிறன். என்னைய சிலர், ‘பிள்ளையளைப் பறிகொடுத்ததிலை அவளுக்குப் பைத்தியமாக்கிட்டுது என்று சொல்லுகினம்’ எங்கடை ஊரிலை இருக்கும் போது, எல்லா நாளும் என்ரை பிள்ளையளின்ரை நினைவு தான். நான் நிறையக் கனவோட இருந்தனான். என்ரை கனவுகள் எல்லாம் அழிஞ்சு போய்விட்டன. நான் யாரோடை கதைச்சு என்னத்தைப் செய்யப்போறன். இனி நான் நல்லா வந்து, யாருக்கு என்ன லாபம்? ஏதோ என்ரை காலம் முடியுற வரைக்கும் நான் இப்பிடியே இருந்திட்டு செத்துப்போறன்” தொடர்ந்தும் பெரிய சத்தத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்.  

ஒரேநேரத்தில் தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் கண்ணுக்கு முன்னாலேயே பறிகொடுத்துவிட்டு, இழிவிரக்கத்துடன், தொடர்ச்சியாக யாருடனும் பேசாது, மனதிலுள்ள துன்பங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்துக்கொண்டிருந்த மலரம்மாவில் இப்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக உளசிகிச்சைப் பணியாளர் சொல்கிறார். 

கோவிலுக்குச் செல்லவும் அயலாருடன் பேசவும் தன் வீட்டுக் கடமைகளைத் தானே செய்துகொள்ளவுமான மாற்றங்களை களப்பணியாளர் அவதானித்துப் பட்டியலிடுகின்றார்.  

போர் இப்படித்தான் விளைவுகளைச் செய்யும். நீண்டகாலமாகச் செரிக்காத நிலையிலிருந்து, மனிதர்களை மன ஊனமாக்கும்; மலரம்மா அதற்குச் சாட்சி.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடு/91-230354

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரம்மா போல் எவ்வளவு பேர் இன்னும் அல்லாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.......!   😐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.