Jump to content

புதுப் புது சவால்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுப் புது சவால்கள்

Image result for technology risks

எல்லா விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு எனும் நியூட்டனின் விதி தொழில்நுட்ப உலகிலும் நிஜமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு ‘மிகவும் பாதுகாப்பானது’ என நினைத்த விஷயங்கள் இந்த ஆண்டு பாதுகாப்பற்றவையாய் மாறியிருக்கின்றன. இப்போது பாதுகாப்பானவையாய் தோன்றும் பல விஷயங்கள் நாளை பாதுகாப்பு இல்லாதவையாக மாறிவிடும் . தொழில்நுட்பம் நாலுகால் பாய்ச்சலின் முன்னோக்கிச் செல்லும் போது அதை எட்டு கால் பாய்ச்சலின் வேகத்தில் பின்னுக்கு இழுக்கின்றன புதுப் புது சவால்கள்.

ஸ்மார்ட் போனில் தகவல்களைத் திருடுவார்கள், வைரசைப் புகுத்துவார்கள், பாஸ்வேர்டைத் திருடுவார்கள் போன்றவிஷயங்களெல்லாம் இன்று பழைய சங்கதிகளாகி விட்டன. திருடர்கள் எல்லாம் நவீன தொழில்நுட்பத்தின் அதி நவீன அம்சங்களுடன்தான் நமது ஸ்மார்ட் போனை அணுகுகின்றனர்.

இன்றைக்கு பாதுகாப்பு என்பது பாஸ்வேர்ட், பேட்டர்ன் என்பதைத் தாண்டி பயோ மெட்ரிக் வகைக்குத் தாவியிருக்கிறது.கைவிரல்பதிவைக் கொடுத்தால் போன் திறந்து கொள்ளும். அல்லது நம்முடைய முகத்தைக் காட்டினால் திறந்து கொள்ளும் எனும் வகையில் தான் இன்றைய ஸ்மார்ட்போன்கள் வடிவமைக்கப்படுகின்றன.

இன்னும் சில ஸ்மார்ட்போன்கள், அப்ளிகேஷன்கள் குரலை வைத்து இயங்குகின்றன. ‘அண்டா காகாசம் அபூ காகூகும் திறந்திடு சீசே’ என்று சொன்னால் கதவு திறப்பது இப்போது பூதங்களின் கதையல்ல. தொழில்நுட்பத்தின் கதை.

ஓகே கூகிள் என்றால் கூகிள் விழித்தெழுகிறது, ஹேய் அலெக்ஸா என்றால் அலெக்ஸா விழித்தெழுகிறது என குரலை வைத்து கருவிகள் செயல்படும் காலம் இது. விரலுக்கும் குரலுக்கும் இடையே தான் பெரும்பாலான பாதுகாப்பு அம்சங்கள் இன்றைக்கு பயணித்துக்கொண்டிருக்கின்றன எனலாம்.

இந்த பாதுகாப்புக்கு உள்ளே தான் நமது ஸ்மார்ட் போன் இருக்கிறது. நமது ஸ்மார்ட் போனுக்கு உள்ளே தான் நம்முடைய வங்கிக்கணக்குகள் இருக்கின்றன, நமது தனிப்பட்ட தகவல்கள் இருக்கின்றன, நமது பணப்பரிமாற்றத் தகவல்கள் இருக்கின்றன. யாராவது இந்தப் பாதுகாப்பு வளையத்தை உடைத்து விட்டால் நமது முக்கியமான தகவல்களெல்லாம் இன்னொருவர் கைக்குப் போய்விடும் என்பது சர்வ நிச்சயம்.

இப்போது பாதுகாப்பை உடைக்க நினைப்பவர்களெல்லாம் இந்த மூன்று ஏரியாக்களில் தான் கவனம் செலுத்துகிறார்கள். நமதுகைரேகை, கண்கள், குரல் !

அப்படித் தேடுபவர்களுக்கு லட்டு போல கிடைக்கிறது செல்பிக்கள். செல்பிக்கென சர்வதேசம் உருவாக்கி வைத்திருக்கும் ஸ்டைலில் விரல்களை அப்படியும் இப்படியும் உயர்த்திப் பிடிக்கிறது இளைய சமூகம். அந்த புகைப்படங்களிலிருந்து கைரேகையைப் பிரித்தெடுக்கக் கற்றிருக்கிறது தொழில்நுட்ப திருடர் கூட்டம்.

இப்படி ஒரு அச்சுறுத்தல் இருப்பதை உலகுக்கு முதலில் சொன்ன பெருமை ஜப்பானைச் சேர்ந்த ‘ஷங்காய் ஷிம்பன்’ எனும் பத்திரிகைக்குத் தான் சொந்தம். இன்றைக்கு பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பயோ மெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம் தான் நிறுவனத்துக்குள் அனுமதிக்கின்றன. கை விரலை வைத்தாலோ, கண்ணைக் காட்டினாலோ, முகத்தைக் காட்டினாலோ கதவு திறக்கும் வகையில் தான் இன்றைய பயோ மெட்ரிக் சோதனைகள் இருக்கின்றன.

இணைய தளங்களில் புகைப்படங்கள் போஸ்ட் செய்யும் போது அதிலிருந்து முகம், கண்கள் போன்றவை திருடர்களால் பயன்படுத்தப்படலாம். அதே போல புகைப்படங்களில் விரல்கள் தெளிவாகத் தெரிந்தால் அதிலிருந்து கைரேகையைப் பிரித்தெடுத்து போலியாக உருவாக்கலாம் என அந்த நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது.

நாம் எடுக்கின்ற செல்பியைத் தாண்டி, இன்றைக்குக் கிடைக்கின்ற ஹை டெஃப்னிஷன் கேமராக்கள் மூலமாக யார் வேண்டுமானாலும் நம்மையோ, நமது ரேகையையோ நம்மை அறியாமல் புகைப்படம் எடுத்து விட முடியும். அது நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் மாறவும் முடியும்.

சமீபத்தில் இதை வெற்றிகரமாக செய்தும் பார்த்து விட்டார்கள். ஒரு செல்பியிலிருந்த கைவிரல் ரேகையை காப்பியடித்து பாதுகாப்பு வளையத்தை வெற்றிகரமாக உடைத்தும் காட்டி விட்டார்கள்.

நாம் விளையாட்டாய் எடுக்கின்ற செல்பிக்கள் நமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாய் மாறியிருக்கிறது. அது போல நாம் பேசுகின்ற வார்த்தைகளை அப்படியே எடுத்து அதைக் கொண்டு பாதுகாப்பு வளையங்களை உடைப்பதும் இப்போது சாத்தியமாகி யிருக்கிறது. டார்க் வெப் எனும் தளத்தில் சட்ட விரோத பரிவர்த்தனைகள் நடப்பதுண்டு. அதில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு இலட்சம் தனிநபர் தகவல்கள் ஐம்பதாயிரம் டாலருக்கு விற்கப்பட்டதாய் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த தகவல்கள் அனைத்துமே செல்பி புகைப்படங்களோடு இணைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இப்போது ஆன்ட்ராய்டின் ஓகே கூகிள், ஆப்பிள் தயாரிப்புகளின் சிரி, அமேசானின் அலெக்ஸா போன்றவற்றையெல்லாம் ஸ்மார்ட்போன்களின் பயன்படுத்தி வருகிறோம். அவையெல்லாம் ‘கூட இருந்து குழிபறிக்கும் வில்லன்களாக’ மாறியிருக்கின்றன,

நவீன தொழில்நுட்பம் நமது வீடுகளில் கொண்டு சேர்த்திருக்கும் இன்னொரு விஷயம் ஸ்மார்ட் மெஷின்கள். அமேசான் எக்கோ, கூகிள் ஹோம் போன்றவையெல்லாம் நமது வீட்டு வரவேற்பறைகளில் நுழையத் துவங்கியிருக்கின்றன. ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ட் மற்றும் மெஷின் லேர்னிங் நுட்பங்களோடு வந்திருக்கும் புத்திசாலிகள் இவர்கள். ‘இளையராஜா பாட்டு ஒண்ணுபோடு’ என்றால் போடும். தமிழ் வேண்டாம் பிலீவர் சாங் ப்ளே பண்ணு என்றால் உடனே மாற்றும்.

பக்கத்தில் எங்கே ஹோட்டல் இருக்கிறது என்றால் தகவலைச் சொல்லும். வெளியே போலாமா டிராபிக் இருக்கா என்றால் அட்சரசுத்தமாய் பதில் சொல்லும். இவையெல்லாம் நவீன வரவுகள். ஆனால் இவை முழு நேரமும் நமது வீட்டில் நடக்கும் உரையாடல்களைக் கவனித்துக் கொண்டே இருக்கின்றன என்பதும், தேவைப்பட்டால் அவற்றை ஏதோ ஒரு கிளவுட் சர்வரில் சேமித்து வைக்கும் என்பதும் திகிலூட்டக்கூடிய சமாச்சாரங்களாகும்.

இந்த கருவிகளின் வழியாக நமது வீட்டுக்குள் ஒரு உளவாளியை சுதந்திரமாய் உலவ விட்டிருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த குற்றச்சாட்டை தயாரிப்பு நிறுவனங்களே மறுக்கவில்லை. கூப்பிட்டதும் பதில் சொல்லவேண்டும் என்பதற்காக் எப்போதுமே இவை காதை கூர்தீட்டிவைத்துக் காத்திருக்கும் எஞும் உண்மையை எல்லோரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். சொன்னதை கேட்டு பதில் சொல்லும் இந்தகருவிகளுக்கு கேட்பது யார் என்பது முக்கியமில்லை. சன்னல் வழியாக எட்டிப்பார்த்து ஒருவர் கதவைத் திற என்று சொன்னால் கூட டிஜிடல் கதவெனில் திறந்து தரலாம் !

அப்படியே உங்கள் குரலைத் திருடி விட்டால் ‘பணத்தையெல்லாம் என் அக்கவுண்டுக்கு மாற்று என சொன்னால் சமர்த்தாய் மாற்றிவிட்டு அமைதி காக்கவும் செய்யும்.

நமது மொபைலில் நாம் நம்பி தரவிறக்கம் செய்யும் ஆப்கள் கூட பலவேளைகளில் காலை வாரிவிடுகின்றன. பிட்ஸைட் நடத்திய ஒருஆய்வில் மிகவும் பாதுகாப்பானது என நாம் நினைக்கும் வங்கி போன்ற ஃபைனான்சியல் கம்பெனிகளின் ஆப்களிலேயே கால்வாசி ஆபத்தானவை என தெரிய வந்திருக்கிறது. பல ஆப்கள் நமது தகவல்களை அப்படியே இன்னொரு இடத்துக்கு ரகசியமாய்க் கடத்திவிடுகின்றனவாம் !

பல நிறுவனங்கள், எதிரி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கவனிக்க இப்போதெல்லாம் உளவாளிகளை அனுப்புவதில்லை. முழுக்க முழுக்க டிஜிடல் உளவாளிகளை மட்டுமே உருவாக்குகின்றன. இவை ஆப்களாகவோ, சென்சார்களாகவோ, வாய்ஸ் ஹேக்கிங் ஆகவோ எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். எதிரியின் தொழில் திட்டம் முதல், அவர்களுடைய ஐடியாக்கள், அவர்களுடைய கொட்டேஷன்ஸ் என எல்லாவற்றையும் திருடிக் கொள்ளும் முனைப்புடன் இவை செயல்படுகின்றன.

அதே போல என்கிரிப்ஷன் செய்யப்படாத புளூடூத் கருவிகளைப் பயன்படுத்தும் போதும் நாம் பேசும் தகவல்கள் எளிதில் ஹேக்கர்களால் திருடப்படும் வாய்ப்பு உண்டு. புளூடூத்களின் எல்லையை ஆன்டினாக்களின் உதவியோடு அதிகப்படுத்தி, தொலைவிலிருந்தே நமது தகவல்களைத் திருடும் வழக்கம் புதிதல்ல.
இந்த சூழலில் மொபைலை முழுமையாக பாதுகாப்பது என்பது குதிரைக் கொம்பு தான். இதனால் முடிந்த அளவுக்கு பாதுகாப்பாய் இருக்க சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

உங்களுடைய மொபைல் சேமிப்பு தளத்தை ‘என்கிரிப்ட்(encrypt)’ செய்து வைத்திருங்கள். அப்போது உங்கள் தகவல்களை யாராவது திருடினாலும் அது பயன்படுத்த முடியாததாய் போய்விடும்.

உங்கள் மொபைல் தொலைந்து போனாலும் அதிலுள்ள தகவல்களை தொலைவிலிருந்தே அழிக்கும் வசதியான, ‘ரிமோட் வைப் (remote wipe)’ ஆப்ஷனை வைத்திருங்கள். வேறு மொபைல், லேப்டால் என எதிலிருந்து வேண்டுமானாலும் உங்கள் தகவல்களை நீங்கள் அழிக்க முடியும்.

புகைப்படங்கள், குரல், போன்றவற்றை இணையத்தில் பதிவிடுவதை நிறுத்துங்கள். உங்களுடைய புளூடூத்தையும், வைஃபையையும் , ஹாட்ஸ்பாட்டையும் தேவையற்ற நேரங்களில் அணைத்தே வைத்திருங்கள். பொதுவிடங்களிலுள்ள வைஃபை வசதியைப் பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள். தேவையற்ற ஆப்களை அழித்து விடுங்கள்.

இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் கடைபிடித்தாலே போதும். பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும். நமது தகவல்களைப் பாதுகாக்க ஒரே வழி, நாம் விழிப்புடன் இருப்பது மட்டுமே !

https://xavi.wordpress.com/2019/03/04/challenges/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசதிகள் பெருகப் பெருக... மனிதனுக்கு, ஆபத்தும் நெருங்கிக் கொண்டு உள்ளது.
முன்பெல்லாம் வேலை என்றால்... எட்டு  மணி நேரம் மட்டுமே. 
இப்ப வேலை ஆளுக்கு... ஒரு மடிக் கணணியும்,  ஸ்மார்ட் போனும் கையில் கொடுத்து விட்டு,
வீட்டிற்கு வந்த பின்னும்... அவனது ஒய்வு நேரத்தில் கூட,  அலுவக வேலையை பார்க்க வைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் நான் ஒரு நண்பருடன் ஒரு தளபாட கடைக்கும் பின்பு பூக்கண்டுகள் விக்கும் தோட்டக் கடைக்கும் போய் விட்டு வந்தேன். அப்போது நான் போன் பாவிக்கவில்லை.அது பையில் இருந்தது . வீட்டுக்கு வந்து சில மணித்தியாலங்களின் பின் போனைத் திறந்தால் அந்தக் கடைகளின் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சாகலாம் என்று நினைக்கவே பயமாய் இருக்கு வீட்டுக்கு சவப்பெட்டி வந்து விடுமோ என்று.....!

 300 கி.மீ வேகம் போகக்கூடிய கார் ,எங்கே முடிந்தால் பரிஸ்சுக்குள் இறக்கிப் பாருங்கள் , ஒரு கி.மீ  தூரம் போக மூன்று மணித்தியாலம் எடுக்கும். இதுதான் இன்றைய வாழ்வின் முன்னேற்றம்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன ஸ்மாட் போன்களின் மைக் மூலமாக நமது எல்லா பேச்சுகளும் பதிவு பண்ணப்படுதோ?
அதோட இடமறியும் (location) செயற்பாட்டின் மூலமாகவும் நாங்கள் போய் வந்த இடங்கள் அறியப்படலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.