Jump to content

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை

March 5, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

53391155_983417348521315_216023817615572

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஓருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான 32 வயதான காந்தலிங்கம் பிறேமரமணன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாறியாக வெட்டியுள்ளார். தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்துள்ளார்.

உறவினர் ஒருவரே வெட்டியதாகவும் வெட்டிய நபர் கிளிநொச்சி காவல்நிலையத்தில் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://globaltamilnews.net/2019/115119/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கு உந்துருளியில் வந்த 33 வயதான இந்த நபர், கிளிநொச்சி உதயநகர் பகுதியில், இன்னுமொரு உந்துருளியில் வந்த நபரினால் தடுத்து நிறுத்தப் பட்டு, வெட்டிக் கொல்லப் பட்டுள்ளார்.

தனிப்பட்ட கருத்து மோதலே காரணமாக இருக்கலாம் என போலீசார் கருதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

http://www.dailymirror.lk/breaking_news/Kilinochchi-Co-op-Insurance-branch-manager-hacked-to-death/108-163432

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலைக்கு செல்லும் வழியில் ரமணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம் வெளியானது..

Untitled.jpg

சென்றவாரம்  வேலைக்கு செல்லும் போது  நபர் ஒருவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் 
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது ..

கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றி வந்த 32 வயதுடைய பிரேம ரமணன் என்ற நபரே  கடந்த  5 ஆம் திகதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சில மணித்தியாலங்களின் பின்னர்  குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி காவல் துறையினர் அழைத்து சென்று விசாரணைக்குட்படுத்திய வேளையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பிரேம ரமணன் , கைது செய்யப்பட்ட  நபரின் நண்பராவார்.

தாம் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்னர் குடும்ப வறுமையினை போக்க தனது மனைவியினை நண்பரிடம் பேசி அவரின் காப்புறுதி  நிறுவனத்திற்கு தொழிலுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரேம ரமணன் நண்பனின் மனைவியுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளார்.

அது மாத்திரமின்றி தகாத உறவில் இருந்த போது பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் என அனைத்தையும் நண்பனின்   கையடக்க தொலைபேசிக்கு அனுப்பியும்  வைத்துள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் நாட்டிற்கு திரும்பியவுடன் தனது மனைவியிடம் கூறிவிட்டு பிரேம ரமணனை கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான ரமணன்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்தார்

https://www.madawalaenews.com/2019/03/ramm.html

 

Link to comment
Share on other sites

இவர் போன்ற காவாலிகளை வெட்டி கொன்றதில் தப்பு இல்லை .....நம்பிக்கை துரோகிகளை இப்படித்தான் செய்ய வேண்டும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை.. கூடப் பழகும்.. ஒருவன்..  காவாலி என்பது நடத்தையில் தெரிந்ததும் விலக வேண்டியது தானே.. மனைவிகளின் புத்திசாலித்தனம்.  படுக்கை அறை பகிரும் வரை... ஏன் விட்டுக்கொடுக்கிறார்கள்.. என்பது மர்மாவே இருக்குது. 

இதில்.. இவர் மனைவியிலும் குற்றமுள்ளது. காவாலி அதையும் பயன்படுத்தியுள்ளார்.. என்றே தோன்றுகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.