Jump to content

இவந்தாய்யா யோக்கியன் . . .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவந்தாய்யா யோக்கியன் . . .

 
53160532_2549563745115098_3123165437282484224_n.jpg
 
 
அபிநந்தன் பாதுகாப்பாக திரும்பி வந்தது குறித்த ஒரு சங்கியின் ட்விட்டர் பதிவு இது. அபிநந்தனை வைத்து போருக்குப் போகலாம் என்று உசுப்பேத்திக் கொண்டிருந்த மாலன் உள்ளிட்ட  பலர் அவர் திரும்பி வந்ததும்  கள்ள மௌனம் சாதித்தார்கள்.
 
அவர்கள் மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசிய இந்த சங்கியின் நேர்மை பாராட்டுக்குரியது.
 
அந்தாள் சொன்னதை தமிழில் சொல்கிறேன்.
 
"அபிநந்தனின் இடத்தில் நான் இருந்திருந்தால் என் துப்பாக்கியால் நானே என்னை சுட்டுக் கொண்டு இறந்திருப்பேன். எதிரியின் கருணையால் உயிரோடு திரும்புவதைக் காட்டிலும் இறந்து போவதே மேல்.  வருந்துகிறேன் அபிநந்தன், நீங்கள் சக்தி மிக்க தலைவரை தழுவிக் கொண்டு விட்டீர்கள். உங்களை நினைத்து நான் பெருமிதப்படவில்லை"
 
பிகு 1
 
சக்தி மிக்க தலைவரை சங்கடப்படுத்தி விட்டீர்கள் என்றுதான் அந்தாள் எழுத நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். Embarrassed என்று எழுதுவதற்குப் பதிலாக Embraced என்று எழுதியதால் அது தழுவிக் கொண்டதாகி விட்டது.
 
பிகு 2
 
அபிநந்தன் விடுதலைக்கு எதிரியின் கருணைதான் காரணம் என்று ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இம்ரான் கானோ அல்லது பாகிஸ்தானின் அதிகாரிகள் யாருமோ இந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. Gesture of Peace,  அமைதியின் சமிஞ்சையாக விடுவிக்கிறோம் என்ற வார்த்தையைத்தான் அவர்கள் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் ராணுவ வீரர்களை இழிவு படுத்துவது யார்?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

us ன் எப்படி தங்கள் விமானம் f 16 விமானம் வீழ்த்தபட்டது என்ற கேள்வியின் அரசியலே இவ்வளவு விரைவான அபிநந்தன் விடுதலை மற்றும்படி மோடியின் ராஜதந்திரமோ இம்ரானின் சானக்கியமோ அல்ல .

யாழில் இந்திய அமைதிபடையின் ரஷ்ய டாங்கி அழிப்பு நடந்தபின் வலிகாமம் பகுதியில் ஒரு நாள் போர் நிறுத்தம் பொழுது ஓரிரு கைதிகள் பரிமாற்றமும் நடந்தது  சினேகபூர்வமாக உரையாடிய இந்திய அதிகாரிகள் அந்த அழிக்கமுடியாத ரஷ்ய டாங்கி எந்த ஆயுதம் மூலம் புலிகள் அழித்தார்கள் என்பதிலேயே குறியாய் இருந்தது .

அந்த டாங்கியை அழித்தவர் ஜேம்ஸ் பின்னாளில் இலங்கை  விமானத்தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

us ன் எப்படி தங்கள் விமானம் f 16 விமானம் வீழ்த்தபட்டது என்ற கேள்வியின் அரசியலே இவ்வளவு விரைவான அபிநந்தன் விடுதலை மற்றும்படி மோடியின் ராஜதந்திரமோ இம்ரானின் சானக்கியமோ அல்ல .

யாழில் இந்திய அமைதிபடையின் ரஷ்ய டாங்கி அழிப்பு நடந்தபின் வலிகாமம் பகுதியில் ஒரு நாள் போர் நிறுத்தம் பொழுது ஓரிரு கைதிகள் பரிமாற்றமும் நடந்தது  சினேகபூர்வமாக உரையாடிய இந்திய அதிகாரிகள் அந்த அழிக்கமுடியாத ரஷ்ய டாங்கி எந்த ஆயுதம் மூலம் புலிகள் அழித்தார்கள் என்பதிலேயே குறியாய் இருந்தது .

அந்த டாங்கியை அழித்தவர் ஜேம்ஸ் பின்னாளில் இலங்கை  விமானத்தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் .

அபிநந்தன் செலுத்தியதும் சுட்டு வீழ்த்தப்பட்டதும் Mig 21 அல்லவா? பாகிஸ்தான் தானே F16 பயன்படுத்தியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

அபிநந்தன் செலுத்தியதும் சுட்டு வீழ்த்தப்பட்டதும் Mig 21 அல்லவா? பாகிஸ்தான் தானே F16 பயன்படுத்தியது

ஓமண்ணா சவப்பெட்டியால(மிக்21) அமெரிக்க F16 விமானத்த சுட்டு விழுத்தினத ஆச்சரியமா பாக்கினம் போல!

பாகிஸ்தான் தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா ஒப்பந்தத்தில சொல்லியிருக்காம், பாகிஸ்தான் வலிந்த தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விமானத்தை வித்ததற்கு அப்புறம் அதை தற்பாதுகாப்புக்கு பயன்படுத்து , ஓடிவாறத்துக்கு பயன்படுத்து என்று சொல்ல முடியுமா,மணம் முடித்து குடுத்த பெண்ணை, இவளை சமைக்க பயன்படுத்து சலவை செய்ய பயன்படுத்து என்று சொல்லுறது போல இருக்கு. நிஜமாய் தெரியவில்லை அதுதான் கேட்கிறேன்.....!   🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

ஒரு விமானத்தை வித்ததற்கு அப்புறம் அதை தற்பாதுகாப்புக்கு பயன்படுத்து , ஓடிவாறத்துக்கு பயன்படுத்து என்று சொல்ல முடியுமா

ஒப்பந்தம் போட்டே விற்கப்படும். ஆனாலும், ஒப்பந்தத்தை இருபகுதியும் தூசி தட்டுவதத்திற்கு பாவிக்கும்.

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம்,அதுவும் 5-வரசுக்கள் கையெழுத்து வைத்த ஒப்பந்தம் என்ன நடந்தது.

இதில் பாகிஸ்தான் தனது தேசத்தின் பாதுகாப்பு பணியில், offensive ஆகவே பாவிக்கப்பட்டது என்றால், அதுவும் எல்லை தாண்டி,   US வாயை மூடிக் கொண்டு போகவேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

யாழில் இந்திய அமைதிபடையின் ரஷ்ய டாங்கி அழிப்பு நடந்தபின் வலிகாமம் பகுதியில் ஒரு நாள் போர் நிறுத்தம் பொழுது ஓரிரு கைதிகள் பரிமாற்றமும் நடந்தது  சினேகபூர்வமாக உரையாடிய இந்திய அதிகாரிகள் அந்த அழிக்கமுடியாத ரஷ்ய டாங்கி எந்த ஆயுதம் மூலம் புலிகள் அழித்தார்கள் என்பதிலேயே குறியாய் இருந்தது .

ஹிந்தியா சொறி சிங்கள கூட்டால் புலிகளை முடக்கமுடியாமால் போனதிதிற்கான அடிப்படை மூலோபாயக் குறைபாடு, US இந்த கூட்டில் ஓர் பங்காளராக சேரும் வரையில்.

உண்மையில், இந்த பிராந்தியத்தில் optimum force எனும் கோட்பாட்டை நடத்தி காட்டியவர்கள் புலிகளே.

ஓர் யுத்தம் வருமாயின், கிந்தியர்கள் மிகவும் வருந்த வேண்டி வரும். ஏனெனில், சீனா, பாகிஸ்தான் optimum-maximum force எனும் கோட்பாட்டில் உள்ளன.

சீனாவின் J-10C , J-11, US இன் F-16 இற்கு ஒப்பானது.

 

 

 

1 hour ago, நிழலி said:

பாகிஸ்தான் தானே F16 பயன்படுத்தியது

இதற்கு ஆதாரம் உண்டா?

US சத்தம் போடாமல் இருக்கிறது, பாகிஸ்தான் சீனாவின் ஜே-10, 11 ஐ பாவித்ததோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.

ஏனெனில், US F-16 இந்த மவுசு குறைந்து, சீனாவின் F-16 இனிலும் வலை குறைந்த J-10, 11, 17 களின் மவுசு கூடி விடும்.

https://www.scmp.com/news/china/military/article/2188196/did-pakistan-use-its-chinese-jf-17-jets-shoot-down-indian-planes

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அபிநந்தன் செலுத்தியதும் சுட்டு வீழ்த்தப்பட்டதும் Mig 21 அல்லவா? பாகிஸ்தான் தானே F16 பயன்படுத்தியது

F 16 அமெரிக்க தயாரிப்பு  Mig 21 ரசிய தயாரிப்பால்  F 16 விழுத்தியதுடன் அரசியல் சதுரங்கம் தொடங்கியது .

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2019 at 5:18 PM, நிழலி said:

அபிநந்தன் செலுத்தியதும் சுட்டு வீழ்த்தப்பட்டதும் Mig 21 அல்லவா? பாகிஸ்தான் தானே F16 பயன்படுத்தியது

பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தவில்லை: அமெரிக்க சஞ்சிகை

5 Apr 2019
Paki%20plane.JPG?itok=2fO-HRs-

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர்விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறியதில் உண்மை இல்லாததுபோல் தோன்றுவதாக ‘ஃபாரின் பாலசி’ என்ற சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது. அடையாளம் வெளியிடப்படாத இரண்டு அமெரிக்கத் தற்காப்பு அதிகாரிகளை சஞ்சிகையின் கட்டுரை மேற்கோள் காட்டியது.

பாகிஸ்தானின் எஃப்-16 போர்விமானங்கள் எதுவும் காணாமல் போகவில்லை என்று அமெரிக்கா நடத்திய கணக்கெடுப்பு வழி தெரிய வந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்ததாக ‘ஃபாரின் பாலசி’ தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானின் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறியிருந்ததை இந்தப் புதிய தகவல் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலப்பகுதியின் மீது இந்தியா ஆகாயத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றநிலை அதிகரித்தது. இதில் இந்திய விமானம் ஒன்றை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய பிறகு அதன் விமானி பிடிபட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்த கேள்விகளுக்கான பதிலை இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் உடனடியாக வெளியிடவில்லை. பாகிஸ்தானின் எஃ-16 வீழ்த்தப்பட்டதற்கான நேரடி சாட்சிகளும் மின்னியல் ஆதாரங்களும் இந்தியாவிடம் இருப்பதாக திரு குமார் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

https://www.tamilmurasu.com.sg/world/story20190405-26560.html?fbclid=IwAR35_GCl_yaUXrMiPEuPyxCHCPWszx35yDs8_z-VVSEbbuBZ8xW8uhBBRPo

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.