Jump to content

'வடக்கின் போர்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'வடக்கின் போர்' நாளை ஆரம்பம்

'வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி நாளைய தினமான 7ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 3 நாள்கள் நடைபெறுகின்றது.

IMG_5327.jpg

113ஆவது இன்னிங்ஸ் போட்டியான இது இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் பாதுகாப்பு இரண்டு கல்லூரி சமூகத்தாலும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், மதுபோதை அல்லது போதைப் பொருள்கள் பாவனையுள்ள எவரும் போட்டியைப் பார்க்க அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதோடு, போதையில் அடாவடியில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளதோடு, இப் போட்டி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பும், வீரர்கள் அறிமுக நிகழ்வும் அண்மையில், யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

IMG_5326.jpg

இரு கல்லூரி மாணவர்களும் சீருடையுடன் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர். பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் இருப்பிட வசதிகொண்ட பகுதிக்காக 100 ரூபா பணத்தை வழங்கி அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சுப்பிரமணியம் பூங்கா பக்கம் உள்ள நுழைவாயில் மூடப்படும் எனவும், சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பொது நூலகப் பக்கமாக மைதானத்துக்கு மேற்குத் திசையிலிருக்கும் வாயில் ஊடாக அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

IMG_5323.jpg

ரிம்பர் மண்டப பக்கமாக உள்ள வாயில் ஊடாக மத்திய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

IMG_5322.jpg

அணிகளின் வீரர்களும் மாணவ தலைவர்களும் தவிர்ந்தோர் எல்லைக்கோட்டுக்குள்ளே எக்காரணம் கொண்டும் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஆரம்ப நாள் நிகழ்வு நாளை வியாழக்கிழமை முற்பகல் 9.15  மணிக்கு வீரர்கள் அறிமுகம் இடம்பெற்று போட்டி மு.ப.10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என கல்லூரி அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

http://www.virakesari.lk/article/51259

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் போர் – 2ம் நாள் முடிவில் பரியோவான் கல்லூரி 121 ஓட்டங்கள்

March 8, 2019

IMG_7103.jpg?resize=800%2C600வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரிக்கும் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு துடுப்பாட்ட போட்டியின் இரண்டாம் நாள் போட்டி முடிவில் பரியோவான் கல்லூரி அணி 39 பந்து பரிமாற்றத்தில் 121 ஓட்டங்களை இழப்பின்றி பெற்றுக்கொண்டுள்ளது.

இரு கல்லூரிகளுக்கும் இடையிலான 113ஆவது ஆண்டு துடுப்பாட்ட போட்டி நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மத்திய கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்ததனை அடுத்து பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடியது.

முதல் நாள் போட்டியில் மத்திய கல்லூரியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது திணறிய பரியோவான் கல்லூரி சீரான இடைவெளியில் தனது இலக்குகளை இழந்தது.

இருந்த போதிலும் தெ. டினோசன் நிலைதாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து கௌரவமான இலக்கை நோக்கி அணியை கொண்டு சென்றார். அவருடன் இணைந்து அபினாஸ் ஆடினார். டினோசன் 134 பந்துகளுக்கு முகம் கொடுத்து 98 ஓட்டங்களை எடுத்த நிலையில் , வி.விஜய்ஸ்காந்தின் பந்து வீச்சில் இ.ராஜ்கிளின்ரனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அபினாஸ் 28 பந்துகளுக்கு முகம் கொடுத்து 24 ஓட்டங்களை எடுத்த நிலையில், வி.விஜய்ஸ்காந்தின் பந்து வீச்சில் ப.இந்துஜனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பரியோவான் கல்லூரி 181 ஓட்டங்களுக்கு தனது அனைத்து இலக்குகளை இழந்தன.

மத்திய கல்லூரி அணியில் பந்து வீசிய க.இயலரசன் 15 பந்து பரிமாற்றங்களில் இரண்டு ஓட்டமற்ற பந்து பரிமாற்றத்தை வீசினார். 54 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 இலக்குகளை சரித்தார். வி.விஜய்ஸ்காந்த் 11.5 பந்து பரிமாற்றத்தில் 3 ஓட்டமற்ற பந்து பரிமாற்றத்தை வீசி 43 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளை சரித்தார். செ. மதுசன் மற்றும் க.பிரவீன்ராஜ் ஆகியோர் தலா ஒரு இலக்குகளை சரித்தனர்.

அதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி ஆரம்பத்தில் இலக்குகளை இழந்து தடுமாறிய போதும் , க.இயலரசன் நிலைத்தாடி 239 பந்துகளுக்கு முகம் கொடுத்து 77 ஓட்டங்களை பெற்ற நிலையில் , ஈ . தனுசனின் பந்து வீச்சில் க. சபேசனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். வி.விஜய்ஸ்காந்த் அதிரடியாக ஆடி 31 பந்துகளுக்கு முகம் கொடுத்து 41 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஹேமதுசனின் பந்து வீச்சில் இலக்கை இழந்தார். அந்நிலையில் மத்திய கல்லூரி அணி 195 ஓட்டங்களுக்கு தனது அனைத்து இலக்குகளையும் இழந்தன.

பரியோவான் கல்லூரி சார்பில் பந்து வீசிய அ. சரண் 20 பந்து பரிமாற்றத்தில் 4 ஓட்டமற்ற பந்து பரிமாற்றத்தை வீசி 54 ஓட்டங்களை விட்டுகொடுத்து 3 இலக்குகளை சரித்தார். தெ.டினோசன், ம.ஹேமதுசன் மற்றும் டி.எல்சன் ஆகியோர் தலா 2 இலக்குகளை சரித்தனர்.மு. அபினாஸ் ஒரு இலக்கையும் சரித்தார்.

மத்திய கல்லூரி அணி 14 ஓட்டங்களை மேலதிகமாக பெற்ற நிலையில், பரியோவான் கல்லூரி இன்று இரண்டாம் நாள் துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ந. சௌமியன் மற்றும் சி.தனுஜன் ஆகியோர் களமிறங்கி நிலைத்தாடினார்கள். சௌமியன் 104 பந்துகளுக்கு முகம் கொடுத்து 46 ஓட்டங்களை பெற்றுகொண்டார். சி. தனுஜன் 132 பந்துகளுக்கு முகம் கொடுத்து 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் இன்றைய இரண்டாம் நாள் போட்டி முடிவில் பரியோவான் கல்லூரி அணி 39 பந்து பரிமாற்றத்தில் .121 ஓட்டங்களை இலக்குகள் இழப்பின்றி பெற்றுக்கொண்டுள்ளது.

IMG_7043.jpg?resize=800%2C527IMG_7056.jpg?resize=800%2C596IMG_7066.jpg?resize=800%2C600  IMG_7108.jpg?resize=800%2C600IMG_7131.jpg?resize=800%2C6002.jpg?resize=618%2C8005.jpg?resize=800%2C5516.jpg?resize=605%2C800

 

 

http://globaltamilnews.net/2019/115510/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமனிலையுடன் முடிவுக்கு வந்த 113வது வடக்கின் பெரும் சமர்

 
March 9, 2019

DSC_8318.jpg?zoom=1.1024999499320984&res

சென் ஜோன்ஸ் கல்லூரி இந்தப் போட்டியில் நிர்ணயித்திருந்த 232 என்ற ஓட்ட இலக்கை நோக்கிய மத்திய கல்லூரி அணி, அணித் தலைவர் மதுசனின் அதிரடியான துடுப்பாட்டத்துடன் வெற்றியிலக்கை நோக்கிய போதும், ஆட்டநேர முடிவில் 176 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

 

இந்தப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியின் பணிப்பின் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்த நிலையில், யாழ். மத்திய கல்லூரி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன் பின்னர் 14 ஓட்டங்கள் முன்னிலையுடன் களமிறங்கிய சென் ஜோன்ஸ் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட்டிழப்பின்றி 121 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதன்படி இன்றைய தினம் களமிறங்கிய சென் ஜோன்ஸ் அணி மீண்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய தினம் 46 ஓட்டங்களுடன் களத்தில் நின்ற, சௌமியன் இன்றைய தினம் தனது அரைச்சதத்தை பூர்த்திசெய்தார். எனினும் நீண்ட நேரம் அவரால் தாக்குபிடிக்க முடியாத நிலையில், மதுசனின் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து, சென் ஜோன்ஸ் கல்லூரியின் முதல் இன்னிங்ஸில் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்த வினோஜன், வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் களத்திலிருந்து வெளியெறியதுடன், சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச்சதம் கடந்திருந்த தனுஜன் 66 ஓட்டங்களுடன் மதுசனின் பந்து வீச்சில் சாரங்கனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

சாதனை இணைப்பாட்டத்தை கடந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் களத்திலிருந்து வெளியேற்றப்பட, மத்திய கல்லூரி அணி தங்களுடைய சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்த ஆரம்பித்தது. இதன் அடிப்படையில், சென் ஜோன்ஸ் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான எல்சன் டெனுசன் (5), மற்றும் ஹேமதுசன் (3) ஆகியோரின் விக்கெட்டுகளை வியாஸ்காந் மற்றும் மதுசன் ஆகியோர் கைப்பற்ற, சென் ஜோன்ஸ் கல்லூரி அணி மதிய போசன இடைவேளையின் போது, 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றிருந்தது.

தொடர்ந்து மதிய போசன இடைவேளைக்கு பின்னர், அணித் தலைவர் மேர்பின் அபினாஷ் மற்றும் முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டினோஷனுடன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி ஆட்டத்தை ஆரம்பித்தது. துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் மத்திய கல்லூரி அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைத்திருந்தது.

குறிப்பாக சென் ஜோன்ஸ் அணியின் தலைவர் மேர்பின் அபினாஷ் 14 ஓட்டங்களுடனும், புதிய துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரதுசன் ஆகியோர் கவனயீனமாக ஓட்டங்களை பெற முற்பட்ட நிலையில், ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்ட டினோஷனும் 22 ஓட்டங்களை பெற்று, வியாஸ்காந்தின் பந்தில் சாரங்கனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

விக்கெட்டுகள் ஒரு பக்கம் அடுத்தடுத்து சரிக்கப்பட்ட நிலையில், 9வது விக்கெட்டுக்காக இணைந்த சபேஷன் மற்றும் அபினேஷ் ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு சற்று வலுசேர்த்தனர். எனினும் துரதிஷ்டவசமாக 14 ஓட்டங்களை பெற்றிருந்த சபேஷன், வியாஸ்காந்தின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் இறுதி துடுப்பாட்ட வீரர் சரணுடன் (4) துடுப்பெடுத்தாடிய எண்டன் அபிஷேக் 31 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்த நிலையில் சென் ஜோன்ஸ் கல்லூரி தங்களுடைய ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

தேநீர் இடைவேளையுடன் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்ட சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 88 ஓவர்களுக்கு முகங்கொடுத்து 9 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்றதுடன், மத்திய கல்லூரி அணிக்கு 232 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. மத்திய கல்லூரி அணியின் பந்து வீச்சில் வியாஸ்காந்த 88 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அணி தலைவர் மதுசன் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக கைப்பற்றினர்.

பின்னர் 232 என்ற வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய யாழ் மத்திய கல்லூரி அணி, சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான இயலரசன் மற்றும் சாரங்கன் ஆகியோர் நிதானமாக ஓட்டங்களை குவித்து வந்தனர். எனினும், துரதிஷ்டவசமாக சாரங்கன் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 27 ஓட்டங்களை பெற்றிருந்த இயலரசன் சரணின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்துஜன் மற்றும் ஜெயதர்சன் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடிய போதும், துரதிஷ்டவசமாக 28 பந்துகளுக்கு 7 ஓட்டங்களை பெற்றிருந்த ஜெயதர்சன் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த மத்திய கல்லூரி அணிக்கு, தலைவர் மதுசன் தன்னுடைய அதிரடியான துடுப்பாட்டத்தின் ஊடாக வலுவழித்தார்.

மதுசனுடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய இந்துஜன் நிதானமாக ஒரு பக்கம் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, மதுசனுக்கு அதிக நேரங்களுக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொடுத்தார். இதன்படி மதுசன் வேகமாக ஓட்டங்களை குவிக்க, மத்திய கல்லூரி அணி 100 ஓட்டங்களை கடந்தது. மறுபக்கம் இருந்த இந்துஜன் வேகமாக ஓட்டங்களை பெற முற்பட, டினோஷனின் பந்து வீச்சில் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இவரது ஆட்டமிழப்பின் பின்னர் வியாஸ்காந்துடன் இணைந்து மதுசன் வேகமாக ஓட்டங்களை குவித்ததுடன், வெறும் 27 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். மதுசன் வேகமாக ஓட்டங்களை பெற மறுமுனையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய வியாஸ்காந் மற்றும் ராஜ்கிலிண்டன் அடுத்தடுத்து வெளியேறினர்.

இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்தும் தனது அதிரடியை வெளிப்படுத்திய மதுசன் ஆட்டநேரத்தின் இறுதி ஓவரில் அதிரடியாக துடுப்பெடுத்தாட முற்பட்ட நிலையில், அபினேஷின் பந்து வீச்சில் துஷானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மதுசன் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களை குவித்தார்.

எவ்வாறாயினும், மதுசனின் விக்கெட் வீழ்த்தப்பட்ட அதே ஓவரில் ஆட்டநேர முடிவின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, போட்டி சமனிலையில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, யாழ். மத்திய கல்லூரி அணி 40 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றிருந்தது. பந்து வீச்சில் அபிஷேக் மற்றும் அபினேஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் அடிப்படையில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த 113வது வடக்கின் பெரும் சமர் இன்று சமனிலையை எட்டியுள்ளது. குறிப்பாக இரண்டு அணிகளும் சிறந்த திறமைகளையும், சம பலமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தன. அதேநேரம், 113வது வடக்கின் பெரும் சமரின் இந்த சமனிலையானது 41வது சமனிலை போட்டியாக அமைந்துள்ளது. அத்துடன், ஒட்டுமொத்தமாக சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 36 வெற்றிகளையும், மத்திய கல்லூரி 28 வெற்றிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

சிறந்த விக்கெட் காப்பாளர் – கமலபாலன் சபேசன் (யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி)
சிறந்த துடுப்பாட்ட வீரர் – தெய்வேந்திரம் டினோஷன் (யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி)
சிறந்த பந்து வீச்சாளர் – விஜயகாந் வியாஸ்காந் (யாழ். மத்திய கல்லூரி)
சிறந்த களத்தடுப்பாளர் – தியாகராஜா வினோஜன் (யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி)
ஆட்ட நாயகன் – விஜயகாந் வியாஸ்காந் (யாழ். மத்திய கல்லூரி)
சிறந்த சகலதுறை வீரர் – கமலராசா இயலரசன் (யாழ். மத்திய கல்லூரி)

படங்கள் – ஐ.சிவசாந்தன்

http://globaltamilnews.net/2019/115615/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.