Jump to content

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், சங்கிலியன் காலத்திற்கு உரியவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
March 7, 2019

mannar_gra.png?zoom=1.2100000262260437&r

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாக இருக்கலாம் என  அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்த புளோரிடா ஆய்வுகூடம் இதனை தெரிவித்துள்ளது.

mannar_gra.png?zoom=1.2100000262260437&r

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாகயிருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான சட்டபூர்வமான ஆய்வறிக்கை நேற்று கிடைக்கப்பெற்ற நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

maanar_report.png?zoom=1.210000026226043

அமெரிக்காவில் இடம்பெற்ற கார்பன் மாதிரி பரிசோதனைகள் குறித்த சட்டபூர்வ அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/115393/

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மனிதப் புதைகுழியின் காலத்தைக் கண்டுபிடித்த அமெரிக்க அறிவியல் ஆய்வு

  •  
எலும்புக்கூடுபடத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம்

இலங்கையிலுள்ள மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தினால் (Beta Analytic Radiocarbon Dating Laboratory) நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனையின் மூலம் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த மனித எச்சங்கள் கி.பி 1477 - 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்திற்கு உரித்துடையது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.

ஆய்வு ஆவணம்

இந்த விடயம் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான அறிக்கையொன்று ஏற்கனவே கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், அறிக்கை தொடர்பிலான சுருக்கம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு அந்த நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை, அகழ்வுகளுக்கு பொறுப்பான விசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ விடுத்திருந்தார்.

இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த அறிக்கை உத்தியோகப்பூர்வமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளதாகவும் விசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்.

மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆறு மனித எச்சங்களின் மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள ஆய்வு கூடத்திடம் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி பரிசோதனைகளுக்காக கையளிக்கப்பட்டிருந்தது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவொன்று அமெரிக்காவிற்கு சென்று, இந்த மாதிரிகளை கையளித்திருந்தது.

இந்த குழுவில் காணாமல் போனோர் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள், காணாமல் போனோரின் உறவினர் உள்ளிட்டவர்களும் இந்த குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.

சோதனை குழு

இந்த நிலையில், இவ்வாறு கையளிக்கப்பட்ட மாதிரிகளின் சுருக்கம் அடங்கிய அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளியாகியுள்ள பின்னணியிலேயே, அதன் கால எல்லை இன்று வெளியிடப்பட்டது.

மன்னார் - சதொச கட்டட வளாகத்தில் மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 342 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 29 மனித எச்சங்கள் சிறுவர்களுடையது என விசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மன்னார் மனிதப் புதைக்குழியின் அகழ்வுகள் இன்று 155ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

புதைக்குழு

இதேவேளை, இந்த அறிக்கையை மாத்திரம் அடிப்படையாக வைத்து, கால எல்லையை நிர்ணயிக்க முடியாது என காணாமல் போனோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள், மண் மாதிரி, அந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஏனைய பொருட்கள் உள்ளிட்டவை மேலும் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தியே, இந்த கால எல்லையை சரியாக நிர்ணயிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அறிக்கையில் பல விஞ்ஞான ரீதியிலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த விஞ்ஞான ரீதியிலான விடயங்களை ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களை ஆராய்வதற்காக, மன்னாரில் நாளை காலை வைத்தியர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் ஒன்று கூடி ஆராயவுள்ளதாகவும் காணாமல் போனோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் சுட்டிக்காட்டினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-47487170

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர் அமைப்பின் சட்டவாதியின் கருத்துத் தான் குழப்பகரமாக இருக்கிறது. அனேகமாக என்பு, மண், மற்றைய பொருட்கள் என்று வரும் போது, என்பு காட்டும் கால அளவு தான் நம்பிக்கையானது. மண்ணும், மண்ணோடு வந்த பொருட்களும் கடந்த 500 ஆண்டுகளில் பல தடவைகள் அந்தப் பகுதியில் மாறியிருக்கும்- இதனால் வேறு வேறு காலக்கணிப்பைக் காட்டக் கூடும்.

மேலும் இது போன்ற முக்கியமான பரிசோதனைகளை "ஏகாதிபத்திய" அமெரிக்காவில் செய்தால் பலர் நம்பி ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! வட கொரியா, கியூபா போன்ற "உழைக்கும் வர்க்கம்" ஆளும் நாடுகளில் செய்தால் தான் நம்பிக்கை வரும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னனால் கொல்லப்பட்ட மதம் மாறிய 600 தமிழர்களும் இங்கேயா புதைக்கப்பட்டனர்?!

எலும்புகளில் வெட்டுப்பட்ட அடையாளங்கள் ஏதும் இருப்பதாக செய்திகளில் வரவில்லையே?!

அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் ஆண்டுதோறும் நினைவு வழிபாடு செய்யப்படுவதாக செய்திகளில் வாசித்த நினைவு.

கார்பன் பரிசோதனையில் அதிர்ச்சியான செய்தி கிடைக்கும் என்று கௌரவ சுமந்திரன் (பா.உ) எப்படி தெரியும்?!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

சங்கிலிய மன்னனால் கொல்லப்பட்ட மதம் மாறிய 600 தமிழர்களும் இங்கேயா புதைக்கப்பட்டனர்?!

எலும்புகளில் வெட்டுப்பட்ட அடையாளங்கள் ஏதும் இருப்பதாக செய்திகளில் வரவில்லையே?!

அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் ஆண்டுதோறும் நினைவு வழிபாடு செய்யப்படுவதாக செய்திகளில் வாசித்த நினைவு.

கார்பன் பரிசோதனையில் அதிர்ச்சியான செய்தி கிடைக்கும் என்று கௌரவ சுமந்திரன் (பா.உ) எப்படி தெரியும்?!

 

சொன்னேனே பார்த்தீர்களா? இனி இப்படி "சதி சதி" என்று இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகளை வளர்த்துக் கொண்டு திரிய வேண்டியது தான்!

யாழ் பல்கலையில் டொக்டர் புஷ்பரட்ணம் என்றொரு தொல்லியல் ஆய்வாளர் இருக்கிறார். அவர் இந்தத் தகவலையும் கண்டெடுத்த இடத்தையும் வைத்து ஏதாவது செய்தால் யாழ் பல்கலையின் ஆய்வு இயலுமையாவது வளரும். விஷ ஊசிக் கதை போல இந்த என்பு விடயத்தையும் எங்கள் அரசியல் வாதிகள் விற்றுப் பிழைப்பு நடத்த வழி கோலாதிருக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அண்ணா தடுப்பில் இருந்து வந்த பல முன்னாள் போராளிகள் தமக்கு ஊசிகள் போடப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஊசி போடவருபவர்களிடம் எதற்கு போடுகிறீர்கள் என்று கேட்டபோது எச்.ஐ.வி தடுப்பு மருந்து என்று சொன்னார்களாம்.
எச்.ஐ.வி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை தமிழரை குழிதோண்டி புதைக்கும் சிங்களத்தின் பொழுதுபோக்கிற்கு,  அமெரிக்கா கூட  தனது நலனிற்காக கடைக்கு  கண் பார்வையால் சிங்களத்தை குளிர்விக்கப் ஈழத்தமிழரை பெயராக நினைக்கலாம்.

சிங்களமம் பொழுதுபோக்கோயிற்றுக்குத்தானே செய்கிறோம் என்று எண்ணி, வேறிடத்தில் எடுத்த எச்சங்களை அனுப்பியிருக்கலாம். இதற்கு, சும் பூடகம்  போட்டது நான் மறக்கவில்லை.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா தடுப்பில் இருந்து வந்த பல முன்னாள் போராளிகள் தமக்கு ஊசிகள் போடப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஊசி போடவருபவர்களிடம் எதற்கு போடுகிறீர்கள் என்று கேட்டபோது எச்.ஐ.வி தடுப்பு மருந்து என்று சொன்னார்களாம்.
எச்.ஐ.வி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கா?!

ஏராளன், நீங்கள் சொல்வது நடந்திருக்கலாம், நடக்காமலிருக்கலாம்! இதையெல்லாம் வாக்கு மூலமாக வைத்திய அதிகாரியிடம் போராளிகள் கொடுப்பதற்கு முன்னரே  அனந்தி சசிதரன் உட்பட்ட அரசியல் வாதிகள் வெளியே சொல்லி தங்கள் பிரபலத்தைக் கூட்டிக் கொண்டனர். பின்னர், இந்தப் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்குப் போக இயலாமல் சிங்களப் புலநாய்வுக் காரருக்குப் பயந்து பின்வாங்க வேண்டி வந்தது. இதன் முடிவு என்ன இப்போது? எதுவும் இல்லை, பதிலும் தெரியாது.

இதே நிலைமை சுன்னாகம் தண்ணீர் பிரச்சினைக்கும் நடந்தது. பேராதனைப் பல்கலையில் நீரில் எண்ணைக் கசிவு பற்றி ஆய்வு செய்யும் ஒரு பேராசிரியர் இருக்கிறார். யாழ் பல்கலையில் புவியியல் விஞ்ஞானத் துறையொன்று இருக்கிறது. ஒரு மாதத்தில் கூட்டுறவு முயற்சியாக இந்த நீரில் எண்ணை பற்றி முடிவு கண்டிருக்கலாம்! இதையும், நிபுணத்துவம் எதுவும் அற்ற லோயர் மாரும் அரசியல் வாதிகளும் இணைந்து ஐங்கரநேசனைப் பழி வாங்கப் பயன்படுத்தி விட்டு ஓய்ந்தனர்! அரசாங்க பகுப்பாய்வு அறிக்கையையும் நம்பவில்லை அவர்கள். இப்ப என்ன ஆயிற்று? சுன்னாகத்தில் தண்ணீரில் எண்ணை இருக்கிறதா இல்லையா என்று சுன்னாக மக்களுக்கே தெரியாது இப்பொழுது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைவிலங்குகளுடன் சில கண்டுபிடிக்கப்பட்டதாக வாசித்த நிணைவு. உண்மையாயின் அந்தக்காலத்தில் இருந்திருக்க முடியாதே.

ஈழப்பிரியன், மருதர், ஜஸ்டின் போன்ற யாராவது, இந்த புளோரிடா கம்பனி விபரத்தை ஆராய்ய முடியாதா?

தோலிருக்க சுளை விமுங்கிச்சிங்களம் செற் பண்ணிய டுபாக்கூர், மன்னார் அண்ட் கம்பனியா இருக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

3 hours ago, Justin said:

சொன்னேனே பார்த்தீர்களா? இனி இப்படி "சதி சதி" என்று இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகளை வளர்த்துக் கொண்டு திரிய வேண்டியது தான்!

 

ஜஸ்ரின்,

அரசும், அமெரிக்காவும் சொன்னால் எந்த கேள்வியும் இன்றி சந்தேகமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்களா?

ஒரு பெரும் இனவழிப்பை, அதுவும் இரசாயன ஆயுதங்களை கூட பாவித்து செய்த இனவழிப்பையே மூடி மறைக்க நினைக்கும் அரசும் அவர்களிற்கு ஆதரவு கொடுக்கும் ஏகாதிபத்தியங்களும் தமிழர்களுக்கு விரோதமாக நடக்காதா?

அனுப்பட்ட எலும்புக்கூடு மாதிரிகள் மன்னார் பிணகுழியில் இருந்து தான் எடுக்கப்பட்டவை என்பதற்கு என்ன உத்தரவாதம் என தெரியவில்லை.

இந்த முடிவுகள் வெளிவரும் காலம் எப்படியானது என பார்த்தால், மன்னாரில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பிரச்சனை உருவாகி பதட்டம் ஏற்பட்ட காலப்பகுதி. அவ்வாறு நிகழ்ந்தவுடன் வடக்கெங்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சுவரொட்டிகள் திட்டமிடப்பட்டு வெளியான காலப்பகுதி.
சங்கிலிய மன்னனால் கொல்லப்பட்டவர்களும் கிறீஸ்தவ மதத்தவர்கள் என்பதால் 400 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து இருக்கு வெளிப்படுத்துவதும் கூட மதப்பதட்டத்தை அதிகரிக்க செய்யக்கூடிய செயல்..

எங்கேயோ எதுவோ சரியாக நடக்கவில்லை எனபதை உணர முடிகின்றது.

இப்படி கேள்விகள் சந்தேகங்கள் எல்லாம் இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள் அல்ல. எல்லாமே இழந்து போயிருக்கும் ஒரு இனம், தன் இழப்புகளுக்கு நியாயமான ஒரு தீர்வாவது கிடைக்குமா எனும் எழும் நியாயமான கேள்விகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஜஸ்ரின்,

அரசும், அமெரிக்காவும் சொன்னால் எந்த கேள்வியும் இன்றி சந்தேகமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்களா?

ஒரு பெரும் இனவழிப்பை, அதுவும் இரசாயன ஆயுதங்களை கூட பாவித்து செய்த இனவழிப்பையே மூடி மறைக்க நினைக்கும் அரசும் அவர்களிற்கு ஆதரவு கொடுக்கும் ஏகாதிபத்தியங்களும் தமிழர்களுக்கு விரோதமாக நடக்காதா?

அனுப்பட்ட எலும்புக்கூடு மாதிரிகள் மன்னார் பிணகுழியில் இருந்து தான் எடுக்கப்பட்டவை என்பதற்கு என்ன உத்தரவாதம் என தெரியவில்லை.

இந்த முடிவுகள் வெளிவரும் காலம் எப்படியானது என பார்த்தால், மன்னாரில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பிரச்சனை உருவாகி பதட்டம் ஏற்பட்ட காலப்பகுதி. அவ்வாறு நிகழ்ந்தவுடன் வடக்கெங்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சுவரொட்டிகள் திட்டமிடப்பட்டு வெளியான காலப்பகுதி.
சங்கிலிய மன்னனால் கொல்லப்பட்டவர்களும் கிறீஸ்தவ மதத்தவர்கள் என்பதால் 400 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து இருக்கு வெளிப்படுத்துவதும் கூட மதப்பதட்டத்தை அதிகரிக்க செய்யக்கூடிய செயல்..

எங்கேயோ எதுவோ சரியாக நடக்கவில்லை எனபதை உணர முடிகின்றது.

இப்படி கேள்விகள் சந்தேகங்கள் எல்லாம் இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள் அல்ல. எல்லாமே இழந்து போயிருக்கும் ஒரு இனம், தன் இழப்புகளுக்கு நியாயமான ஒரு தீர்வாவது கிடைக்குமா எனும் எழும் நியாயமான கேள்விகள்.

நிழலி, முதலில் இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லை! இதை மட்டுமல்ல, எந்த விஞ்ஞான முடிவையும் கேள்வி கேட்கலாம். சந்தேகம் கிளப்பலாம்.

இந்தக் குறிப்பிட்ட விடயத்தில், சிறி லங்கா செய்யக் கூடிய ஒரு நாடா? ஆம் செய்யக் கூடிய ஒரு நாடு தான்! ஆனால் அமெரிக்க அரசின் பங்கு எங்கே இதில்? சிறிலங்காவுக்காக இப்படி ஒரு தகிடு தித்தம் செய்ய ஒரு தனியார் ஆய்வு கூடத்தைத் தூண்டி ரிஸ்க் எடுப்பார்களா? நீதிமன்ற காவலில் பெட்டியில் வைக்கப் பட்ட மாதிரிகளை காணாமல் போனோர் அமைப்பின் உறவினர்களையும் கூட அழைத்து சென்று ஆய்வு கூடம் வரை போயிருக்கிறார்கள். சாம்பிளை மாற்றியிருந்தால் கூட அவ்வளவு சாம்பிள்களையும் எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை!  சந்தேகங்கள் வருவது இயல்பு, ஆனால் ஊகங்களை வைத்துக் கொண்டு இப்பவே சுமந்திரன் ஏதோ முதலே சொன்னார் என்று புள்ளி வைக்க முயன்றதால் தான் அப்படிச் சொன்னேன்! சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வழிகள் இருக்கின்றன, ஆனால் அவை தீர முதல் சதிக் கதைகள் பின்னுவது தான் ஏற்புடையதாக எனக்குப் படவில்லை.

இப்போது ஊகங்கள் சந்தேகங்கள் மட்டுமே கொண்டு பின்னப் படும் கதைகள் நிரூபிக்கப் பட்ட தகவல்களை விட அதிகம் பலம் வாய்ந்த ஆயுதங்களாக அரசியலிலும் சமூகத்திலும் எங்கள் ஆரோக்கியப் பேணலிலும் கூட மாறி விட்டன. இதனாலேயே நானும் எந்த விஞ்ஞானத் தகவல்களையும் இங்கே பகிர்வதை இப்போது தவிர்த்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கைவிலங்குகளுடன் சில கண்டுபிடிக்கப்பட்டதாக வாசித்த நிணைவு. உண்மையாயின் அந்தக்காலத்தில் இருந்திருக்க முடியாதே.

ஈழப்பிரியன், மருதர், ஜஸ்டின் போன்ற யாராவது, இந்த புளோரிடா கம்பனி விபரத்தை ஆராய்ய முடியாதா?

தோலிருக்க சுளை விமுங்கிச்சிங்களம் செற் பண்ணிய டுபாக்கூர், மன்னார் அண்ட் கம்பனியா இருக்கக் கூடாது.

https://www.radiocarbon.com

40 வருடமாக இருக்கும் நம்பிக்கையான ஆய்வு கூடம் தான்! மேலே இருக்கிறது இணையத் தளம்.

Link to comment
Share on other sites

20 minutes ago, Justin said:

நிழலி, முதலில் இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லை! இதை மட்டுமல்ல, எந்த விஞ்ஞான முடிவையும் கேள்வி கேட்கலாம். சந்தேகம் கிளப்பலாம்.

இந்தக் குறிப்பிட்ட விடயத்தில், சிறி லங்கா செய்யக் கூடிய ஒரு நாடா? ஆம் செய்யக் கூடிய ஒரு நாடு தான்! ஆனால் அமெரிக்க அரசின் பங்கு எங்கே இதில்? சிறிலங்காவுக்காக இப்படி ஒரு தகிடு தித்தம் செய்ய ஒரு தனியார் ஆய்வு கூடத்தைத் தூண்டி ரிஸ்க் எடுப்பார்களா? நீதிமன்ற காவலில் பெட்டியில் வைக்கப் பட்ட மாதிரிகளை காணாமல் போனோர் அமைப்பின் உறவினர்களையும் கூட அழைத்து சென்று ஆய்வு கூடம் வரை போயிருக்கிறார்கள். சாம்பிளை மாற்றியிருந்தால் கூட அவ்வளவு சாம்பிள்களையும் எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை!  சந்தேகங்கள் வருவது இயல்பு, ஆனால் ஊகங்களை வைத்துக் கொண்டு இப்பவே சுமந்திரன் ஏதோ முதலே சொன்னார் என்று புள்ளி வைக்க முயன்றதால் தான் அப்படிச் சொன்னேன்! சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வழிகள் இருக்கின்றன, ஆனால் அவை தீர முதல் சதிக் கதைகள் பின்னுவது தான் ஏற்புடையதாக எனக்குப் படவில்லை.

 

பரிசோதனை செய்த ஆய்வு கூடம் தொடர்பான உங்கள் கேள்விகள் நியாயமானவை, ஆனால் அனுப்பட்ட மாதிரிகள் தான் சந்தேகத்துக்குரியவை.

எடுக்கப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட மாதிரிகளில் 6 இனைத்தான் அனுப்பியிருக்கின்றார்கள்.எடுக்கப்பட்ட எலும்புகள் மன்னாரில் இருந்து அமெரிக்கா வரை செல்லும் வரைக்குமான நீண்ட செயல்முறையின் இடையில் அரசால் இந்த உறவினர்களை ஏமாற்றி மாற்றுவதற்கு இலகுவாக முடியும்.

என் கருத்துகள் செய்தி தொடர்பான மட்டுமே. ஒருவர் சுமந்திரனை குற்றம் சொல்கின்றார், இன்னாரை குறை கூறுகின்றார் என்ற அடிப்படையில் நான் என் கருத்துகளை எழுதுவது இல்லை. ஆனால் நீங்கள் சொல்லுவது போல தவறை இன்னொருவரின் சதிச் செயல் என்று மேலோட்டமாக சொல்லி விடுவதாலும், பிரச்னைகளை தம் அரசியல் விருப்பு வெறுப்புக்கும் காழ்ப்புணர்வுக்கும் ஊடாக அணுகுவதாலு, பிரச்சனையின் தீர்வை ஒரு போதும் கண்டறிய முடியாதாகி விடுகின்றது. எம் இனத்தின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று.

 

15 minutes ago, Maharajah said:

Who mentioned the  Sankiliyan Era here and why ?

உங்கள் கருத்துகள் நியாயமானவையாக இருந்தாலும் முற்றிலும் ஆங்கிலத்தில் எழுதுவதால் அவற்றை அனுமதிக்க முடியாமல் இருக்கின்றது. முன்னை விட இப்பொழுது தமிழில் எழுதுவது இலகுவானதாக இருப்பதால் நீங்கள் சற்று முயற்சி செய்தால் தமிழில் எழுத முடியும்.

எம்மை சுற்றி நடப்பவற்றின் மீது கேள்விகள் எழுப்படுதல் அவசியம் எனும் போது, தமிழில் எழுதுவதை கற்க எடுக்கும் முயற்சி கண்டிப்பாக நல்ல பலனை தரும்.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துகள் நியாயமானவையாக இருந்தாலும் முற்றிலும் ஆங்கிலத்தில் எழுதுவதால் அவற்றை அனுமதிக்க முடியாமல் இருக்கின்றது. முன்னை விட இப்பொழுது தமிழில் எழுதுவது இலகுவானதாக இருப்பதால் நீங்கள் சற்று முயற்சி செய்தால் தமிழில் எழுத முடியும்.

எம்மை சுற்றி நடப்பவற்றின் மீது கேள்விகள் எழுப்படுதல் அவசியம் எனும் போது, தமிழில் எழுதுவதை கற்க எடுக்கும் முயற்சி கண்டிப்பாக நல்ல பலனை தரும்.

 

Thank you. I will try my best.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஒருவர் இச்செய்தி பற்றிச் சொன்னது.

1600 களில் போத்துக்கீசர் காலத்தில் யாழ்  சங்கிலிய மன்னனின் எச்சரிக்கையையும் மீறி கத்தோலிக்க மதத்தை பின்பற்றிய தமிழர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்கின்ற வரலாற்று விடயம் உள்ளது. ஆக சங்கிலிய மன்னனுக்கு எதிராக தான் வழக்குப் போடவேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் போத்துக்கீசரை சாட்சியாக கூப்பிட வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை விரும்பக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:

Who mentioned the  Sankiliyan Era here and why ?

மஹாராஜா, உங்கள் கேள்வி புரிகிறது!. சங்கிலிய மன்னன் மதம் மாறிய கத்தோலிக்கர்களைக் கொன்றது 1544 இல் என்று டாக்டர் முருகர் குணசிங்கத்தின் நூல் சொல்கிறது. ஏன் அந்த சம்பவம் இங்கே குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று தெளிவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

இந்த மனித எச்சங்கள் கி.பி 1477 - 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்திற்கு உரித்துடையது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாகப்பட்டது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றப்படுகின்றது. சங்கிலிய மன்னனும் பயங்கரவாதி என எதிர்வரும் மாதங்களில் நிரூபிக்கப்படலாம்.

என்னடா ஒரு சோழியன் குடுமி ஆடுதே என்று பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசைக் கொடுத்தால் அமெரிக்கன் என்ன எல்லாரும் அறிக்கையை மாத்தி எழுதுவாங்கள். 

சங்கிலியன் காலத்து எலும்புக்கூடுகள் என்றால்.. மண்ணுக்குள் அதன் படிம ஆழம்.. மற்றும் எலும்புகளின் தோற்றம் என்பன அடிப்படை எண்ணப்பாடுகளை எட்ட உதவும்.

இந்த எலும்புகள் பல சதாப்தங்களுக்கு முந்தியதாகத் தெரியவில்லை.. காரணம்.. இவை ஒப்பீட்டளவில் மண்ணின் மேற்பரப்பில் காணப்படுவதோடு.. எலும்புகள் மற்றும் அவற்றுடன் கண்டெடுக்கப்பட்ட இன்ன பிற பொருட்கள்.. பெரிதும் பழுதடையாத தன்மையைக் காண முடிகிறது.

இதில் எதையோ எல்லோரும் மறைக்க முயல்கிறார்கள் என்பது மட்டும் யதார்த்தம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

அதாகப்பட்டது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றப்படுகின்றது. சங்கிலிய மன்னனும் பயங்கரவாதி என எதிர்வரும் மாதங்களில் நிரூபிக்கப்படலாம்.

என்னடா ஒரு சோழியன் குடுமி ஆடுதே என்று பார்த்தேன்.

சங்கிலியன் பயங்கரவாதியா தெரியாது, ஆனால் 600 மீன்பிடித் தொழில் செய்த ஆட்கள் கத்தோலிக்க மதத்தில் இருந்து மீள சைவமாக மாற வேணுமெண்டு கட்டளையிட அவர்கள் மறுக்க, அவர்களைத் தன் படைகளை வைத்துக் கொன்றதாக வரலாறு சொல்கிறது. 

ஆனால், இதை வைத்துக் கொண்டு நாங்கள் இனி சதிக் கதைகள் பின்னுவதற்கு முன்னர், இன்னொரு நாட்டுக்கு இன்னும் கொஞ்சம் மாதிரிகளை அனுப்பிப் பார்க்கலாம்! அப்படி அதிலயும் இதே முடிவே வந்தால்?!

எல்லா நாடுகளும் தமிழரைக் கருவறுத்தல் எனும் ஒரே நோக்கத்திற்காகவே இயங்குகின்றன என்ற இறுதி முடிவுக்கு வரலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ரிப்போர்ட் சரியாக ஐநா மனித உரிமைகள் கூட்டம் நடக்கும் வரை தாமதித்து வெளிவருவதன் பின்னணி என்ன?

அவ்வாறு இவர்கள் சங்கிலியானால் கொலையுண்டிருந்தால், அவர்கள் பெரிய குழி கிண்டி புதைக்கும் வசதி அப்போது இருந்திருக்க முடியாது.

எரித்து இருப்பார்கள். ஏதோ மறைக்கப் படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மாதிரி இரண்டு பெட்டிகள் செற் பண்ணி..அதில் ஒன்று ஒரிஇனல்...மற்ரது சங்கிலியன் காலத்தான்..இப்ப விளங்குதோ.... அதுவும்  ஐ நா.கூட்டத் தொடர் நேரம் ரிசல்டு...அணில்..சுமந்து கூட்டு...காசாக் கொட்டும் இனி த.தே .கூ விற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

கைவிலங்குகளுடன் சில கண்டுபிடிக்கப்பட்டதாக வாசித்த நிணைவு. உண்மையாயின் அந்தக்காலத்தில் இருந்திருக்க முடியாதே.

ஈழப்பிரியன், மருதர், ஜஸ்டின் போன்ற யாராவது, இந்த புளோரிடா கம்பனி விபரத்தை ஆராய்ய முடியாதா?

தோலிருக்க சுளை விமுங்கிச்சிங்களம் செற் பண்ணிய டுபாக்கூர், மன்னார் அண்ட் கம்பனியா இருக்கக் கூடாது.

 

5 hours ago, nedukkalapoovan said:

காசைக் கொடுத்தால் அமெரிக்கன் என்ன எல்லாரும் அறிக்கையை மாத்தி எழுதுவாங்கள். 

சங்கிலியன் காலத்து எலும்புக்கூடுகள் என்றால்.. மண்ணுக்குள் அதன் படிம ஆழம்.. மற்றும் எலும்புகளின் தோற்றம் என்பன அடிப்படை எண்ணப்பாடுகளை எட்ட உதவும்.

இந்த எலும்புகள் பல சதாப்தங்களுக்கு முந்தியதாகத் தெரியவில்லை.. காரணம்.. இவை ஒப்பீட்டளவில் மண்ணின் மேற்பரப்பில் காணப்படுவதோடு.. எலும்புகள் மற்றும் அவற்றுடன் கண்டெடுக்கப்பட்ட இன்ன பிற பொருட்கள்.. பெரிதும் பழுதடையாத தன்மையைக் காண முடிகிறது.

இதில் எதையோ எல்லோரும் மறைக்க முயல்கிறார்கள் என்பது மட்டும் யதார்த்தம். 

அந்த குழிகளுக்குள்..... பிஸ்கற் பெட்டியை சுத்தி வரும், பொலித்தீன்  பேப்பரும் இருந்தாக முன்பு செய்தியில்  வந்தது.

மண்டை ஓட்டில்... துப்பாக்கி சூட்டுடன், இருந்தது எல்லாம்... 500 வருடங்களுக்கு முன்பு நடந்திருக்குமா? 

சங்கிலியன் காலத்தில்...  துப்பாக்கி,  பொலித்தீன் எல்லாம்...  பாவனையில் இருந்ததை... சிங்களமும், அமெரிக்காவும் தான் தெளிவு படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொன்னால், இந்த முடிவு எனக்கு அதிருப்திதான். ஆனாலும், சிறிலங்கா தமிழருக்கு எதிராக இதுவரையும் எந்த அநியாயங்களையும் செய்யவில்லையா? இந்த முடிவோடு சிறிலங்கா அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விட்டதா? இல்லைத்தானே? ஆகவே இதுபற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

அடுத்ததாக, சிறிலங்கா எலும்பு மாதிரிகளை மாற்றியிருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை, இவை பரிசோதிக்கப்பட்ட ஆய்வுகூடம் வேண்டுமென்றே பரிசோதனை முடிவுகளை மாற்றியிருக்கலாம், அல்லது மாற்றி அனுப்பப்பட்ட எலும்பு மாதிரிகளை பரிசோதித்து தமது அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கலாம். இதெல்லாமே ஊகங்கள்தான். சரியாக எவருக்கும் தெரியாது. 

அமெரிக்க அரச நிறுவனமோ அல்லது அமெரிக்க தனியார் பரிசோதனை ஆய்வுகூடம் ஒன்றோ தமிழருக்கு எதிராக ஒருபோது நடந்துகொள்ளப்போவதில்லை என்பதற்கான உத்தரவாதம் என்ன? 80களின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா தமிழருக்கெதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்திருக்கிறதென்பது நாமறிந்த உண்மைதானே? 

இலங்கை ராணுவத்தினருக்கான பயிற்சிகள், தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகள், கிரீன் பெரெட் சிறப்பு ஆயுதப் பயிற்சி, பெல் உலங்கு வானூர்திகள், விசேட அதிரடிப்படைப் பயிற்சிகள் என்று தமிழருக்கெதிரானவற்றையே செய்துவந்தது. ஆகவே, இம்முறையும் கூட இது நடந்திருக்கலாம். அமெரிக்கா தமிழருக்கு அநீதிகளைச் செய்யாது என்று நம்புவதற்கு எம்மிடம் எந்தக் காரணங்களும் இல்லை.

அப்படியில்லாமல், இங்கே கிடைக்கப்பெற்ற எலும்புகள் சங்கிலியன் காலத்தில் இடம்பெற்ற கத்தோலிக்கர்களுக்கெதிரான படுகொலைகளாக இருந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. ஏனென்றால், இந்துசமயத்திலிருந்து கத்தோலிக்கத்திற்கு மாறிய சுமார் 800 வரையான தமிழர்களை சங்கிலியன் தன் படைகளுடன் திரத்திவந்து மன்னாரில் கொன்றதாகச் சரித்திரம் இருக்கிறது. கொல்லப்பட்ட வேதசாட்சிகளின் நினைவாகத்தான் மடுத்தேவாலயம் கட்டப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

எது எப்படியாயினும் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள். சிங்களம் இக்கொலைகளிலிருந்து தபித்துக்கொண்டால்க்கூட, அது தமிழினத்திற்குச் செய்த இன்னும் லட்சக்கணக்கான கொலைகளுக்கு பதில் சொல்லவே வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.