Jump to content

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், சங்கிலியன் காலத்திற்கு உரியவை


Recommended Posts

5 hours ago, Justin said:

எல்லா நாடுகளும் தமிழரைக் கருவறுத்தல் எனும் ஒரே நோக்கத்திற்காகவே இயங்குகின்றன என்ற இறுதி முடிவுக்கு வரலாம்!

இன்னுமா முடிவுக்கு வரவில்லை....!! இந்த நாடுகளுக்கெல்லாம் தலைமை இந்தியாதான் என்பதுகூடத் தெரியவில்லையா....?? Bildergebnis für cat+eye+closed

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஓர் வாட்ஸப் பகிர்வு.

 

மன்னார் மனித எலும்புக்கூடுகளை பீட்டா பெற்றுக்கொண்ட திகதி   25.01.2019. 
அறிக்கையிடப்பட்ட திகதி  21.02.2019.

“மன்னார் புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை முடிவுகள் தமிழர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்” என கவுரவ சுமந்திரன் எம்.பி அதிர்ச்சி வெளியிட்ட திகதி 02.02.2019.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கவுரவ சுமந்திரன். எம்.பி. முக்காலமும் உணரக்கூடியவர். முன்கூட்டியே ஆருடம் சொல்லக்கூடியவர். காலத்தை தன் கைவிரல்களால் கணிப்பிடக்கூடியவர்.

கவுரவ சுமந்திரன் ஐயா...நீவிர் தமிழர் குலத்துக்கு கிடைத்த சொத்து. மாதுஷிடமே சிக்காத முத்து.

Link to comment
Share on other sites

Quote

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், சங்கிலியன் காலத்திற்கு உரியவை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

இன்னுமா முடிவுக்கு வரவில்லை....!! இந்த நாடுகளுக்கெல்லாம் தலைமை இந்தியாதான் என்பதுகூடத் தெரியவில்லையா....?? Bildergebnis für cat+eye+closed

நீங்கள் சொல்வது சரிதான்! உலகின் 192 நாடுகள் அல்லது சுயாட்சிப் பிரதேசங்களின் தலைவர்கள் ஒவொருவரும்  துயிலெழும் போதே "இன்று ஈழத்தமிழர்களுக்கு எப்படி ஆப்பிறுக்கலாம்?" என்று யோசித்துக் கொண்டு தான் எழும்புவார்கள் என்று "மக்கள்" சொல்லக் கேட்டிருக்கிறேன்!

யூதர்களுக்குக் கூட இப்படி நடக்கவில்லை! நாம் எப்படி கவனத்தை ஈர்த்தோம் என்று நான் யோசிப்பதுண்டு! நாங்கள் நீராவியில் புட்டு அவிக்கும் ரெக்னொலொஜியை இரகசியமாக உருவாக்கியது தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

 

அந்த குழிகளுக்குள்..... பிஸ்கற் பெட்டியை சுத்தி வரும், பொலித்தீன்  பேப்பரும் இருந்தாக முன்பு செய்தியில்  வந்தது.

மண்டை ஓட்டில்... துப்பாக்கி சூட்டுடன், இருந்தது எல்லாம்... 500 வருடங்களுக்கு முன்பு நடந்திருக்குமா? 

சங்கிலியன் காலத்தில்...  துப்பாக்கி,  பொலித்தீன் எல்லாம்...  பாவனையில் இருந்ததை... சிங்களமும், அமெரிக்காவும் தான் தெளிவு படுத்த வேண்டும்.

அந்த எலும்புகளின் ஒரு இயல்பாகச் சொல்லப் பட்டது துப்பாக்கிக் காயங்கள் என்று அடையாளம் காணப் பட்ட காயங்கள் இல்லாமல் இருந்தது தான்! துப்பாக்கிக் காயங்கள் போல தெரியும் துளைகள் இலங்கையில் பணி செய்யும் எந்த மருத்துவராலும் அடையாளம் காணப்படக் கூடியவை. மேலும் வெற்று ரவைகளும் இருக்க வேண்டும். சுட்டு விட்டு பிணத்தை வெட்டி சன்னத்தை அகற்றி விட்டுப் புதைத்திருந்தால் வெற்றுச் சன்னம் கிடைக்காது. ஐனூறு வருடத்தில் மேலே மண் மாறியிருக்கும். எனவே எலும்பின் வயதை விட மண்ணின், கூட வந்த பொருட்களின் வயது குறைவாகத் தான் இருக்கும்.

இங்கே இந்தக் கண்டு பிடிப்புப் பற்றி சந்தேகம் கிளப்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பொய்யான தகவல்களை உண்மை போலப் பரப்பாமலே சந்தேகங்களை வெளிப்படுத்தலாம் என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இது ஓர் வாட்ஸப் பகிர்வு.

 

மன்னார் மனித எலும்புக்கூடுகளை பீட்டா பெற்றுக்கொண்ட திகதி   25.01.2019. 
அறிக்கையிடப்பட்ட திகதி  21.02.2019.

“மன்னார் புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை முடிவுகள் தமிழர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்” என கவுரவ சுமந்திரன் எம்.பி அதிர்ச்சி வெளியிட்ட திகதி 02.02.2019.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கவுரவ சுமந்திரன். எம்.பி. முக்காலமும் உணரக்கூடியவர். முன்கூட்டியே ஆருடம் சொல்லக்கூடியவர். காலத்தை தன் கைவிரல்களால் கணிப்பிடக்கூடியவர்.

கவுரவ சுமந்திரன் ஐயா...நீவிர் தமிழர் குலத்துக்கு கிடைத்த சொத்து. மாதுஷிடமே சிக்காத முத்து.

இதற்கு எளிமையான விளக்கம் இருக்கிறது. வாட்ஸப், முகநூலில் முளைக்கும் "திடீர் அறிவாளிகளுக்கு" தெரியாத தகவல் சுமந்திரன் உடபட பல கிறிஸ்தவர்களுக்கு பல ஆண்டுகளாகவே தெரியும்! "மரித்த விசுவாசிகள்" என்ற பதம் கிறிஸ்தவர் அல்லாதோருக்குத் தெரிய வாய்ப்பில்லை! ஆனால், மன்னாரில் எலும்புகள் கண்டெடுத்த பிரதேசம், துப்பாக்கிச் சன்னக் காயங்கள் இல்லாமை போன்ற தகவல்களை சட்ட மருத்துவ அறிக்கையில் பார்த்த போது சும் ஊகித்திருக்கக் கூடும்! இதுவே என் ஊகம்! அப்ப இதை ஏன் முதலே அவர் சொல்லவில்லை? எனப் பலர் கேட்கலாம்! இதை அவர் முதலே சொல்லியிருந்தால் இப்ப இருப்பதை விட நிறையக் கதைகள் பின்னியிருப்பார்கள்!

இதை சுமந்திரனையோ, இந்த ஆய்வு முடிவையோ ஆதரிக்கும் நோக்கில் நான் சொல்லவில்லை! எங்கள் காழ்ப்புணர்வுகளினூடாக எம் முன் இருக்கும் பல தரவுகளில் எமக்கு விருப்பமானவற்றை எடுத்துக் கொண்டு, விருப்பமில்லாதவற்றை தவிர்த்து விடும் வேலையைச் செய்கிறோம்! இது குறுகிய காலத்தில் எமக்கு உதவலாம்! நீண்டகால நோக்கில் இது தீமை, ஈழத்தமிழர்கள் எதைச் சொன்னாலும் உலகில் யாரும் நம்பாத ஒரு நிலை வரும்! உலகில் இப்போது பிலிப்பைன்ஸ், நைஜீரியா போன்ற நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த reputation இருக்கிறது!

Link to comment
Share on other sites

16 minutes ago, Justin said:

 ஈழத்தமிழர்கள் எதைச் சொன்னாலும் உலகில் யாரும் நம்பாத ஒரு நிலை வரும்! உலகில் இப்போது பிலிப்பைன்ஸ், நைஜீரியா போன்ற நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த reputation இருக்கிறது!

 

மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக வேலையின் நிமித்தம் வாழ்பவர்கள்தான், இந்த நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மக்கள்.

அவர்கள் சொல்வதை, யாரும் நம்புவதில்லையா?

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியின் அறிவுரையின்படிதான், போதை பொருளை முற்றாக ஒழிப்பேன் என்று சொல்கிறார், நமது மைத்திரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, thulasie said:

 

மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக வேலையின் நிமித்தம் வாழ்பவர்கள்தான், இந்த நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மக்கள்.

அவர்கள் சொல்வதை, யாரும் நம்புவதில்லையா?

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியின் அறிவுரையின்படிதான், போதை பொருளை முற்றாக ஒழிப்பேன் என்று சொல்கிறார், நமது மைத்திரி.

துளசி, துரும்பைப் பிடித்துக் கொண்டு திரியைத் திசை திருப்பி நேரத்தை வீணாக்காதீர்கள்! இங்கே பேசும் தலைப்புக்கு ஆக்க பூர்வமாக எதுவும் பங்களிக்க முடியாவிட்டால், பேசாமல் இருங்கள்! அமைதி நல்லதல்லவா?

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

நீங்கள் சொல்வது சரிதான்! உலகின் 192 நாடுகள் அல்லது சுயாட்சிப் பிரதேசங்களின் தலைவர்கள் ஒவொருவரும்  துயிலெழும் போதே "இன்று ஈழத்தமிழர்களுக்கு எப்படி ஆப்பிறுக்கலாம்?" என்று யோசித்துக் கொண்டு தான் எழும்புவார்கள் என்று "மக்கள்" சொல்லக் கேட்டிருக்கிறேன்!

 

வட இந்தியாவில் உள்ளவனுக்கே தெரியாது, இலங்கையில் தமிழர் என்ற இனம் இருக்கிறதா இல்லையா  என்று!

நீங்கள் 192 நாடுகளில் உள்ளவர்களைப்பற்றி சொல்கிறீர்கள்?

துயில் எழும்போது, எல்லாரும் காப்பி, டீ குடிப்பதற்கு - சீனி, கோப்பி, தேயிலைத் தேடுவார்களேயொழிய, ஈழத்தமிழர்களைத் தேடுவதாவது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அந்த எலும்புகளின் ஒரு இயல்பாகச் சொல்லப் பட்டது துப்பாக்கிக் காயங்கள் என்று அடையாளம் காணப் பட்ட காயங்கள் இல்லாமல் இருந்தது தான்! துப்பாக்கிக் காயங்கள் போல தெரியும் துளைகள் இலங்கையில் பணி செய்யும் எந்த மருத்துவராலும் அடையாளம் காணப்படக் கூடியவை. மேலும் வெற்று ரவைகளும் இருக்க வேண்டும். சுட்டு விட்டு பிணத்தை வெட்டி சன்னத்தை அகற்றி விட்டுப் புதைத்திருந்தால் வெற்றுச் சன்னம் கிடைக்காது. ஐனூறு வருடத்தில் மேலே மண் மாறியிருக்கும். எனவே எலும்பின் வயதை விட மண்ணின், கூட வந்த பொருட்களின் வயது குறைவாகத் தான் இருக்கும்.

இங்கே இந்தக் கண்டு பிடிப்புப் பற்றி சந்தேகம் கிளப்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பொய்யான தகவல்களை உண்மை போலப் பரப்பாமலே சந்தேகங்களை வெளிப்படுத்தலாம் என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். 

ஜஸ்ரின் அண்ணா என்புகள் பழுதடையாமல் இருந்ததை பார்க்கும் போது சந்தேகம் இயல்பாக வருகின்றது?
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளான என்புகள் ஓரளவாவது உக்க தொடங்கியிருக்கும் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா என்புகள் பழுதடையாமல் இருந்ததை பார்க்கும் போது சந்தேகம் இயல்பாக வருகின்றது?
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளான என்புகள் ஓரளவாவது உக்க தொடங்கியிருக்கும் தானே?

ஏராளன், நான் ஏற்கனவே சொன்னது போல இப்படி நியாயமான காரணங்களை முன் வைத்து சந்தேகங்களை எழுப்ப வேண்டும்! ஆனால், துப்பாக்கிக் காயம் இருந்தது, பொலித்தீன் இருக்கிறது என்பதெல்லாம் வீக்கான காரணங்கள் மட்டுமல்ல, சில பொய்யான தகவல்களுமாகும்! எலும்பு உக்குவதற்கு அல்லது பேணப்படுவதற்கு பல வெளிக்காரணிகள் இருக்கலாம்! மன்னார் உப்புச் செறிவு கூடிய நிலம் என்பதால் உக்குதல் குறைந்ததா என்றும் பார்க்க வேண்டும்!

 கேள்விகளை எழுப்புவது நல்லது! நிபுணத்துவம் உள்ளவர்களிடம் இருந்து பதில் வந்தாலும் நாம் நம்பப் போவதில்லை என்றால், கேள்விகளுக்கு வேறு அர்த்தங்கள் இருக்கின்றன என்று தான் சந்தேகம் வரும்! நிபுணர்களிடம் விட்டு விட்டு எங்கள் வேலையை நாம் பார்ப்பது தான் உரிய முடிவை எங்களுக்குத் தரும் என நான் நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் மக்களின் சந்தேகத்துக்கு மற்றுமொரு காரணம்

மாத்தளை மனிதப் புதைகுழியில் இருந்து 2014 இல் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் அமெரிக்கா அனுப்பப்பட்ட போது அவை 1950 காலத்தை சேர்ந்தவை என்றபோது மன்னார் போல் மாத்தளை மனிதப் புதை குழிக்கும் பொறுப்பாக இருந்த பேராசிரியர் சோமதேவா அப்போது எச்சங்களில் கலப்பு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி அவை 1986 இற்கும் 1990 இற்கும் இடைப்பட்டவை என்றார். அதாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட்வர்கள் என்ற அர்த்தத்தில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் மக்களின் சந்தேகத்துக்கு மற்றுமொரு காரணம்

மாத்தளை மனிதப் புதைகுழியில் இருந்து 2014 இல் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் அமெரிக்கா அனுப்பப்பட்ட போது அவை 1950 காலத்தை சேர்ந்தவை என்றபோது மன்னார் போல் மாத்தளை மனிதப் புதை குழிக்கும் பொறுப்பாக இருந்த பேராசிரியர் சோமதேவா அப்போது எச்சங்களில் கலப்பு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி அவை 1986 இற்கும் 1990 இற்கும் இடைப்பட்டவை என்றார். அதாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட்வர்கள் என்ற அர்த்தத்தில். 

நுணா, காபன் டேற்றிங்கின் margin of error நூறு வருடங்கள் தாண்டும்! 1950 இற்கும் 1990 இற்கும் இடையில் 40 வருடங்களே! இதனால் தான் பல வாசிப்புகள் எடுத்து 95% வாய்ப்பு, 68% வாய்ப்பு என்று விளைவைத் தருகிறார்கள். 5500 வருடங்கள் அரை வாழ்வுடைய C14 இல் இருந்து 1950 இற்கும் 1990 இற்கும் இடைப்பட்ட சாம்பிளை பிரித்தறிவது கடினம் என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அந்த எலும்புகளின் ஒரு இயல்பாகச் சொல்லப் பட்டது துப்பாக்கிக் காயங்கள் என்று அடையாளம் காணப் பட்ட காயங்கள் இல்லாமல் இருந்தது தான்! துப்பாக்கிக் காயங்கள் போல தெரியும் துளைகள் இலங்கையில் பணி செய்யும் எந்த மருத்துவராலும் அடையாளம் காணப்படக் கூடியவை. மேலும் வெற்று ரவைகளும் இருக்க வேண்டும். சுட்டு விட்டு பிணத்தை வெட்டி சன்னத்தை அகற்றி விட்டுப் புதைத்திருந்தால் வெற்றுச் சன்னம் கிடைக்காது. ஐனூறு வருடத்தில் மேலே மண் மாறியிருக்கும். எனவே எலும்பின் வயதை விட மண்ணின், கூட வந்த பொருட்களின் வயது குறைவாகத் தான் இருக்கும்.

இங்கே இந்தக் கண்டு பிடிப்புப் பற்றி சந்தேகம் கிளப்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பொய்யான தகவல்களை உண்மை போலப் பரப்பாமலே சந்தேகங்களை வெளிப்படுத்தலாம் என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். 

ஜஸ்ரின்... நீங்கள், நல்லாய்... பூசி, மெழுகி  🗣️ கதைக்கின்றீர்கள்.  
உங்களது... கதையை பார்க்க,  "ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும்"  இருக்குது. 

துப்பாக்கியால்... சுட்டால்,  மண்டை ஓட்டுக்குள் தான்.... ரவை  (குண்டு) நிற்கும் என்று, உங்களுக்கு, யார் சொன்னது? 

அப்படி... அது, துப்பாக்கி சூடு தான் என்று... இலங்கை தமிழ் உணர்வு உள்ள மருத்துவர் ஒருவர் சொல்லி விட்டு,  வீடு போய் சேர முடியுமா?

நீங்கள் எழுதிய பகுதிகளை,  மீண்டும் ஒரு முறை... பொறுமையாக, இருந்து வாசித்துப் பாருங்கள்.
உங்களுக்கே.. தலையை சுத்திக் கொண்டு வரும்,  என்பது திண்ணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஜஸ்ரின்... நீங்கள், நல்லாய்... பூசி, மெழுகி  🗣️ கதைக்கின்றீர்கள்.  
உங்களது... கதையை பார்க்க,  "ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும்"  இருக்குது. 

துப்பாக்கியால்... சுட்டால்,  மண்டை ஓட்டுக்குள் தான்.... ரவை  (குண்டு) நிற்கும் என்று, உங்களுக்கு, யார் சொன்னது? 

அப்படி... அது, துப்பாக்கி சூடு தான் என்று... இலங்கை தமிழ் உணர்வு உள்ள மருத்துவர் ஒருவர் சொல்லி விட்டு,  வீடு போய் சேர முடியுமா?

நீங்கள் எழுதிய பகுதிகளை,  மீண்டும் ஒரு முறை... பொறுமையாக, இருந்து வாசித்துப் பாருங்கள்.
உங்களுக்கே.. தலையை சுத்திக் கொண்டு வரும்,  என்பது திண்ணம். 

உயிரோடு புதைத்தால் சன்னமும் வராது....வெற்று ரவைகளும் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காபன் அணுக்கதிர் வீச்சின் வீரியத்தை வைத்து ஒரு பொருளின் வயதெல்லையைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், இவை துல்லியமானவைதானா என்பது ஒரு பிரச்சனைதான். ஜஸ்டின் குறிப்பிட்டதுபோல 50 இலிருந்து 100 வருடங்கள் வரை முன்னுக்கோ பின்னுக்கொ இவை நடந்திருக்கலாம் என்பது வெறும் 35 வருட கால சிங்களவர்களின் தமிழர்மீதான இனக்கொலைக்கு இவை சாட்சியங்களாகப் பாவிக்கப்பட முடியாதவை. அதுமட்டுமல்லாமல், இந்த சாட்சியங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி சிங்களம் தப்பிப்பதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது. அதுவும் 500 வருடங்கள் என்று கணிப்பிடப்படுவதால், சங்கிலியன் செய்த கொலைகள் என்று இப்போதே எள்ளி நகையாடி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இனி எந்தப் பகுதியில் மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்றாலும் சிங்களவர்கள் அவற்றை இலகுவாக தமிழர் தலையிலோ அல்லது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் அல்லது ஆங்கிலேயர் தலையிலோ கட்டிவிட வாய்ப்பிருக்கிறது.

இந்த மனித எச்சங்களின் பரிசோதனைபற்றி பல கேள்விகள் இருக்கின்றன. நடத்தப்பட்ட முறை, ஆய்வில் ஈடுபட்டவர்கள், மாதிரிகள் தெரிவுசெய்யப்பட்ட முறை, வெளிப்படைத்தன்மை என்று சந்தேகங்கள் இருக்கின்றன. 

என்னைபொறுத்தவரை, இப்பரிசோதனை வெளிப்படையாக பாதிக்கப்பட்ட உறவுகள் முன்னால் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிபுணர்குழுவினால் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது வரும் முடிவை ஏற்றுக்கொளலாம்.

 

Link to comment
Share on other sites

திட்டமிட்ட வகையில் இந்த ஆய்வு அறிக்கை முழுமையாக சோடிக்கப்பட்டது!
காரணம்:
(1) அங்கு கிடைத்த பிஸ்கற் பாக்கெட் பிளாஸ்டிக் உறை
(2) கிடைத்த சில ஆவணங்கள்
(3) கிடைத்த பிளாஸ்டிக் தலைமுடி கிளிப்புகள்
(4) கிடைத்த பொலித்தீன்கள்
(5) ஆய்வுக்கு முன்னரே அரசின் எடுபிடிகள் தமிழர்கள் ஏமாறுவார்கள் எனக் கூறியமை
(6) பல அரச ஆய்வகங்கள் இருக்கும் போது ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுப்பியமை
(7) அங்கு கடமையாற்றிய தமிழ் நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்படடமை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 3:15 PM, தமிழ் சிறி said:

ஜஸ்ரின்... நீங்கள், நல்லாய்... பூசி, மெழுகி  🗣️ கதைக்கின்றீர்கள்.  
உங்களது... கதையை பார்க்க,  "ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும்"  இருக்குது. 

துப்பாக்கியால்... சுட்டால்,  மண்டை ஓட்டுக்குள் தான்.... ரவை  (குண்டு) நிற்கும் என்று, உங்களுக்கு, யார் சொன்னது? 

அப்படி... அது, துப்பாக்கி சூடு தான் என்று... இலங்கை தமிழ் உணர்வு உள்ள மருத்துவர் ஒருவர் சொல்லி விட்டு,  வீடு போய் சேர முடியுமா?

நீங்கள் எழுதிய பகுதிகளை,  மீண்டும் ஒரு முறை... பொறுமையாக, இருந்து வாசித்துப் பாருங்கள்.
உங்களுக்கே.. தலையை சுத்திக் கொண்டு வரும்,  என்பது திண்ணம். 

தமிழ் சிறி, நீங்கள் தான் மீண்டும் பள்ளிக்குப் போய் தமிழ் வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! மேலும், இந்த அகழ்வில் மருத்துவ அதிகாரியாக இருப்பவர் தமிழர் என்று எங்கே வாசித்தீர்கள்? அவர் ஒரு சிங்களவர்! தலையினுள் சென்று சன்னம் வெளிவரும் போது நுழைந்த துளையை விட வெளிவரும் துளை பெரிதாக இருக்கும் என்பது பொதுவாக யாருக்கும் தெரிந்த விடயம். இந்த இரண்டு சத்தியக் கூறுகளில் ஒன்றாவது நடந்ததாக நான் வாசிக்கவில்லை, நீங்கள் செய்திகளில் கண்டிருந்தால் ஆதாரத்தை இங்கே கொண்டு வந்து இணையுங்கள், பேசலாம்!

இப்படி உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருக்க , மற்றவர் fact ஆக சொல்வது பூசி மெழுகுவது போல் இருந்தால், நக்கலை கண்ணாடியொன்றைப் பார்த்து உங்களுக்கு நீங்களே செய்து கொள்வது தான் பொருத்தம்!😎

On 3/8/2019 at 5:39 PM, குமாரசாமி said:

உயிரோடு புதைத்தால் சன்னமும் வராது....வெற்று ரவைகளும் வராது.

நல்ல கற்பனை! ஆனால் ஆதாரம் எங்கே? காணாமல் போனோரில் எத்தனை பேர் கதறக் கதற உயிரோடு புதைக்கப் பட்டிருக்கக் கூடும் என்று உங்களிடம் தகவலாவது இருக்கிறதா? கற்பனையை விட்டு விட்டு நடக்கக் கூடிய விடயங்களை ஆராயுங்கள்! சிங்களவன் கொடுமையானவன் தான், ஆனால் முட்டாள் அல்ல!  முன்னூறு பேரை இப்படி ஆழம் குறைந்த குழியில் போட்டு மூடுவதா அல்லது கொன்று விட்டு உடலைப் புதைப்பதா அவனுக்கு வேலை குறைவானது? மூக்கைச் சுற்றித் தலையைத் தொடும் உங்களை மாதிரி சிங்களவனின் அறிவை எடை போடக் கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 10:02 PM, போல் said:

திட்டமிட்ட வகையில் இந்த ஆய்வு அறிக்கை முழுமையாக சோடிக்கப்பட்டது!
காரணம்:
(1) அங்கு கிடைத்த பிஸ்கற் பாக்கெட் பிளாஸ்டிக் உறை
(2) கிடைத்த சில ஆவணங்கள்
(3) கிடைத்த பிளாஸ்டிக் தலைமுடி கிளிப்புகள்
(4) கிடைத்த பொலித்தீன்கள்
(5) ஆய்வுக்கு முன்னரே அரசின் எடுபிடிகள் தமிழர்கள் ஏமாறுவார்கள் எனக் கூறியமை
(6) பல அரச ஆய்வகங்கள் இருக்கும் போது ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுப்பியமை
(7) அங்கு கடமையாற்றிய தமிழ் நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்படடமை.

 

என்ன ஆவணங்கள் கிடைத்தன என்று குறிப்பிடுங்கள்? பிளாஸ்டிக், இன்ன பிற பொருட்கள் பிற்காலத்தில் மண்மாறிய போது வந்திருக்கலாம் என்று பல இடங்களில் மேலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அமெரிக்காவில் இப்படிப் பட்ட பாரிய முதலீடு தேவைப்படும் ஆய்வகங்கள் தனியார் தான்! "அரச பகுப்பாய்வுத் திணைக்களம்" சிறி லங்காவில் தான் பிரபலம்! 

உங்களுக்குப் பிடித்த பதில் உலகில் எந்த ஆய்வகத்தில் சோதித்தாலும் கிடைக்காது! நீங்கள் நம்பும் ஒண்றை ஏன் தான் சோதித்தறிவான்? பரிசோதனைகள் வேண்டாம்! உங்கள் மேலுள்ள லிஸ்ரை நீதிமன்றில் சமர்ப்பித்தால் அவர்கள் தீர்ப்பிடுவார்கள் என நினைக்கிறேன்! 😎

Link to comment
Share on other sites

3 hours ago, Justin said:

பிளாஸ்டிக், இன்ன பிற பொருட்கள் பிற்காலத்தில் மண்மாறிய போது வந்திருக்கலாம்

அதெப்படி எலும்புக்கூடுகள் அப்படியே இருக்க மண் மட்டும் மாற முடியும்?
அதிலும் பெண்களின் தலைகளின் அருகே மட்டும் பிளாஸ்டிக் கிளிப்புகளும், அங்கங்கே சில மலிபன் பிஸ்கற் பிளாஸ்ட்டிக் உறைகளும் அகப்படும்?

அதெப்படி ஆழமான ஓரிடத்தில் பாஸ்போர்ட் கவர் போல சந்தேகிக்கப்படும் ஒரு கவரும் கண்டெடுக்கப்பட்டிருந்தது?
அதெப்படி சில சிறுவர் கைகளுக்குரிய பிளாஸ்டிக் வளையல்கள் அங்கங்கே இருந்தன? (பெரியவர் அளவில் எதுவும் இருக்கவில்லை, தங்கநகைகள் கிடைக்கவில்லை கொலை செய்யப்படும் முன்னர் அவை அகற்றப்பட்டிருக்கலாம்).
சில இலங்கை நாணயக் குற்றிகளும் மீட்கப்பட்டிருந்ததாக நேற்று ஒருவர் கூறினார் (அதை நான் முன்னர் கேள்விப்பட்டிருக்கவில்லை).  

இன்னும் பல செய்திகள் யாழில் வந்திருந்தது.
பல மாதங்களின் முன்னர் முக்கியத்துவம் கருதி இது சம்பந்தமாக செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பதிவது நல்லது என "நவீனனின்" பதிந்த ஒரு செய்தியின் கருத்தில் பகிரங்கமாக கேட்டிருந்தேன். ஆனால் யாரும் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை!

அது ஒருபுறமிருக்க, அமெரிக்காவில் கூலிக்காக மாரடிப்பவர்கள் அதிகம் என்றும் அதற்காக சிங்கள அரசு பலகோடிகளை பலதடவைகள் கொட்டியது என்பதுவும் வரலாறு!

ஆனாலும், அமெரிக்காவில் தில்லுமுல்லுகள் நடப்பதே இல்லை என்று நம்புவது உங்கள் உரிமை!

 

4 hours ago, Justin said:

உங்களுக்குப் பிடித்த பதில் உலகில் எந்த ஆய்வகத்தில் சோதித்தாலும் கிடைக்காது! நீங்கள் நம்பும் ஒண்றை ஏன் தான் சோதித்தறிவான்? பரிசோதனைகள் வேண்டாம்! உங்கள் மேலுள்ள லிஸ்ரை நீதிமன்றில் சமர்ப்பித்தால் அவர்கள் தீர்ப்பிடுவார்கள் என நினைக்கிறேன்! 😎

மேலும் உங்கள் விதண்டாவாத கருத்துக்களுக்கு பதில் எழுதுவது விழலுக்கு இறைத்த நீர் போன்றதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியன் போன்ற இனப்படுக்கொலையாளியின் வம்சத்திலா தமிழர்கள் வந்தார்கள். சிங்களவனை இனப்ப்டுகொலையாளி என்கின்றோம். மிலேச்சத்தனம் பிடித்தவன் என்று கூறுகின்றோம், அப்படியானால் சங்கிலியன்? அவன் என்ன சாத்வீகனா? ஏன் இவனை தமிழர்கள் தூக்கிப்பிடிக்க வேண்டும். 600 பேரை அநியாயமாய் கொன்ற‌வனல்லவா?

பிரான்ஸில் கூட சில தினங்களுக்கு முன்பு தமிழர்கள் தாங்களுக்குள் அடிப்பட்டு இறந்தார்கள். தாங்கள் கோட்படுகளுக்கு ஒத்து வராதவர்களை தாக்குவது, கொல்லுவது போன்றவகளுக்கு சங்கிலியனும் ஓர் உதரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

சங்கிலியன் போன்ற இனப்படுக்கொலையாளியின் வம்சத்திலா தமிழர்கள் வந்தார்கள். சிங்களவனை இனப்ப்டுகொலையாளி என்கின்றோம். மிலேச்சத்தனம் பிடித்தவன் என்று கூறுகின்றோம், அப்படியானால் சங்கிலியன்? அவன் என்ன சாத்வீகனா? ஏன் இவனை தமிழர்கள் தூக்கிப்பிடிக்க வேண்டும். 600 பேரை அநியாயமாய் கொன்ற‌வனல்லவா?

பிரான்ஸில் கூட சில தினங்களுக்கு முன்பு தமிழர்கள் தாங்களுக்குள் அடிப்பட்டு இறந்தார்கள். தாங்கள் கோட்படுகளுக்கு ஒத்து வராதவர்களை தாக்குவது, கொல்லுவது போன்றவகளுக்கு சங்கிலியனும் ஓர் உதரணம். 

ஏன் சங்கிலியன் காலத்துக்குப் போகிறீர்கள்.. ஜே வி பி மீதான அடக்குமுறையில் எத்தனையோ அப்பாவி சிங்கள இளைஞர்கள்.. கொன்று குவிக்கப்பட்டார்கள்.. எம்பிலிப்பிட்டிய உட்பட பல மனிதப் புதைகுழிகள் கிண்டப்பட்டன.

தமிழர்கள் வரலாற்றில்.. பல புதைகுழிகளை  சிங்களம் உருவாக்கி இருந்தாலும் செம்மணிப் புதைகுழி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து நீதி இன்றி நீர்த்துப்போனது. அதைச் செய்தவர் இன்றைய நல்லிணக்கத் தேவதை அன்றைய சமாதான தேவதை என்று வர்ணிக்கப்பட்ட சந்திரிக்கா அம்மையார்.

உலகில் எல்லா மன்னர்களும்.. புதைகுழிகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த படியால் தான் மக்கள்.. சனநாயகத்தை விரும்ப நேரிட்டது. சனநாயகம்.. தோற்றிவித்த புதைகுழிகள் என்பது பல. ஆனால் மக்களுக்கு வேறு தேர்வுக்கு இடமில்லாமல்.. சனநாயக பாசிசவாதம் பார்த்துக் கொள்வதால்.. மக்கள் அநியாயமாக நீதி இன்றி இறந்து கொண்டிருக்கிறார்கள்.

மன்னார் புதைகுழி சங்கிலியன் காலத்தான் என்பது நம்பக் கூடிய ஒன்றாகவே இல்லை. அமெரிக்கனுக்கு வழங்கப்பட்ட மாதிரி உண்மையில்.. மன்னார் புதைகுழி மாதிரியா.. என்பதில் இருந்து.. ஒரு தனியார் நிறுவனத்தின் ஊடாக இந்தப் பரிசோதனை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன... என்பது ஈறாக பல கேள்விக்கணைகள் அங்கு தொக்கு நிற்கின்றன. 

எத்தனையோ சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் உள்ளன.. அவற்றின் மேற்பார்வையின் கீழ்.. நடுநிலையான ஆய்வு மையங்களில்.. மாதிரிகள் ஆராயப்பட வேண்டும். அதுவும் மாதிரிகள்.. உண்மையாக புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டதற்கான நேரடி கண்காணிப்பு அவசியம். வெறும் ஒரு தனியார் நிறுவனத்தின் முடிவின் பிரகாரம்.. இந்த விடயத்தில் தீர்வு எட்டுவது என்பது அறிவியல் ரீதியாகக் கூட முட்டாள் தனமானது.  ஏனெனில் அந்த நிறுவனத்தின் பின்னணி.. இந்த ஆய்வு மாதிரிகளை சமர்ப்பித்தவர்களுக்கும் அந்த நிறுவத்திற்கும் உள்ள வெளிப்படையற்ற தொடர்புகள்..சிங்கள அரச செல்வாக்கு.. அமெரிக்க அரச செல்வாக்கு.. என்று பல பக்கச்சார்புக் காரணிகள்.. இந்த ஆய்வில் செல்வாக்குச் செலுத்தி இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில்.. இந்த ஆய்வு முடிவு.. நடுநிலையானதாகக் கருத முடியாது.

இந்த ஆய்வு பக்கச் சார்ப்பற்ற.. நடுநிலையான நீதியான.. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் மேற்பார்வையின் கீழ் பெறப்படும் மாதிரியில் இருந்து.. அவர்கள் பிரேரிக்கும்.. வெவ்வெறு ஆய்வு கூடங்களில் (குறைந்தது 5 இல்) மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு.. மாதிரிகளின் பின்னணித்தகவல்கள் ஆய்வுகூடங்களுக்கு வழங்கப்படாத வகையில் ரகசியம் காக்கப்பட்டு.. செய்யப்படும்.. ஆய்வு முடிவின் மூலமே ஓரளவுக்கு உண்மைத் தன்மை கண்டறியப்பட முடியும்.

ஆனால்.. தற்போதைய ஆய்வு முடிவு.. சிங்கள ஆட்சியாளகளையும்... சிங்கள இனப்படுகொலை பயங்கரவாத இராணுவத்தை காப்பாற்ற.. நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றாகவும்.. தமிழர்கள்.. வரலாற்றுரீதியாக மனிதப் படுகொலை புரியும் கொடூரர்கள் போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கவும் செய்யப்பட்டிருக்கும்.. மோசடி ஆகும். 🙄

Link to comment
Share on other sites

15 hours ago, Justin said:

என்ன ஆவணங்கள் கிடைத்தன என்று குறிப்பிடுங்கள்? பிளாஸ்டிக், இன்ன பிற பொருட்கள் பிற்காலத்தில் மண்மாறிய போது வந்திருக்கலாம் என்று பல இடங்களில் மேலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அமெரிக்காவில் இப்படிப் பட்ட பாரிய முதலீடு தேவைப்படும் ஆய்வகங்கள் தனியார் தான்! "அரச பகுப்பாய்வுத் திணைக்களம்" சிறி லங்காவில் தான் பிரபலம்! 

உங்களுக்குப் பிடித்த பதில் உலகில் எந்த ஆய்வகத்தில் சோதித்தாலும் கிடைக்காது! நீங்கள் நம்பும் ஒண்றை ஏன் தான் சோதித்தறிவான்? பரிசோதனைகள் வேண்டாம்! உங்கள் மேலுள்ள லிஸ்ரை நீதிமன்றில் சமர்ப்பித்தால் அவர்கள் தீர்ப்பிடுவார்கள் என நினைக்கிறேன்! 😎

காதில பூ வைக்கிற கதையாக இருக்கு ? ஆமா இனி ...மண் மாறி இருக்கும் ..வேறென்ன அப்படியே சுத்துமாத்து மாதிரி ....சுத்த வேண்டியதுதான் .....அது சரி 500 வருடமாக எப்படி இரும்பு உக்காது ? கைவிலங்கிடப்படட ஒரு எலும்பும் எடுத்தார்கள் .....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நூற்றாண்டுகள் ஆகியும் கொஞ்சம் கூட 
நிறம் மாறாத மண்டையோடு பற்கள் கொண்ட இரும்பை ஒத்த ஒரு 
மனித இனம் இலங்கை எனும் சிறுதீவில் வாழ்ந்ததுக்கான 
ஆதாரங்கள் கண்டெடுக்க பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே இல்லை,பொய் என்ற சொற்களுக்கு எதிராக போராடினால் வெல்வது கடினம்.
இல்லை,பொய் என்ற சொற்களை பயன்படுத்துபவர்களாலும், எதெற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கும் நம்பாச்சாதிகளாலும் தான் ஈழத்தமிழினம் நொடிக்கு நொடி அழிந்து கொண்டு வருகின்றது.

2009க்கு பின் 10 வருடங்கள் ஆகியும்....சிங்களத்தின் கோரமுகம் வெளிப்படையாக தெரிந்தும்.....இன்றும் சிங்களத்துக்காகவும் தன் வாழ்வுக்காகவும் வக்காலத்து வாங்கும் ஜென்மங்களை என்னவென்று சொல்வது.

மாற்றுக்கருத்து மாணிக்கவாதிகள் அவலை நினைத்து வெறும் உரலை இடிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.