Jump to content

லா-சப்பலில் தமிழ்க்குழுக்கள் பெரும்மோதல்! ஒருவர் குத்திக்கொலை இருவர் படுகாயம்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லா-சப்பலில் தமிழ்க்குழுக்கள் பெரும்மோதல்! ஒருவர் குத்திக்கொலை இருவர் படுகாயம்!!

 

பரிஸ் லா-சப்பல் பகுதியில் நேற்றிரவு தமிழ் இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கழுத்துப் பகுதியில் குத்திக்கொல்லபட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லா-சப்பல் பகுதியிலுள்ள லூயிஸ்-பிளாங் வீதியில் இரவு 8:40 மணியளவில் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்

அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த மோதல் குறித்து அறிவிக்கபட்டதும் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் காவற்துறையினர் வருவதைக் கண்டதும் மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர்

ஆயினும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள காவற்துறையினர் அவர்கள் இருவரும் தடுத்து வைக்கபட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டுகுழுக்களுக்கு இடையிலான பழைய குரோதமே இந்த சம்பவத்துக்கு காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழ்மக்களின் வர்த்தக மையமாக கருதப்படும் லா-சப்பல் பகுதியில் இடம்பெற்ற இந்த வன்முறைச்சம்பவத்தால் பரிஸ்வாழ் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர்.

உயிரிழந்துள்ள இளைஞன் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

https://www.ibctamil.com/france/80/115413?fbclid=IwAR29aS7NCAjJFH80SDEMZu5LvZlMrzSTKah_O7Iv2nvFS9lqYvqpz7ycRyg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஆவாகுழு யாழிலிருந்து தப்பி பிரான்ஸ்சுக்கு வந்திட்டாங்களோ?
எதுக்கும் கடையைப் பூட்டி கவனமாக இருங்கள் விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செக்கன் முடிவு. செத்தவனுக்கு பிள்ளை பிறந்து 7 நாள் வெட்டியவனுக்கு 3 சிறுபிள்ளைகள் வெட்ட உதவியவர்கள் மிகமிக நல்லபிள்ளைகளாக எல்லோராலும் அறியப்பட்டவர்கள் இளம் குடும்பத்தர்கள் ஒன்றுமே புரியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

ஒரு செக்கன் முடிவு. செத்தவனுக்கு பிள்ளை பிறந்து 7 நாள் வெட்டியவனுக்கு 3 சிறுபிள்ளைகள் வெட்ட உதவியவர்கள் மிகமிக நல்லபிள்ளைகளாக எல்லோராலும் அறியப்பட்டவர்கள் இளம் குடும்பத்தர்கள் ஒன்றுமே புரியல

எமது சமுதாயம் திருந்தவே மாட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஒரு செக்கன் முடிவு. செத்தவனுக்கு பிள்ளை பிறந்து 7 நாள் வெட்டியவனுக்கு 3 சிறுபிள்ளைகள் வெட்ட உதவியவர்கள் மிகமிக நல்லபிள்ளைகளாக எல்லோராலும் அறியப்பட்டவர்கள் இளம் குடும்பத்தர்கள் ஒன்றுமே புரியல

 

1 hour ago, குமாரசாமி said:

எமது சமுதாயம் திருந்தவே மாட்டுது.

அப்படி சொல்ல ஏலாது. 0.01% ஆவது அப்படி இருக்கும்.

இங்க இங்கிலாந்திலே ஒருவாரத்தில் 6 பேர், இளம்பிள்ளைகள் கத்தியால் குத்தி கொலையாகி உள்ளனர். 

அரசு, அவசர நிலையாக உயர் அதிகாரிகளை ஒரு சந்திப்புக்கு அழைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அப்படி சொல்ல ஏலாது. 0.01% ஆவது அப்படி இருக்கும்.

இங்க இங்கிலாந்திலே ஒருவாரத்தில் 6 பேர், இளம்பிள்ளைகள் கத்தியால் குத்தி கொலையாகி உள்ளனர். 

அரசு, அவசர நிலையாக உயர் அதிகாரிகளை ஒரு சந்திப்புக்கு அழைத்துள்ளது.

முழு கிழக்கு ஐரோப்பிய.. ரஷ்சியா மாபியா குடுக்கும்பல்களின் ராஜ்சியமாகிவிட்டது பிரித்தானியா. குடு தான் இந்தக் கொலைகளுக்கு முக்கிய காரணம். இதோடு நிறவெறி.. பெட்டை வெறி.. பொடியன் வெறிகளும் சேர.. எல்லாம் கொலையில் நிற்குது. அத்தோடு பொலீஸ் குறைப்பு வேற.

இதுக்கு எல்லாம் காரணம்.. ரொனி பிளேயரின்.. எல்லை திறப்பும்.. தொழிற்கட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் தான். எல்லை திறப்பு... மற்றும்.. பிரித்தானிய பொருளாதாரத்தை சரிவுக்கு கொண்டு வந்துவிட்டு.. ரொனி பிளேயர்.. பிரவுண் கும்பல் அரசுக் கட்டில் இருந்து ஓடிவிட்டது. அதன் விளைவு....🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையோரின் இழப்பு வருத்தமளிக்கிறது, யுத்தம் முடிந்தாலும் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் விபத்துக்களாலும் குழு மோதலிலும் அநியாயமாக உயிரிழப்பதை தடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில கன பேர் சண்டை பிடிக்கிறார்கள் போதாக்குறைக்கு  முகநூலிலிலும் அடிப்பேன் உதைப்பேன் என்று 

இது இலங்கையில் நடந்திருந்தால் ஆவா குழு அல்லது ராணுவத்தின் வேலையென்று ஆள் ஆளுக்கு வகுப்பு எடுப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிரான்சில கன பேர் சண்டை பிடிக்கிறார்கள் போதாக்குறைக்கு  முகநூலிலிலும் அடிப்பேன் உதைப்பேன் என்று 

இது இலங்கையில் நடந்திருந்தால் ஆவா குழு அல்லது ராணுவத்தின் வேலையென்று ஆள் ஆளுக்கு வகுப்பு எடுப்பார்கள்

சண்டை நேரம் தலையாட்டிகளாக இருந்த பலரை அரசே பிரான்சுக்கு அனுப்பியது.இதே போல ஆவா குழு என்று பிடித்தவர்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை.

கூட்டிக் கழித்து பார்த்தா விடை சரியாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சண்டை நேரம் தலையாட்டிகளாக இருந்த பலரை அரசே பிரான்சுக்கு அனுப்பியது.இதே போல ஆவா குழு என்று பிடித்தவர்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை.

கூட்டிக் கழித்து பார்த்தா விடை சரியாகவும் இருக்கலாம்.

இதற்கும்  அதற்கும் தொடர்பு  இருப்பதாக  தெரியவில்லை

ஆனால்  நீங்கள் சொல்வது  போல

பிரான்சில் தான் புலிகளின்  சர்வதேச அலுவலகமும் 

சர்வதேச  பொறுப்பாளரும் இருந்தார்கள்

அதனால்  அதை உடைக்க  அல்லது  குளப்ப பல விதமாகவும்முயன்றார்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2019 at 11:35 AM, ஈழப்பிரியன் said:

சண்டை நேரம் தலையாட்டிகளாக இருந்த பலரை அரசே பிரான்சுக்கு அனுப்பியது.இதே போல ஆவா குழு என்று பிடித்தவர்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை.

கூட்டிக் கழித்து பார்த்தா விடை சரியாகவும் இருக்கலாம்.

நீங்கள் சொல்வது சரி! தமிழர்களுக்கு கத்தி கோடரி எடுக்கவோ துவக்கு எடுக்கவோ அவர்களால் இயலாது! வேறு யாராவது தான் கையில் திணித்து தள்ளி விட வேணும்! இவ்வளவு சுய புத்தியும் முயற்சியும் இல்லாத மண்டான்களான தமிழர்கள் எப்படி தான் தப்பி இத்தனை நூற்றாண்டுகள் வாழ்ந்தார்களோ தெரியாது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நீங்கள் சொல்வது சரி! தமிழர்களுக்கு கத்தி கோடரி எடுக்கவோ துவக்கு எடுக்கவோ அவர்களால் இயலாது! வேறு யாராவது தான் கையில் திணித்து தள்ளி விட வேணும்! இவ்வளவு சுய புத்தியும் முயற்சியும் இல்லாத மண்டான்களான தமிழர்கள் எப்படி தான் தப்பி இத்தனை நூற்றாண்டுகள் வாழ்ந்தார்களோ தெரியாது! 

ஜஸ்ரின் சண்டை முடிந்த கையோடு புலனாய்வுப் பிரிவுடன் இயங்கியவர் குடும்பமாக பாரீசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

கடந்த காலங்களில் ஆவாகுழு என்று பிடிபட்டோரின் எண்ணிக்கை நுhறுக்கு மேலிருக்கலாம்.இந்த பிடிபட்டவர்களெல்லாம் எங்கே?யாருக்குமே தெரியாது.

எனவே தான் அவர்கள் தான் இவர்களாக இருக்கலாம் என்று தான் எழுதியிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.