Jump to content

’மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்’ - கோட்டாபய ராஜபக்‌ஷ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

’மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்’ - கோட்டாபய ராஜபக்‌ஷ

Editorial / 2019 மார்ச் 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 11:39 Comments - 0

image_0f975ca641.jpg

* அதிகாரப் பகிர்வு தேவையில்லை

* சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இடமில்லை

* 11 இளைஞர்கள் விவகாரம்: விசாரணை நடத்தவே உத்தரவிட்டிருந்தேன்

* சுமார் 17,500 முன்னாள் போராளிகளை விடுவித்துள்ளோம்

* பொருளாதார ரீதியிலான அபிவிருத்தியே, தமிழ் மக்களுக்கான விடிவு

நேர்காணல்: மேனகா மூக்காண்டி

படப்பிடிப்பு: ஆகில் அஹமட் 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கின்றது. அதனால் அதை, பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் கடமை எனக்கு இருக்கின்றதென நம்புகிறேன். அதனால், அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, நான் வருவேனென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இது குறித்து, தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய பிரத்தியேகச் செவ்வியின் முழு விவரம் வருமாறு,

image_b084fd1a61.jpg

கே: 'எளிய', 'வியத்மக' வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கக் காரணமென்ன?

'வியத்மக' வேலைத்திட்டமானது, மஹிந்த அரசாங்கம் தோல்வியுற்ற பின்னர் ஆரம்பிக்கப்பட்டதாகும். இலங்கை நிர்வாகத்திலிருந்து அதாவது, அரசியலிலிருந்து, தொழில் நிபுணர்கள், படிப்படையாக விலகிச் சென்றுள்ளனர். அத்துடன், அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் சரியில்லை என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கின்றது. இதனால், அவர்களை ஒன்றிணைத்து, நாட்டைக் கட்டியெழுப்புதல், நாட்டு மக்களால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் என்ன? அவற்றுக்கான தீர்வுகள் எவை என்பது தொடர்பில், அவர்களுடன் கலந்துரையாட, நான் தீர்மானித்தேன். அந்த வகையில், இந்த நடவடிக்கையை, நாடு முழுவதிலும் பரவலாகச் செய்து வருகின்றோம்.

கல்வி, விவசாயம், கைத்தொழிற்றுறை, கலாசாரம் எனப் பல்வேறுபட்ட துறைகளையும் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி, அவர்களோது இணைந்து, கொள்கைகளை வகுத்து வருகின்றோம். அத்துடன், இந்தத் திட்டங்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் முன்வைத்து, அவர்களுடைய கருத்துடன், தேசிய கொள்கைப் பிரகடனமாகத் தயாரித்து, எமது அரசாங்கமொன்று மீண்டும் ஆட்சிக்கு வரும் போது, அதை நடைமுறைப்படுத்துவோம். இதற்காகத் தான், 'வியத்மக' வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம்.

'எளிய' வேலைத்திட்டம் அமைக்கக் காரணம், மக்கள் மத்திக்குச் செல்வதற்காகும். இதனை, வடக்கு, கிழக்கு தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கில், விரைவில் முன்னெடுக்கவுள்ளோம். இந்த வேலைத்திட்டத்தின் போது, காலீன முக்கியத்துவமிக்க விடயம் (அரசமைப்பு, பொருளாதாரம்) தொடர்பில், மக்கள் மத்தியில் இதன்போது உரையாற்றப்படும். இவை குறித்து அனுபவமுள்ள தொழில் நிபுணர்கள், இதன்போது உரையாற்றுவர்.

இவ்விரு வேலைத்திட்டங்களிலும், தமிழ், முஸ்லிம் மக்கள், தொழில் நிபுணர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எதிர்வரும் நாள்களில், மலையகம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில், 'எளிய' வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேவேளை, 'வியத்மக' வேலைத்திட்டத்துக்காக, வடக்கு, கிழக்கிலிருந்து தொழில் நிபுணர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். கிழக்கிலிருந்து இதற்கான பங்களிப்பு கிடைத்துள்ள போதிலும், வடக்கிலிருந்து, இன்னும் பங்களிப்பு கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். விரும்பியவர்கள், எம்மோடு இணைந்துகொள்ளலாம்.

image_fcbbd53e30.jpg

கே: அரசாங்கம் முன்வைத்துள்ள பாதீடு, எப்படி இருக்கிறது?

பாதீடு எனும் போது, அதில், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதாரம் பற்றிய தூரநோக்கொன்று காணப்பட வேண்டுமென்பதே என்னுடைய கருத்தாகும். அதனால், சம்பள அதிகரிப்பை மாத்திரம் மேற்கொள்ளும் பாதீடொன்று, நாட்டுக்கு உகந்ததாக இருக்காது. அத்துடன், நாட்டை அபிவிருத்திக்கு உள்ளாக்கும் விடயங்களும், இதில் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தப் பாதீடு மாத்திரமன்றி, பல பாதீடுகளின் நான் கவனித்த ஒரு விடயம் யாதெனில், பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் காணப்படும். ஆனால், அவற்றை மேற்கொள்வதற்காக நிதி இருக்காது. அதனால் தான், பல வேலைத்திட்டங்கள் முடங்கிப்போய் இருக்கின்றன.

இதனால், மக்களே ஏமாற்றப்படுகின்றனர். அதனால், முழுமையானதொரு பொருளாதார மற்றும் அபிவிருத்திக் கொள்கையொன்றை முன்வைக்காமல், பாதீடு பற்றிப் பேசிப் பிரயோசனமில்லை.
அந்த வகையில், தற்போதைய அரசாங்கமானது, செயன்முறையில் தோல்வி கண்டுள்ளது. பல விடயங்கள் பற்றிப் பேசினாலும், அவற்றைச் செயற்படுத்துவதில், இந்த அரசாங்கம் தோல்வியுற்றுள்ளது.

கே: உங்களைப் படுகொலை செய்வதற்கான சதி நடந்ததெனக் கூறப்படுகிறது. அதை நீங்கள் நம்புகிறீர்களா? எவ்வாறு அதை எதிர்கொள்கிறீர்கள்?

இந்தச் சம்பவத்துக்கு முன்னரே, இவ்வாறான படுகொலைச் சதிகள் தொடர்பில், எனக்குச் சில தகவல்கள் கிடைத்திருந்தன. இருப்பினும், நான் ஓர் அரசாங்க ஊழியரல்லாததால், அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாமலிருந்தது. ஆனால் இன்று, இவ்வாறான சதி முயற்சி தொடர்பில் தெரியவந்ததும், அது குறித்துத் தேடிப்பார்ப்பது, அரசாங்கத்தின் கடமையாகும்.
எவ்வாறாயினும், அவ்வாறான அச்சுறுத்தல் காணப்படுகின்றதென்பதை நான் நம்புகிறேன். காரணம், நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளேன். தவிர, பாதாள உலகக் கோட்டியினரைக் கட்டுப்படுத்தவும், மஹிந்தவின் காலத்தில் நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். இவ்வாறான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே, என் மீதான அச்சுறுத்தல்களை நம்பவேண்டிய கட்டாயம் உள்ளது.

image_7a8fe2dfab.jpg

கே: 11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் உங்களுக்குத் தெரியுமென, முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். உண்மையில் இது பற்றி நீங்கள் அறிந்திருந்தீர்களா?

தெரிந்திருக்கவில்லை. யுத்தத்தின் இறுதிக் காலத்தில், இது தொடர்பான பிரச்சினையொன்று தொடர்பில் என்னிடம் முறையிடப்பட்டது. அந்த உடனேயே நான், பொலிஸாருக்கு அறிவித்து, அது குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தேன். இது தொடர்பான விசாரணைகளை, ஆரம்பத்தில், கொழும்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். பின்னர், அப்போதைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கிணங்க, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கடந்த 10 வருடங்களாகவே, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அப்போது அதற்கு என்னென்ன காரணங்கள் முன்வைக்கப்பட்டன என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது. ஆனால், அந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு, முதலில் நானே உத்தரவிட்டிருந்தேன்.

இது குறித்து அப்போதே, முன்னாள் கடற்படைத் தளபதியினால், எழுத்துமூலமும் வாய்மூலமும் வாக்குமூலம் வழங்கப்பட்டிருந்தது. அதில் என்ன குறிப்பிடப்பட்டிருந்ததென்று, எனக்கு நினைவில் இல்லை. அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று, இப்போது கைதுசெய்யப்பட்டவர்களே, அப்போதும் கைது செய்யப்பட்டிருந்தனர். இப்போது இது தொடர்பில் விசாரணை நடத்திவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளே, அப்போதும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இப்போதும் இவ்விவகாரம் பற்றிய விசாரணைகள் தொடர்வதால், நான் அதைப்பற்றி மேலதிகமாக பேச விரும்பவில்லை.

image_d770b382b7.jpg

கே: சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் போராளிகள் மற்றும் படையினரை விடுவித்து, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென, அரசாங்கத் தரப்பில் சிலர் கூறுகின்றனர். உண்மையில், பிரச்சினைக்கு இது தீர்வளிக்குமா?

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், சுமார் 12 ஆயிரத்து 800 போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நாம், எந்தளவுக்கு இயக்கத்துடன் தொடர்புபட்டார்களென, அவர்களிடமே கேட்டறிந்து, அவர்களை வகைப்படுத்தினோம். அதன் பிரகாரம், அவர்களை நாம், ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடங்களெனப் புனர்வாழ்வளித்தோம். பின்னர் அவர்களில் சிலரை, சிவில் பாதுகாப்புப் படையிலும் இணைத்துக்கொண்டோம்.

இது தவிர, எமது காலத்துக்கு முன்னர், அதாவது, நான், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராவதற்கு முன்னர், பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்கள், பூஸா உள்ளிட்ட தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரும் போது, அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை, சுமார் 5 ஆயிரமாகக் காணப்பட்டிருந்தது. அவர்களையும் நாம், மீண்டும் விசாரணைகளுக்கு உட்படுத்தி, பொலிஸாரின் உதவியுடன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவித்தோம். அவ்வாறான நடவடிக்கைகளின் பின்னர், கடந்த 2014ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், 270 பேர் மாத்திரமே, தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதே சமயம், வழக்குகள் தொடரப்பட்டு, அதனூடாக தண்டனை விதிக்கப்பட்ட சிலரும் இருந்தனர்.
இவை தான், முன்னாள் போராளிகள் தொடர்பில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகளாகும். தவிர, இராணுவத்தைச் சேர்ந்த சிலர் மீதான நடவடிக்கைகள், பயங்கரவாதத்துக்கு எதிராக எம்மால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகக் குறை கூறிய ஐக்கிய தேசியக் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகவே நான் பார்க்கிறேன். இருப்பினும், இதைத் தொடங்கியவர்களே அவர்கள் தான் என்பதை, அவர்கள் மறந்துவிட்டார்கள். யுத்தத்தை நாம் தொடங்கவில்லை. மாறாக, நாம் தான் முடித்துக்கொடுத்தோம்.

70களின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம், 80களில் உக்கிரமடைந்திருந்தன. யாழ்ப்பாண நூலக எரிப்பு, வீரசிங்கம் மண்டபம் தீயிடப்பட்டமை, மாவட்ட சபைத் தேர்தல்களின் மூலம், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, தமிழ் மக்களுக்குக் கிடைத்திருந்த சந்தர்ப்பம் இல்லாதொழிக்கப்பட்டு, அந்தத் தேர்தலின் போது மோசடிகள் செய்யப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் இடம்பெற்றன. இதனால் தான், 1978 முதல் 1994 வரையான ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் தான், பயங்கரவாதமும் பயங்கரவாத நடவடிக்கைகளும் உக்கிரமடைந்திருந்தன. இதற்குக் காரணம், அந்த ஆட்சிகளின் போது அவர்கள் முன்னெடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைகளே ஆகும்.

அவர்களால் இந்தப் பிரச்சினைக்கு சிறந்த முடிவொன்றைக் கொடுக்க சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் செய்யவில்லை. இப்போது ஆட்சியிலுள்ள ரணில் விக்கரமசிங்கவும், 77 முதலே அரசியலில் இருந்தார். அவர்களுடைய காலம், அதன் பின்னரான சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலும் முடிவு கிட்டவில்லை. அதற்குப் பிறகு தான், அதாவது, பயங்கரவாத நடவடிக்கைகளின் உச்ச கட்டத்தில் தான், எம்மிடம் ஆட்சி கையளிக்கப்பட்டது. யார் என்ன சொன்னாலும், 3 வருடங்களுக்குள் நாம் அந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தோம்.

இவ்வாறு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவிய அதிகாரிகளுக்கு எதிராக, அநாவசியமான முறையில், கொலைகாரர்கள், மோசடிக்காரர்கள், திருடர்களெனக் குற்றச்சாட்டுகளைத் திணித்தும் யுத்தம் முறையாக நடத்தப்படவில்லை என்று கூறியும், உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும், எமது நாட்டையும் படையினரையும் இழிவுக்குள்ளாக்கும் வகையில் தான், பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசேடமாக, சில சர்வதேச நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப தான், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரிதொரு சந்தர்ப்பத்தில், பிரிதொரு நபர், ஒரு குற்றத்தை மேற்கொண்டாரெனில், அதற்கு தண்டனை வழங்குவது வேறு விடயம். ஆனால், அவ்வாறு தண்டனை வழங்காமல், அதை அரசியல் ரீதியில் கையாள்வது தவறாகும்.

கைதுகள் பற்றிப் பேசுகிறார்கள். அந்தக் காலப்பகுதியில், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பலரும் கைது செய்யப்பட்டார்கள். சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டார்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவ்வாறு கைதுசெய்யப்பட்டது தவறு என்றால், அது குறித்து, பொலிஸார் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். காரணம், பொலிஸாரிடம், கைதுகள் தொடர்பான பதிவுகள் இருந்திருந்தன. உதாரணமாக, இளைஞர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதியிடம் முறையிட்ட போது, அது குறித்து நடவடிக்கை எடுப்பது தவிர, அவரால் வேறு என்ன செய்திருக்க முடியும். யுத்தமொன்று நடந்துகொண்டிருக்கும் போது, கடற்படைத் தளபதியாக இருக்கும் ஒருவரால், இவ்வாறான கடத்தலோ கைதோ தொடர்பில் விசாரணை நடத்துமாறு, பொலிஸாரைத் தான் பணிக்க முடியும். இதைவிடச் செய்யவேண்டிய கடமைகள் பொறுப்புகள் அவருக்கு இருந்தன. இவ்வாறிருக்க, வசந்த கரன்னாகொடவிடம் விசாரணை நடத்த, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டதா? இங்கு தான், அரசியல் தலையீடு விளையாடி இருக்கிறதென்று நான் கூறுகிறேன்.

image_43b7079706.jpg

கே: மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொடுக்கத் தயாரெனக் கூறியிருக்கிறீர்கள். அந்த மாற்றம், தமிழர்களுக்கு எவ்வாறு சாதகமாக அமையும்?

மாற்றம் என்பது மிக முக்கியமான விடயமாகும். இப்போதுள்ள அரசாங்கமும், மாற்றத்தை மேற்கொள்வதாகத் தான் வந்தது. ஆனால், நான் கூறும் மாற்றம், அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். நாட்டு மக்கள் என்ற ரீதியில் பார்க்கும் போது, தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என, அனைத்தின மக்களும் இங்கு உள்ளனர். அவரவர்களுக்கென்று, வாழ்க்கை முறை, கலாசாரம், வரலாறு, மதச் செயற்பாடுகள் என பல உள்ளன.

இருப்பினும், இவர்கள் அனைவருக்கும் உள்ள மிக முக்கிய பிரச்சினையானது, அனைவருக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றது. இந்தப் பொதுப் பிரச்சினை தொடர்பில் கவனிக்காததால் தான், இலங்கை சுதந்திரமடைந்து 72 வருடங்களாகின்ற போதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வின்றி உள்ளது. தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் எனப் பலரும், கடந்த 72 வருடங்களாகவே இப்பிரச்சினைகள் பற்றிப் பேசிவருகின்ற போதிலும், சரியான பிரச்சினை என்னவென்று அடையாளம் காணப்படாததால் தான், இன்றும் தீர்வின்றி உள்ளோம்.

சிங்களவர்களாயினும் தமிழர்களாயினும், முஸ்லிம்களாயினும், பொருளாதார ரீதியில் வாழ முடியாதுள்ள மக்களுக்கே, இங்கு பிரச்சினை உள்ளது. அதை நாம் இடையாளம் கண்டுகொள்ளவில்லை. வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி, தெற்கிலும் சரி, அனைவருக்கும் ஒரே பிரச்சினையே உள்ளது. அது தான், வாழும் உரிமையாகும். அவர்களுக்கு, அன்றாடம் வாழ்வதற்குரிய வருமான வழியொன்று காணப்பட வேண்டும். பின்னர், அவர்கள் வசிப்பதற்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அவர்களுடைய பிள்ளைகளுக்கு, சிறந்த கல்வி கிடைக்க வேண்டும். சுகாதாரம் இருக்க வேண்டும். சிங்களம், தமிழ், முஸ்லிம் என யாராக இருந்தாலும், பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்திருந்தால், இந்தப் பிரச்சினைகள் எவையும் அவர்களுக்கு இருக்காது.

இவை தவிர, ஒரு மனிதன், கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் வாழ வேண்டுமெனக் கூறுவதாயின், பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தவர்கள், இந்தக் கௌரவத்தைப் பெற்றுக்கொள்ளவில்லையா? இந்த இடத்திலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாயின், நாட்டில் வேறெந்தப் பிரச்சினையும் இல்லை.

இந்த நாட்டில், சுமார் 30 வருடங்களாக, நாட்டில் யுத்தம் நிலவியதால், வடக்கும் கிழக்கும், எந்தவோர் அபிவிருத்தியையும் காணவில்லை என்பதை, நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனால், அங்குள்ள மக்கள், பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டனர். ஆனால் நாம், யுத்தத்தின் பின்னரான ஐந்து வருடக் காலப்பகுதிக்குள், வடக்கு, கிழக்குக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இந்த 5 வருடங்களில் தான், நிலக்கண்ணி வெடி அகற்றல், மீள்குடியேற்றம், புனழ்வாழ்வு மற்றும் இந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அடுத்ததாக, கைத்தொழிற்றுறைகளை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தோம். இருப்பினும், குறித்த மாகாணங்களில், திறன் அபிவிருத்தியை மேற்கொள்ளாது, தொழிற்றுறைகளை ஆரம்பிக்க முடியாதென, முதலீட்டாளர்கள் பின்வாங்கினர். அதனால், மனிதவலு மேம்பாடுகளுக்கான பணிகளை முன்னெடுத்தோம். இவை தான் அடிப்படைகள். ஆனால் அவற்றைப் பலரும் மறந்துவிட்டனர்.

தெற்கில் இருக்கும் வசதிகள், வடக்கில் இல்லையென, வடக்கு மக்களது மனங்களில் குடிகொண்டிருக்கும் எண்ணத்தைப் போக்கினால், எந்தப் பிரச்சினையும் இல்லையென்பதை, நாம் புரிந்துகொண்டோம். 72 வருடங்களாகப் பேசப்பட்டு வரும் அதிகாரப் பரவலாக்கல் மூலம், பிரச்சினைகள் அதிகரிக்குமே தவிர, குறையப்போவதில்லை. என்ன தான் செய்தாலும், மத்திய அரசாங்கம் தானே நிதியைக் கொடுக்க வேண்டும். அப்படியில்லையாயின், மாகாண சபையை எவ்வாறு நடத்துவது? அதனால், மேல் மாகாணத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த அபிவருத்திகளை, ஏனைய மாவட்டங்களுக்கும் கொண்டுசெல்லத் தான், எமது அரசாங்கத்தின் போது நாம் முயற்சித்தோம்.

அன்று தெற்கில் கலவரம் இடம்பெற்றபோது, ஹம்பாந்தோட்டை மாவட்டம் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் தான், அங்கு அபிவிருத்திகளை முன்னெடுத்தோம். அதனால் இன்று, அங்கிருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து, விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளவும், வர்த்தகங்களை முன்னெடுக்கவும், மீன்பிடித்துறையை வலுப்படுத்தவும் முடிந்துள்ளது. இவை கிடைத்த பின்னர், அவர்களுக்கு இந்த அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசத் தேவைப்படாது.

1982ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ஓரிரு மாவட்டங்களிலிருந்து கிடைக்க அதிக வாக்குகளால், கொப்பாகடுவ வென்றார். அந்த ஓரிரு மாவட்டங்களில் ஒன்று தான், யாழ்ப்பாணமாகும். காரணம், யாழ். விவசாயிகளுக்கு, சின்ன வெங்காயம், மிளகாய், கிழங்கு, புகையிலை போன்றவற்றை மேற்கொள்வதற்கும் அவற்றை, தெற்கு உள்ளிட்ட நாடு முழுவதிலும் சந்தைப்படுத்தவும் வாய்ப்பு கிட்டியிருந்தது. அப்போது அங்கு, நல்ல வருவாய் இருந்தது. அது விவசாயத்தினூடான வருவாயாக இருந்தது. ஆனால், 77களில், ஜே.ஆரினால் கொண்டுவரப்பட்டிருந்த திறந்தப் பொருளாதாரக் கொள்கை காரணமாக, அந்த விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதனால் தான், அவருக்கு எதிராக அவர்கள், 1982இல் வாக்களித்தனர்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினை தான் பொருளாதாரமாகும். இந்தப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தால், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல், சிங்களம், தமிழ், முஸ்லிம் என எந்தவொரு தரப்பினரும், சிறப்பாக வாழ முடியும்.

image_fede1c2f81.jpg

கே: ஜெனீவா தலையீட்டை, எவ்வாறு பார்க்கிறீர்கள்? அதை எவ்வாறு கையாளலாம்?

இது, எம்மீது அநாவசியமாகத் திணிக்கப்பட்ட பிரச்சினையாகும். இது எம்முடைய பிரச்சினை. அதனால், நாம் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். எம்முடைய ஆட்சிக் காலத்தில், அதற்கான திட்டங்கள் இருந்தன. அதனூடாகத் தான், புனர்வாழ்வு, அபிவிருத்தி என்பன மேற்கொள்ளப்பட்டன. அதனால், வேறொரு நாட்டுக்குத் தேவையான விடயங்களை நாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. வெளிநாடொன்றின் நிகழ்ச்சி நிரல் தான், இங்கு நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

கே: எப்போது உங்களுடைய அரசியல் பிரவேசம்?

புன்முறுவலுடன்... அரசியல் என்பதை விட, நாடாளுமன்றத்துக்கு வரவோ மாகாண சபைகளுக்கு வரவோ, எனக்கு எந்தவொரு விருப்பமும் இல்லை. இருப்பினும், ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குமாறு, மாபெரும் கேள்வி நிலவுகிறது.

2004ஆம் ஆண்டில், அமெரிக்காவிலிருந்து வந்து, ஜனாதிபதித் தேர்தலுக்காகப் பணியாற்றி, ஜனாதிபதியாக மஹிந்த வென்ற பின்னர், மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லத் தயாரானேன். அப்போது, ஜனாதிபதி என்னை அழைத்து, நீங்கள் இராணுவத்தில் இருந்தவர் என்ற ரீதியில், நாட்டில் நிலவும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொறுப்பு, உங்களுக்கு இருக்கின்றதெனவும் அதற்காக, பாதுகாப்புச் செயலாளர் பதவியை ஏற்றுப் பணியாற்றுமாறும் கூறினார். அதை நான், பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டேன்.

இன்றும், அதேபோன்றதொரு கோரிக்கை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கிடைத்து வருகின்றது. அதனால், அதையும் பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் பொறுப்பு, எனக்கு இருக்கின்றதென நான் நம்புகிறேன். அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, நான் வருவேன்.

கே: இந்தத் தீர்மானத்துக்கு, உள்வீட்டிலேயே எதிர்ப்புள்ளதாகக் கூறப்படுகிறதே...

அப்படி இல்லை. நிச்சயமாக, எமது குடும்பத்துக்குள் அவ்வாறு இல்லவே இல்லை. அவ்வாறு எதிர்க்கக் காரணமும் இல்லை. காரணம், முதலில் இந்தக் கோரிக்கையை, குடும்பத்தினர் தான் முதலில் முன்வைத்தார்கள். ஆனால், இந்தத் தீர்மானத்துக்கு எதிரானவர்கள் இருக்கக்கூடும். ஆனால், மக்களுக்குத் தேவையானவரைத் தானே மக்கள் தீர்மானிப்பார்கள். அதனால் தான், முன்னாள் ஜனாதிபதி, என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

கே: அமெரிக்கப் பிரஜாவுரிமை, இதற்குப் பாதகமில்லையா? அதற்கு, உங்களுக்கு எதிராக, அந்நாட்டிலுள்ள வழக்குகள் தடையாக இல்லையா?

பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். குறுகிய காலத்துக்குள், அந்தப் பணிகள் முடிவுறும். தவிர, எனக்கெதிராக வழக்கு இல்லை. அப்படி இருந்தாலும், பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வதற்கு, அது தடையாக அமையாது.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மஹிந்தவை-காப்பாற்ற-நானே-வருவேன்/91-230504

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.