Jump to content

கனவுகளே கனவுகளே .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்கே சனி காலை நேரம்.  வழமையாக இரவு படுக்கப் போக எப்படியும் 11, 11.30  ஆகி விடும். புலம் பெயர்ந்தும் மாறாத பழக்கங்களில் இதுவும் ஒன்று.  அதிசயமாக நேற்று இரவு 10 மணிக்கே படுக்கைக்கு போயாயிற்று

காலையில்  துணைவியார் அதிசயமாக நல்லதொரு "mood " உடன் என்னப்பா இரவெல்லாம் ஒரே கனவு என்று கொண்டு வந்தார்।  தேடிக் கதைக்க வரும் அருமையான சந்தர்பங்களை விட மனமில்லாமல் கையில் இருந்த வேலை எல்லாவற்றையும் விட்டு விட்டு  என்னப்பா என்ன விஷயம் என்று  கேட்டேன்.

இல்லையப்பா சிங்களவர் , சோனகர் , தமிழர் எல்லோரும் ஒரே சண்டை , நீர்வேலியில் வைத்து நாங்கள் எல்லோ இடையில் மாட்டுப்பட்டுப் போனோம்। ஓடித் தப்பிக்கலாம் எண்டால்  கை கால் ஒண்டும் வேலை செய்யுதில்லை அப்பிடியே இறுக்கிப்  போச்சுது , சரியாக் களைச்சுப் போனன் அப்பா என்றார் 

இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் , வீட்டில் சர்வதேச விடயங்களை கையாள்வது நான் மட்டுமே.  மன்னார் புதை குழி பற்றி கதை எடுத்தால் கூட  உதெல்லாம் தெரிந்த விடயம் தானேயப்பா , உவங்கள் உதுக்குள்ள என்ன விளையாட்டு காட்டினங்களோ ஆருக்கு தெரியும் "  என்பதோடு முடித்து விட்டு " அந்த அந்த பிளம்பரோட  கதைச்சநீங்களே  , எப்ப வாறானாம்”  என உள்நாட்டலுவல்களுக்கு மாறி விடுவார் அப்பிடிகொத்தவர் இப்ப இலஙகைப் பிரச்சனை பற்றி கனவும் கண்டு அதைப் பற்றி கதைக்கவும் வருகிறார் எண்டால்,  ஏதோ ஒண்டு சரியில்லை எண்டு மட்டும் விளங்குற மாதிரி ।।

துணைவியார் மேலும் தொடர்ந்தார் ।। " அப்பா கனவு அத்தோட முடியேல்லையப்பா " . " என்ன Chapter  2 உம் இருக்கோ " இது நான்   "” ஓம் ஓம் , உங்களுக்கு எவ்வளவு தடிப்பப்பா , நான் சொல்லச் சொல்ல , இவ்வளவு பிரச்சனைக்குள்ளும் நீங்கள் இவள் சுமதியைஎல்லோ காருக்குளேயே ஏத்திக் கொண்டு வாரியள்,  ஒண்டாத் தப்புவம் எண்டு. நாங்களே தப்ப வழியைக் காணேல்லை , இதுக்குள்ள இது வேற.     இவள் சுமதி உங்களோட இளிச்சு இளிச்சு கதைக்கிறது எனக்கு கொஞ்சமும் பிடிப்பில்லை,   அவள் ஆக்களைப் பாவிச்சு தன்ர காரியத்தைக் கொண்டு போகிற  type “”   ( இதுவெல்லாம் கனவிலே நடந்த விடயங்கள் தான் ).

இப்ப எனக்கு கொஞ்சம் விளங்குகிற மாதிரி இருந்தது ,

துணைவியார் தொடர்ந்து கேட்டார்  ( இது கனவிலல்ல ) “ எப்பவெண்டாலும் , என்ன காரணத்திற்கெண்டாலும் சுமதியை காரில ஏத்துவீங்களோ எண்டு "

இப்ப தான் சனி காலை தொடஙகி இருக்கு.  இன்று முழுவதும் போய் , நாளை  ஞாயிறும் போய் திங்கள் வேலைக்கு வெளிக்கிட எவ்வளவு காலம் கிடக்கு । அதுக்குள்ளே இன்று சனி இரவு இலங்கையில் இன்னொரு கலவரம் வராதெண்டதுக்கும் ( கனவிலே தான் )  எது வித உத்தரவாதமும் இல்லையென்று நினைக்க அடி வயித்ததில என்னவோ செய்யிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமுருக கிருபானந்த வாரியார் பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே!

அவர் துணைவன் படத்தில்...புத்திமதியொன்று சொல்கிறார்!

மகனே...அவள் உன் வழிக்கு வரா விடடால்.......நீ அவள் வழிக்குப் போ...!

நானும் கனவைப் பற்றித்தான் கதைக்கிறன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் பிரச்சினையான விடயம்தான், முன்னால போனால் கடிக்கும் பின்னால போனால் உதைக்கும்...இதுதான் அன்பை காட்டி அடிமைப் படுத்தும் உத்தி....எதுக்கும் கவனம்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

இப்ப தான் சனி காலை தொடஙகி இருக்கு.  இன்று முழுவதும் போய் , நாளை  ஞாயிறும் போய் திங்கள் வேலைக்கு வெளிக்கிட எவ்வளவு காலம் கிடக்கு । அதுக்குள்ளே இன்று சனி இரவு இலங்கையில் இன்னொரு கலவரம் வராதெண்டதுக்கும் ( கனவிலே தான் )  எது வித உத்தரவாதமும் இல்லையென்று நினைக்க அடி வயித்ததில என்னவோ செய்யிது

இது சும்மா சனி மாதிரி தெரியல்லை.மரணசனி மாதிரி தெரியுது.கவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதிலே உள்ளதை கனவென்று சொல்லியும் வெருட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணைவிமார் சில விசய‌ங்களை கனவு கண்டனான் என்று சொல்லித்தான் தங்களுடை காரியங்களை சாதிக்கிறவையள்😀

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனவு எண்டாலும் மனிசிமார் சும்மா சொல்லமாட்டினம். எனக்கெண்டா உங்களில தான் சந்தேகமாய் இருக்கு. சுமதியை எப்பவாவது கார்ல ஏத்தினனீங்களோ ????😀

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2019 at 6:37 AM, சாமானியன் said:

துணைவியார் மேலும் தொடர்ந்தார் ।। "

இந்த இடத்திலை தான் பாலத்தாலை குதிக்கவேணும் போலை ஒரு பீலிங் வரும்......

இல்லாட்டி காடு கரம்பை மேடு பள்ளம் எல்லாத்தையும் ஏறி இறங்கோணும் போலை இருக்கும்...😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.