Jump to content

காணாமல் போனவரின் தலையுடன் இராணுவம்! கைது செய்யப்பட்டவர் தலை துண்டித்து படுகொலை!


Recommended Posts

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் காணாமல் போன பலரை அவர்களது உறவுகள் தேடியலையும் நிலையில் காணாமற் போனதாக தேடப்படும் ஒருவரை இராணுவம் படுகொலை செய்துள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவரின் தலையை துண்டித்து படுகொலை செய்து புகைப்படம் எடுத்த கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி 8 ஆம் வாய்க்கால் பகுதியில் 1998 ஆம் ஆண்டு மார்கழி இறுதி வாரத்தில் சிறிலங்கா படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் ஒருவரின் புகைப்படமே இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. மிகுதி 21 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை.

காந்தன் என்று அழைக்கப்படும் நாகலிங்கம் ஸ்ரீறிஸ்கந்கராசா தனது சகோதரியின் கணவன் பரமேஸ்வரனுடன் வீடுபார்ப்பற்காக கிளிநொச்சி உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் பகுதிக்கு சென்றிருந்தார்.

அப்பகுதியை நோக்கி இராணுவம் பின்பக்கமாக வருவதை கண்டு அங்கிருந்த பலர் தப்பியோடிவிட்டனர். ஏனையோர் விடுதலைப்புலிகள் என நினைத்து அவ்விடத்திலேயே நின்றுவிட்டார்களாம்

(விடுதலைப்புலிகளின் வேவு அணிகள் இராணுவ சீருடை அணிவது வழக்கம்).

பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் காந்தன் அவர்களுடைய தலைவெட்டப்பட்ட புகைப்படம் மட்டுமே கிடைத்திருந்தது. ஏனையோர்களின் நிலை இதுவரை தெரியவரவில்லை.

சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஒரு வேளை இவர்களையும் கண்டிருக்கலாம்.

புகைப்படம் கண்டெடுக்கப்பட்ட இராணுவமுகாம் ஒரு சித்திரவதை முகாம். இது திருநகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன பிரிவு இயங்கிய இரண்டு வீடுகளே படையினரின் சித்தரவதைமுகாம்களாக இருந்துள்ளது.

இந்தமுகாமிற்கு பிடித்துச்சென்று சித்திவதைக்குள்ளான ஒருவரின் வாக்குமூலத்தில் இருந்து…

ஸ்கந்தபுரத்தில் இருந்து வட்டக்கச்சி போவதற்காக சேவியர் கடைச்சந்திக்கு வந்திருந்த கிளிநொச்சியில் வசித்து வந்த(தற்பொழுது எங்கிருக்கின்றார் என்ற தெரியவில்லை) உந்துருளி திருத்துநரும் அவரது மருமகனும் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு இம்முகாமில் மூன்று நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டிருந்தனர். பின்னர் பளைப்பகுதியில் உள்ள ஒரு முகாமிற்கு கொண்டு சென்ற போதே அங்கு ஏற்கனவே பிடித்துச்செல்லப்பட்ட கிளிநொச்சி தபால் அதிபர் இருந்திருக்கின்றார்.

அரச ஊழியர் என்பதற்காக அவரை படையினர் விடுவிப்பதாக சொல்லியிருந்தார்களாம். தபால் அதிபருக்கு தங்களை நன்கு அறிமுகம் என்பதால் இராணுவத்தினருடன் கதைத்துபடியால் தங்களுக்கு விடுதலை கிடைத்தது என்று தெரிவித்திருந்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/115531?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கிறிஸ்துக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படம் எடுக்கப்பட்டது 13 ஆம் நூற்றாண்டில். படத்தில் கொய்யப்பட்ட தமிழரின் தலையைத் தூக்கிகொண்டு நிற்பது சிங்கள வீரர் கிடையாது, ஏ கே 47 காவிக்கொண்டிருக்கும் வேற்றுக்கிரக வாசி!!!

 

Link to comment
Share on other sites

13 hours ago, putthan said:

இது கிறிஸ்துக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்

6 hours ago, ragunathan said:

இந்தப்படம் எடுக்கப்பட்டது 13 ஆம் நூற்றாண்டில். படத்தில் கொய்யப்பட்ட தமிழரின் தலையைத் தூக்கிகொண்டு நிற்பது சிங்கள வீரர் கிடையாது, ஏ கே 47 காவிக்கொண்டிருக்கும் வேற்றுக்கிரக வாசி!!!

 

அமெரிக்க நிறுவனத்தின் காபன் பரிசோதனை நிபுணர்களை விடவும் சிறந்த நிபுணர்கள் யாழ்களத்தில் இருப்பது இங்கு பலபேருக்குத் தெரியவில்லை. நிபுணர்களே! உங்கள் பரிசோதனைகளை உலகமே ஏற்றுக் கொண்டாலும். சிறீலங்க அரசும், அரசின் அரசகரு மொழிகள் இந்து மத கலாசார அமைச்சர் மனோகணேசன் அவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ ...
சுமந்திரன் இன்னும் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை பார்த்தியளோ ....அவர் வாய் திறக்கட்டும் 
அப்புறம் பாருங்கோ யாழ் கள நிபுணர்களின் படையெடுப்பை , ஒருவேளை இவரும் மரித்த விசுவாசியாக இருப்பாரோ....அது சரி நமக்கேன் வம்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் பார்க்கவே உல்டா செய்ததுமாதிரி இருக்கு. இதை வைத்து ஐபிசி செய்தியை புனைய, அந்தச் செய்தியை வைத்து கேலியான கருத்துக்கள் வருகின்றன. ஆனால் காந்தன் என்ற காணாமல் போனவரின் குடும்பம் இப்போதும் துயரத்தில் இருப்பதை பொழுதுபோக்காக்கவேண்டாம்.

வரவர ஆக்கபூர்வமான கருத்தாடல் என்று விளம்பரம் கொடுக்கும் யாழ் களம் வெறும் பொழுதுபோக்கு அரட்டைக்களமாக மாறிக்கொண்டு வருகின்றது. இதற்கென்றே ஒரு சிலர் திட்டமிட்டு இயங்குகின்றார்கள் போலுள்ளது. நிர்வாகம் வழமை போன்று நித்திரை!

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

படத்தைப் பார்க்கவே உல்டா செய்ததுமாதிரி இருக்கு. இதை வைத்து ஐபிசி செய்தியை புனைய, அந்தச் செய்தியை வைத்து கேலியான கருத்துக்கள் வருகின்றன. ஆனால் காந்தன் என்ற காணாமல் போனவரின் குடும்பம் இப்போதும் துயரத்தில் இருப்பதை பொழுதுபோக்காக்கவேண்டாம்.

இலங்கையில்  பதிவு செய்யப்பட்ட ஒரு ஊடகத்தில் அதுவும் அரசுக்கு எதிராக ஒரு உல்டா செய்தி வருவதற்கு சாத்தியம் இல்லை! அரசுக்கு சார்பாகவே, தமிழினத்துக்கு எதிராகவே பல உல்டா செய்திகள் வருகின்றன. அவற்றை அனைத்து சிங்கள, ஆங்கில பத்திரிகைகளும் காலம் காலமாக செய்து வருகின்றன.  

மேலும் இந்த செய்தியை உல்டா செய்தி என்று கற்பனை செய்து காந்தன் என்ற காணாமல் போனவரின் குடும்பத்தின் துயரத்தை மேலும் அதிகரிப்பதை உங்கள் பொழுதுபோக்கு ஆக்க வேண்டாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

படத்தைப் பார்க்கவே உல்டா செய்ததுமாதிரி இருக்கு. இதை வைத்து ஐபிசி செய்தியை புனைய, அந்தச் செய்தியை வைத்து கேலியான கருத்துக்கள் வருகின்றன. ஆனால் காந்தன் என்ற காணாமல் போனவரின் குடும்பம் இப்போதும் துயரத்தில் இருப்பதை பொழுதுபோக்காக்கவேண்டாம்.

வரவர ஆக்கபூர்வமான கருத்தாடல் என்று விளம்பரம் கொடுக்கும் யாழ் களம் வெறும் பொழுதுபோக்கு அரட்டைக்களமாக மாறிக்கொண்டு வருகின்றது. இதற்கென்றே ஒரு சிலர் திட்டமிட்டு இயங்குகின்றார்கள் போலுள்ளது. நிர்வாகம் வழமை போன்று நித்திரை!

அந்த செய்தியை இன்னும் நிர்வாகம் ஏன் தடை செய்யவில்லை...மன்னார் புதைகுழி விடயத்தில் ஒர் நீதியான‌ தீர்ப்பு வழங்கப்படாத படியால் தான் நாங்கள் இப்படி எழுதுகிறோம்....கிடைத்திருந்தால் இப்படியான‌ அரட்டைகள் வந்திருக்காது....என நினைக்கிறேன் கிருபன்...

Link to comment
Share on other sites

இதுவும் புலிகளால் தான் ராணுவம் செய்தது என்று எங்கள் சுத்துமாத்து சொல்வார் பாருங்கோ ...அதனை இங்க கொஞ்ச பேர் புலம்பி தள்ளுவினம் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டதற்கு வருந்துகிறேன். அன்னாரின் இழப்பால் துயருரும் உறவுகளுக்கு என் அனுதாபங்கள்.

மன்னார் புதைகுழி விவகாரம் தொடர்பான முடிவை மேற்கோள் காட்டவே இப்படி எழுதினேன். 

தவிர்த்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

அந்த செய்தியை இன்னும் நிர்வாகம் ஏன் தடை செய்யவில்லை...மன்னார் புதைகுழி விடயத்தில் ஒர் நீதியான‌ தீர்ப்பு வழங்கப்படாத படியால் தான் நாங்கள் இப்படி எழுதுகிறோம்....கிடைத்திருந்தால் இப்படியான‌ அரட்டைகள் வந்திருக்காது....என நினைக்கிறேன் கிருபன்...

தனிமடலில் வந்த தகவலின்படி இந்தப்படம் இந்தப்படம் 90ன் இறுதிப்பகுதியில் அல்து 2000த்தின் தொடக்கப்பகுதியில் கிளிநொச்சி இராணுவ முகாம் தாக்குதலில் புலிகளால் கைப்பற்றப்பட்டது.  அந்தக் காலப்பகுதியில் எரிமலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு வெளியீட்டுக்கு முன்னர் படம் மைபூசி அழிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாம். 

ஆனாலும் ஐபிசி பரபரப்புச் செய்திகளை வாசகர்களைக் கவரும்விதம் தலைப்புகள் இட்டு வெளியிடுவதும், யாழ் களத்தில் எது உண்மை, எது பொய் என்று பிரித்தறியாதளவுக்கு கண்டபடி கருத்துக்கள் வைப்பதும் நடந்தபடிதான் உள்ளது.

Link to comment
Share on other sites

இந்தப் படம் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்பாகவே வெளிவந்த படம். 
செய்தியில் குறிப்பிட்டது போன்று இராணுவத்தால் பிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்குமானால் இவ்வாறான ஆதாரங்கள் மீண்டும் வெளிவருவது வரவேற்கத்தக்கது.

Link to comment
Share on other sites

இங்கு ஐபிசி செய்திகளில் குறிப்பிட்ட ஆண்டுளுடன் கிருபனின் தனிமடலில் வந்த கருத்துக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. எனவே உல்ட்டா என்ற கருத்து அடிபட்டு போகிறது!

மேலும் இணையவன் கூறியது போல அது எக்காலத்தில் நடந்திருந்தாலும், இன்றுவரை நீதி நியாயம் கிடைக்காதபடியால் அவற்றை மீள கவனத்துக்கு கொண்டுவருவது ஒரு பொறுப்பான செயலாகவே கருதப்பட வேண்டும். நாம், 1948 இன் பின்னர் 1956, ......, 1977, ......, 1983,  ..... 2016 வரையில் நடந்த பெரிய / சிறிய இனக்கலவரங்களை மறந்துவிட முடியாது. அவற்றுக்கு இன்றுவரை முறையான நீதி கிடைக்கவில்லை.

அதேநேரம் கிருபன் சொன்னது போல இன்று, ஐபிசி மட்டுமல்ல வீரகேசரி முதல் 99% ஆன தமிழ் ஊடகங்களும் ஒரு சிறந்த ஊடகத்துக்குரிய சராசரி அளவுச் சுட்டியின் 50% ஐ கூட இன்னமும் எட்டவில்லை. அல்லது அவர்களது தரம் சராசரி ஊடக தரத்தைவிட தாழ்வாகவே உள்ளது.
இந்த ஊடக பிழைகளை / தவறுகளை / பொறுப்பற்ற தன்மையை / எழுத்து பிழைகளை வெளிகொண்டு வந்து / சுட்டிக்காட்டி அவை திருந்தும் என்ற எதிர்பார்ப்புடன் சில மாதங்களின் முன்னர் (A/L பெறுபேறுகள் வெளிவந்த நேரத்தில்) 2 ஊடகங்கள் விட்ட பாரிய தவறுகளுடன் யாழ் களத்தில் ஒரு திரியை வேறொரு பகுதியில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டு திறந்திருந்தேன்.  (அந்த ஊடகங்களில் ஒன்று தனது தவறை பல மணிநேரத்தின் பின்னர் திருத்திக்கொண்டது வேறுவிடயம்) நான் திறந்த அந்த திரியை சில மணிநேரங்களில் காணவில்லை. என்ன செய்வது?

தமிழ் ஊடகங்கள் அவற்றின் தரத்தை சராசரிக்கு மேலாக, பொதுவாக 60% - 70% துல்லியத்தை / தரத்தை (பிபிசி, cnn, அல்ஜிசீரா, தினமணி போன்றளவு ஆவது) அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். 100% இல்லை, 90% க்கு மேல் கூட தரத்தை எட்டுவது என்பது யாராலும் சாத்தியமற்றது என்பதுவும் எனது எண்ணம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.