Jump to content

மன்னார் எலும்புக்கூடுகள்


Recommended Posts

மாசி 26, 2050 சனி (09.03.2019)

மன்னார் எலும்புக்கூடுகள்.

சிவசேனை 
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கரி வகைகள் மூன்று. கரி12, கரி13, கரி14. இவற்றுள் கரி14 கதிர் சார்ந்தது. இயற்கையில் தொடர்ந்து உற்பத்தியாவது.

கரி14 + உயிர்வாயு = ஒற்றைக்கரியமிலம் அல்லது இரட்டைக் கரியமிலம்.

கரியமில வாயுவைத் தாவரங்கள் உள்ளீர்ப்பன, பச்சையத்தை ஊக்கியாக்குவன. சூரியனின் ஒளிக் கதிர் சேர்ப்பன. முதலுணவான சர்க்கரை தருவன. விலங்குகள் தாவரங்களை உண்பன.

உயிர் உள்ளவரை தாவரங்களிலும் விலங்குகளிலும் உள்ளிருக்கும் கரி14, சூழலிருக்கும் கரி14 உடன் சமநிலையில்.

உயிரிழந்ததும் இச்சமநிலை கெடும். உயிரற்ற நிலையில் கரி14 அளவு குறையத் தொடங்கும். படிப்படியாக இற்றுப் போகும்.

இற்றுப் போகும் வேகம் காலத்தோடு தொடர்புடையது என்பதைக் ஆயந்தறித்து கொள்கையாகக் கூறியவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

ஓராண்டில் இவ்வளவுதான் இற்றுப்போகும் என்ற வரையைறை உண்டு.

உயிரிழந்த காலத்தில் சூழலில் கரி14 அளவு இதற்கு அடித்தளம். அச் சூழல் அளவைத் தெரிந்தால் அந்த அளவில் இருந்து இற்றுப் போன கரி14 அளவைக் கணக்கிடலாம்.

இன்றைய சூழலில் கரி14 அளவு, உயிரிழப்புச் சூழலில் கரி14 அளவு, உயிரற்றதில் கரி14 அளவு, இந்த அளவு மாற்றங்கள் காலக் கணக்கீட்டில் உதவுவன.

கடுவேகத் துகள் ஒளிமானி (Accelerator Mass Spectrometry technique) என்ற கருவியே இந்த அளவீட்டைத் தருகிறது.

உலகில் 46 கருவிகள் உள. இந்தியாவில் மும்பையில் 2018 தொடக்கம் ஒரு கருவி உண்டு. ஐரோப்பாவில் 22, அமெரிக்காவில் 9, ஆத்திரேலியாவில், யப்பானில் 8, ஆத்திரேலியா 3, நியுசிலாந்து 3, சீனா 1, கனடா 1, கொரியா 1.

ஒரு மாதிரிப் பொருளின் ஆய்வுக்குக் கட்டணம் இலங்கை ரூ. 150,000 ஆகலாம்.

மருத்துவர் ஒருவரிடம் போகிறோம். நோய் ஈதென்கிறார். மற்றொரு மருத்துவரிடம் போனால் வேறொரு நோய் எனலாம். இரண்டாவது கருத்துக் கேட்டல், அனைத்துத் தொழில் சார் துறைகளிலும் வழமை.

மன்னார் எலும்புக்கூடுகள் தொடர்பாக இரண்டாவது கருத்துக் கேட்டலே பொருத்தமானது. இரண்டாவது ஆய்வுகூடமும் இதையே சொலின், தொல்லியலார், வரலாற்றாய்வாளருக்குப் பணியே அன்றி, ஊகிப்போரின் பணி அன்று.

கற்பனைகள் இன, மத மோதல்களைப் பெருக்கும். சைவ சமயிகளாகிய நாம் இலங்கையில் மதிப்புடனும் மாண்புடனும் வாழ் விழைகிறோம். அனைத்துச் சமயத்தவரின் நெறிகளையும் மதித்து நடப்போம்.

வேற்று மத்ததவர் இதை உணர்ந்து, சைவ சமயத்தை, சைவ சமயத்தவைரை, சைவ வாழ்வியல் நெறிகளை மதித்து வாழ்வாராக.

1 மத மாற்றத்தை ஏற்கோம். 
2 சைவ வழிபாட்டிடங்களில் வேற்று மத ஊடுருவல்கள், ஆக்கிரமிப்புகளை ஏற்கோம். 
3 சைவ வாக்காளர் வாக்களித்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சைவ சமயத்துக்கும் சைவர்களுக்கும் சைவ வாழ்வியல் நெறிகளுக்குமே மாற்றாக, எதிராக, இடுக்கண் தருவதை ஏற்கோம். 
4 சைவத்தைப் போற்றுபவர்களுக்கே தேர்தல்களில் வாக்களிக்குமாறும் சைவ வாக்காளரைக் கோருவோம்.

Image may contain: text
No photo description available.
No photo description available.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது! இங்கே சங்கிலியன் மதம் மாறிய முன்னாள் சைவர்களைக் கொன்ற சீன்  வந்ததும் சச்சிதானந்தம் ஐயாவுக்கு "ஊகம்" ஆபத்தானது என்று விளங்கி விட்டதாக நம்புகிறோம்! இவர் தானே பௌத்தர்கள் சைவர்களின் பூமியான இலங்கையில் வேற்று மதத்தவருக்கு இடமில்லை என்று முழங்கின சிங்கன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

எலும்புக் கூடுகள், உண்மை...பேசுமா??

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் குடிநீர்க்குழாய் பொருத்துவற்காக தோண்டப்பட்ட குழியில் மனித எலும்புகள் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி தோண்டப்பட்ட போது 2015 வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 55 ஆக காணப்பட்ட நிலையில் அந்த புதைகுழி தோன்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றுவரை அந்த விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதனிடையே இந்த எலும்புகளோடு Ak 47 துப்பாக்கி ரவையும் மீட்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த கட்டடம் உடைக்கப்பட்டு 'லங்கா சதொச'வுக்கான புதிய கட்டடம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்ற போது அந்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆபரணங்கள் மனித எச்சங்களுடன் காணப்பட்டாலும் உடைகள் எதுவும் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை.

அத்துடன் அந்த புதைகுழியில்அனைத்து உடல்களும் ஒன்றின் மேல் ஒன்றாக குவித்தே புதைகுழி மூடப்பட்ட நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டன என்பதுவும் நினைவில் கொள்ளத்தக்கது. சில எச்சங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டும் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வின் போது பிஸ்கட் பக்கட்டின் பொலித்தீன் பை மற்றும் உடைந்த பானை துண்டுகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளில் 29 கூடுகள் சிறுவர்கள் உடையதாகும்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாக இருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறு இருக்க நம்முள் எழுகின்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை தான். விடையும் காணமுடியாதவை.

1) 500 வருடங்கள் பழமையான எலும்புக்கூடுகள் அத்திவாரம் வெட்டும் ஆழத்தில் இருக்குமா??

2)திருக்கேதீஸ்வரத்தில் 55 எலும்புகளும் மன்னார் நகரில் 335 எலும்புகளும் மீட்கப்பட்ட நிலையில் வெறும் 6 என்புகள் மட்டும் அனுப்பி ஆய்வு மேற்கொண்டமை சரியா?

3) திருக்கேதீஸ்வரம் புதைகுழியில் Ak 47 ரவைகளும் மன்னார் நகர புதைகுழியில் 1996 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட பிஸ்கட் பைக்கட்டும் இருந்துள்ளன. எனின் அவை பற்றி கருத்திலெடுக்காமை ஏன்??

4) மன்னார் நகர புதைகுழி எலும்பிலுள்ள உலோகம் தொடர்பாக ஏன் ஆய்வு செய்யப்படவில்லை??

6) மன்னார் நகர புதைகுழி எலும்பிலுள்ள உலோகம் கைவிலங்கு போன்றே உள்ளது. அப்படியாயின் 500 வருடங்களுக்கு முன்னரே விலங்கு போடும் நடைமுறை இருந்ததா??

7) மன்னார் நகரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் ஏற்கனவே சங்கிலிய மன்னனால் கொல்லப்பட்ட கிறிஸ்தவ மதமாற்றிகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதனால் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட எலும்புகள் அந்த எலும்புகளாக ஏன் இருக்க முடியாது??

😎 ஆய்வுகளின் முடிவு சரியானது தான். ஆனால் அனுப்பப்பட்ட எலும்புகள் தொடர்பாக உரிய விவரங்கள் வெளியிடாததும் வெளிப்படைத் தன்மை இல்லாமலும் மேற்கொள்ளப்பட்டமை ஏன்??

9) உலோகம் கடலினுள்ளோ அல்லது பனிக்கட்டியினுள்ளோ உக்காமல் இருக்கும். ஆனால் மண்ணில் அது எவ்வாறு 500 வருடங்கள் உக்காமல் இருந்திருக்கும்??

10) 2017 கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் நகர புதைகுழி என்புகள் ஆய்வுக்கு அனுப்பியவர்கள் 2013 கண்டுபிடிக்கப்ப்பட்ட திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பாக ஆய்வுக்கு அனுப்பாது இழுத்தடிப்பது ஏன்??

11) 500 வருடங்கள் பழமையான புதைகுழி எனின் தோண்டப்படும் போது தொல்லியல் சான்றுகள் ஒன்று கூட மீட்கப்படவில்லை ஏன்??

12) மண்டை ஓடுகளில் உள்ள பற்கள் 500 வருடங்கள் எவ்வாறு உக்காமல் இருந்திருக்கும்???

13) மண்டை ஓடுகளில் துப்பாக்கி ரவை துளைத்த துளைகளும் உள்ளன. எனில் 500 வருடத்துக்கு முன்னர் துப்பாக்கி வைத்து கொலை செய்தவர்கள் யார்?

14) இன்னும் தோண்டினால் எலும்புகள் வரும் என்ற நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து ஆய்வுசெய்ய ஏன் முடியவில்லை..?

15) அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் சரியானது என இலங்கை நீதித்துறை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொண்டது??

16) 500 வருடங்களுக்கு முன்னரே Ak 47 பாவனையில் இருந்ததா?

17) சிறுவர்கள் கொல்லப்பட்டதாக 500 வருட வரலாற்று குறிப்புகள் எதிலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா??

இந்த கேள்விகளுக்கு விடை இறந்த எலும்புக்கூடுகள் எழுந்து பேசினால் மட்டுமே கிடைக்கும்.

மன்னார் புதைகுழி விடயத்தில் நாம் ஏமாந்திருப்பதையும் சேர்த்தால் இது வரை பல தடவைகள் ஆட்சியாளர்களிடமும் , சர்வதேசத்திடமும் நம்பி ஏமாந்து போனவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்பதை மட்டும் தான் உணர முடிகிறது.

தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கைக்கு எதிரான எந்த விடயமாக இருந்தாலும் அரசின் பக்கம் நின்று அரசைக் காப்பாற்றவே முனைகிறது. இவ்வாறு இருக்கும் போது நீதியான நியாயமான தீர்வுகள் கிடைக்கும் என நாம் எவ்வாறு நம்ப முடியும்.. இவர்கள் தலைவர்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. மாறாக சிங்கள மக்கள் தான் நன்மைகளை அனுபவிக்கிறார்கள்...

மன்னார் புதைகுழி 500 வருட பழமையானது என கூறிய ஆய்வு முடிவுகள் நாளை அகழப்படப்போகும் புதிய புதைகுழிகள் கிறிஸ்துவிற்கு முற்பட்டது என்று வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது தான்.

ஏமாற்றமே தொடர்கதையாகி போன ஈழத்தமிழர் வாழ்க்கை மெல்ல மெல்ல சாகத்தான் போகிறது...
எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

நெல்லை நெல்லையான் and Perumaal Das shared a post.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.