Jump to content

மன்னார் எலும்புக்கூடுகள்


Recommended Posts

மாசி 26, 2050 சனி (09.03.2019)

மன்னார் எலும்புக்கூடுகள்.

சிவசேனை 
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கரி வகைகள் மூன்று. கரி12, கரி13, கரி14. இவற்றுள் கரி14 கதிர் சார்ந்தது. இயற்கையில் தொடர்ந்து உற்பத்தியாவது.

கரி14 + உயிர்வாயு = ஒற்றைக்கரியமிலம் அல்லது இரட்டைக் கரியமிலம்.

கரியமில வாயுவைத் தாவரங்கள் உள்ளீர்ப்பன, பச்சையத்தை ஊக்கியாக்குவன. சூரியனின் ஒளிக் கதிர் சேர்ப்பன. முதலுணவான சர்க்கரை தருவன. விலங்குகள் தாவரங்களை உண்பன.

உயிர் உள்ளவரை தாவரங்களிலும் விலங்குகளிலும் உள்ளிருக்கும் கரி14, சூழலிருக்கும் கரி14 உடன் சமநிலையில்.

உயிரிழந்ததும் இச்சமநிலை கெடும். உயிரற்ற நிலையில் கரி14 அளவு குறையத் தொடங்கும். படிப்படியாக இற்றுப் போகும்.

இற்றுப் போகும் வேகம் காலத்தோடு தொடர்புடையது என்பதைக் ஆயந்தறித்து கொள்கையாகக் கூறியவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

ஓராண்டில் இவ்வளவுதான் இற்றுப்போகும் என்ற வரையைறை உண்டு.

உயிரிழந்த காலத்தில் சூழலில் கரி14 அளவு இதற்கு அடித்தளம். அச் சூழல் அளவைத் தெரிந்தால் அந்த அளவில் இருந்து இற்றுப் போன கரி14 அளவைக் கணக்கிடலாம்.

இன்றைய சூழலில் கரி14 அளவு, உயிரிழப்புச் சூழலில் கரி14 அளவு, உயிரற்றதில் கரி14 அளவு, இந்த அளவு மாற்றங்கள் காலக் கணக்கீட்டில் உதவுவன.

கடுவேகத் துகள் ஒளிமானி (Accelerator Mass Spectrometry technique) என்ற கருவியே இந்த அளவீட்டைத் தருகிறது.

உலகில் 46 கருவிகள் உள. இந்தியாவில் மும்பையில் 2018 தொடக்கம் ஒரு கருவி உண்டு. ஐரோப்பாவில் 22, அமெரிக்காவில் 9, ஆத்திரேலியாவில், யப்பானில் 8, ஆத்திரேலியா 3, நியுசிலாந்து 3, சீனா 1, கனடா 1, கொரியா 1.

ஒரு மாதிரிப் பொருளின் ஆய்வுக்குக் கட்டணம் இலங்கை ரூ. 150,000 ஆகலாம்.

மருத்துவர் ஒருவரிடம் போகிறோம். நோய் ஈதென்கிறார். மற்றொரு மருத்துவரிடம் போனால் வேறொரு நோய் எனலாம். இரண்டாவது கருத்துக் கேட்டல், அனைத்துத் தொழில் சார் துறைகளிலும் வழமை.

மன்னார் எலும்புக்கூடுகள் தொடர்பாக இரண்டாவது கருத்துக் கேட்டலே பொருத்தமானது. இரண்டாவது ஆய்வுகூடமும் இதையே சொலின், தொல்லியலார், வரலாற்றாய்வாளருக்குப் பணியே அன்றி, ஊகிப்போரின் பணி அன்று.

கற்பனைகள் இன, மத மோதல்களைப் பெருக்கும். சைவ சமயிகளாகிய நாம் இலங்கையில் மதிப்புடனும் மாண்புடனும் வாழ் விழைகிறோம். அனைத்துச் சமயத்தவரின் நெறிகளையும் மதித்து நடப்போம்.

வேற்று மத்ததவர் இதை உணர்ந்து, சைவ சமயத்தை, சைவ சமயத்தவைரை, சைவ வாழ்வியல் நெறிகளை மதித்து வாழ்வாராக.

1 மத மாற்றத்தை ஏற்கோம். 
2 சைவ வழிபாட்டிடங்களில் வேற்று மத ஊடுருவல்கள், ஆக்கிரமிப்புகளை ஏற்கோம். 
3 சைவ வாக்காளர் வாக்களித்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சைவ சமயத்துக்கும் சைவர்களுக்கும் சைவ வாழ்வியல் நெறிகளுக்குமே மாற்றாக, எதிராக, இடுக்கண் தருவதை ஏற்கோம். 
4 சைவத்தைப் போற்றுபவர்களுக்கே தேர்தல்களில் வாக்களிக்குமாறும் சைவ வாக்காளரைக் கோருவோம்.

Image may contain: text
No photo description available.
No photo description available.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது! இங்கே சங்கிலியன் மதம் மாறிய முன்னாள் சைவர்களைக் கொன்ற சீன்  வந்ததும் சச்சிதானந்தம் ஐயாவுக்கு "ஊகம்" ஆபத்தானது என்று விளங்கி விட்டதாக நம்புகிறோம்! இவர் தானே பௌத்தர்கள் சைவர்களின் பூமியான இலங்கையில் வேற்று மதத்தவருக்கு இடமில்லை என்று முழங்கின சிங்கன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

எலும்புக் கூடுகள், உண்மை...பேசுமா??

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் குடிநீர்க்குழாய் பொருத்துவற்காக தோண்டப்பட்ட குழியில் மனித எலும்புகள் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி தோண்டப்பட்ட போது 2015 வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 55 ஆக காணப்பட்ட நிலையில் அந்த புதைகுழி தோன்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றுவரை அந்த விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதனிடையே இந்த எலும்புகளோடு Ak 47 துப்பாக்கி ரவையும் மீட்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த கட்டடம் உடைக்கப்பட்டு 'லங்கா சதொச'வுக்கான புதிய கட்டடம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்ற போது அந்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆபரணங்கள் மனித எச்சங்களுடன் காணப்பட்டாலும் உடைகள் எதுவும் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை.

அத்துடன் அந்த புதைகுழியில்அனைத்து உடல்களும் ஒன்றின் மேல் ஒன்றாக குவித்தே புதைகுழி மூடப்பட்ட நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டன என்பதுவும் நினைவில் கொள்ளத்தக்கது. சில எச்சங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டும் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வின் போது பிஸ்கட் பக்கட்டின் பொலித்தீன் பை மற்றும் உடைந்த பானை துண்டுகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளில் 29 கூடுகள் சிறுவர்கள் உடையதாகும்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாக இருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறு இருக்க நம்முள் எழுகின்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை தான். விடையும் காணமுடியாதவை.

1) 500 வருடங்கள் பழமையான எலும்புக்கூடுகள் அத்திவாரம் வெட்டும் ஆழத்தில் இருக்குமா??

2)திருக்கேதீஸ்வரத்தில் 55 எலும்புகளும் மன்னார் நகரில் 335 எலும்புகளும் மீட்கப்பட்ட நிலையில் வெறும் 6 என்புகள் மட்டும் அனுப்பி ஆய்வு மேற்கொண்டமை சரியா?

3) திருக்கேதீஸ்வரம் புதைகுழியில் Ak 47 ரவைகளும் மன்னார் நகர புதைகுழியில் 1996 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட பிஸ்கட் பைக்கட்டும் இருந்துள்ளன. எனின் அவை பற்றி கருத்திலெடுக்காமை ஏன்??

4) மன்னார் நகர புதைகுழி எலும்பிலுள்ள உலோகம் தொடர்பாக ஏன் ஆய்வு செய்யப்படவில்லை??

6) மன்னார் நகர புதைகுழி எலும்பிலுள்ள உலோகம் கைவிலங்கு போன்றே உள்ளது. அப்படியாயின் 500 வருடங்களுக்கு முன்னரே விலங்கு போடும் நடைமுறை இருந்ததா??

7) மன்னார் நகரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் ஏற்கனவே சங்கிலிய மன்னனால் கொல்லப்பட்ட கிறிஸ்தவ மதமாற்றிகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதனால் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட எலும்புகள் அந்த எலும்புகளாக ஏன் இருக்க முடியாது??

😎 ஆய்வுகளின் முடிவு சரியானது தான். ஆனால் அனுப்பப்பட்ட எலும்புகள் தொடர்பாக உரிய விவரங்கள் வெளியிடாததும் வெளிப்படைத் தன்மை இல்லாமலும் மேற்கொள்ளப்பட்டமை ஏன்??

9) உலோகம் கடலினுள்ளோ அல்லது பனிக்கட்டியினுள்ளோ உக்காமல் இருக்கும். ஆனால் மண்ணில் அது எவ்வாறு 500 வருடங்கள் உக்காமல் இருந்திருக்கும்??

10) 2017 கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் நகர புதைகுழி என்புகள் ஆய்வுக்கு அனுப்பியவர்கள் 2013 கண்டுபிடிக்கப்ப்பட்ட திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பாக ஆய்வுக்கு அனுப்பாது இழுத்தடிப்பது ஏன்??

11) 500 வருடங்கள் பழமையான புதைகுழி எனின் தோண்டப்படும் போது தொல்லியல் சான்றுகள் ஒன்று கூட மீட்கப்படவில்லை ஏன்??

12) மண்டை ஓடுகளில் உள்ள பற்கள் 500 வருடங்கள் எவ்வாறு உக்காமல் இருந்திருக்கும்???

13) மண்டை ஓடுகளில் துப்பாக்கி ரவை துளைத்த துளைகளும் உள்ளன. எனில் 500 வருடத்துக்கு முன்னர் துப்பாக்கி வைத்து கொலை செய்தவர்கள் யார்?

14) இன்னும் தோண்டினால் எலும்புகள் வரும் என்ற நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து ஆய்வுசெய்ய ஏன் முடியவில்லை..?

15) அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் சரியானது என இலங்கை நீதித்துறை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொண்டது??

16) 500 வருடங்களுக்கு முன்னரே Ak 47 பாவனையில் இருந்ததா?

17) சிறுவர்கள் கொல்லப்பட்டதாக 500 வருட வரலாற்று குறிப்புகள் எதிலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா??

இந்த கேள்விகளுக்கு விடை இறந்த எலும்புக்கூடுகள் எழுந்து பேசினால் மட்டுமே கிடைக்கும்.

மன்னார் புதைகுழி விடயத்தில் நாம் ஏமாந்திருப்பதையும் சேர்த்தால் இது வரை பல தடவைகள் ஆட்சியாளர்களிடமும் , சர்வதேசத்திடமும் நம்பி ஏமாந்து போனவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்பதை மட்டும் தான் உணர முடிகிறது.

தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கைக்கு எதிரான எந்த விடயமாக இருந்தாலும் அரசின் பக்கம் நின்று அரசைக் காப்பாற்றவே முனைகிறது. இவ்வாறு இருக்கும் போது நீதியான நியாயமான தீர்வுகள் கிடைக்கும் என நாம் எவ்வாறு நம்ப முடியும்.. இவர்கள் தலைவர்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. மாறாக சிங்கள மக்கள் தான் நன்மைகளை அனுபவிக்கிறார்கள்...

மன்னார் புதைகுழி 500 வருட பழமையானது என கூறிய ஆய்வு முடிவுகள் நாளை அகழப்படப்போகும் புதிய புதைகுழிகள் கிறிஸ்துவிற்கு முற்பட்டது என்று வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது தான்.

ஏமாற்றமே தொடர்கதையாகி போன ஈழத்தமிழர் வாழ்க்கை மெல்ல மெல்ல சாகத்தான் போகிறது...
எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

நெல்லை நெல்லையான் and Perumaal Das shared a post.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.