Jump to content

கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

🌷..............(16).


                      
                                                          துரையப்பா ஸ்ரேடியத்தை தற்காலிகமாக பெரிய பந்தல்கள் போட்டு நிறைய கதிரைகள் எல்லாம் போட்டு அலங்கரித்திருக்கிறார்கள்.மணமக்கள் ஐயர் மற்றும் பெண்களின் பெற்றோர் பாட்டி எல்லோரும் வந்து விட்டார்கள். நடுநடுவே நாலு இடங்களில் வெள்ளித்திரை அமைத்து  திருமணத்தை நேரடியாக காண ஏற்பாடுகளும் செய்திருக்கிறார்கள்.  ரவீந்திரன் ஆரவ் அவர்களுடைய கைபேசியில் வாழ்த்துக்கள் வந்து குவியுது. மரியா  தனது போனை பாட்டியிடம் குடுத்து விட்டாள் கவனமாய் வைத்திருக்கும்படி. கிழவியும் அதை வாங்கி கொட்டைப் பெட்டியில் பத்திரப் படுத்திக் கொண்டாள். மேடை முழுதும் சாம்பிராணி புகை நிறைந்திருக்கு. ஐஞ்சாறு வான் நிறைய உணவுவகைகள் சுடச்சுட வந்து காத்திருக்கு. சக போலீசார் எல்லோரும் அவர்களது குடும்பத்தினருடன் வந்து குழுமி இருக்கின்றனர்.
                           தற்காலிகமாக பொலிஸாரின்  கடமையை செய்வதற்கு இராணுவம் அழைக்கப் பட்டிருக்கு. ஆயினும் என்ன சுமார் முந்நூறு பேர்வரைதான் அங்கிருக்கின்றனர். மிச்ச கதிரைகளுக்கு இடையால முத்தவெளி மாடுகள் இடறுப்பட்டுக் கொண்டு அங்கும் இங்கும் திரியுது. காஞ்சனா ரவீந்திரனையும் ஆரவ்வையும் பார்த்து கேட்கிறாள் என்ன ஆயிரக்கணக்கானவர்கள் வருவினம் என்று சொன்னீங்கள் கொஞ்ச பேர்தான் வந்திருக்கினம் என்று......! படுபாவிகள் எல்லோரும் போனிலேயே வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறாங்கள் என்று போனைக் காட்டுகிறான்.நான் எங்கட ப்ரண்ட்ஸை அழைக்கவா என்று கஞ்சனா கேட்க தாராளமா அழைத்து கொள் என்று ரவீந்திரன் சொல்கிறான்.உடனே அவள் தனது போனில் ஒரு மெசேஜ் தட்டிவிட்டு பேசாமல் இருக்கிறாள். என்ன யாரோ ஒருவருக்கு சொல்லவா இவ்வளவு பில்டப் குடுத்தனி என்று ஆரவ் நகைக்கிறான்.
                                        சற்று நேரத்தில் ஒருவர் இருவராக ஆட்கள் வந்து குவியத் தொடங்குகிறார்கள்.மாடுகள் எல்லாம் அப்பால் போக கதிரைகள் நிரம்புகின்றன. என்னடி இவ்வளவு பேரா என்று ரவீந்திரன் கேட்க இல்லை இவர்கள் எல்லாம் முன்பு எங்களுடைய சேல்ஸ்மென் ஆட்கள்தான். இன்னும் கஸ்ட்டமர்ஸுக்கு சொல்லவில்லை, அவர்களையும் அழைக்கவா என்று கேட்க, வேண்டாம் தாயே இவ்வளவும் போதும் எங்கள் மானத்தை காப்பாற்றினாய் என்று இருவரும் கோரஸ்ஸாய் சொல்கிறார்கள்.இந்த களேபரத்துடன் கெட்டி மேளம் ஒலிக்க ஜாம் ஜாம் என்று இருவரும் தாலி கட்டுகிறார்கள். மாலையில் கேக் வெட்டுறதும் இரவு நடன நிகழ்ச்சிகளும் உண்டு என அறிவிக்கிறார்கள்.
 எல்லோரும் தம்பதிகளுடன் சேர்ந்து படங்களும் வீடியோக்களும் எடுக்கின்றனர். மகேசன் கிளாரிடாவுடன் வந்து படம் எடுக்கும்போதுதான் காஞ்சனாவை பார்க்கிறார். உடனே ரவீந்திரனிடமும் கிளாரிடாவிடமும் இந்தப் பெண்தான் அன்று அந்த சிவமூலிகை வைத்து கட்டுக்கு கட்டு  கட்டி விட்டவ  என்று சொல்ல கிளாரிடாவும் ஏய் காஞ்சனா அந்த சிகரெட் இன்னும் இருக்கா என்று ரகசியமாய் கேட்கிறாள்.காஞ்சனாவும் இல்லை என்று உதட்டைப் பிதுக்குகிறாள்......! 
                                     

                                    ஒலிபெருக்கியில் பாட்டுக்கள் அமர்க்களப் படுகுது.அப்போது ரவீந்திரன் மைக்கை வாங்கி   ஒரு முக்கிய அறிவிப்பை சொல்கிறார்.......!
              இங்கு பெருந்திரளாக வந்திருக்கும் கஞ்சாக் கனவான்களே ,கஞ்சா சீமாட்டிகளே  போலீஸ் உங்களின் நண்பன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். விதிவிலக்காக இன்று உங்களை யாரும் இன்று கைது பண்ண போவதில்லை. நீங்கள் உங்களிடம் வைத்திருக்கும் கஞ்சா பொட்டலங்கள்,சிகரெட்டுகள் யாவற்றையும்  நீங்களாகவே முன்வந்து மேடைக்கு அருகில் இருக்கும் பெட்டியில் சேர்ப்பித்து விடுங்கள் இது இந் நாட்டுக்கும் வீட்டிற்கும் நீங்கள் செய்யும் மகத்தான தொண்டு அது மட்டுமல்ல இவையே நீங்கள் எங்களுக்கு தரும் திருமணப் பரிசாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று சொல்கிறார்.எல்லோரும் வரிசையில் நின்று முகத்தை மறைத்து கொண்டு வரும்போது அவன் மீண்டும் யாரும் முகத்தை மூடத் தேவையில்லை.இந்த மைதானம் முழுதும் அறுபத்திநாலு கமராக்கள் தொடர்ந்து படமெடுத்து கொண்டிருக்கு என்று சொல்ல ......அவர்களும் தைரியமாக சிரித்துக் கொண்டு வந்து அவற்றை அங்கு குடுத்து விட்டு வந்தமர்கின்றனர்......!
உடனே மகேசன் அங்கு வந்து தன் மனைவி கிளாரிடாவையும் அங்கிருந்த ஒரு பெண்ணையும் அழைக்கிறார்.உன் பேர் என்னம்மா........!
ஸ்னேகா சேர் ......ஓ நல்ல பெயர். நீயும் கிளாரிடாவுமாக சேர்ந்து இந்த கஞ்சா பெட்டியை தூரத்தில் கொண்டுபோய் எரித்து விடுங்கள் என்கிறார்.....!
அவர்களும் சந்தோசமாக அதை ஓரமாக இழுத்து சென்று தங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் கஞ்சாவும், சிகரெட்டும் எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டு பெட்டியை கோட்டை அகழிக்குள் தள்ளி விட்டு எரித்து விடுகின்றனர்......!

                                            கிழவி எழுந்து வந்து காஞ்சனாவிடம் பிள்ளை எனக்கு தலை இடிக்குது நான் பஸ்ஸில வீட்ட போறன் என்று சொல்ல அவளும் கிழவியுடன் படமும் வீடியோவும் எடுத்து விட்டு அனுப்புகிறாள்.கிழவி வெளியே வர ஒரு சிகப்பு வோக்ஸ்வேகன் அவளருகில் வந்து நிக்கிறது. ஏறுங்கோ பாட்டி நான் உங்களை வீட்டில் விடுகிறன் என்று ஸ்னேகா சொல்லி கதவைத் திறந்து விட கிழவியும் ஏறிக் கொள்கிறாள்.அவளை  கந்தர்மடத்தடியில் அவள் வீட்டில் இறக்கி விட்டு ஸ்னேகா வேகமாக போகிறாள்.....!

                        வந்திருந்த எல்லோரும் வரிசையாக சென்று மணமக்களை வாழ்த்துகின்றார்கள்......!
                                                     
                              மகேசன் கனகுவிடம்  பெருமையாக  பார்த்தியா கனகு வந்த படகும் திரும்பி போய் விட்டது.இந்த அறிவிப்பு மூலம் குடாநாட்டில் இருந்த மிச்ச சொச்ச கஞ்சாவும் வந்து சேர்ந்து விட்டது என்கிறார்.தற்சமயம் குடாநாட்டில் யாரிடமும் கஞ்சா இல்லை என்று சொல்ல  யெஸ் சேர் என்று அவனும் அதை ஆமோதிக்கிறான்......! 
 எல்லோருக்கும்  திருமண விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருக்கு.....!


                            காஞ்சனா வீட்டில் கிழவியின் கொட்டைப் பெட்டிக்குள் இருந்து மரியாவின் போன் ஒலிக்கிறது. கிழவி அதை எடுத்து ஹலோ என்கிறாள்.....!
நீங்கள் மரியாவா, மரியா நீங்கள் இப்ப கஞ்சா விக்கிறதில்லையாமே, ப்ளீஸ் எனக்கு ஒரேயொரு  பொட்டலம் மட்டும் தர முடியுமா ப்ளீஸ் மரியா கெஞ்சுகிறான்....!
   அடி  செருப்பால, ஆரடா சொன்னது கஞ்சா விக்கிறேல்லை என்று. நீ வா நான்தாறன்.ரகசியம் யாருக்கும் சொல்லிபோடாதை,  உன்ர கூட்டாளிகளுக்கு  மட்டும் சொல்லு. போனை பக்கத்தில் வைத்துவிட்டு எழுந்து இறப்புக்குள் (கூரைக்குள்) இருந்த கஞ்சா பெட்டியை எடுக்கிறாள். (அன்று அந்த மழைநாளில் ரவீந்திரன் காஞ்சூண்டியை மாற்றி வைத்து விட்டு ப்ரிட்ஜில் இருந்த கஞ்சாவை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு உள்ளே போக கிழவி எடுத்து இறப்புக்குள் வைத்துப் போட்டுது). ஒரு வாழையிலையை வெட்டி வந்து பிறப்பக்கமாய் தணலில் வாட்டி விட்டு அதை சதுரம் சதுரமாய் வெட்டி பெட்டிக்குள் இருந்து எல்லிப்போல கஞ்சாவை எடுத்து இலையில் வைத்து மடித்து வாழைநாரால் கட்ட அவன் வருகிறான்.அவனிடம் இரண்டு  பொட்டலம் குடுத்து போட்டு காசை வாங்கி கொட்டைப்பெட்டிக்குள் பத்திரப் படுத்துது.....!

🍃 🐃..................வளராது.......!
                                       
                                                              
யாவும் கற்பனை.....!
யாழ் 21 அகவைக்காக....!

ஆக்கம் சுவி .....!

(இதுவரை ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்).
 

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

நீண்ட நாளைக்குப் பிறகு நல்லதோர் தொடர்கதையை வாசித்த அனுபவம். 

உங்கள் அற்புதமான கற்பனாசக்தியை எழுத்துக்களில் வடித்து எமது ரசனைக்கு விருந்தளித்த உங்களுக்கு நன்றி, சுவி அண்ணா! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

இன்னும் கஸ்ட்டமர்ஸுக்கு சொல்லவில்லை, அவர்களையும் அழைக்கவா என்று கேட்க, வேண்டாம் தாயே இவ்வளவும் போதும் எங்கள் மானத்தை காப்பாற்றினாய் என்று இருவரும் கோரஸ்ஸாய் சொல்கிறார்கள்.இந்த களேபரத்துடன் கெட்டி மேளம் ஒலிக்க ஜாம் ஜாம் என்று இருவரும் தாலி கட்டுகிறார்கள். மாலையில் கேக் வெட்டுறதும் இரவு நடன நிகழ்ச்சிகளும் உண்டு என அறிவிக்கிறார்கள்.

ஸ்ரேடியம் தானே கஸ்டமசுக்கும் சொல்லி ஊரையே கூட்டியிருக்கலாம்.

7 hours ago, suvy said:

யாவும் கற்பனை.....!
யாழ் 21 அகவைக்காக....!

இவ்வளவு தூரம் கற்பனை பண்ணியிருக்கிறீர்கள்.ரொம்பவும் பெருமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுவியண்ணா அவசரப் பட்டு முடித்திட்டீங்கள் ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

🌷..............(16).


                            காஞ்சனா வீட்டில் கிழவியின் கொட்டைப் பெட்டிக்குள் இருந்து மரியாவின் போன் ஒலிக்கிறது. கிழவி அதை எடுத்து ஹலோ என்கிறாள்.....!
நீங்கள் மரியாவா, மரியா நீங்கள் இப்ப கஞ்சா விக்கிறதில்லையாமே, ப்ளீஸ் எனக்கு ஒரேயொரு  பொட்டலம் மட்டும் தர முடியுமா ப்ளீஸ் மரியா கெஞ்சுகிறான்....!
   அடி  செருப்பால, ஆரடா சொன்னது கஞ்சா விக்கிறேல்லை என்று. நீ வா நான்தாறன்.ரகசியம் யாருக்கும் சொல்லிபோடாதை,  உன்ர கூட்டாளிகளுக்கு  மட்டும் சொல்லு. போனை பக்கத்தில் வைத்துவிட்டு எழுந்து இறப்புக்குள் (கூரைக்குள்) இருந்த கஞ்சா பெட்டியை எடுக்கிறாள். (அன்று அந்த மழைநாளில் ரவீந்திரன் காஞ்சூண்டியை மாற்றி வைத்து விட்டு ப்ரிட்ஜில் இருந்த கஞ்சாவை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு உள்ளே போக கிழவி எடுத்து இறப்புக்குள் வைத்துப் போட்டுது). ஒரு வாழையிலையை வெட்டி வந்து பிறப்பக்கமாய் தணலில் வாட்டி விட்டு அதை சதுரம் சதுரமாய் வெட்டி பெட்டிக்குள் இருந்து எல்லிப்போல கஞ்சாவை எடுத்து இலையில் வைத்து மடித்து வாழைநாரால் கட்ட அவன் வருகிறான்.அவனிடம் இரண்டு  பொட்டலம் குடுத்து போட்டு காசை வாங்கி கொட்டைப்பெட்டிக்குள் பத்திரப் படுத்துது.....!

🍃 🐃..................வளராது.......!
                                       
                                                              
யாவும் கற்பனை.....!
யாழ் 21 அகவைக்காக....!

ஆக்கம் சுவி .....!

(இதுவரை ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்).
 

Ãhnliches Foto Ãhnliches Foto

காஞ்சனாவின்  கிழவிக் காறி, கஞ்சா விற்றும்... "ஹாண்ட் பாக்" வாங்காமல்,
கொட்டைப்  பெட்டிக்குள்...  "ஐ போன்" வைத்திருக்கும், பண்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. :grin:

கிழவி... பேய்க் கிழவியாய் இருக்கு ....  எல்லாரையும், பேக்காட்டி போட்டுது. 🤣

சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத.. அருமையான கதையை எழுதிய :110_writing_hand:  சுவியருக்கு நன்றியும், பாராட்டுக்களும். :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2019 at 10:34 PM, மல்லிகை வாசம் said:

சுவி அண்ணா, அசத்தலான ஆரம்பம். நாங்கள் சிரிக்க ரெடி! தொடருங்கள். 😀

தொடர்ந்து முடித்து விட்டோம் மல்லிகை வாசம்.

On 3/9/2019 at 10:48 PM, ஈழப்பிரியன் said:

புலிகளுக்கு முன்னர் நீதிமன்றங்களில் கூடுதலான வழக்குகள் பங்குக்காணி பங்குக்கிணறு அதுவும் கூடுதலாக சகோதரங்கள் மிகவும் நெருங்கிய சொந்தம் என்று தான் இருக்கும்.

 

அப்ப மட்டுமல்ல இப்போதும் காணி வழக்குகளுக்கு குறைவில்லை.......!  😁

On 3/9/2019 at 10:50 PM, புங்கையூரன் said:

வளரட்டும் .... சுவியர்!

வளர்ந்து அறுவடையும் ஆகி விட்டது புங்கையூரன் ........நன்றி....!  😁

On 3/10/2019 at 12:03 AM, குமாரசாமி said:

கஞ்சா.....காஞ்சனா.....கண்ணி.......!

கதை ஒரு மார்கமாய்த்தான் போகும் போலை கிடக்கு....👍

கொஞ்சம் கிளாமராய் இருக்கட்டும் என்றுதான் இதை எழுதும் முன்பு நினைத்தேன், நான் நினைத்ததைவிட அதிக ஆதரவு தந்ததற்கு நன்றி கு.சா.....!  👍

On 3/10/2019 at 8:19 AM, ஜெகதா துரை said:

 சுவி அண்ணா !

சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......! என்று எழுதியிருக்கிறீர்கள் ஆரம்பமே  சிரிப்போட  சிந்திக்கக் கூடியதாய் இருக்கு, தொடருங்கள்.......

சும்மா சிரித்தாள் மட்டும் போதாது சகோதரி, கொஞ்சம் சிந்திக்கலாம்தானே....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2019 at 1:27 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்பிடி நகைச்சுவையாக எழுத உங்களால்த்தான் முடியும்

நகைச்சுவையாய் இருக்கட்டும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன் சகோதரி.நன்றி கருத்து பகிர்வுக்கு  .....!  👍

On 3/11/2019 at 1:57 PM, ஈழப்பிரியன் said:

நீண்ட நாட்களின் பின் புட்டுக்கிட்டுது என்ற சொல்லை பார்த்திருக்கேன்.

கூடியவரை பழைய சொற்களை பயன்படுத்தவே விரும்புவேன் பிரியன்....!  😁

On 3/11/2019 at 2:19 PM, ஈழப்பிரியன் said:

சுவி ,

ரவீந்திரன் ,கனகு, மார்க்கண்டு ,மகேசன் எல்லாம் தமிழ் பொலிசாவே இருக்கு.

கதையானாலும் ஒரு சிங்கள பொலிஸ் தானும் இல்லையே என்று மனதுக்குள் சந்தோசமாக இருக்கு.
ஆனால் இனி பதவி உயர்வுக்காக மார்க்கண்டு என்ன செய்யப் போகிறார் என்னு சந்தேகமாக இருக்கு.ஐயா தமிழ் பொலிசை நாறடிச்சிடாதீங்க.ரொம்ப ஏமாற்றமாக போயிடும்.

இந்தக் கதையில் யாரும் வில்லன் இல்லை.பொதுவாய் மனிதர்கள் அவர்களின் சில குறை நிறைகளுடன் வலம் வருவார்கள்....!  👍

On 3/11/2019 at 8:33 PM, ரதி said:

அட்டகாசம் சுவியண்ணா...தொடருங்கள் 

 

உங்கள் போன்றவற்றின் ஆதரவும் ஊக்கமும்தான் எழுத வைக்குது சகோதரி....!   👍

On 3/11/2019 at 10:08 PM, புங்கையூரன் said:

தொடருங்கள் சுவியர்....!

பின்னர் கருத்து எழுதுகின்றேன்....!

கதை முடிஞ்சாச்சுது கருத்து எங்கே .........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2019 at 5:25 AM, தமிழ் சிறி said:

நல்லதொரு நகைச் சுவை கதை சுவி. இதற்கு எடுத்த கரு... மிக அருமை. 
எந்தக்  கோணத்தில், கதையை... நகர்த்தினாலும், சிரிப்புக்கு பஞ்சம் இராது என்பது திண்ணம்.

தற்போது எங்கும் செய்திகளில் கஞ்சாதான் கதாபாத்திரம்.அதுதான் ஒரு நகைச்சுவையாகவும் கிளாமராகவும் இருக்கட்டும் என்று திடீரென எடுத்த முடிவுதான்.அது யூரோப் முழுதும் பிரயாணங்களின்  இடையில் எழுதவேண்டியதாய் போச்சுது.இன்னும் வீட்டுக்கு போகவில்லை.இப்போது ஸ்ராஸ்பெர்க்கில் மகனுடன் நிக்கிறோம். நாளைக்கு பாரிஸ், பின்புதான் வீடு. நன்றி சிறியர்....!  😁

On 3/12/2019 at 8:31 AM, மல்லிகை வாசம் said:

இந்தியா சுதந்திரமடைவற்குச் சற்று முன்னான காலப்பகுதியில் வெளியான 'துப்பறியும் சாம்பு' எனும் நாவலைத் தழுவிய வை.ஜி.மகேந்திரனின் நகைச்சுவை நாடகத் தொடரொன்றைப் பார்த்திருக்கிறேன். அது போல் நாடகங்கள் தற்போது ஏன் வெளிவருதில்லை என்றும் யோசித்திருக்கிறேன்.

உங்கள் தொடரை வாசிக்கையில் அந்த நாடகம் பார்த்த உணர்வு மீண்டும் கிடைக்கிறது. தொடருங்கள், நாமும் இணைந்திருக்கிறோம். 😊

உண்மைதான் மல்லிகை. அவையெல்லாம் அன்றைய காலத்தில் நானும் நிறைய வாசித்திருக்கிறேன்.ஆனால் எழுதுவேன் என்று கனவு கூட கண்டதில்லை.உங்களின் பாராட்டுக்கள் சந்தோசமாய் இருக்கு.யாழ் இஸ் பெஸ்ட் .......!  😁

On 3/12/2019 at 10:55 AM, putthan said:

சுவியர் தொடர் சூப்பர் தொட‌ருங்கள் .....வாசிக்க வாசிக்க சிரிப்புதான் வருகின்றது

நல்லகாலம் தப்பினேன் புத்ஸ் .......இல்லையென்றால் நகைசுவை என்று நானே எழுதி நானே சிரித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்......நன்றி புத்ஸ் .....! 👍

On 3/12/2019 at 10:57 PM, ஈழப்பிரியன் said:

கஞ்சா காசிவரை போட்டுதா?

காசி விஸ்வநாதரின் தரிசனத்தை காசியில்தான் கஞ்சா குடுக்குது தெரியாதா.....நன்றி ஈழப்பிரியன்.....!   😁

On 3/13/2019 at 12:22 AM, நிலாமதி said:

சு வியரின்  கஞ்சா  காஞ்சனா  ...நீர்  வீழ்ச்சி  மாதிரி   ...வேகமாய் இருக்கிறது . தொடருங்கோ 😀

வேகமாய் விழுந்த அருவி கடலில் கலந்து விட்டது சகோதரி.இனி முடிவை  நீங்கள்தான் சொல்லவேண்டும்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணாவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2019 at 1:45 AM, தமிழ் சிறி said:

சுவியரின் கதையில், நம்ம ஏரியாவும் வந்தது மிக மகிழ்ச்சி. :102_point_up_2:
ஆரவ்... தகர வேலிக்கு  கீழால் பார்க்கும் போது... 
தெரிந்தவற்றை வர்ணித்த விதம் அழகோ... அழகு. :grin:
மரியா... ஜட்டி போட்டிருந்த படியால், ஆரவ்....  மயக்கம் வராமல் தப்பினார். 😝

கஞ்சா வேட்டைக்கு போய்... காஞ்சோண்டி  இலைகளை புடுங்கிக் கொண்டு வந்தால், 
பதவி உயர்வு எப்படி கிடைக்கும்?   🤣

முன்பெல்லாம் மேலே தகரமும் கீழே முள்ளுகம்பியும்தான் அடித்திருப்பார்கள். நாயும் அதுவரை வந்து புழுதி பறக்க குரைக்கும்.அதை நினைத்துதான் எழுதியது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறியர்.......!  👍

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2019 at 4:16 PM, ஈழப்பிரியன் said:

ஆகா காஞ்சூண்டி ரொம்பகாலத்தின் பின் இதை ஊரில் காணக் கிடைக்கவில்லை.

இது மைன்ட் வொய்ஸ் என்றெல்லோ நினைத்தேன்.

இங்கும் காஞ்சசூண்டிகள் நிறைய இருக்கின்றன ஈழப்பிரியன். ஆத்தங்கரையோர பூங்காவில் சோலையாக வளர்ந்திருக்கின்றன.இலைகளும் மிகப் பெரிதாக .......!   😄

 

On 3/14/2019 at 4:32 PM, ஈழப்பிரியன் said:

கதை கஞ்சாவுடன் போகும் என்று பார்த்தா தொழில் வேற மாதிரி போகுதே.

இப்ப சொல்லுங்கள் தொழில் எப்படி என்று......!   😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.