Jump to content

மீண்டும் கூத்தாடும் சிறிசேன - இம்முறை ஜெனீவாவில் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கூத்தாடும் சிறிசேன - இம்முறை ஜெனீவாவில் 

இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2 ஆண்டுகள் தருமாறு ஜெனீவாவில் கேட்டுக்  பெற்றுக்  கொண்ட மைத்திரி, இவ்வாரம், ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, நாட்டில் பெறப்படுள்ள அமைதியினை பேண,  தான் பழைய காயங்களை கிளற விரும்பவில்லை எனவும், தான் ஐநாவுக்கு சொல்ல விரும்புவது எல்லாம், எங்களை, அப்படியே எங்கள் போக்கில் விட்டுவிடுங்கள், பழைய காயங்களை கிளற வேண்டுமென்று கூறாதீர்கள், என்று தெரிவித்தார்.

ஒரு சில மணிநேரங்களிலேயே, ரணில் விக்கிரமசிங்கவின் அரசு, அவர் நிலைப்பாட்டில் தமக்கு உடன்பாடு இல்லை எனவும், தாம் , யுத்த குற்ற விசாரணை விஷயத்தில், தொடர்ந்து ஐநாயுடன் செயல் படப் போவதாகவும் அறிவித்தது.

அரசின் அமைச்சர்கள் யாரும் போகாத நிலையில் அல்லது போவதற்கு மைத்திரி அங்கீகாரம் வழங்காத நிலையில், அரசு சார்பில், ஜெனீவாவில் உள்ள நிரந்தர பிரதிநிதி பங்கு கொள்கிறார்.

அதேவேளை, ஜனாதிபதி தனது பிரதிநிதிகளாக சுதந்திர கட்சி உறுப்பினர்கள், சமரசிங்க, அமுனுகம, மற்றும் கைத்தடி ஆளுனர் ராகவன் ஆகியோரை அனுப்பி வைக்கிறார்.

இவர்கள் என்ன குழப்பம் செய்யப் போகின்றனர் என்பதே வெளிவிவகார அமைச்சினை தனது பொறுப்பில் வைத்திருக்கும், ரணிலின் பதைபதைப்பு. ஆயினும், இருவேறு நிலைப்பாடுகளினால் வரக்  கூடிய பிரச்சனைகளை தவிர்க்கவே வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பன, ஜெனீவா செல்லவில்லை. 

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த  கூட, அரசுக்கும், ஜனாதிபதிக்கும் இவ்விடயத்தில் ஒரு பொது நிலைப்பாடு இல்லாமை குறித்து கவலை அடைவதாக சொல்லியுள்ளார்.

ரணில் அரசை பொறுத்தவரையில், இன்னும் இரு வருடங்கள் அவகாசம் கேட்க விரும்புகிறது. சிலவேளை, மைத்திரி பதவி இறங்கிய பின்னர், இதனை ஒழுங்காக செய்ய முடியும் என நினைக்கிறார் போலுள்ளது.

மறுபுறம், தேர்தலுக்கு தயாராகும், மைத்திரி, ஐநாவை கழட்டி விட்டால், அதை சொல்லியே தேர்தலில் அறுவடை செய்யலாம் என கணக்கு போடுகிறார்.

ஆக, மீண்டும், சுஜ நல நோக்கத்துக்காக சரவதேச ரீதியிலான ஒரு குழப்பத்துக்கு நாட்டினை தள்ள போகின்றார் என்பதே பலரின் கவலை.  

Source: the island 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.