Jump to content

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே – தடவியல் நிபுணரின் அதிர்ச்சி தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mannar-4.jpg

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே – தடவியல் நிபுணரின் அதிர்ச்சி தகவல்

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே என தடவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அந்த புதைகுழி கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது என பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் தெரிவித்த கருத்து, ” மன்னார்மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே. இது தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும்.

மனித எச்சங்கள் மண்ணின் தரம் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப அது பாதுகாக்கப்படும் காலம் வேறுபாடும். நான் நேரில் பார்த்த தடவியல் மருத்துவர் என்ற ரீதியில் என்னால் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கால அளவிற்கு உட்பட்டதல்ல என்றும் அது அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என கூறமுடியும்.

இலங்கையில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவிற்கு அனுபவமுள்ள தடவியல் ஆய்வாளர்கள் இல்லை என்பது என் கருத்து. இவர்கள் உபயோகிக்கின்ற டேட்டிங் முறை தவிர்த்து மனித எலும்புக்கூட்டில் உள்ள பல்லை வைத்து சரியான பிறந்த நாளையே கண்டுபிடிக்க முடியும்.

சர்வதேச மனித உரிமை ஆணையகம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்” என கூறியுள்ளார்.

http://athavannews.com/மன்னார்-மனித-புதைகுழி-அர/

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே என தடவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இது அதிர்ச்சித் தகவல் அல்ல.! உண்மையான தகவல் என நம்பலாம்.!! 😌

அதிர்ச்சித் தகவல் அமெரிக்காவில் இருந்து வந்தது. 😲

சிறீலங்க அரசில் தமிழர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் அப்பதவி கிடைத்தவரிடம் இருந்தும் அதிர்ச்சித் தகவல் வரலாம்.🤔 

Link to comment
Share on other sites

இது எதிர்பார்த்த ஒன்றுதான் , கொஞ்ச நாள் முதல் தான் தமிழ் அரசியல் நரி சுத்துமாத்து சொன்னார் , முடிவுகள் அதிர்ச்சியாக இருக்கும் என்று ... ஆனால் இப்படியா ?

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபாதாசன் said:

இது எதிர்பார்த்த ஒன்றுதான் , கொஞ்ச நாள் முதல் தான் தமிழ் அரசியல் நரி சுத்துமாத்து சொன்னார் , முடிவுகள் அதிர்ச்சியாக இருக்கும் என்று ... ஆனால் இப்படியா ?

இதற்கும் சுமந்திரன்தான் காரணமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இவர்? எந்த நாட்டு மருத்துவர்? இவரது பெயர் எலும்பு அகழ்வில் வந்ததாக நான் காணவில்லையே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

mannar-4.jpg

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே – தடவியல் நிபுணரின் அதிர்ச்சி தகவல்

மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே என தடவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அந்த புதைகுழி கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது என பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் தெரிவித்த கருத்து, ” மன்னார்மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே. இது தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும்.

மனித எச்சங்கள் மண்ணின் தரம் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப அது பாதுகாக்கப்படும் காலம் வேறுபாடும். நான் நேரில் பார்த்த தடவியல் மருத்துவர் என்ற ரீதியில் என்னால் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கால அளவிற்கு உட்பட்டதல்ல என்றும் அது அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என கூறமுடியும்.

இலங்கையில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவிற்கு அனுபவமுள்ள தடவியல் ஆய்வாளர்கள் இல்லை என்பது என் கருத்து. இவர்கள் உபயோகிக்கின்ற டேட்டிங் முறை தவிர்த்து மனித எலும்புக்கூட்டில் உள்ள பல்லை வைத்து சரியான பிறந்த நாளையே கண்டுபிடிக்க முடியும்.

சர்வதேச மனித உரிமை ஆணையகம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்” என கூறியுள்ளார்.

http://athavannews.com/மன்னார்-மனித-புதைகுழி-அர/

டாக்டர் செல்வா சுரேஷ் பல்லை வைத்து இறந்தவரின் வயதைக் கணிக்க முடியும் என்கிறார்! உண்மை, ஆனால் எலும்புக் கூட்டின் வயதை எப்படிப் பல்லு வைத்துக் கண்டு பிடிப்பதாம்? இறந்தவர் இறந்த நாளில் பல்லின் வயதும் அப்படியே நின்று விடுமே? 

எங்களுக்கு விரும்பின பதில் கிடைக்கும் வரை இப்படி யாரையாவது கொண்டு வந்து அலட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்! 

Link to comment
Share on other sites

20 minutes ago, Justin said:

எங்களுக்கு விரும்பின பதில் கிடைக்கும் வரை இப்படி யாரையாவது கொண்டு வந்து அலட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்! 

 

நானும் எதோ புலிகளின் முகத்திரை இதோட கிழியும் எண்டு பாத்தா 

இப்படி சொதப்பிட்டானுங்களே 

Link to comment
Share on other sites

3 hours ago, ஜீவன் சிவா said:

 

நானும் எதோ புலிகளின் முகத்திரை இதோட கிழியும் எண்டு பாத்தா 

இப்படி சொதப்பிட்டானுங்களே 

மேற்படி புதைகுழி உள்ள இடம் போர் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை இராணுவ கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளது. எனவே உங்களுக்கு புலி வாந்தி எடுக்க முடியாது என்பதை மிக்க மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

On 3/10/2019 at 10:02 PM, thulasie said:

இதற்கும் சுமந்திரன்தான் காரணமா?

அவர் காரணமானவர்களை காப்பாற்றுவதில் வல்லவர் .....ரொம்ப நல்லவர் .....தலைவிதி ?

On 3/10/2019 at 10:31 PM, Justin said:

டாக்டர் செல்வா சுரேஷ் பல்லை வைத்து இறந்தவரின் வயதைக் கணிக்க முடியும் என்கிறார்! உண்மை, ஆனால் எலும்புக் கூட்டின் வயதை எப்படிப் பல்லு வைத்துக் கண்டு பிடிப்பதாம்? இறந்தவர் இறந்த நாளில் பல்லின் வயதும் அப்படியே நின்று விடுமே? 

எங்களுக்கு விரும்பின பதில் கிடைக்கும் வரை இப்படி யாரையாவது கொண்டு வந்து அலட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்! 

என்ன இந்த படுகொலைக்கும் சிங்களத்துக்கும் சம்பந்தம் இல்லை என்கிறீர்களா ? மண்ணில் புதையுண்ட இரும்பு கம்பி எப்படி 500 வருடமாகியும் துரு பிடிக்கவில்லை ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.