Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட யாழ் 21வது அகவைக்காக பயணம் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்த போது எழுத்தாளர் சுவி அவர்கள் பயணக் கட்டுரை எழுதி ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.இதுக்குப் பின் எப்படிடா எழுதுவது என்று எண்ணினாலும் சரி என்ன தான் நடந்தாலும் யாழ்இணையத்திற்கு நான்பட்ட கடன் என்று ஒன்று இருக்கல்லவா அதற்கான நன்றிக்கடன் தான் இது.அதுக்காக

நாகபாம்பு ஆடுதென்று

நாக்கிளிபுழுவும் ஆட வெளிக்கிட்டுட்டுது 
என்று யாரும் எண்ணாமலிருந்தால் பெரிய உதவியாக இருக்கும்.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

... என்ன தான் நடந்தாலும் யாழ்இணையத்திற்கு நான்பட்ட கடன் என்று ஒன்று இருக்கல்லவா அதற்கான நன்றிக்கடன் தான் இது.அதுக்காக..

இப்பவே சொல்லிப்புட்டேன்..!

பாதி தொடர் எழுதிக்கொண்டிருக்கும்போதே,

  • பேரன் விளையாடக் கூப்பிட்டான்,
  • பேத்தி விளையாடக் கூப்பிட்டாள்,
  • மனிசி குசினிக்குள் மசால் வடை சுட கூப்பிட்டாங்க.. 

என ஓடிவிடக் கூடாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கத்துக்குட்டிதான்,இதுக்குள்தான் அதுவும் நீங்கள் எல்லாம் தாங்கிப் பிடிப்பீர்கள் என்ற தெம்பில்தான் குதிரை ஓடுறன், யோசிக்காமல் எழுதுங்கோ.....வன்னியர் சொன்னதுபோல் பாதியில் மட்டும் விட  வேண்டாம்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறந்தநாட்டுக்கு எந்தநாடு தான் பெரிது.இலங்கை போவதானால் அங்கு பிறந்த எல்லோருக்குமே ஒரு சந்தோசம்.ஆனால் ஐரோப்பாவில் இருப்பவர்களுக்கு ஒரு பயணம்.அமெரிக்க கண்டத்திலிருப்பவர்களுக்கு இந்தப் பயணம் எறத்தாள ஒரு தண்டனை என்றே கூறலாம்.இங்கிருந்து புறப்பட்டு இடைத்தங்கலில் நின்று மீண்டும் புறப்பட்டு கொழும்பு போக 25-30 மணி நேரமாகிவிடும்.பின்னர் விமானநிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் போவதற்கு 8-9 மணிநேரமாகும்.இதனால் பயணுத்துக்காக 35-40 மணிநேரம் தொடர் பயணமென்பது சந்தோசமான தண்டனையாக ஏற்றுக் கொண்டு புறப்பட வேண்டியது தான்.

                                     இந்தப் பயணம் சரியாக 70 நாட்கள் திட்டமிட்டு எதிகாட்விமானத்தில் போய் வருவதற்கு விமான சீட்டும் இணைய மூலமாக எடுத்தாகிவிட்டது.இனி பெட்டி படுக்கைகள் என்று வீட்டில் ஒரு அறையே ஒதுக்கியாச்சு.யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்று எழுத்துவழக்கு கணக்கெல்லாம் மனைவியின் வேலை.அமெரிக்கா கனடாவிலிருந்து போகிறவர்கள் 50 இறாத்தல் எடை கொண்ட இரு பொதிகளும் கையிலே இழுத்துக் கொண்டு போக 15 இறாத்தல் பொதியும் முதுகிலே போட ஒரு புத்தகப்பை.இது நிறுப்பதில்லை.எவ்வளவு நிறை தான் கொண்டு போக அனுமதித்தாலும் கொஞ்சம் என்றாலும் கூடுதலாக சுழித்துக் கொண்டு போனால்த் தான் அதில் சந்தேசம் கெட்டித்தனம்.வீட்டிலேயே தராசு இருக்கிறபடியால் அடிக்கடி பார்த்து பார்த்து வைத்து அப்பவும் கடைசி நேரத்தில் கொஞ்சம் கூடிப் போட்டுது என்று சிரிப்பு வேறை.சரி சரி நான் பார்க்கிறன் விடு என்று நல்ல பாரமான சாமானாக எடுத்து புத்தகப் பையில் போட்டு அவர்களுக்கு காட்டுவதற்காக எல்லா பொதிகளுமே சரியாக இருந்தது.உள்ளுக்குப் போனபின் நிறை கூடியதை எடுத்து இழுத்துக் கொண்டு போறதற்குள் போட்டால் சரி.

                                          இந்தப் பயணத்தில் மூத்தமகள் கணவர் கடைசிமகள்(இப்போதைக்கு எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம்) மூவரும் தாங்களும் இருகிழமைக்கு வரப் போவதாகவும் இந்த தடவை இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும்.ஆனாலும் நல்லூர் தேர் தவறவிடக் கூடாது.எங்கெங்கே எத்தனை நாட்கள் என்ற விபரத்தையும் மட்டும் தாங்கோ என்றார்கள்.இரண்டு கிழமைகளுக்கு சிங்கப்பூர் விமானம் மூலம் வந்து போக ரிக்கற்றும் எடுத்துவிட்டார்கள்.இப்போ விடுதிகள் எடுக்க வேண்டும் எப்ப எப்ப எங்கு தங்குதென்ற விபரம் தாங்கோ என்றால் எனக்கு தலையைச் சுத்துது.யாழ்-கொழும்பு என்றால் பரவாயில்லை.இப்ப தான் நானும் சுத்தப் போகிறேன் ஆனபடியால் இலங்கை போனதும் விசாரித்து தகவல் அனுப்புகிறேன் பின்பு செய்வதைச் செய்யுங்கோ என்று சொல்லியாச்சு.

                                         புறப்படும் நாள் இரவு 11 மணிக்கு தான் விமானம்.வீட்டிலிருந்து 15 நிமிடம் தான் விமானநிலையம்.மகனும் மருமகளும் வந்து ஏற்றி இறக்கிவிட்டார்கள்.மகன் என்னை சாமானுகள் தூக்கவிடமாட்டான்.அதனால் தானும் உள்ளுக்கு வந்து போடிங்பாஸ் எடுத்து உள்ளேபோகும் வரை நின்று அங்கையும் ஒன்றும் தூக்கிப்பறித்து நாரியை உடைக்காமல் போட்டருக்கு 6-8 டொலரைக் கொடுத்து பொதிகளைக் கொண்டு போங்கோ என்று விடை பெற்று போனார்.
 
                                         10 மணி போல் விமானத்தில் ஏற்றத் தொடங்கினார்கள்.வாசலில் போடிங்பாஸ் சரிபார்த்து உள்ளுக்குப் போனால் இரண்டு வழியால் விமானத்தில் ஏறுகிறார்கள்.அதிலே போய் கொஞ்சம் முளிசிக் கொண்டு நின்றதும் அதில் நின்ற பணிப்பெண் ஏதோ அப்பதான் தூக்கத்திலிருந்து எழுந்தவராக பிஸ்னஸ்கிளாஸ் திஸ் வே பிளீஸ் என்றதும் எனக்கு ஒருமாதிரி போய்விட்டது.உள்ளே போய் பார்த்ததும் தான் முழுவிபரமும் முழுமையாக விளங்கியது.இது ஒரு இரட்டைத்தட்டு பஸ் மாதிரி.எமது இருக்கை 62ம் வரிசை.மனைவிக்கு எப்ப விமானமேறினாலும் யன்னல் கரையோரம் உள்ள இருக்கை தான் வேண்டும்.இருந்து கொண்டு தான் விமான விபரமட்டை எடுத்து பார்த்தால் எ380 எயரபஸ் என்று எல்லா விபரங்களும் இருந்தது.ஆட்கள் ஏறிஏறி புறப்படும் நேரம் வந்ததும் மனைவி ஏதொ கூட்டிக் கழித்துக் கொண்டிருந்தா.நான் ஏதோ காசுக் கணக்குத் தான் பார்க்கிறா என்று நினைத்து வெளிக்கிட்டு விமானம் வரை வந்து இருந்துகொண்டா கணக்குப் பார்க்கிறாய் என்று கேட்டால் இல்லை இல்லை நாங்கள் இருக்கிற நீட்டுக்கே 10 சீற் என்றால் மேலையும் கீழையும் ஆக்கள் ஒவ்வொருவரின் கொண்டுவாற சாமானுகள் இவை எல்லாத்தோடும் இந்த பிளேன் மேல போகுமா?எப்படி போகும் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தா.

                            ஒருமாதிரி 11 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அரை மணிநேரம் தாமதமாக 11.30 ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியது.கொஞ்சம் கொஞ்சம் நகர்வதும் நிற்பதுமாக மெதுவாக நகர்ந்தது.இடைஇடையே ஓடுபாதையில் திருத்தவேலைகள் வேலைகள் செய்வதால் கொஞ்சம் தாமதம் என்று சொல்லிச் சொல்லியே எம்மை ஏமாற்றி கடைசியில் ஒன்றரை மணிநேரம் தாமதமாக 12.30 மணிக்குத் தான் புறப்பட்டது.

                            இப்போ எனக்கு யோசனை என்னவென்றால் அபுதாபியில் ஒன்றரை மணிநேரமே இடைத்தங்கல் ஏற்கனவே ஒன்றரைமணி நேரம் தாமதமாகிவிட்டது.ஒரே யோசனை தொட்டுவிட்டது.விமானம் மேலெழும்பி சில்லுகளும் உள்ளே போற சத்தம் கேட்க மனைவியும் செருப்போ சப்பாத்தோ களட்டிவிட்டு சப்பாணி போட்டுடவா.வெளியே வெளிச்சங்கள் மறையும் மட்டும் பார்த்திருந்துவிட்டு சாப்பாடுகள் கொண்டுவரும் போது எழுப்புங்கோ என்று சொல்லிவிட்டு தூங்கிவிடுவா.எனக்கு எங்கையாவது நீட்டி நிமிர்ந்து போர்வையால் ஆளை சுத்திக் கொண்டு படுத்தா தான் நித்திரை வரும்.இல்லாவிட்டால் எத்தனை மணிநேரம் பிரயாணம் செய்தாலும் கோழித் தூக்கம் தான்.விமானத்தில் நன்றாக கவனித்தார்கள்.நல்ல சாப்பாடு.

                             ஒருமாதிரி அரைமணி நேரமிருக்கும் போது வந்து இறங்கியாச்சு.இறங்கியவுடன் இழுத்துக் கொண்டு ஓடவேணும் தயாராக இரு என்று எழும்பி நின்றால் முன்னே உள்ளவர்கள் இறங்கினால் தானே நாங்களும் இறங்கலாம்.இப்ப பார்த்து எமக்காக எல்லோரும் மெதுவாக இறங்குவது போல இருந்தது.இதிலேயே அரைமணி நேரம் ஓடிவிட்டது.சரி முயற்சி செய்து பார்ப்போம் என்று பாக்கையும் இழுத்துக் கொண்டு ஓட்டம் தான்.அடுத்த கதவுக்கு போவதற்கு இடையில் செக்கிங் வேற.அதையும் முடித்துக் கொண்டு அடுத்த கதவுக்கு கிட்ட போக ஒருவர் கொழும்பு கொழும்பு என்று ஓடிவாறார்.களைப்பில கதையும் வருதில்லை யேஸ் யேஸ் என்றதும் தானும் ஒரு பாக்கை வாங்கி தயாராக நின்ற பஸ்சில் ஏற்றிவிட்டார்.நாங்களும் போய் எறினதும் விமானம் புறப்பட்டுவிட்டது.இப்ப அடுத்த யோசனை நாங்கள் போய்ச் சேர எமது பொதிகள் வந்து சேருமா?

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

(இப்போதைக்கு எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம்)

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

suvy

  • Advanced Member
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்போ ஊர் வந்து சுற்று சுற்றி போயாச்சு போல இன்னும் வரட்டும் பந்திகள் அதை வாசித்து நிறையட்டும் பக்கங்களும் மனசுகளும்👈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

எந்த நிறுவனங்களிலும் வீடுகளிலும் 'ரிசல்ட் ஓரியன்டன்ட்' (Result Oriented) நபர்களைதான் ஊக்குவித்து விட்டுவைத்திருப்பார்கள்.. ! 😃

 

இங்கே முடிவுகள்தான் வெளியே தெரியவில்லை..! 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

இப்பவே சொல்லிப்புட்டேன்..!

பாதி தொடர் எழுதிக்கொண்டிருக்கும்போதே,

  • பேரன் விளையாடக் கூப்பிட்டான்,
  • பேத்தி விளையாடக் கூப்பிட்டாள்,
  • மனிசி குசினிக்குள் மசால் வடை சுட கூப்பிட்டாங்க.. 

என ஓடிவிடக் கூடாது..

என்னையா குளிர் நேரத்தில் கராச்சுக்குள் படுக்கப்பண்ணுற எண்ணம் போல.

 

11 hours ago, suvy said:

நானும் கத்துக்குட்டிதான்,இதுக்குள்தான் அதுவும் நீங்கள் எல்லாம் தாங்கிப் பிடிப்பீர்கள் என்ற தெம்பில்தான் குதிரை ஓடுறன், யோசிக்காமல் எழுதுங்கோ.....வன்னியர் சொன்னதுபோல் பாதியில் மட்டும் விட  வேண்டாம்......!   😁

சுவி வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் கஸ்டநஸ்டங்கள் உங்களுக்குத் தெரியாததா?

11 hours ago, தமிழினி said:

அந்த 7 (ச்சா..  70)  நாட்களுக்காய் காத்திருக்கின்றோம். தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா!

எழுதவும் வேண்டுமல்லவா?அதுவும் ஒத்தை விரலால.

7 hours ago, ரதி said:

தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா 😃

இயலுமானவரை முயற்சி செய்கிறேன்.வேலைவெட்டியை விட்டுவிட்டு வந்து நிற்பதே பேரனை பார்க்கவென்று.இப்போ மனைவியோடு சேர்ந்து மகளும் பார்க்கிறாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள்.....ஈழப்பிரியன்...!

ஆபீசில் இருந்து படிக்காமல் வீட்டில் போயிருந்து படிச்சு பாருங்கோ அருமை தெரியும்.

5 hours ago, குமாரசாமி said:

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

எரிச்சல் எரிச்சல் எரிச்சல்.

4 hours ago, Nathamuni said:

suvy

  • Advanced Member

65-70 இல்த் தான் திருமணமே செய்யுறாங்கள்.நீங்க வேறை.

3 hours ago, நிலாமதி said:

தொடருங்கள் ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன் 

 

3 hours ago, Kavallur Kanmani said:

தொடருங்கள் ஈழப்பிரியன்.

இருவருக்கும் பேரப்பிள்ளைகளின் பிரச்சனையை சொல்லி விளக்கத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓ அப்போ ஊர் வந்து சுற்று சுற்றி போயாச்சு போல இன்னும் வரட்டும் பந்திகள் அதை வாசித்து நிறையட்டும் பக்கங்களும் மனசுகளும்👈

உங்களைப் பற்றியும் வரும் காத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

-------                                    இந்தப் பயணம் சரியாக 70 நாட்கள் திட்டமிட்டு எதிகாட்விமானத்தில் போய் வருவதற்கு விமான சீட்டும் இணைய மூலமாக எடுத்தாகிவிட்டது.இனி பெட்டி படுக்கைகள் என்று வீட்டில் ஒரு அறையே ஒதுக்கியாச்சு.யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்று எழுத்து வழக்கு கணக்கெல்லாம் மனைவியின் வேலை.

ஊருக்குப் போகும் போது.... அங்குள்ள சொந்தங்களுக்கு, என்ன  பரிசுப்  பொருட்கள் வாங்கலாம் என்பது மிகவும் கடினமான வேலை. நாங்கள் மினக்கெட்டு  தேடி... வாங்கி, அதனைக்  காவிக் கொண்டு போய்... கொடுக்கும்  போது... அது,  அவர்களுக்கு அவசியம் அற்றதாக இருக்கும் நிலையில்.... மிகவும் மனக்  கஷ்டமாக இருக்கும்.

ஈழப் பிரியன் ஆரம்பமே.. நன்றாக உள்ளது. வாசிக்க ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                             ஏற்கனவே வான் வைத்து ஓடுபவர் ஒருவரிடம் எனது வருகையைப் பற்றி சொல்லி எனது போன் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தேன்.வீட்டில் கொண்டு போய்விட ஏசி இல்லாமல் 14000 ரூபா.ஏசி போட்டா 16000 ரூபா என்று கட்டணமும் கூறியிருந்தார்.நியூயோர்க் விமானநிலையத்திலிருந்து வைபர் மூலம் கதைத்த போது தன்னால் வர முடியால் இருப்தாகவும் தனது நண்பர் நம்பிக்கையானவர் அவர் வருவார் உங்கள் நம்பர் கொடுத்துள்ளேன் என்று அவரின் நம்பரையும் தந்தார்

                                    அமெரிக்காவிலுள்ளவர்களுக்காக இலங்கை தூதுவராலயம் ஒரு சலுகை செய்துள்ளது.ஒரு முறை விசா எடுத்துவிட்டு உடனேயே மல்ரிப்பிள் என்றிக்கு 100 டெலர்கட்டி எடுத்தால் அடுத்த 5 வருடத்துக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் போகலாம் ஒரு தடவை போனால் 6 மாதத்திற்கு நிற்கலாம்.இதை அவுஸ்திரேலியா இங்கிலாந்து கனடா போன்ற நாடுகளிலுள்ளவர்கள் முயற்சி செய்தும் கொடுக்கவில்லை.

                                    கொழும்பு விமானநிலையத்தில் இறங்கி பொதி வந்திருக்குமோ என்ன செய்வது வான்காரன் வேறை வந்து நிற்பானே வீட்டிலுள்ளவர்களுக்கு ஏன் கஸ்டமென்று அவர்களுக்கும் சொல்லவில்லை என்று ஆளையாள் பார்த்து முழிசிக் கொண்டு இமிகிரேசன் தாண்டி பொதி எடுக்கப் போனால் ஆச்சரியம் கடைசியில் போட்டதாலோ என்னவோ எமது பொதி முதலாவதாக வந்திருந்தது.நல்ல சந்தோசம்.50 இறாத்தல் 4 பொதியை போட்டு தள்ளிக் கொண்டுவந்து உள்ளுக்கு நின்றே வான்சாரதியுடன் குறுந் தகவலில் வந்துவிட்டோம் உங்கள் வானின் இலக்க தகடை அனுப்புமாறி சொல்லி வெளியில் போக ஏதோ பக்கத்தில் நின்றவர் மாதிரி உடனேயே வந்துவிட்டார்.

                                     ஆளைப்பார்க்க நல்ல வாட்டசாட்டமாக இளந்தாரியாக இருந்தார்.அவராகவே பொதிகளெல்லாம் எடுத்து வைத்து உதவி செய்தார்.நேரம் காலை 4 மணிதான்.ஊர் பத்திரிகைகளில் எயர்போட்டுக்கு வாறபோற வாகனங்கள் அடிக்கடி அடிபடுவதாக செய்திகள் வாறபடியால் முன்னுக்கிருந்து கதைத்துக் கொண்டு போவோம் என்று முன்சீற்றிலே இருந்தேன்.எனக்கும் நித்திரை வராது.அவர்ஆள் இளந்தாரியாக இருந்தாலும் மிகவும் அவதானமாக ஆறுதலாக ஓட்டினார்.சில நேரங்களில் இன்னும் கொஞ்சம் விரைவாக ஓடலாமே என்று சொல்ல வேண்டும் போல இருக்கும்.காலைச் சாப்பாடு அனுராதபுரத்திலுள்ள(வெளிநாட்டுப பாணி) ஒரு பேக்கரியில் நல்ல இடம் பாதுகாப்பு சுத்தம் என்று அங்கேயே சாப்பிட்டோம்.காசும் பெரிதாக ஒன்றுமில்லை.நான் எப்போதுமே யாருக்காவது அன்பளிப்பு கொடுப்பதென்றால் முதலேயே கொடுத்துவிடுவேன்.இவருக்கும் சிறுதொகை பணத்தை கொடுத்தேன்.

                                        இலங்கையை எப்படி சுற்றலாம் எத்தனை நாளாகும் என்று அவருடன் கதைத்த போது ஓரளவு புரிந்து கொண்டேன்.இடையிடையே நடந்த யுத்தம் தற்போதய நிலை என்று நிறையவே சொன்னார்.ஓரளவுக்கு நாம் அறிந்தவைகள் என்றாலும் சிலவற்றைக் கேட்க சங்கடமாக இருந்தது.முருகண்டி பிள்ளையாரை பார்த்தா கொஞ்சம் வெளிக்கிட்டு நிக்கிறமாதிரி இருந்தது.பிள்ளையாரையும் கும்பிட்டு கொஞ்ச கடலையும் வாங்கி கொறித்துக் கொண்டு வீடு போய் சேர 12.30 மத்தியானம்.

                                       எனக்கென்று அண்ணன் ஒருவரே.அவரும் சிட்னியில்.அப்பா அம்மா முதலே இறந்துவிட்டார்கள்.எமது வீட்டில் உறவினர் ஒருவரை இருத்தியிருந்தோம்.இப்போது மனைவி வீட்டில் தான் போய் இறங்கினோம்.திடீர் என்று கண்டதும் அவர்களுக்கு ஒரே ஆச்சரியமும் சந்தோசமும்.குசலம் விசாரிப்பது தொடங்கி ஊர் நடப்பு அதுஇதென்று நீண்ட நேரம் பின்னர் சாப்பிட்டுவிட்டு எனது வீட்டுப் பக்கம் போய் பார்த்து பொழுதுபட நித்திரை வெறியாகிவிட்டது.வேளைக்கே படுத்துவிட்டேன்.

                                       காலையில் எழும்பினால் எவரும் எழும்பிய மாதிரி தெரியவில்லை.இன்னும் முற்றாக விடியவில்லை எப்படி வெளியே போவது?கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருவராக எழும்பினார்கள்.முதல் நாள் பிற்பகல் மாட்டை மேச்சலால் கொண்டுவந்து கட்டினார்கள்.அந்த ஞாபகம் வர மாடு எங்கை வயலுக்கையா கட்டுறநீங்கள் என்று கேட்டு ஒரு வேப்பங்கொப்பில் தடிமுறித்து சப்பிக் கொண்டு சின்ன துவாயையும் தோளில் போட்டுக் கொண்டு மாட்டுக்கு கொஞ்ச தண்ணீரும் வைத்து வயலுக்குள் கட்டிவிட்டு வரலாம் என்று மாட்டை அவிழ்துக் கொண்டு கொஞ்ச தூரம் போக பெறாமகன் கத்திக் கொண்டு வாறான்.என்னடா என்றால் இப்ப ஒருவரும் சேட்டில்லாமல் திரியிறேல்லை சேட்டை போட்டுக் கொண்டு போங்கோ என்று சேட்டைத் தந்தான்.ஊருக்குள் திரியும் போது சேட்டுடன் திரிவது குறைவு.இப்போ சேட்டே இல்லாமல் வெளிய போகேலாதா?ஓரிரு நாட்கள் போனபின் தான் கூலி வேலை மேசன் சீவல் தொழிலாளி எல்லோருமே பெனியனோ சேட்டோ போட்டிருக்கிறார்கள்.மாட்டுடன் வயலுக்கு போனால் முன்னர் பச்சைப்பசேலென்றிருந்த வயல் வெளி இப்போ காய்ந்து கருவாடாக கிடக்கிறது.பழைய தோட்டம் செய்த ஞாபகம் பார்க்க பார்க்க மிகவும் கஸ்டமாக இருந்தது.கிணற்றை சுற்றி தென்னைகள் ஒரே முள்ளுகள் தட்டித் தட்டி கிணற்றங்கட்டிலிருந்து யோசிக்க போன ஆளைக் காணல்லையே என்று தேடிவாறங்கள்.

தொடரும்.

46 minutes ago, தமிழ் சிறி said:

ஊருக்குப் போகும் போது.... அங்குள்ள சொந்தங்களுக்கு, என்ன  பரிசுப்  பொருட்கள் வாங்கலாம் என்பது மிகவும் கடினமான வேலை. நாங்கள் மினக்கெட்டு  தேடி... வாங்கி, அதனைக்  காவிக் கொண்டு போய்... கொடுக்கும்  போது... அது,  அவர்களுக்கு அவசியம் அற்றதாக இருக்கும் நிலையில்.... மிகவும் மனக்  கஷ்டமாக இருக்கும்.

ஈழப் பிரியன் ஆரம்பமே.. நன்றாக உள்ளது. வாசிக்க ஆவலாக உள்ளோம்.

சிறி ஒரு சின்ன உதாரணம் இரவில் கறன்ற் இல்லை என்றால் தற்காலிகமாக பாவிக்க சிறிய ரியூப் லைற் மாதிரி வாங்கிக் கொண்டு போனால் அங்கே அதே மாதிரி பெரிய லைற் வைத்திருக்கிறார்கள்.பெரிய வெக்கக்கேடு.

Link to comment
Share on other sites

37 minutes ago, ஈழப்பிரியன் said:

                              

                                  வேப்பங்கொப்பில் தடிமுறித்து சப்பிக் கொண்டு சின்ன துவாயையும் தோளில் போட்டுக் கொண்டு மாட்டுக்கு கொஞ்ச தண்ணீரும் வைத்து வயலுக்குள் கட்டிவிட்டு வரலாம் என்று மாட்டை அவிழ்துக் கொண்டு கொஞ்ச தூரம் போக பெறாமகன் கத்திக் கொண்டு வாறான்.

மாட்டுடன் வயலுக்கு போனால் முன்னர் பச்சைப்பசேலென்றிருந்த வயல் வெளி இப்போ காய்ந்து கருவாடாக கிடக்கிறது.பழைய தோட்டம் செய்த ஞாபகம் பார்க்க பார்க்க மிகவும் கஸ்டமாக இருந்தது.கிணற்றை சுற்றி தென்னைகள் ஒரே முள்ளுகள் 

பசுமையான தாயகப் பயண அனுபவங்களைத் தொடருங்கள், ஈழப்பிரியன் அண்ணா. நாமும் இணைந்திருக்கிறோம். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரஸ்யமாக செல்கிறது தொடருங்கள்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

.1)சரி முயற்சி செய்து பார்ப்போம் என்று பாக்கையும் இழுத்துக் கொண்டு ஓட்டம் தான்.அடுத்த கதவுக்கு போவதற்கு இடையில் செக்கிங் வேற.அதையும் முடித்துக் கொண்டு

.2)இப்ப அடுத்த யோசனை நாங்கள் போய்ச் சேர எமது பொதிகள் வந்து சேருமா?

தொடரும்.

நான் நினைச்சன் எனக்கு மட்டும்தான் உந்த வியாதி இருக்கு என்று ....இது ஒரு சர்வேதே வியாதி ....நிம்மதியாக இருக்கு....

ஈழப்பிரியன் தொடருங்கள் ....வாசிக்க ஆவலாக காத்திருக்கிறோம்....எழுத்து மண்புழு பட்ம் எடுத்த மாதிரி தெரியவில்லை ...பாம்பு படமெடுத்த மாதிரி இருக்கு

Link to comment
Share on other sites

எனது பயணத்தில் ஒருமுறை ஒரு சிறு பயணப்பொதியை முதல் விமானத்தில் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். மற்றய பொதிகள் எல்லாம் வந்தும் இதற்காக மட்டும் மீண்டும் விமான நிலையம் போக வேண்டியதாய்ப் போச்சு. அதிலிருந்து எனக்கும் இதே பயம் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மல்லிகை வாசம் said:

பசுமையான தாயகப் பயண அனுபவங்களைத் தொடருங்கள், ஈழப்பிரியன் அண்ணா. நாமும் இணைந்திருக்கிறோம். 😊

தொடங்கியாச்சு இப்ப சேடம் இழுக்குது.

 

7 hours ago, suvy said:

சுவாரஸ்யமாக செல்கிறது தொடருங்கள்.....!   😁

சுவி நீண்டகாலமாக வாசிப்பில்லாதபடியால் உங்களை மாதிரி சோறுகறி சேர்த்து சாப்பிடுவது போல முடியவில்லை.

7 hours ago, putthan said:

நான் நினைச்சன் எனக்கு மட்டும்தான் உந்த வியாதி இருக்கு என்று ....இது ஒரு சர்வேதே வியாதி ....நிம்மதியாக இருக்கு....

ஈழப்பிரியன் தொடருங்கள் ....வாசிக்க ஆவலாக காத்திருக்கிறோம்....எழுத்து மண்புழு பட்ம் எடுத்த மாதிரி தெரியவில்லை ...பாம்பு படமெடுத்த மாதிரி இருக்கு

புத்து இணையத்தில் கொஞ்சம் மலிவு என்று விமானச் சீட்டுக்கள் வாங்க போனால் இடைத்தங்கல் நீண்டநேரம் வரும் இல்லாவிட்டால் குறுகிய நேரம் வரும்.

கொஞ்ச லாபத்துக்காக கயிற்றில் நடக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

எனது பயணத்தில் ஒருமுறை ஒரு சிறு பயணப்பொதியை முதல் விமானத்தில் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். மற்றய பொதிகள் எல்லாம் வந்தும் இதற்காக மட்டும் மீண்டும் விமான நிலையம் போக வேண்டியதாய்ப் போச்சு. அதிலிருந்து எனக்கும் இதே பயம் உண்டு. 

பிள்ளைகள் வரும்போது இதே பிரச்சனை வந்தது.பின்னர் விபரமாக எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                    மேலே உள்ளது தான் எனது வீடு.நீண்டகாலமாக நெருங்கிய உறவினர் இருக்கிறார்கள்.அவர்களது வீடு நீண்டகாலத்தின் பின் திருத்தவேலை செய்ய தொடங்கியிருந்தனர்.அவர்கள் வீட்டுவேலை முடிந்துவிடும் என்பதால் எனது வீட்டையும் திருத்தலாம் என்றே 70 நாட்கள் போயிருந்தோம்.இப்போது நாங்கள் வெளிக்கிடும் வரையிலும் அவரின் வீடு திருத்தி முடியவில்லை.

                                   1995 இல் இடப் பெயர்வின்போது நடைபெற்ற சண்டையில் சாமியறைப் பக்கம் செல் விழுந்து சேதமாகி ஓடுகள் உள்ளே இருந்த சீற்றுகள் நிறைய இடங்களில் சன்னங்கள் பட்டு பல காயங்கள்.மீண்டும் அவரவர் ஊர் திரும்பிய போது தற்காலிகமாக திருத்தம் செய்யப்பட்டிருந்தது.இன்னமும் அப்படியே இருக்கிறது.இந்த கோடைக்கு போகலாம் என்றிருக்க மகன் ஆனியில் இரண்டாவது குழந்தை கிடைக்கப் போகுதென்றான்.சரி அப்ப இந்த வருடமும் வீடு திருத்துப்படாது.இப்ப வெளிக்கிடும் போதும் இது தான் கடைசி றிப் பிள்ளை பிறந்து எல்லாம் முடிந்த பின் எங்காவது வெளிக்கிடலாம் என்று சட்டம் வேறு சொல்லிவிட்டான்.

                                  சரி இத்தனை நாள் வந்தாச்சு வளவை என்றாலும் துப்பரவாக்குவோம் என்று ஒவ்வொருநாளும் வேலை.போன உடனேயே பெரிய இரும்பு கரியர் உள்ள சைக்கிள் ஓடுவாரற்றுக்கிடந்ததை எண்ணைதண்ணி பூசி அதில் தான் பயணம்.தூர எங்காவதென்றால் மோட்டார் சைக்கிள்.அங்கே போய் ஓடுவதற்காகவே மினக்கெட்டு மோட்டார் சைக்கிள் ஓட அனுமதிப் பத்திரம் பின்பு அதை 15 டொலர் கொடுத்து இன்ரநசினலாக்கி கொண்டு போனபடியால் பயப்படாமல் யாரின் உதவியும் இன்றி எல்லா இடமும் போக முடிந்தது.மனைவியின் வீடு நான்கு பக்கமும் மதிலென்றபடியால் விறகுக்கு கொஞ்சம் பஞ்சம்.காஸ் அடுப்பு இருந்தாலும் விறகடுப்பும் எரிந்து கொண்டிருக்கும்.ஆனபடியால் எனது வீட்டிலிருந்து வேலை முடிந்து போகும்போது சைக்கிளில் நிறைய விறகு கட்டிக் கொண்டு மனைவியையும் முன்னுக்கு ஏத்திக் கொண்டு போவோம்.அந்த நேரம் இளைப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு சந்தோசம்.ஒரு முறை இப்படி வரும் போது எனது ஒன்றுவிட்ட அண்ணன் மறித்து அட கோதாரிவிழுவாரே இந்த வெய்யில் எங்களாலேயே தாங்க முடியாமல் இருக்கிறது.உண்மையைச் சொல்லுங்கோடா சவுதியில் இருந்து வந்தநீங்களோ இல்லை அமெரிக்காதானோ என்று பேசிவிட்டுப் போனார்.இதை பலரும் சொல்லி குறைபட்டனர்.ஆனால் எமக்கு கஸ்டமாக இருந்தாலும் சந்தோசமாகவும் உடம்புக்கு இதமாகவும் இருந்தது.

                                              இங்கிருக்கும் போது ஒவ்வொருநாளும் ஓட்கஞ்சி(22 வருடமாக).அங்கு பசியோ பசி.மச்சாளே கேட்பாள் சாப்பிடுறதைப் பார்த்தா அகதி முகாமிலிருந்து வந்த மாதிரி இருக்கென்று.மாமி பேச்சுவிழும் எவ்வளவு காலத்துக்கு பின் வந்திருக்கினம் சாப்பிட விடடி நீஅங்கால போ நான் போட்டுக் கொடுக்கிறேன் என்பா.அத்தோடு மாம்பழம் வாழைப்பழம் பிலாப்பழம் என்று வேறை.பிலாப்பழம் எமது வீட்டிலேயே நல்ல சுவையான மரம் நிற்கிறது.ஒருநாள் வீட்டுவேலையாக இருந்த போது பிலாப்பழம் காகம் கொத்துது என்றார்கள்.வீட்டிலிருந்தவர்களிடம் சின்ன கத்தியும் வாங்கிக கொண்டு பிலாபபழம் வெட்ட வெளிக்கிட்டாச்சு.அப்பவும் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவா நான் தான் அங்கால இரண்டு மூன்று பொம்பிளைகளும் நிக்கினம் என்று சுதி காட்ட வெளிக்கிட்டு ஒரு 10 அடி ஏறல்லை பிலாப்பழத்துக்கு பதிலாக நான் தொப்பென்று விழுந்துகிடக்கிறேன்.நல்ல வேளை நிறைய தென்னம்பாளைகள் அடுக்கி வைத்திருந்தது.அதற்கு மேல் தான் விழுந்தது.விழுந்த என்னை தூக்கிவிடுவம் என்றில்லை மனைவியும் அவர்களுடன் சேர்ந்து சிரிசிரி என்று சிரித்துக் கொண்டிருக்கிறா.பெரிய வெட்கமாகிப் போட்டுது.இன்னும் இந்த சரத்தைக் கட்டியிருக்க வேண்டுமா என்றிருந்து.ஒரு காலத்தில் அணில் மாதிரி மரங்களில் ஏறித்திரிந்த நினைப்பு வினையாக போயிருந்திருக்கும்.

                                                  வீட்டுவேலைகள் வேலியடைப்புகள் முடிய கொஞ்சம் தூரமுள்ள உறவினர்கள் வீடுகள் என்று உலாத்து.சுவியர் மாதிரி கோவில்குளம் என்றுஒன்றும் அலையவில்லை.நல்லூருக்கு மாத்திரம் திருவிழா தொடங்க முதல் உள்ளுக்கு போக வேண்டுமென்பதற்காக போனேன்.பழைய கோவில் ஒரு பயபக்தி இருந்தது.இப்போ பெரியதேசம் பழைய உணர்வு வரவில்லை.இப்படியே நாள்போக நல்லூர் திருவிழாவும் தொடங்கிவிட்டது.ஒவ்வொருநாளும் சரியாக 5.45 போல சைக்கிளில் வெளிக்கிட்டால் 10 நிமிடத்தில் சைக்கிள் தரிப்பில் சைக்கிளை விட்டுவிட்டு நடந்து போக சரியாக 6 மணிக்கு சாமி வெளியே வரும்.7-7.30க்கு வீட்டுக்கு வந்துவிடுவோம்.சைக்கிள் ஓடும் போது என்னப்பா மூச்சுவாங்கிற மாதிரி இருக்கு நான் இறங்கி கொஞ்ச தூரம் நடக்கட்டோ என்பா.சீ சீ அப்படி ஒன்றுமில்லை தொடக்கத்தில் சும்மா இருந்த இதயம் கொஞ்சம் வேகமாக வேலை செய்யேக்கை அப்படித் தான் சத்தம் வரும் ஆனால் நான் ஓகோ.சொன்னா கேக்கவா போறியள்.மனைவி என்றாலும் கொஞ்சம் குறைத்து சொல்லவிடலாமோ?

                                        வான்காரனுடன் பேசி நேரே விமானநிலையம் போய் அங்கிருந்து இலங்கையைச் சுற்றிவர என்று ஒரு அட்டவணை தயாரித்து மகளுக்கு அனுப்பியிருந்தேன்.அவவும் காலி கதிர்காமம் நுவரெலியா திருகோணமலை யாழ்ப்பாணம் அடுத்தநாள் நல்லூர் தேருக்கு கட்டாயம் இங்கே நிற்க வேண்டும் என்று திட்டம் போட்டு எயர்பிஎன்பியில் வீடுகளும் ஒழுங்கு செய்து போட்டா.நான் மட்டக்களப்பும் போட்டிருந்தேன்.ஆனால் அவவோ நுவரெலியாவில் இரண்டு நாட்கள் போட்டு மட்டக்களப்பை தவிர்த்து விட்டா.அவ அனுப்பிய அட்டவணையைப் பார்த்ததும் யாழ் தனிக்காட்டுராசாவை பார்க்க முடியாதே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.அதற்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

                                       சுற்றுலா நாள் வந்ததும் சிங்கப்பூர் விமானம் இரவு 12 மணிக்கு வாறதால் இங்கிருந்து 3-4 மணிக்கு வெளிக்கிட்டால் சரி என்று வான் சாரதியின் எண்ணப்படியே மனைவியின் அக்கா தங்கை பிள்ளைகள் அம்மா என்று வெளிக்கிட்டாச்சு.இப்போ பிள்ளைகள் கொண்டுவரும் பொதிகளை எப்படியாவது வேறு வானில் கொடுத்தனுப்ப சாரதியும் முயற்சி செய்து கடைசிவரை முடியாமல் போய்விட்டது.அவருக்கும் பெரிய கவலையாக போய்விட்டது.வானிலேயே எல்லா இடமும் கொண்டு திரிவதானால் பின்சீற் இரண்டும் மடிக்க வேண்டும்.இனி ஒன்றும் செய்ய முடியாது கொழும்பிலுள்ள எனது உறவினருக்கு விபரம் சொல்லி அவரின் வீட்டில் பொதிகளைப் போட்டுவிட்டு தொடர்ந்து பயணிப்பதாக திட்டம்.

                                       இரவு 11 மணிபோல விமானநிலையம் வந்ததும் சாரதியை பிள்ளைகள் வரும்வரை தூங்க சொன்னேன்.அவரும் விடியவிடிய காலிக்கு ஓடவேண்டுமே.நேரம் போகப்போக 2மணிக்கு கிட்டவாச்சு.12 மணி போல வந்துவிட்டோம் என்று குறந்தகவல் வந்தது.அதன் பின் நீண்ட நேரம் சென்றபின் 
       “ ஓஓஓ வீ காவ் பிரபிளம்”
என்று ஒரு குறுந்தகவல் வந்தது.

தொடரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.