Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட யாழ் 21வது அகவைக்காக பயணம் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்த போது எழுத்தாளர் சுவி அவர்கள் பயணக் கட்டுரை எழுதி ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.இதுக்குப் பின் எப்படிடா எழுதுவது என்று எண்ணினாலும் சரி என்ன தான் நடந்தாலும் யாழ்இணையத்திற்கு நான்பட்ட கடன் என்று ஒன்று இருக்கல்லவா அதற்கான நன்றிக்கடன் தான் இது.அதுக்காக

நாகபாம்பு ஆடுதென்று

நாக்கிளிபுழுவும் ஆட வெளிக்கிட்டுட்டுது 
என்று யாரும் எண்ணாமலிருந்தால் பெரிய உதவியாக இருக்கும்.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

... என்ன தான் நடந்தாலும் யாழ்இணையத்திற்கு நான்பட்ட கடன் என்று ஒன்று இருக்கல்லவா அதற்கான நன்றிக்கடன் தான் இது.அதுக்காக..

இப்பவே சொல்லிப்புட்டேன்..!

பாதி தொடர் எழுதிக்கொண்டிருக்கும்போதே,

  • பேரன் விளையாடக் கூப்பிட்டான்,
  • பேத்தி விளையாடக் கூப்பிட்டாள்,
  • மனிசி குசினிக்குள் மசால் வடை சுட கூப்பிட்டாங்க.. 

என ஓடிவிடக் கூடாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கத்துக்குட்டிதான்,இதுக்குள்தான் அதுவும் நீங்கள் எல்லாம் தாங்கிப் பிடிப்பீர்கள் என்ற தெம்பில்தான் குதிரை ஓடுறன், யோசிக்காமல் எழுதுங்கோ.....வன்னியர் சொன்னதுபோல் பாதியில் மட்டும் விட  வேண்டாம்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறந்தநாட்டுக்கு எந்தநாடு தான் பெரிது.இலங்கை போவதானால் அங்கு பிறந்த எல்லோருக்குமே ஒரு சந்தோசம்.ஆனால் ஐரோப்பாவில் இருப்பவர்களுக்கு ஒரு பயணம்.அமெரிக்க கண்டத்திலிருப்பவர்களுக்கு இந்தப் பயணம் எறத்தாள ஒரு தண்டனை என்றே கூறலாம்.இங்கிருந்து புறப்பட்டு இடைத்தங்கலில் நின்று மீண்டும் புறப்பட்டு கொழும்பு போக 25-30 மணி நேரமாகிவிடும்.பின்னர் விமானநிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் போவதற்கு 8-9 மணிநேரமாகும்.இதனால் பயணுத்துக்காக 35-40 மணிநேரம் தொடர் பயணமென்பது சந்தோசமான தண்டனையாக ஏற்றுக் கொண்டு புறப்பட வேண்டியது தான்.

                                     இந்தப் பயணம் சரியாக 70 நாட்கள் திட்டமிட்டு எதிகாட்விமானத்தில் போய் வருவதற்கு விமான சீட்டும் இணைய மூலமாக எடுத்தாகிவிட்டது.இனி பெட்டி படுக்கைகள் என்று வீட்டில் ஒரு அறையே ஒதுக்கியாச்சு.யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்று எழுத்துவழக்கு கணக்கெல்லாம் மனைவியின் வேலை.அமெரிக்கா கனடாவிலிருந்து போகிறவர்கள் 50 இறாத்தல் எடை கொண்ட இரு பொதிகளும் கையிலே இழுத்துக் கொண்டு போக 15 இறாத்தல் பொதியும் முதுகிலே போட ஒரு புத்தகப்பை.இது நிறுப்பதில்லை.எவ்வளவு நிறை தான் கொண்டு போக அனுமதித்தாலும் கொஞ்சம் என்றாலும் கூடுதலாக சுழித்துக் கொண்டு போனால்த் தான் அதில் சந்தேசம் கெட்டித்தனம்.வீட்டிலேயே தராசு இருக்கிறபடியால் அடிக்கடி பார்த்து பார்த்து வைத்து அப்பவும் கடைசி நேரத்தில் கொஞ்சம் கூடிப் போட்டுது என்று சிரிப்பு வேறை.சரி சரி நான் பார்க்கிறன் விடு என்று நல்ல பாரமான சாமானாக எடுத்து புத்தகப் பையில் போட்டு அவர்களுக்கு காட்டுவதற்காக எல்லா பொதிகளுமே சரியாக இருந்தது.உள்ளுக்குப் போனபின் நிறை கூடியதை எடுத்து இழுத்துக் கொண்டு போறதற்குள் போட்டால் சரி.

                                          இந்தப் பயணத்தில் மூத்தமகள் கணவர் கடைசிமகள்(இப்போதைக்கு எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம்) மூவரும் தாங்களும் இருகிழமைக்கு வரப் போவதாகவும் இந்த தடவை இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும்.ஆனாலும் நல்லூர் தேர் தவறவிடக் கூடாது.எங்கெங்கே எத்தனை நாட்கள் என்ற விபரத்தையும் மட்டும் தாங்கோ என்றார்கள்.இரண்டு கிழமைகளுக்கு சிங்கப்பூர் விமானம் மூலம் வந்து போக ரிக்கற்றும் எடுத்துவிட்டார்கள்.இப்போ விடுதிகள் எடுக்க வேண்டும் எப்ப எப்ப எங்கு தங்குதென்ற விபரம் தாங்கோ என்றால் எனக்கு தலையைச் சுத்துது.யாழ்-கொழும்பு என்றால் பரவாயில்லை.இப்ப தான் நானும் சுத்தப் போகிறேன் ஆனபடியால் இலங்கை போனதும் விசாரித்து தகவல் அனுப்புகிறேன் பின்பு செய்வதைச் செய்யுங்கோ என்று சொல்லியாச்சு.

                                         புறப்படும் நாள் இரவு 11 மணிக்கு தான் விமானம்.வீட்டிலிருந்து 15 நிமிடம் தான் விமானநிலையம்.மகனும் மருமகளும் வந்து ஏற்றி இறக்கிவிட்டார்கள்.மகன் என்னை சாமானுகள் தூக்கவிடமாட்டான்.அதனால் தானும் உள்ளுக்கு வந்து போடிங்பாஸ் எடுத்து உள்ளேபோகும் வரை நின்று அங்கையும் ஒன்றும் தூக்கிப்பறித்து நாரியை உடைக்காமல் போட்டருக்கு 6-8 டொலரைக் கொடுத்து பொதிகளைக் கொண்டு போங்கோ என்று விடை பெற்று போனார்.
 
                                         10 மணி போல் விமானத்தில் ஏற்றத் தொடங்கினார்கள்.வாசலில் போடிங்பாஸ் சரிபார்த்து உள்ளுக்குப் போனால் இரண்டு வழியால் விமானத்தில் ஏறுகிறார்கள்.அதிலே போய் கொஞ்சம் முளிசிக் கொண்டு நின்றதும் அதில் நின்ற பணிப்பெண் ஏதோ அப்பதான் தூக்கத்திலிருந்து எழுந்தவராக பிஸ்னஸ்கிளாஸ் திஸ் வே பிளீஸ் என்றதும் எனக்கு ஒருமாதிரி போய்விட்டது.உள்ளே போய் பார்த்ததும் தான் முழுவிபரமும் முழுமையாக விளங்கியது.இது ஒரு இரட்டைத்தட்டு பஸ் மாதிரி.எமது இருக்கை 62ம் வரிசை.மனைவிக்கு எப்ப விமானமேறினாலும் யன்னல் கரையோரம் உள்ள இருக்கை தான் வேண்டும்.இருந்து கொண்டு தான் விமான விபரமட்டை எடுத்து பார்த்தால் எ380 எயரபஸ் என்று எல்லா விபரங்களும் இருந்தது.ஆட்கள் ஏறிஏறி புறப்படும் நேரம் வந்ததும் மனைவி ஏதொ கூட்டிக் கழித்துக் கொண்டிருந்தா.நான் ஏதோ காசுக் கணக்குத் தான் பார்க்கிறா என்று நினைத்து வெளிக்கிட்டு விமானம் வரை வந்து இருந்துகொண்டா கணக்குப் பார்க்கிறாய் என்று கேட்டால் இல்லை இல்லை நாங்கள் இருக்கிற நீட்டுக்கே 10 சீற் என்றால் மேலையும் கீழையும் ஆக்கள் ஒவ்வொருவரின் கொண்டுவாற சாமானுகள் இவை எல்லாத்தோடும் இந்த பிளேன் மேல போகுமா?எப்படி போகும் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தா.

                            ஒருமாதிரி 11 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அரை மணிநேரம் தாமதமாக 11.30 ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியது.கொஞ்சம் கொஞ்சம் நகர்வதும் நிற்பதுமாக மெதுவாக நகர்ந்தது.இடைஇடையே ஓடுபாதையில் திருத்தவேலைகள் வேலைகள் செய்வதால் கொஞ்சம் தாமதம் என்று சொல்லிச் சொல்லியே எம்மை ஏமாற்றி கடைசியில் ஒன்றரை மணிநேரம் தாமதமாக 12.30 மணிக்குத் தான் புறப்பட்டது.

                            இப்போ எனக்கு யோசனை என்னவென்றால் அபுதாபியில் ஒன்றரை மணிநேரமே இடைத்தங்கல் ஏற்கனவே ஒன்றரைமணி நேரம் தாமதமாகிவிட்டது.ஒரே யோசனை தொட்டுவிட்டது.விமானம் மேலெழும்பி சில்லுகளும் உள்ளே போற சத்தம் கேட்க மனைவியும் செருப்போ சப்பாத்தோ களட்டிவிட்டு சப்பாணி போட்டுடவா.வெளியே வெளிச்சங்கள் மறையும் மட்டும் பார்த்திருந்துவிட்டு சாப்பாடுகள் கொண்டுவரும் போது எழுப்புங்கோ என்று சொல்லிவிட்டு தூங்கிவிடுவா.எனக்கு எங்கையாவது நீட்டி நிமிர்ந்து போர்வையால் ஆளை சுத்திக் கொண்டு படுத்தா தான் நித்திரை வரும்.இல்லாவிட்டால் எத்தனை மணிநேரம் பிரயாணம் செய்தாலும் கோழித் தூக்கம் தான்.விமானத்தில் நன்றாக கவனித்தார்கள்.நல்ல சாப்பாடு.

                             ஒருமாதிரி அரைமணி நேரமிருக்கும் போது வந்து இறங்கியாச்சு.இறங்கியவுடன் இழுத்துக் கொண்டு ஓடவேணும் தயாராக இரு என்று எழும்பி நின்றால் முன்னே உள்ளவர்கள் இறங்கினால் தானே நாங்களும் இறங்கலாம்.இப்ப பார்த்து எமக்காக எல்லோரும் மெதுவாக இறங்குவது போல இருந்தது.இதிலேயே அரைமணி நேரம் ஓடிவிட்டது.சரி முயற்சி செய்து பார்ப்போம் என்று பாக்கையும் இழுத்துக் கொண்டு ஓட்டம் தான்.அடுத்த கதவுக்கு போவதற்கு இடையில் செக்கிங் வேற.அதையும் முடித்துக் கொண்டு அடுத்த கதவுக்கு கிட்ட போக ஒருவர் கொழும்பு கொழும்பு என்று ஓடிவாறார்.களைப்பில கதையும் வருதில்லை யேஸ் யேஸ் என்றதும் தானும் ஒரு பாக்கை வாங்கி தயாராக நின்ற பஸ்சில் ஏற்றிவிட்டார்.நாங்களும் போய் எறினதும் விமானம் புறப்பட்டுவிட்டது.இப்ப அடுத்த யோசனை நாங்கள் போய்ச் சேர எமது பொதிகள் வந்து சேருமா?

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

(இப்போதைக்கு எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம்)

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

suvy

  • Advanced Member
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்போ ஊர் வந்து சுற்று சுற்றி போயாச்சு போல இன்னும் வரட்டும் பந்திகள் அதை வாசித்து நிறையட்டும் பக்கங்களும் மனசுகளும்👈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

எந்த நிறுவனங்களிலும் வீடுகளிலும் 'ரிசல்ட் ஓரியன்டன்ட்' (Result Oriented) நபர்களைதான் ஊக்குவித்து விட்டுவைத்திருப்பார்கள்.. ! 😃

 

இங்கே முடிவுகள்தான் வெளியே தெரியவில்லை..! 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

இப்பவே சொல்லிப்புட்டேன்..!

பாதி தொடர் எழுதிக்கொண்டிருக்கும்போதே,

  • பேரன் விளையாடக் கூப்பிட்டான்,
  • பேத்தி விளையாடக் கூப்பிட்டாள்,
  • மனிசி குசினிக்குள் மசால் வடை சுட கூப்பிட்டாங்க.. 

என ஓடிவிடக் கூடாது..

என்னையா குளிர் நேரத்தில் கராச்சுக்குள் படுக்கப்பண்ணுற எண்ணம் போல.

 

11 hours ago, suvy said:

நானும் கத்துக்குட்டிதான்,இதுக்குள்தான் அதுவும் நீங்கள் எல்லாம் தாங்கிப் பிடிப்பீர்கள் என்ற தெம்பில்தான் குதிரை ஓடுறன், யோசிக்காமல் எழுதுங்கோ.....வன்னியர் சொன்னதுபோல் பாதியில் மட்டும் விட  வேண்டாம்......!   😁

சுவி வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் கஸ்டநஸ்டங்கள் உங்களுக்குத் தெரியாததா?

11 hours ago, தமிழினி said:

அந்த 7 (ச்சா..  70)  நாட்களுக்காய் காத்திருக்கின்றோம். தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா!

எழுதவும் வேண்டுமல்லவா?அதுவும் ஒத்தை விரலால.

7 hours ago, ரதி said:

தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா 😃

இயலுமானவரை முயற்சி செய்கிறேன்.வேலைவெட்டியை விட்டுவிட்டு வந்து நிற்பதே பேரனை பார்க்கவென்று.இப்போ மனைவியோடு சேர்ந்து மகளும் பார்க்கிறாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள்.....ஈழப்பிரியன்...!

ஆபீசில் இருந்து படிக்காமல் வீட்டில் போயிருந்து படிச்சு பாருங்கோ அருமை தெரியும்.

5 hours ago, குமாரசாமி said:

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

எரிச்சல் எரிச்சல் எரிச்சல்.

4 hours ago, Nathamuni said:

suvy

  • Advanced Member

65-70 இல்த் தான் திருமணமே செய்யுறாங்கள்.நீங்க வேறை.

3 hours ago, நிலாமதி said:

தொடருங்கள் ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன் 

 

3 hours ago, Kavallur Kanmani said:

தொடருங்கள் ஈழப்பிரியன்.

இருவருக்கும் பேரப்பிள்ளைகளின் பிரச்சனையை சொல்லி விளக்கத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓ அப்போ ஊர் வந்து சுற்று சுற்றி போயாச்சு போல இன்னும் வரட்டும் பந்திகள் அதை வாசித்து நிறையட்டும் பக்கங்களும் மனசுகளும்👈

உங்களைப் பற்றியும் வரும் காத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

-------                                    இந்தப் பயணம் சரியாக 70 நாட்கள் திட்டமிட்டு எதிகாட்விமானத்தில் போய் வருவதற்கு விமான சீட்டும் இணைய மூலமாக எடுத்தாகிவிட்டது.இனி பெட்டி படுக்கைகள் என்று வீட்டில் ஒரு அறையே ஒதுக்கியாச்சு.யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்று எழுத்து வழக்கு கணக்கெல்லாம் மனைவியின் வேலை.

ஊருக்குப் போகும் போது.... அங்குள்ள சொந்தங்களுக்கு, என்ன  பரிசுப்  பொருட்கள் வாங்கலாம் என்பது மிகவும் கடினமான வேலை. நாங்கள் மினக்கெட்டு  தேடி... வாங்கி, அதனைக்  காவிக் கொண்டு போய்... கொடுக்கும்  போது... அது,  அவர்களுக்கு அவசியம் அற்றதாக இருக்கும் நிலையில்.... மிகவும் மனக்  கஷ்டமாக இருக்கும்.

ஈழப் பிரியன் ஆரம்பமே.. நன்றாக உள்ளது. வாசிக்க ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                             ஏற்கனவே வான் வைத்து ஓடுபவர் ஒருவரிடம் எனது வருகையைப் பற்றி சொல்லி எனது போன் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தேன்.வீட்டில் கொண்டு போய்விட ஏசி இல்லாமல் 14000 ரூபா.ஏசி போட்டா 16000 ரூபா என்று கட்டணமும் கூறியிருந்தார்.நியூயோர்க் விமானநிலையத்திலிருந்து வைபர் மூலம் கதைத்த போது தன்னால் வர முடியால் இருப்தாகவும் தனது நண்பர் நம்பிக்கையானவர் அவர் வருவார் உங்கள் நம்பர் கொடுத்துள்ளேன் என்று அவரின் நம்பரையும் தந்தார்

                                    அமெரிக்காவிலுள்ளவர்களுக்காக இலங்கை தூதுவராலயம் ஒரு சலுகை செய்துள்ளது.ஒரு முறை விசா எடுத்துவிட்டு உடனேயே மல்ரிப்பிள் என்றிக்கு 100 டெலர்கட்டி எடுத்தால் அடுத்த 5 வருடத்துக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் போகலாம் ஒரு தடவை போனால் 6 மாதத்திற்கு நிற்கலாம்.இதை அவுஸ்திரேலியா இங்கிலாந்து கனடா போன்ற நாடுகளிலுள்ளவர்கள் முயற்சி செய்தும் கொடுக்கவில்லை.

                                    கொழும்பு விமானநிலையத்தில் இறங்கி பொதி வந்திருக்குமோ என்ன செய்வது வான்காரன் வேறை வந்து நிற்பானே வீட்டிலுள்ளவர்களுக்கு ஏன் கஸ்டமென்று அவர்களுக்கும் சொல்லவில்லை என்று ஆளையாள் பார்த்து முழிசிக் கொண்டு இமிகிரேசன் தாண்டி பொதி எடுக்கப் போனால் ஆச்சரியம் கடைசியில் போட்டதாலோ என்னவோ எமது பொதி முதலாவதாக வந்திருந்தது.நல்ல சந்தோசம்.50 இறாத்தல் 4 பொதியை போட்டு தள்ளிக் கொண்டுவந்து உள்ளுக்கு நின்றே வான்சாரதியுடன் குறுந் தகவலில் வந்துவிட்டோம் உங்கள் வானின் இலக்க தகடை அனுப்புமாறி சொல்லி வெளியில் போக ஏதோ பக்கத்தில் நின்றவர் மாதிரி உடனேயே வந்துவிட்டார்.

                                     ஆளைப்பார்க்க நல்ல வாட்டசாட்டமாக இளந்தாரியாக இருந்தார்.அவராகவே பொதிகளெல்லாம் எடுத்து வைத்து உதவி செய்தார்.நேரம் காலை 4 மணிதான்.ஊர் பத்திரிகைகளில் எயர்போட்டுக்கு வாறபோற வாகனங்கள் அடிக்கடி அடிபடுவதாக செய்திகள் வாறபடியால் முன்னுக்கிருந்து கதைத்துக் கொண்டு போவோம் என்று முன்சீற்றிலே இருந்தேன்.எனக்கும் நித்திரை வராது.அவர்ஆள் இளந்தாரியாக இருந்தாலும் மிகவும் அவதானமாக ஆறுதலாக ஓட்டினார்.சில நேரங்களில் இன்னும் கொஞ்சம் விரைவாக ஓடலாமே என்று சொல்ல வேண்டும் போல இருக்கும்.காலைச் சாப்பாடு அனுராதபுரத்திலுள்ள(வெளிநாட்டுப பாணி) ஒரு பேக்கரியில் நல்ல இடம் பாதுகாப்பு சுத்தம் என்று அங்கேயே சாப்பிட்டோம்.காசும் பெரிதாக ஒன்றுமில்லை.நான் எப்போதுமே யாருக்காவது அன்பளிப்பு கொடுப்பதென்றால் முதலேயே கொடுத்துவிடுவேன்.இவருக்கும் சிறுதொகை பணத்தை கொடுத்தேன்.

                                        இலங்கையை எப்படி சுற்றலாம் எத்தனை நாளாகும் என்று அவருடன் கதைத்த போது ஓரளவு புரிந்து கொண்டேன்.இடையிடையே நடந்த யுத்தம் தற்போதய நிலை என்று நிறையவே சொன்னார்.ஓரளவுக்கு நாம் அறிந்தவைகள் என்றாலும் சிலவற்றைக் கேட்க சங்கடமாக இருந்தது.முருகண்டி பிள்ளையாரை பார்த்தா கொஞ்சம் வெளிக்கிட்டு நிக்கிறமாதிரி இருந்தது.பிள்ளையாரையும் கும்பிட்டு கொஞ்ச கடலையும் வாங்கி கொறித்துக் கொண்டு வீடு போய் சேர 12.30 மத்தியானம்.

                                       எனக்கென்று அண்ணன் ஒருவரே.அவரும் சிட்னியில்.அப்பா அம்மா முதலே இறந்துவிட்டார்கள்.எமது வீட்டில் உறவினர் ஒருவரை இருத்தியிருந்தோம்.இப்போது மனைவி வீட்டில் தான் போய் இறங்கினோம்.திடீர் என்று கண்டதும் அவர்களுக்கு ஒரே ஆச்சரியமும் சந்தோசமும்.குசலம் விசாரிப்பது தொடங்கி ஊர் நடப்பு அதுஇதென்று நீண்ட நேரம் பின்னர் சாப்பிட்டுவிட்டு எனது வீட்டுப் பக்கம் போய் பார்த்து பொழுதுபட நித்திரை வெறியாகிவிட்டது.வேளைக்கே படுத்துவிட்டேன்.

                                       காலையில் எழும்பினால் எவரும் எழும்பிய மாதிரி தெரியவில்லை.இன்னும் முற்றாக விடியவில்லை எப்படி வெளியே போவது?கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருவராக எழும்பினார்கள்.முதல் நாள் பிற்பகல் மாட்டை மேச்சலால் கொண்டுவந்து கட்டினார்கள்.அந்த ஞாபகம் வர மாடு எங்கை வயலுக்கையா கட்டுறநீங்கள் என்று கேட்டு ஒரு வேப்பங்கொப்பில் தடிமுறித்து சப்பிக் கொண்டு சின்ன துவாயையும் தோளில் போட்டுக் கொண்டு மாட்டுக்கு கொஞ்ச தண்ணீரும் வைத்து வயலுக்குள் கட்டிவிட்டு வரலாம் என்று மாட்டை அவிழ்துக் கொண்டு கொஞ்ச தூரம் போக பெறாமகன் கத்திக் கொண்டு வாறான்.என்னடா என்றால் இப்ப ஒருவரும் சேட்டில்லாமல் திரியிறேல்லை சேட்டை போட்டுக் கொண்டு போங்கோ என்று சேட்டைத் தந்தான்.ஊருக்குள் திரியும் போது சேட்டுடன் திரிவது குறைவு.இப்போ சேட்டே இல்லாமல் வெளிய போகேலாதா?ஓரிரு நாட்கள் போனபின் தான் கூலி வேலை மேசன் சீவல் தொழிலாளி எல்லோருமே பெனியனோ சேட்டோ போட்டிருக்கிறார்கள்.மாட்டுடன் வயலுக்கு போனால் முன்னர் பச்சைப்பசேலென்றிருந்த வயல் வெளி இப்போ காய்ந்து கருவாடாக கிடக்கிறது.பழைய தோட்டம் செய்த ஞாபகம் பார்க்க பார்க்க மிகவும் கஸ்டமாக இருந்தது.கிணற்றை சுற்றி தென்னைகள் ஒரே முள்ளுகள் தட்டித் தட்டி கிணற்றங்கட்டிலிருந்து யோசிக்க போன ஆளைக் காணல்லையே என்று தேடிவாறங்கள்.

தொடரும்.

46 minutes ago, தமிழ் சிறி said:

ஊருக்குப் போகும் போது.... அங்குள்ள சொந்தங்களுக்கு, என்ன  பரிசுப்  பொருட்கள் வாங்கலாம் என்பது மிகவும் கடினமான வேலை. நாங்கள் மினக்கெட்டு  தேடி... வாங்கி, அதனைக்  காவிக் கொண்டு போய்... கொடுக்கும்  போது... அது,  அவர்களுக்கு அவசியம் அற்றதாக இருக்கும் நிலையில்.... மிகவும் மனக்  கஷ்டமாக இருக்கும்.

ஈழப் பிரியன் ஆரம்பமே.. நன்றாக உள்ளது. வாசிக்க ஆவலாக உள்ளோம்.

சிறி ஒரு சின்ன உதாரணம் இரவில் கறன்ற் இல்லை என்றால் தற்காலிகமாக பாவிக்க சிறிய ரியூப் லைற் மாதிரி வாங்கிக் கொண்டு போனால் அங்கே அதே மாதிரி பெரிய லைற் வைத்திருக்கிறார்கள்.பெரிய வெக்கக்கேடு.

Link to comment
Share on other sites

37 minutes ago, ஈழப்பிரியன் said:

                              

                                  வேப்பங்கொப்பில் தடிமுறித்து சப்பிக் கொண்டு சின்ன துவாயையும் தோளில் போட்டுக் கொண்டு மாட்டுக்கு கொஞ்ச தண்ணீரும் வைத்து வயலுக்குள் கட்டிவிட்டு வரலாம் என்று மாட்டை அவிழ்துக் கொண்டு கொஞ்ச தூரம் போக பெறாமகன் கத்திக் கொண்டு வாறான்.

மாட்டுடன் வயலுக்கு போனால் முன்னர் பச்சைப்பசேலென்றிருந்த வயல் வெளி இப்போ காய்ந்து கருவாடாக கிடக்கிறது.பழைய தோட்டம் செய்த ஞாபகம் பார்க்க பார்க்க மிகவும் கஸ்டமாக இருந்தது.கிணற்றை சுற்றி தென்னைகள் ஒரே முள்ளுகள் 

பசுமையான தாயகப் பயண அனுபவங்களைத் தொடருங்கள், ஈழப்பிரியன் அண்ணா. நாமும் இணைந்திருக்கிறோம். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரஸ்யமாக செல்கிறது தொடருங்கள்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

.1)சரி முயற்சி செய்து பார்ப்போம் என்று பாக்கையும் இழுத்துக் கொண்டு ஓட்டம் தான்.அடுத்த கதவுக்கு போவதற்கு இடையில் செக்கிங் வேற.அதையும் முடித்துக் கொண்டு

.2)இப்ப அடுத்த யோசனை நாங்கள் போய்ச் சேர எமது பொதிகள் வந்து சேருமா?

தொடரும்.

நான் நினைச்சன் எனக்கு மட்டும்தான் உந்த வியாதி இருக்கு என்று ....இது ஒரு சர்வேதே வியாதி ....நிம்மதியாக இருக்கு....

ஈழப்பிரியன் தொடருங்கள் ....வாசிக்க ஆவலாக காத்திருக்கிறோம்....எழுத்து மண்புழு பட்ம் எடுத்த மாதிரி தெரியவில்லை ...பாம்பு படமெடுத்த மாதிரி இருக்கு

Link to comment
Share on other sites

எனது பயணத்தில் ஒருமுறை ஒரு சிறு பயணப்பொதியை முதல் விமானத்தில் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். மற்றய பொதிகள் எல்லாம் வந்தும் இதற்காக மட்டும் மீண்டும் விமான நிலையம் போக வேண்டியதாய்ப் போச்சு. அதிலிருந்து எனக்கும் இதே பயம் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மல்லிகை வாசம் said:

பசுமையான தாயகப் பயண அனுபவங்களைத் தொடருங்கள், ஈழப்பிரியன் அண்ணா. நாமும் இணைந்திருக்கிறோம். 😊

தொடங்கியாச்சு இப்ப சேடம் இழுக்குது.

 

7 hours ago, suvy said:

சுவாரஸ்யமாக செல்கிறது தொடருங்கள்.....!   😁

சுவி நீண்டகாலமாக வாசிப்பில்லாதபடியால் உங்களை மாதிரி சோறுகறி சேர்த்து சாப்பிடுவது போல முடியவில்லை.

7 hours ago, putthan said:

நான் நினைச்சன் எனக்கு மட்டும்தான் உந்த வியாதி இருக்கு என்று ....இது ஒரு சர்வேதே வியாதி ....நிம்மதியாக இருக்கு....

ஈழப்பிரியன் தொடருங்கள் ....வாசிக்க ஆவலாக காத்திருக்கிறோம்....எழுத்து மண்புழு பட்ம் எடுத்த மாதிரி தெரியவில்லை ...பாம்பு படமெடுத்த மாதிரி இருக்கு

புத்து இணையத்தில் கொஞ்சம் மலிவு என்று விமானச் சீட்டுக்கள் வாங்க போனால் இடைத்தங்கல் நீண்டநேரம் வரும் இல்லாவிட்டால் குறுகிய நேரம் வரும்.

கொஞ்ச லாபத்துக்காக கயிற்றில் நடக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

எனது பயணத்தில் ஒருமுறை ஒரு சிறு பயணப்பொதியை முதல் விமானத்தில் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். மற்றய பொதிகள் எல்லாம் வந்தும் இதற்காக மட்டும் மீண்டும் விமான நிலையம் போக வேண்டியதாய்ப் போச்சு. அதிலிருந்து எனக்கும் இதே பயம் உண்டு. 

பிள்ளைகள் வரும்போது இதே பிரச்சனை வந்தது.பின்னர் விபரமாக எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                    மேலே உள்ளது தான் எனது வீடு.நீண்டகாலமாக நெருங்கிய உறவினர் இருக்கிறார்கள்.அவர்களது வீடு நீண்டகாலத்தின் பின் திருத்தவேலை செய்ய தொடங்கியிருந்தனர்.அவர்கள் வீட்டுவேலை முடிந்துவிடும் என்பதால் எனது வீட்டையும் திருத்தலாம் என்றே 70 நாட்கள் போயிருந்தோம்.இப்போது நாங்கள் வெளிக்கிடும் வரையிலும் அவரின் வீடு திருத்தி முடியவில்லை.

                                   1995 இல் இடப் பெயர்வின்போது நடைபெற்ற சண்டையில் சாமியறைப் பக்கம் செல் விழுந்து சேதமாகி ஓடுகள் உள்ளே இருந்த சீற்றுகள் நிறைய இடங்களில் சன்னங்கள் பட்டு பல காயங்கள்.மீண்டும் அவரவர் ஊர் திரும்பிய போது தற்காலிகமாக திருத்தம் செய்யப்பட்டிருந்தது.இன்னமும் அப்படியே இருக்கிறது.இந்த கோடைக்கு போகலாம் என்றிருக்க மகன் ஆனியில் இரண்டாவது குழந்தை கிடைக்கப் போகுதென்றான்.சரி அப்ப இந்த வருடமும் வீடு திருத்துப்படாது.இப்ப வெளிக்கிடும் போதும் இது தான் கடைசி றிப் பிள்ளை பிறந்து எல்லாம் முடிந்த பின் எங்காவது வெளிக்கிடலாம் என்று சட்டம் வேறு சொல்லிவிட்டான்.

                                  சரி இத்தனை நாள் வந்தாச்சு வளவை என்றாலும் துப்பரவாக்குவோம் என்று ஒவ்வொருநாளும் வேலை.போன உடனேயே பெரிய இரும்பு கரியர் உள்ள சைக்கிள் ஓடுவாரற்றுக்கிடந்ததை எண்ணைதண்ணி பூசி அதில் தான் பயணம்.தூர எங்காவதென்றால் மோட்டார் சைக்கிள்.அங்கே போய் ஓடுவதற்காகவே மினக்கெட்டு மோட்டார் சைக்கிள் ஓட அனுமதிப் பத்திரம் பின்பு அதை 15 டொலர் கொடுத்து இன்ரநசினலாக்கி கொண்டு போனபடியால் பயப்படாமல் யாரின் உதவியும் இன்றி எல்லா இடமும் போக முடிந்தது.மனைவியின் வீடு நான்கு பக்கமும் மதிலென்றபடியால் விறகுக்கு கொஞ்சம் பஞ்சம்.காஸ் அடுப்பு இருந்தாலும் விறகடுப்பும் எரிந்து கொண்டிருக்கும்.ஆனபடியால் எனது வீட்டிலிருந்து வேலை முடிந்து போகும்போது சைக்கிளில் நிறைய விறகு கட்டிக் கொண்டு மனைவியையும் முன்னுக்கு ஏத்திக் கொண்டு போவோம்.அந்த நேரம் இளைப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு சந்தோசம்.ஒரு முறை இப்படி வரும் போது எனது ஒன்றுவிட்ட அண்ணன் மறித்து அட கோதாரிவிழுவாரே இந்த வெய்யில் எங்களாலேயே தாங்க முடியாமல் இருக்கிறது.உண்மையைச் சொல்லுங்கோடா சவுதியில் இருந்து வந்தநீங்களோ இல்லை அமெரிக்காதானோ என்று பேசிவிட்டுப் போனார்.இதை பலரும் சொல்லி குறைபட்டனர்.ஆனால் எமக்கு கஸ்டமாக இருந்தாலும் சந்தோசமாகவும் உடம்புக்கு இதமாகவும் இருந்தது.

                                              இங்கிருக்கும் போது ஒவ்வொருநாளும் ஓட்கஞ்சி(22 வருடமாக).அங்கு பசியோ பசி.மச்சாளே கேட்பாள் சாப்பிடுறதைப் பார்த்தா அகதி முகாமிலிருந்து வந்த மாதிரி இருக்கென்று.மாமி பேச்சுவிழும் எவ்வளவு காலத்துக்கு பின் வந்திருக்கினம் சாப்பிட விடடி நீஅங்கால போ நான் போட்டுக் கொடுக்கிறேன் என்பா.அத்தோடு மாம்பழம் வாழைப்பழம் பிலாப்பழம் என்று வேறை.பிலாப்பழம் எமது வீட்டிலேயே நல்ல சுவையான மரம் நிற்கிறது.ஒருநாள் வீட்டுவேலையாக இருந்த போது பிலாப்பழம் காகம் கொத்துது என்றார்கள்.வீட்டிலிருந்தவர்களிடம் சின்ன கத்தியும் வாங்கிக கொண்டு பிலாபபழம் வெட்ட வெளிக்கிட்டாச்சு.அப்பவும் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவா நான் தான் அங்கால இரண்டு மூன்று பொம்பிளைகளும் நிக்கினம் என்று சுதி காட்ட வெளிக்கிட்டு ஒரு 10 அடி ஏறல்லை பிலாப்பழத்துக்கு பதிலாக நான் தொப்பென்று விழுந்துகிடக்கிறேன்.நல்ல வேளை நிறைய தென்னம்பாளைகள் அடுக்கி வைத்திருந்தது.அதற்கு மேல் தான் விழுந்தது.விழுந்த என்னை தூக்கிவிடுவம் என்றில்லை மனைவியும் அவர்களுடன் சேர்ந்து சிரிசிரி என்று சிரித்துக் கொண்டிருக்கிறா.பெரிய வெட்கமாகிப் போட்டுது.இன்னும் இந்த சரத்தைக் கட்டியிருக்க வேண்டுமா என்றிருந்து.ஒரு காலத்தில் அணில் மாதிரி மரங்களில் ஏறித்திரிந்த நினைப்பு வினையாக போயிருந்திருக்கும்.

                                                  வீட்டுவேலைகள் வேலியடைப்புகள் முடிய கொஞ்சம் தூரமுள்ள உறவினர்கள் வீடுகள் என்று உலாத்து.சுவியர் மாதிரி கோவில்குளம் என்றுஒன்றும் அலையவில்லை.நல்லூருக்கு மாத்திரம் திருவிழா தொடங்க முதல் உள்ளுக்கு போக வேண்டுமென்பதற்காக போனேன்.பழைய கோவில் ஒரு பயபக்தி இருந்தது.இப்போ பெரியதேசம் பழைய உணர்வு வரவில்லை.இப்படியே நாள்போக நல்லூர் திருவிழாவும் தொடங்கிவிட்டது.ஒவ்வொருநாளும் சரியாக 5.45 போல சைக்கிளில் வெளிக்கிட்டால் 10 நிமிடத்தில் சைக்கிள் தரிப்பில் சைக்கிளை விட்டுவிட்டு நடந்து போக சரியாக 6 மணிக்கு சாமி வெளியே வரும்.7-7.30க்கு வீட்டுக்கு வந்துவிடுவோம்.சைக்கிள் ஓடும் போது என்னப்பா மூச்சுவாங்கிற மாதிரி இருக்கு நான் இறங்கி கொஞ்ச தூரம் நடக்கட்டோ என்பா.சீ சீ அப்படி ஒன்றுமில்லை தொடக்கத்தில் சும்மா இருந்த இதயம் கொஞ்சம் வேகமாக வேலை செய்யேக்கை அப்படித் தான் சத்தம் வரும் ஆனால் நான் ஓகோ.சொன்னா கேக்கவா போறியள்.மனைவி என்றாலும் கொஞ்சம் குறைத்து சொல்லவிடலாமோ?

                                        வான்காரனுடன் பேசி நேரே விமானநிலையம் போய் அங்கிருந்து இலங்கையைச் சுற்றிவர என்று ஒரு அட்டவணை தயாரித்து மகளுக்கு அனுப்பியிருந்தேன்.அவவும் காலி கதிர்காமம் நுவரெலியா திருகோணமலை யாழ்ப்பாணம் அடுத்தநாள் நல்லூர் தேருக்கு கட்டாயம் இங்கே நிற்க வேண்டும் என்று திட்டம் போட்டு எயர்பிஎன்பியில் வீடுகளும் ஒழுங்கு செய்து போட்டா.நான் மட்டக்களப்பும் போட்டிருந்தேன்.ஆனால் அவவோ நுவரெலியாவில் இரண்டு நாட்கள் போட்டு மட்டக்களப்பை தவிர்த்து விட்டா.அவ அனுப்பிய அட்டவணையைப் பார்த்ததும் யாழ் தனிக்காட்டுராசாவை பார்க்க முடியாதே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.அதற்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

                                       சுற்றுலா நாள் வந்ததும் சிங்கப்பூர் விமானம் இரவு 12 மணிக்கு வாறதால் இங்கிருந்து 3-4 மணிக்கு வெளிக்கிட்டால் சரி என்று வான் சாரதியின் எண்ணப்படியே மனைவியின் அக்கா தங்கை பிள்ளைகள் அம்மா என்று வெளிக்கிட்டாச்சு.இப்போ பிள்ளைகள் கொண்டுவரும் பொதிகளை எப்படியாவது வேறு வானில் கொடுத்தனுப்ப சாரதியும் முயற்சி செய்து கடைசிவரை முடியாமல் போய்விட்டது.அவருக்கும் பெரிய கவலையாக போய்விட்டது.வானிலேயே எல்லா இடமும் கொண்டு திரிவதானால் பின்சீற் இரண்டும் மடிக்க வேண்டும்.இனி ஒன்றும் செய்ய முடியாது கொழும்பிலுள்ள எனது உறவினருக்கு விபரம் சொல்லி அவரின் வீட்டில் பொதிகளைப் போட்டுவிட்டு தொடர்ந்து பயணிப்பதாக திட்டம்.

                                       இரவு 11 மணிபோல விமானநிலையம் வந்ததும் சாரதியை பிள்ளைகள் வரும்வரை தூங்க சொன்னேன்.அவரும் விடியவிடிய காலிக்கு ஓடவேண்டுமே.நேரம் போகப்போக 2மணிக்கு கிட்டவாச்சு.12 மணி போல வந்துவிட்டோம் என்று குறந்தகவல் வந்தது.அதன் பின் நீண்ட நேரம் சென்றபின் 
       “ ஓஓஓ வீ காவ் பிரபிளம்”
என்று ஒரு குறுந்தகவல் வந்தது.

தொடரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.