Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kavallur Kanmani said:

ஈழப் பிரியன் நினைத்ததுபோல்  இதற்கெண்டாலும் பதில் எழுதாமல் நித்திரை வராதாம். வேறென்ன அங்க இருக்கும் அந்த அட்டை யாரையோ பதம் பார்த்திருக்கிறது என் நினைக்கிறேன். அங்குள்ள அட்டை கடித்தால் இரத்தத்தை உறிஞ்சி விடும். புங்கையின் ரென்சன் குறைந்து விட்டதா. பயணத் தொடர் மிக அருமையாக செல்கிறது. தொடருங்கள்.

மர்மமாக வைத்திருக்க விடமாட்டியளே.

சரி யாருக்கு கடித்ததென இன்னும் ஒருவருக்கும் தெரியாது தானே?

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி சும்மா ஒரு தூண்டிலைப் போட மீன் தானா வந்து கொழுவிட்டுது......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

சகோதரி சும்மா ஒரு தூண்டிலைப் போட மீன் தானா வந்து கொழுவிட்டுது......!  😁

அடுத்தவர் மாட்டுப்படுகிறார் என்றால் எவ்வளவு சந்தோசம்.
ஆகா ஆகா நல்லா இருங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

ஈழப்பிரியன்.. ஒரு கலை ரசனையுடன்... காகம் கொத்திய பலாப்பழ பட  இணைப்பிற்கு நன்றி. 
அந்தப் படத்தைப்  பார்க்க, ஒரு சிமைலி  முகம் போல் உள்ளது. மிக ரசித்தேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                      வானுக்குள் இருந்து அவலக்குரல் வருகிறதே தவிர என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை.இதில் பின்னுக்கிருந்து கூக்குரலிட்ட பலருக்குமே தெரியாது.தாய் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று ஒரே இரத்தமல்லவா ஒன்று கத்த எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்துவிட்டார்கள் என்ன ரத்தபாசம்.கடைத்தெருவென்றபடியால் வானால ஆக்கள் இறங்க முதலே வெளியாட்கள் ஒவ்வொன்றாக கூடிவிட்டனர்.அட்டை அட்டை என்று கொண்டு ஆளையாள் இடித்துத் தள்ளிக் கொண்டு இறங்கினார்கள்.அட்டை எப்படி வந்தது யாருக்கு கடித்ததென்றே தெரியாது.

                                     வேடிக்கை பார்க்க வந்த ஒருவர் இந்த அம்மாவுக்கு தான் இரத்தம் வருகுது இவவுக்கு தான் கடித்து போட்டுது என்று எனது மனைவியைக் காட்டியதும் ஓய்ந்து போயிருந்த அவலக்குரல் மீண்டும்.இன்னொருவர் அட்டை ரத்தமெல்லாம் குடிச்சு முடிச்சிட்டுது என்றதும் அழுகையின் சத்தம் இன்னும் கூடுது.எமக்கு அட்டையின் அனுபவமோ முன்னர் பின்னர் பார்த்ததோ இல்லை.அதிலே நின்றவர்கள் தான் இரத்தம் குடிக்கமுதல் சின்னூன்டாக இருக்கும்.இது குடிச்சு முடிச்சிட்டுது இனி பிரச்சனையே இல்லை என்றார்கள்.வடிந்த இரத்மெல்லாம் கழுவி பயணம் தொடர்ந்தாலும் நீண்ட தூரம் போகும் வரை ஆளையாள் பார்க்கிறதும் அட்டை ஏதாவது வந்திட்டுதா என்று கால்களைப் பார்ப்பதிலுமே இருந்தார்கள்.

                                  இதற்கிடையில் கிடைத்த நேரத்தை அட்டை எப்போது ஏறியிருக்கும் என்று எடுத்த படங்களை மருமகன் தேடிப் பார்த்தா பங்களா வாசலில் எல்லோரும் நின்று படம் எடுத்த போது எனது மனைவியின் காலில் அட்டை தெரிகிறது.நீங்களும் அந்த அட்டையைப் பார்க்கலாம்.

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

                                   நேராக கண்டி போய் நகரத்தை சுற்றிப் பார்த்து தலதாமாளிகைக்கும் போனோம்.அங்கு ஒருவருக்கும் பெரிதாக மனதைக் கவரவில்லை.மதியம் சாப்பிட்டுவிட்டு சிகிரியா நோக்கி புறப்பட்டோம்.பொழுதுபடும் போது போய்ச் சேர்ந்தோம்.ஏற்கனவே ஒழுங்கு செய்த விலாசத்துக்கு  (அவ்வளவு பெரிய வசதி இல்லாவிட்டாலும் புதியது)போனால் ஒரு சிங்கள பெண்மணி கணவன் பொலிஸ் என்றும் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்று சொன்னார்.

                                   ஒரு அரைமணி நேரத்தில் வீட்டுக்காரரும் வந்திருந்தார்.எந்த இடம் என்று சுகம் விசாரித்தார்.கோப்பாய் என்றதும் ஓ நானும் கோப்பாய் போலிசில் வேலை செய்தனான் என்றார்.அப்போது மனைவியின் தங்கச்சி முன்னுக்கு வந்து என்னைத் தெரியுதோ என்றா.என்னடா என்று எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தா கெல்மட் வைத்துக் கொண்டு போடாமல் போனதற்கு 500ரூபா தண்டம் விதித்திருக்கிறார்.காசு கொஞ்சம் தாறன் என்று சொல்லியும் தண்டம் அறவிட்டுவிட்டீரே என்றா.ஓ அப்படியா சிலவேளை யாரும் சிக்கலான ஆட்கள் நின்றிருப்பார்கள் இல்லாவிட்டால் விட்டிருப்பேன் என்றார்.தம்பி நல்லா உழைத்துக் கொண்டு நல்ல இடத்தில் இடமாற்றம் பெற்று பணங்களையும் வீணடிக்காமல் நல்லதொரு முதலீடாக்கியுள்ளார்.எல்லோரும் வேளைக்கு படுத்து வேளைக்கே சிகிரியா போவதற்காக படுத்துவிட்டோம்.

5-E667863-74-B6-42-C8-B320-0899-AB1217-D

                                   காலையில் எழுந்து மாமியாரை சாரதியுடன் விட்டுவிட்டு நாங்கள் சிகிரியா பார்க்க சென்றோம்.பக்கத்திலே தான் நடந்தே போகலாம்.உள்நாட்டவருக்கு 100 ரூபாவும் வெளிநாட்வருக்கு 4000ரூபாவும் அறவிடுகிறார்கள்.கீழே இருந்து பார்க்க சிறிய தூரம் மாதிரி தெரிந்தது.மேலே ஏறஏற சில இடங்கள் மிகவும் பயங்கரமாக இருந்தது.எத்தனையோ பேர் இடையிடையே நின்று பயந்து குளந்தைகள் போல அழுகிறார்கள்.மேலே போகப்போக கருங்குளவி பெரிய பெரிய கூடுகள்.ஒன்றிரண்டு ஆங்காங்கே பறந்தாலும் அனேகமானவை அமைதியாக இருந்தது.சத்தம் செய்பவர்களை காசுக்கு ஆட்களை கூட்டி வருபவர்கள் சத்தம் போட வேண்டாம் என்று குளவிக் கூட்டை காட்டுகிறார்கள்.அனுபவம் போலும்.ஆங்காங்கே எச்சரிக்கை பலகை மும்மொழிகளிலும் போடப்பட்டிருந்தது.அனைவருமே ரசித்து பார்த்தோம்.இதற்கு முதல் பார்க்கவில்லை என்பதால் எல்லோரும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள்.

                                              அடுத்து திருகோணமலை நோக்கி போக வேண்டும்.இடையில் மின்னேரியாவில் யானைகள் பார்க்க போக வேண்டுமென்றார்கள்.மின்னேரியா போக வழி நெடுகிலும் சேறுசகதிக்குள் ஓடக் கூடிய வாகனங்களுடன் ஆக்களைக் கூட்டிக் கொண்டுபோக தயாராக நிற்கிறார்கள்.5-6 ரக் நின்ற இடத்தில் விபரங்கள் கேட்டோம் எவருக்கும் தமிழ் தெரியவில்லை.எமக்கு கொஞ்ச கொஞ்ச சிங்களம்.மின்னேரியாவை விட கடுல்லவேவா என்ற இடம் கூடதலான யானைகள் வரும் 3000 ரூபா கூட என்றார்கள்.எல்லோரும் ஒரே ரக்கில் போனோம்.

7070585-D-F792-4-AA5-A3-BC-8-C4-E2957-ED

                                              அந்த ஏரியா உள்நுழையும் போதே ஜெராசீக் பாக்கில் வாறமாதிரி இரண்டு பக்கமும் மின்சார வேலி அமைத்திருக்கிறார்கள்.உள்ளே போவதற்கு பயணச் சீட்டுகளை சாரதியே வாங்கி வந்தார்.சரதாரண வண்டியில் போனால் வண்டி உருப்படியாக வந்து சேராது.ஒரே பள்ளமும் புட்டியும் சேறும் சகதியும்.இடையிடையே யானைக் கூட்டங்கள் வந்தாலும் கூடுதலான யானை வாவிக்கருகில் தண்ணீர் குடிக்க வரும் என்றார்.எல்லோருமே அந்த இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தனர்.
 
                                          வாவி அருகே போனதும் இறங்கி ஆங்காங்கே வரும் யானைகளைப் பார்த்துக் கொண்டிருக்க கூட்டம் கூட்டமாக யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக வாவியை நோக்கி வரத் தொடங்கியது.குறைந்தது 100 யானைகளாவது இருக்கும்.மிக அருகிலிருந்து பார்க்க எவ்வளவோ சந்தோசமாக இருந்தது.ஏதாவது பிரச்சனை என்றால் ஓட வேண்டி வரும் ஒருவருமே இறங்க வேண்டாம் என்று சாரதி சொன்னார். 

127002-AC-27-AF-494-E-9779-2-EA66-D1-C1-

                                        நீண்டநேரம் சென்றபின் சாரதி சொன்னது போல எமக்கு எதிரே நின்ற ரக்குக்கு ஒரு யானை ஓடிவந்து முட்டியது.பின்னால் நின்ற யானைகளும் அந்த வாகனத்தை நோக்கி நகர எல்லோருமே (20-25 ரக்குகள்) எடுத்துக் கொண்டோடத்க தொடங்கிவிட்டனர்.நாங்களும் வெளியே வரும் போது பார்த்தா உள்ளே போவதற்காக மிக நீண்ட வரிசை.இவர்களில் அரைவாசிப் பேருக்கு மேல் உள்ளேவிட மாட்டார்களென்று சாரதி சொன்னார்.திரும்பவும் பழைய இடத்துக்கு வந்து திரகோணமலை நோக்கி புறப்பட்டோம்.

கண்டம் ஒன்று காத்திருந்தது.
நீங்களும் காத்திருங்கள்.

16 minutes ago, தமிழ் சிறி said:

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

ஈழப்பிரியன்.. ஒரு கலை ரசனையுடன்... காகம் கொத்திய பலாப்பழ பட  இணைப்பிற்கு நன்றி. 
அந்தப் படத்தைப்  பார்க்க, ஒரு சிமைலி  முகம் போல் உள்ளது. மிக ரசித்தேன். :)

 

சிறி காகம் கொத்தத் தொடங்கினால் விடாது.மச்சான் வரும் வரை காத்திருந்தால் முழுவதும் கொந்திவிடும் என்றதால் கொஞ்சம் அவசரம்.இந்த பிலாப்பழம் நல்ல சுவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

 

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

யாரப்பா... இந்தப் படத்தை எடுத்தது
கண்டியில்..... பச்சை பசேல் என்று, புல்லு வளரும் என்று எடுத்த படம் மாதிரி இருக்கப்பா....  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆ சிறி இது ஆக்களைப் பாக்கிற படமில்லை அட்டையைப் பார்க்கிற படம்.மனைவியின் காலில் அட்டை.
அதுசரி ஏற்கனவே கண் ஒரு மாதிரி.அதுவும் வெள்ளிக்கிழமை வேறை சொல்லவா வேண்டும்.

36994-E32-D250-4-D9-F-BD8-C-AC870580-B7-

தம்பிக்கு இப்ப சந்தோசமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ சிறி இது ஆக்களைப் பாக்கிற படமில்லை அட்டையைப் பார்க்கிற படம்.மனைவியின் காலில் அட்டை.
அதுசரி ஏற்கனவே கண் ஒரு மாதிரி.அதுவும் வெள்ளிக்கிழமை வேறை சொல்லவா வேண்டும்.

36994-E32-D250-4-D9-F-BD8-C-AC870580-B7-

தம்பிக்கு இப்ப சந்தோசமோ?

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

ஓ.... ஈழப்பிரியன், இப்ப தான்.... அட்டை, காலில் நிற்பதை பார்த்தேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

கொத்தின காகமும் ஒழுங்காய் கொத்தேல்லை....பிலாப்பழம் சரியான குந்து போலை கிடக்கு..😀

Link to comment
Share on other sites

தகவல்களும், படங்களும் அருமை ஈழப்பிரியன் அண்ணா. தொடருங்கள் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2019 at 12:48 PM, putthan said:

ஆனால் அவவோ நுவரெலியாவில் இரண்டு நாட்கள் போட்டு மட்டக்களப்பை தவிர்த்து விட்டா.அவ அனுப்பிய அட்டவணையைப் பார்த்ததும் யாழ் தனிக்காட்டுராசாவை பார்க்க முடியாதே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.அதற்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

 

On 3/14/2019 at 8:20 PM, ஈழப்பிரியன் said:

தனிக்காட்டுராஜாவை தொடர்பு கொள்வதாக சொல்லி அவரது தொல்லைபேசி இலக்கமும் எடுத்து சுற்றுலாவின் போது சின்ன ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம் என்று பல எண்ணங்களுடன் இருந்து கடைசியில் தவறவிட்டுவிட்டேன்.எனக்கு எப்போதுமே சொன்னதைச் செய்யவில்லை என்றால் மிகவும் வருத்தமாக இருக்கும்.அவர் விரும்பினால் என்ன விரும்பாவிட்டாலும் இப்போது சுமையை இறக்கி வைத்த மாதிரி உள்ளது.

இதற்கெல்லாம் எதற்கு  மன்னிப்பு அண்ணே நல்ல சுவாரசியமாக இருக்கிறது எழுதுங்கள் இன்னும் இன்னும் மீண்டும் ஓர் நாள் சந்திப்போம் என்று கூறுகிறேன் 

 

அந்த நீர் வீழ்ச்சியில் குளிப்பது நல்லது ஆனால் சில வேளைகளில் மலையின் உச்சியில் இருந்து சில பாறை துண்டுகள் விழுவது வழமை கவனமாக இருந்திருக்க வேண்டும் யாரும் சொன்னவர்களா ?? எனக்கும் நுவரெலியா பிடிக்கும் ஆனால் அங்கே உழைப்பு சுறண்டப்படுவதால்  பிடிக்காது  ஆனால் நல்ல காலநிலை பூக்களும் பச்சை பசேல் என நிறங்களும் இடங்களும் மனதை கொள்ளை கொள்ளத்தான் செய்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த யானை பழம் கொடுக்கா விட்டால் விடாது போகிற வானை மறித்து மறித்து பழங்கள் வாங்கி கொள்ளும் கொடுக்காவிட்டால் போக விடாது சோம்பேறி யானை மாலை ஆகினால் இன்னும் வந்து சேரும் கதிர்காம பாதையில் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகிரியாவும் காட்டு யானைகளும் சூப்பரான படங்கள்.........!கைவசம் இருக்கும் நல்ல படங்களையும் எடுத்து விடுங்கள் பார்க்கிறோம்......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

.... ஈழப்பிரியன், இப்ப தான்.... அட்டை, காலில் நிற்பதை பார்த்தேன்.  :grin:

சனிக்கிழமை காலையில் பார்க்கத் தான் தெரியுதோ?

16 hours ago, குமாரசாமி said:

கொத்தின காகமும் ஒழுங்காய் கொத்தேல்லை....பிலாப்பழம் சரியான குந்து போலை கிடக்கு..😀

கொந்துது என்ற செய்தி கேட்டு ஓடிப் போய் விழுந்து எழும்பியாச் செல்லோ.

11 hours ago, மல்லிகை வாசம் said:

தகவல்களும், படங்களும் அருமை ஈழப்பிரியன் அண்ணா. தொடருங்கள் 🙂

இன்னும் கொஞ்ச தூரம் இருக்கிறது.கூட வாருங்கள்.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதற்கெல்லாம் எதற்கு  மன்னிப்பு அண்ணே நல்ல சுவாரசியமாக இருக்கிறது எழுதுங்கள் இன்னும் இன்னும் மீண்டும் ஓர் நாள் சந்திப்போம் என்று கூறுகிறேன் 

 

எனக்கு கஸ்டமாக இருந்தது.இப்போ நிறைவாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த நீர் வீழ்ச்சியில் குளிப்பது நல்லது ஆனால் சில வேளைகளில் மலையின் உச்சியில் இருந்து சில பாறை துண்டுகள் விழுவது வழமை கவனமாக இருந்திருக்க வேண்டும் யாரும் சொன்னவர்களா ?? எனக்கும் நுவரெலியா பிடிக்கும் ஆனால் அங்கே உழைப்பு சுறண்டப்படுவதால்  பிடிக்காது  ஆனால் நல்ல காலநிலை பூக்களும் பச்சை பசேல் என நிறங்களும் இடங்களும் மனதை கொள்ளை கொள்ளத்தான் செய்கின்றன. 

இல்லையே.எதேச்சையாக பார்த்தது உடனே இறங்கிவிட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த யானை பழம் கொடுக்கா விட்டால் விடாது போகிற வானை மறித்து மறித்து பழங்கள் வாங்கி கொள்ளும் கொடுக்காவிட்டால் போக விடாது சோம்பேறி யானை மாலை ஆகினால் இன்னும் வந்து சேரும் கதிர்காம பாதையில் 

ஆமா அப்படித் தான் சாரதி சொன்னார்.அவர் பழங்களை வாங்கும் போது இது பற்றி எதுவுமே பேசவில்லை.அதனாலோ என்னவோ எல்லோரும் பயந்து அதிர்ச்சியாகி விட்டோம்.
அத்துடன் யானை அடித்து பலி காயம் என்று அடிக்கடி செய்திகள்.

6 hours ago, suvy said:

சிகிரியாவும் காட்டு யானைகளும் சூப்பரான படங்கள்.........!கைவசம் இருக்கும் நல்ல படங்களையும் எடுத்து விடுங்கள் பார்க்கிறோம்......!   😍

சுவி ஒரு அசட்டுத் துணிவில் தொடங்கியாச்சு.இப்போ ஒரே முழுசாட்டம்.நான் அவ்வளவு படங்களுடன் மினக்கெடுவதில்லை.பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆமா அப்படித் தான் சாரதி சொன்னார்.அவர் பழங்களை வாங்கும் போது இது பற்றி எதுவுமே பேசவில்லை.அதனாலோ என்னவோ எல்லோரும் பயந்து அதிர்ச்சியாகி விட்டோம்.
அத்துடன் யானை அடித்து பலி காயம் என்று அடிக்கடி செய்திகள்.

இந்த யானைகள் அடித்தது இல்லை இது வீதிக்கு வந்து பல வருடம் ஆகிவிட்டது சிலருக்கு அதை முட்ட நினைப்பவர்களை துரத்தி இருக்கு ஆனால் எந்தநேரம் எப்படி இருக்கும் என்பதையும் சொல்ல முடியாது கணிக்கவும் முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த யானைகள் அடித்தது இல்லை இது வீதிக்கு வந்து பல வருடம் ஆகிவிட்டது சிலருக்கு அதை முட்ட நினைப்பவர்களை துரத்தி இருக்கு ஆனால் எந்தநேரம் எப்படி இருக்கும் என்பதையும் சொல்ல முடியாது கணிக்கவும் முடியாது 

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த யானை பழம் கொடுக்கா விட்டால் விடாது போகிற வானை மறித்து மறித்து பழங்கள் வாங்கி கொள்ளும் கொடுக்காவிட்டால் போக விடாது சோம்பேறி யானை மாலை ஆகினால் இன்னும் வந்து சேரும் கதிர்காம பாதையில் 

 

எங்கையும் எப்பவும் குடுத்து பழக்கினால் உதுதான்  பிரச்சனை கண்டியளோ.....
 குடுத்தவன் குடுக்காட்டில்  வெட்டுக்கொத்து பகையிலை தான் முடியுமெண்டு ஊரிலை எங்கடை பழசுகள் அடிக்கடி சொல்லுவினம்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

பட இணைப்புகளுக்கு நன்றி ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் உங்கள் தொடர் நன்றாகப்போகிறது. ஆனால் உங்கள் மனைவியின் காலில் அட்டையைத்தான் எத்தனை தடவை பார்த்தும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஈழப்பிரியன் உங்கள் தொடர் நன்றாகப்போகிறது. ஆனால் உங்கள் மனைவியின் காலில் அட்டையைத்தான் எத்தனை தடவை பார்த்தும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

கமரா கிளிக்கின சத்தத்திலை....அட்டை....கீழ விழுந்திட்டுது போல.....!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஈழப்பிரியன் உங்கள் தொடர் நன்றாகப்போகிறது. ஆனால் உங்கள் மனைவியின் காலில் அட்டையைத்தான் எத்தனை தடவை பார்த்தும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

உப்பிடி தான் சிறியும் வெள்ளி இரவு பார்த்திட்டு அட்டையைக் காணேல்லை என்றார்.சனி விடிய தெரியுது என்றார். உங்களுக்கு என்ன பிரச்சனையோ இப்ப தெரியுதா பாருங்க?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

5 hours ago, புங்கையூரன் said:

கமரா கிளிக்கின சத்தத்திலை....அட்டை....கீழ விழுந்திட்டுது போல.....!😀

அப்ப உங்களுக்கும் அட்டையைத் தெரியலை?

இதில ஏறின அட்டை தலவாக்கலையில் தேயிலை வாங்கிக் கொண்டு வெளிக்கிடத் தான் விழுந்திருக்கு.ஏறத்தாள முக்கால் மணிநேரம் இரத்தம் குடித்திருக்கு.

உங்களுக்கும் இப்ப தெரியுதோ?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

இடது காலில் சின்னவிரலுக்கும் அடுத்த விரலுக்குடையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

உப்பிடி தான் சிறியும் வெள்ளி இரவு பார்த்திட்டு அட்டையைக் காணேல்லை என்றார்.சனி விடிய தெரியுது என்றார். உங்களுக்கு என்ன பிரச்சனையோ இப்ப தெரியுதா பாருங்க?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

அப்ப உங்களுக்கும் அட்டையைத் தெரியலை?

இதில ஏறின அட்டை தலவாக்கலையில் தேயிலை வாங்கிக் கொண்டு வெளிக்கிடத் தான் விழுந்திருக்கு.ஏறத்தாள முக்கால் மணிநேரம் இரத்தம் குடித்திருக்கு.

உங்களுக்கும் இப்ப தெரியுதோ?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

இடது காலில் சின்னவிரலுக்கும் அடுத்த விரலுக்குடையில்.

சத்தியமாய் ....நான் அட்டையைத் தேடவேயில்லை...!

முந்தி வருசம் ...வருசம்....தியத்தலாவைக்  காம்புக்குப் போற நேரத்தில....ஒரு இருபது மைல்  தூரமாவது.....காடுகளுக்கு ஊடாக.....தரப்பட்ட வரை படத்தின் உதவி கொண்டு ...குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள்நடந்து முடிக்க வேண்டும்..!

யாப்பாணய இந்து மகா வித்தியாலயா.......குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கும் எனினும்.....முடித்தவர்களின் பூட்சுக்களுக்குள்...சராசரி.....ஐந்து அட்டைகளாவது...வீங்கின படியே இருக்கும்!

ஆச்சரியம் என்னவென்றால்......ஒரு சிறிது கூட.......வலித்தது கிடையாது!

என்னே......இயற்கையின்....பரிணாம வளர்ச்சியின்  இரகசியம்!

இவற்றை...இப்போது மருத்துவ தேவைகளுக்காக.....ஆய்வு கூட்ங்களில் வளர்க்கின்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

உப்பிடி தான் சிறியும் வெள்ளி இரவு பார்த்திட்டு அட்டையைக் காணேல்லை என்றார்.சனி விடிய தெரியுது என்றார். உங்களுக்கு என்ன பிரச்சனையோ இப்ப தெரியுதா பாருங்க?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

அப்ப உங்களுக்கும் அட்டையைத் தெரியலை?

இதில ஏறின அட்டை தலவாக்கலையில் தேயிலை வாங்கிக் கொண்டு வெளிக்கிடத் தான் விழுந்திருக்கு.ஏறத்தாள முக்கால் மணிநேரம் இரத்தம் குடித்திருக்கு.

உங்களுக்கும் இப்ப தெரியுதோ?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

இடது காலில் சின்னவிரலுக்கும் அடுத்த விரலுக்குடையில்.

இப்ப தெரியுது. நான் ஒருநாளும் அட்டையைக் காணாத்தால தெரியேல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.