Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kavallur Kanmani said:

ஈழப் பிரியன் நினைத்ததுபோல்  இதற்கெண்டாலும் பதில் எழுதாமல் நித்திரை வராதாம். வேறென்ன அங்க இருக்கும் அந்த அட்டை யாரையோ பதம் பார்த்திருக்கிறது என் நினைக்கிறேன். அங்குள்ள அட்டை கடித்தால் இரத்தத்தை உறிஞ்சி விடும். புங்கையின் ரென்சன் குறைந்து விட்டதா. பயணத் தொடர் மிக அருமையாக செல்கிறது. தொடருங்கள்.

மர்மமாக வைத்திருக்க விடமாட்டியளே.

சரி யாருக்கு கடித்ததென இன்னும் ஒருவருக்கும் தெரியாது தானே?

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி சும்மா ஒரு தூண்டிலைப் போட மீன் தானா வந்து கொழுவிட்டுது......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

சகோதரி சும்மா ஒரு தூண்டிலைப் போட மீன் தானா வந்து கொழுவிட்டுது......!  😁

அடுத்தவர் மாட்டுப்படுகிறார் என்றால் எவ்வளவு சந்தோசம்.
ஆகா ஆகா நல்லா இருங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

ஈழப்பிரியன்.. ஒரு கலை ரசனையுடன்... காகம் கொத்திய பலாப்பழ பட  இணைப்பிற்கு நன்றி. 
அந்தப் படத்தைப்  பார்க்க, ஒரு சிமைலி  முகம் போல் உள்ளது. மிக ரசித்தேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                      வானுக்குள் இருந்து அவலக்குரல் வருகிறதே தவிர என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை.இதில் பின்னுக்கிருந்து கூக்குரலிட்ட பலருக்குமே தெரியாது.தாய் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று ஒரே இரத்தமல்லவா ஒன்று கத்த எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்துவிட்டார்கள் என்ன ரத்தபாசம்.கடைத்தெருவென்றபடியால் வானால ஆக்கள் இறங்க முதலே வெளியாட்கள் ஒவ்வொன்றாக கூடிவிட்டனர்.அட்டை அட்டை என்று கொண்டு ஆளையாள் இடித்துத் தள்ளிக் கொண்டு இறங்கினார்கள்.அட்டை எப்படி வந்தது யாருக்கு கடித்ததென்றே தெரியாது.

                                     வேடிக்கை பார்க்க வந்த ஒருவர் இந்த அம்மாவுக்கு தான் இரத்தம் வருகுது இவவுக்கு தான் கடித்து போட்டுது என்று எனது மனைவியைக் காட்டியதும் ஓய்ந்து போயிருந்த அவலக்குரல் மீண்டும்.இன்னொருவர் அட்டை ரத்தமெல்லாம் குடிச்சு முடிச்சிட்டுது என்றதும் அழுகையின் சத்தம் இன்னும் கூடுது.எமக்கு அட்டையின் அனுபவமோ முன்னர் பின்னர் பார்த்ததோ இல்லை.அதிலே நின்றவர்கள் தான் இரத்தம் குடிக்கமுதல் சின்னூன்டாக இருக்கும்.இது குடிச்சு முடிச்சிட்டுது இனி பிரச்சனையே இல்லை என்றார்கள்.வடிந்த இரத்மெல்லாம் கழுவி பயணம் தொடர்ந்தாலும் நீண்ட தூரம் போகும் வரை ஆளையாள் பார்க்கிறதும் அட்டை ஏதாவது வந்திட்டுதா என்று கால்களைப் பார்ப்பதிலுமே இருந்தார்கள்.

                                  இதற்கிடையில் கிடைத்த நேரத்தை அட்டை எப்போது ஏறியிருக்கும் என்று எடுத்த படங்களை மருமகன் தேடிப் பார்த்தா பங்களா வாசலில் எல்லோரும் நின்று படம் எடுத்த போது எனது மனைவியின் காலில் அட்டை தெரிகிறது.நீங்களும் அந்த அட்டையைப் பார்க்கலாம்.

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

                                   நேராக கண்டி போய் நகரத்தை சுற்றிப் பார்த்து தலதாமாளிகைக்கும் போனோம்.அங்கு ஒருவருக்கும் பெரிதாக மனதைக் கவரவில்லை.மதியம் சாப்பிட்டுவிட்டு சிகிரியா நோக்கி புறப்பட்டோம்.பொழுதுபடும் போது போய்ச் சேர்ந்தோம்.ஏற்கனவே ஒழுங்கு செய்த விலாசத்துக்கு  (அவ்வளவு பெரிய வசதி இல்லாவிட்டாலும் புதியது)போனால் ஒரு சிங்கள பெண்மணி கணவன் பொலிஸ் என்றும் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்று சொன்னார்.

                                   ஒரு அரைமணி நேரத்தில் வீட்டுக்காரரும் வந்திருந்தார்.எந்த இடம் என்று சுகம் விசாரித்தார்.கோப்பாய் என்றதும் ஓ நானும் கோப்பாய் போலிசில் வேலை செய்தனான் என்றார்.அப்போது மனைவியின் தங்கச்சி முன்னுக்கு வந்து என்னைத் தெரியுதோ என்றா.என்னடா என்று எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தா கெல்மட் வைத்துக் கொண்டு போடாமல் போனதற்கு 500ரூபா தண்டம் விதித்திருக்கிறார்.காசு கொஞ்சம் தாறன் என்று சொல்லியும் தண்டம் அறவிட்டுவிட்டீரே என்றா.ஓ அப்படியா சிலவேளை யாரும் சிக்கலான ஆட்கள் நின்றிருப்பார்கள் இல்லாவிட்டால் விட்டிருப்பேன் என்றார்.தம்பி நல்லா உழைத்துக் கொண்டு நல்ல இடத்தில் இடமாற்றம் பெற்று பணங்களையும் வீணடிக்காமல் நல்லதொரு முதலீடாக்கியுள்ளார்.எல்லோரும் வேளைக்கு படுத்து வேளைக்கே சிகிரியா போவதற்காக படுத்துவிட்டோம்.

5-E667863-74-B6-42-C8-B320-0899-AB1217-D

                                   காலையில் எழுந்து மாமியாரை சாரதியுடன் விட்டுவிட்டு நாங்கள் சிகிரியா பார்க்க சென்றோம்.பக்கத்திலே தான் நடந்தே போகலாம்.உள்நாட்டவருக்கு 100 ரூபாவும் வெளிநாட்வருக்கு 4000ரூபாவும் அறவிடுகிறார்கள்.கீழே இருந்து பார்க்க சிறிய தூரம் மாதிரி தெரிந்தது.மேலே ஏறஏற சில இடங்கள் மிகவும் பயங்கரமாக இருந்தது.எத்தனையோ பேர் இடையிடையே நின்று பயந்து குளந்தைகள் போல அழுகிறார்கள்.மேலே போகப்போக கருங்குளவி பெரிய பெரிய கூடுகள்.ஒன்றிரண்டு ஆங்காங்கே பறந்தாலும் அனேகமானவை அமைதியாக இருந்தது.சத்தம் செய்பவர்களை காசுக்கு ஆட்களை கூட்டி வருபவர்கள் சத்தம் போட வேண்டாம் என்று குளவிக் கூட்டை காட்டுகிறார்கள்.அனுபவம் போலும்.ஆங்காங்கே எச்சரிக்கை பலகை மும்மொழிகளிலும் போடப்பட்டிருந்தது.அனைவருமே ரசித்து பார்த்தோம்.இதற்கு முதல் பார்க்கவில்லை என்பதால் எல்லோரும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள்.

                                              அடுத்து திருகோணமலை நோக்கி போக வேண்டும்.இடையில் மின்னேரியாவில் யானைகள் பார்க்க போக வேண்டுமென்றார்கள்.மின்னேரியா போக வழி நெடுகிலும் சேறுசகதிக்குள் ஓடக் கூடிய வாகனங்களுடன் ஆக்களைக் கூட்டிக் கொண்டுபோக தயாராக நிற்கிறார்கள்.5-6 ரக் நின்ற இடத்தில் விபரங்கள் கேட்டோம் எவருக்கும் தமிழ் தெரியவில்லை.எமக்கு கொஞ்ச கொஞ்ச சிங்களம்.மின்னேரியாவை விட கடுல்லவேவா என்ற இடம் கூடதலான யானைகள் வரும் 3000 ரூபா கூட என்றார்கள்.எல்லோரும் ஒரே ரக்கில் போனோம்.

7070585-D-F792-4-AA5-A3-BC-8-C4-E2957-ED

                                              அந்த ஏரியா உள்நுழையும் போதே ஜெராசீக் பாக்கில் வாறமாதிரி இரண்டு பக்கமும் மின்சார வேலி அமைத்திருக்கிறார்கள்.உள்ளே போவதற்கு பயணச் சீட்டுகளை சாரதியே வாங்கி வந்தார்.சரதாரண வண்டியில் போனால் வண்டி உருப்படியாக வந்து சேராது.ஒரே பள்ளமும் புட்டியும் சேறும் சகதியும்.இடையிடையே யானைக் கூட்டங்கள் வந்தாலும் கூடுதலான யானை வாவிக்கருகில் தண்ணீர் குடிக்க வரும் என்றார்.எல்லோருமே அந்த இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தனர்.
 
                                          வாவி அருகே போனதும் இறங்கி ஆங்காங்கே வரும் யானைகளைப் பார்த்துக் கொண்டிருக்க கூட்டம் கூட்டமாக யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக வாவியை நோக்கி வரத் தொடங்கியது.குறைந்தது 100 யானைகளாவது இருக்கும்.மிக அருகிலிருந்து பார்க்க எவ்வளவோ சந்தோசமாக இருந்தது.ஏதாவது பிரச்சனை என்றால் ஓட வேண்டி வரும் ஒருவருமே இறங்க வேண்டாம் என்று சாரதி சொன்னார். 

127002-AC-27-AF-494-E-9779-2-EA66-D1-C1-

                                        நீண்டநேரம் சென்றபின் சாரதி சொன்னது போல எமக்கு எதிரே நின்ற ரக்குக்கு ஒரு யானை ஓடிவந்து முட்டியது.பின்னால் நின்ற யானைகளும் அந்த வாகனத்தை நோக்கி நகர எல்லோருமே (20-25 ரக்குகள்) எடுத்துக் கொண்டோடத்க தொடங்கிவிட்டனர்.நாங்களும் வெளியே வரும் போது பார்த்தா உள்ளே போவதற்காக மிக நீண்ட வரிசை.இவர்களில் அரைவாசிப் பேருக்கு மேல் உள்ளேவிட மாட்டார்களென்று சாரதி சொன்னார்.திரும்பவும் பழைய இடத்துக்கு வந்து திரகோணமலை நோக்கி புறப்பட்டோம்.

கண்டம் ஒன்று காத்திருந்தது.
நீங்களும் காத்திருங்கள்.

16 minutes ago, தமிழ் சிறி said:

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

ஈழப்பிரியன்.. ஒரு கலை ரசனையுடன்... காகம் கொத்திய பலாப்பழ பட  இணைப்பிற்கு நன்றி. 
அந்தப் படத்தைப்  பார்க்க, ஒரு சிமைலி  முகம் போல் உள்ளது. மிக ரசித்தேன். :)

 

சிறி காகம் கொத்தத் தொடங்கினால் விடாது.மச்சான் வரும் வரை காத்திருந்தால் முழுவதும் கொந்திவிடும் என்றதால் கொஞ்சம் அவசரம்.இந்த பிலாப்பழம் நல்ல சுவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

 

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

யாரப்பா... இந்தப் படத்தை எடுத்தது
கண்டியில்..... பச்சை பசேல் என்று, புல்லு வளரும் என்று எடுத்த படம் மாதிரி இருக்கப்பா....  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆ சிறி இது ஆக்களைப் பாக்கிற படமில்லை அட்டையைப் பார்க்கிற படம்.மனைவியின் காலில் அட்டை.
அதுசரி ஏற்கனவே கண் ஒரு மாதிரி.அதுவும் வெள்ளிக்கிழமை வேறை சொல்லவா வேண்டும்.

36994-E32-D250-4-D9-F-BD8-C-AC870580-B7-

தம்பிக்கு இப்ப சந்தோசமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ சிறி இது ஆக்களைப் பாக்கிற படமில்லை அட்டையைப் பார்க்கிற படம்.மனைவியின் காலில் அட்டை.
அதுசரி ஏற்கனவே கண் ஒரு மாதிரி.அதுவும் வெள்ளிக்கிழமை வேறை சொல்லவா வேண்டும்.

36994-E32-D250-4-D9-F-BD8-C-AC870580-B7-

தம்பிக்கு இப்ப சந்தோசமோ?

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

ஓ.... ஈழப்பிரியன், இப்ப தான்.... அட்டை, காலில் நிற்பதை பார்த்தேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

கொத்தின காகமும் ஒழுங்காய் கொத்தேல்லை....பிலாப்பழம் சரியான குந்து போலை கிடக்கு..😀

Link to comment
Share on other sites

தகவல்களும், படங்களும் அருமை ஈழப்பிரியன் அண்ணா. தொடருங்கள் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2019 at 12:48 PM, putthan said:

ஆனால் அவவோ நுவரெலியாவில் இரண்டு நாட்கள் போட்டு மட்டக்களப்பை தவிர்த்து விட்டா.அவ அனுப்பிய அட்டவணையைப் பார்த்ததும் யாழ் தனிக்காட்டுராசாவை பார்க்க முடியாதே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.அதற்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

 

On 3/14/2019 at 8:20 PM, ஈழப்பிரியன் said:

தனிக்காட்டுராஜாவை தொடர்பு கொள்வதாக சொல்லி அவரது தொல்லைபேசி இலக்கமும் எடுத்து சுற்றுலாவின் போது சின்ன ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம் என்று பல எண்ணங்களுடன் இருந்து கடைசியில் தவறவிட்டுவிட்டேன்.எனக்கு எப்போதுமே சொன்னதைச் செய்யவில்லை என்றால் மிகவும் வருத்தமாக இருக்கும்.அவர் விரும்பினால் என்ன விரும்பாவிட்டாலும் இப்போது சுமையை இறக்கி வைத்த மாதிரி உள்ளது.

இதற்கெல்லாம் எதற்கு  மன்னிப்பு அண்ணே நல்ல சுவாரசியமாக இருக்கிறது எழுதுங்கள் இன்னும் இன்னும் மீண்டும் ஓர் நாள் சந்திப்போம் என்று கூறுகிறேன் 

 

அந்த நீர் வீழ்ச்சியில் குளிப்பது நல்லது ஆனால் சில வேளைகளில் மலையின் உச்சியில் இருந்து சில பாறை துண்டுகள் விழுவது வழமை கவனமாக இருந்திருக்க வேண்டும் யாரும் சொன்னவர்களா ?? எனக்கும் நுவரெலியா பிடிக்கும் ஆனால் அங்கே உழைப்பு சுறண்டப்படுவதால்  பிடிக்காது  ஆனால் நல்ல காலநிலை பூக்களும் பச்சை பசேல் என நிறங்களும் இடங்களும் மனதை கொள்ளை கொள்ளத்தான் செய்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த யானை பழம் கொடுக்கா விட்டால் விடாது போகிற வானை மறித்து மறித்து பழங்கள் வாங்கி கொள்ளும் கொடுக்காவிட்டால் போக விடாது சோம்பேறி யானை மாலை ஆகினால் இன்னும் வந்து சேரும் கதிர்காம பாதையில் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகிரியாவும் காட்டு யானைகளும் சூப்பரான படங்கள்.........!கைவசம் இருக்கும் நல்ல படங்களையும் எடுத்து விடுங்கள் பார்க்கிறோம்......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

.... ஈழப்பிரியன், இப்ப தான்.... அட்டை, காலில் நிற்பதை பார்த்தேன்.  :grin:

சனிக்கிழமை காலையில் பார்க்கத் தான் தெரியுதோ?

16 hours ago, குமாரசாமி said:

கொத்தின காகமும் ஒழுங்காய் கொத்தேல்லை....பிலாப்பழம் சரியான குந்து போலை கிடக்கு..😀

கொந்துது என்ற செய்தி கேட்டு ஓடிப் போய் விழுந்து எழும்பியாச் செல்லோ.

11 hours ago, மல்லிகை வாசம் said:

தகவல்களும், படங்களும் அருமை ஈழப்பிரியன் அண்ணா. தொடருங்கள் 🙂

இன்னும் கொஞ்ச தூரம் இருக்கிறது.கூட வாருங்கள்.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதற்கெல்லாம் எதற்கு  மன்னிப்பு அண்ணே நல்ல சுவாரசியமாக இருக்கிறது எழுதுங்கள் இன்னும் இன்னும் மீண்டும் ஓர் நாள் சந்திப்போம் என்று கூறுகிறேன் 

 

எனக்கு கஸ்டமாக இருந்தது.இப்போ நிறைவாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த நீர் வீழ்ச்சியில் குளிப்பது நல்லது ஆனால் சில வேளைகளில் மலையின் உச்சியில் இருந்து சில பாறை துண்டுகள் விழுவது வழமை கவனமாக இருந்திருக்க வேண்டும் யாரும் சொன்னவர்களா ?? எனக்கும் நுவரெலியா பிடிக்கும் ஆனால் அங்கே உழைப்பு சுறண்டப்படுவதால்  பிடிக்காது  ஆனால் நல்ல காலநிலை பூக்களும் பச்சை பசேல் என நிறங்களும் இடங்களும் மனதை கொள்ளை கொள்ளத்தான் செய்கின்றன. 

இல்லையே.எதேச்சையாக பார்த்தது உடனே இறங்கிவிட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த யானை பழம் கொடுக்கா விட்டால் விடாது போகிற வானை மறித்து மறித்து பழங்கள் வாங்கி கொள்ளும் கொடுக்காவிட்டால் போக விடாது சோம்பேறி யானை மாலை ஆகினால் இன்னும் வந்து சேரும் கதிர்காம பாதையில் 

ஆமா அப்படித் தான் சாரதி சொன்னார்.அவர் பழங்களை வாங்கும் போது இது பற்றி எதுவுமே பேசவில்லை.அதனாலோ என்னவோ எல்லோரும் பயந்து அதிர்ச்சியாகி விட்டோம்.
அத்துடன் யானை அடித்து பலி காயம் என்று அடிக்கடி செய்திகள்.

6 hours ago, suvy said:

சிகிரியாவும் காட்டு யானைகளும் சூப்பரான படங்கள்.........!கைவசம் இருக்கும் நல்ல படங்களையும் எடுத்து விடுங்கள் பார்க்கிறோம்......!   😍

சுவி ஒரு அசட்டுத் துணிவில் தொடங்கியாச்சு.இப்போ ஒரே முழுசாட்டம்.நான் அவ்வளவு படங்களுடன் மினக்கெடுவதில்லை.பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆமா அப்படித் தான் சாரதி சொன்னார்.அவர் பழங்களை வாங்கும் போது இது பற்றி எதுவுமே பேசவில்லை.அதனாலோ என்னவோ எல்லோரும் பயந்து அதிர்ச்சியாகி விட்டோம்.
அத்துடன் யானை அடித்து பலி காயம் என்று அடிக்கடி செய்திகள்.

இந்த யானைகள் அடித்தது இல்லை இது வீதிக்கு வந்து பல வருடம் ஆகிவிட்டது சிலருக்கு அதை முட்ட நினைப்பவர்களை துரத்தி இருக்கு ஆனால் எந்தநேரம் எப்படி இருக்கும் என்பதையும் சொல்ல முடியாது கணிக்கவும் முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த யானைகள் அடித்தது இல்லை இது வீதிக்கு வந்து பல வருடம் ஆகிவிட்டது சிலருக்கு அதை முட்ட நினைப்பவர்களை துரத்தி இருக்கு ஆனால் எந்தநேரம் எப்படி இருக்கும் என்பதையும் சொல்ல முடியாது கணிக்கவும் முடியாது 

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த யானை பழம் கொடுக்கா விட்டால் விடாது போகிற வானை மறித்து மறித்து பழங்கள் வாங்கி கொள்ளும் கொடுக்காவிட்டால் போக விடாது சோம்பேறி யானை மாலை ஆகினால் இன்னும் வந்து சேரும் கதிர்காம பாதையில் 

 

எங்கையும் எப்பவும் குடுத்து பழக்கினால் உதுதான்  பிரச்சனை கண்டியளோ.....
 குடுத்தவன் குடுக்காட்டில்  வெட்டுக்கொத்து பகையிலை தான் முடியுமெண்டு ஊரிலை எங்கடை பழசுகள் அடிக்கடி சொல்லுவினம்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DC79-DAA0-EFA9-4-BAD-9-A2-C-DA52-B033-E9

3733-F382-0606-41-D6-BD1-E-299195442-E7-

பட இணைப்புகளுக்கு நன்றி ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் உங்கள் தொடர் நன்றாகப்போகிறது. ஆனால் உங்கள் மனைவியின் காலில் அட்டையைத்தான் எத்தனை தடவை பார்த்தும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஈழப்பிரியன் உங்கள் தொடர் நன்றாகப்போகிறது. ஆனால் உங்கள் மனைவியின் காலில் அட்டையைத்தான் எத்தனை தடவை பார்த்தும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

கமரா கிளிக்கின சத்தத்திலை....அட்டை....கீழ விழுந்திட்டுது போல.....!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஈழப்பிரியன் உங்கள் தொடர் நன்றாகப்போகிறது. ஆனால் உங்கள் மனைவியின் காலில் அட்டையைத்தான் எத்தனை தடவை பார்த்தும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

உப்பிடி தான் சிறியும் வெள்ளி இரவு பார்த்திட்டு அட்டையைக் காணேல்லை என்றார்.சனி விடிய தெரியுது என்றார். உங்களுக்கு என்ன பிரச்சனையோ இப்ப தெரியுதா பாருங்க?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

5 hours ago, புங்கையூரன் said:

கமரா கிளிக்கின சத்தத்திலை....அட்டை....கீழ விழுந்திட்டுது போல.....!😀

அப்ப உங்களுக்கும் அட்டையைத் தெரியலை?

இதில ஏறின அட்டை தலவாக்கலையில் தேயிலை வாங்கிக் கொண்டு வெளிக்கிடத் தான் விழுந்திருக்கு.ஏறத்தாள முக்கால் மணிநேரம் இரத்தம் குடித்திருக்கு.

உங்களுக்கும் இப்ப தெரியுதோ?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

இடது காலில் சின்னவிரலுக்கும் அடுத்த விரலுக்குடையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

உப்பிடி தான் சிறியும் வெள்ளி இரவு பார்த்திட்டு அட்டையைக் காணேல்லை என்றார்.சனி விடிய தெரியுது என்றார். உங்களுக்கு என்ன பிரச்சனையோ இப்ப தெரியுதா பாருங்க?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

அப்ப உங்களுக்கும் அட்டையைத் தெரியலை?

இதில ஏறின அட்டை தலவாக்கலையில் தேயிலை வாங்கிக் கொண்டு வெளிக்கிடத் தான் விழுந்திருக்கு.ஏறத்தாள முக்கால் மணிநேரம் இரத்தம் குடித்திருக்கு.

உங்களுக்கும் இப்ப தெரியுதோ?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

இடது காலில் சின்னவிரலுக்கும் அடுத்த விரலுக்குடையில்.

சத்தியமாய் ....நான் அட்டையைத் தேடவேயில்லை...!

முந்தி வருசம் ...வருசம்....தியத்தலாவைக்  காம்புக்குப் போற நேரத்தில....ஒரு இருபது மைல்  தூரமாவது.....காடுகளுக்கு ஊடாக.....தரப்பட்ட வரை படத்தின் உதவி கொண்டு ...குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள்நடந்து முடிக்க வேண்டும்..!

யாப்பாணய இந்து மகா வித்தியாலயா.......குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கும் எனினும்.....முடித்தவர்களின் பூட்சுக்களுக்குள்...சராசரி.....ஐந்து அட்டைகளாவது...வீங்கின படியே இருக்கும்!

ஆச்சரியம் என்னவென்றால்......ஒரு சிறிது கூட.......வலித்தது கிடையாது!

என்னே......இயற்கையின்....பரிணாம வளர்ச்சியின்  இரகசியம்!

இவற்றை...இப்போது மருத்துவ தேவைகளுக்காக.....ஆய்வு கூட்ங்களில் வளர்க்கின்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

உப்பிடி தான் சிறியும் வெள்ளி இரவு பார்த்திட்டு அட்டையைக் காணேல்லை என்றார்.சனி விடிய தெரியுது என்றார். உங்களுக்கு என்ன பிரச்சனையோ இப்ப தெரியுதா பாருங்க?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

அப்ப உங்களுக்கும் அட்டையைத் தெரியலை?

இதில ஏறின அட்டை தலவாக்கலையில் தேயிலை வாங்கிக் கொண்டு வெளிக்கிடத் தான் விழுந்திருக்கு.ஏறத்தாள முக்கால் மணிநேரம் இரத்தம் குடித்திருக்கு.

உங்களுக்கும் இப்ப தெரியுதோ?

AB9-FDDCD-006-C-4-B55-BD5-F-7-E05-BC4-E0

இடது காலில் சின்னவிரலுக்கும் அடுத்த விரலுக்குடையில்.

இப்ப தெரியுது. நான் ஒருநாளும் அட்டையைக் காணாத்தால தெரியேல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.