Jump to content

இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது

  •  
பெரண்டி ஆலயம்

இந்து சமயம் இலங்கையின் ஆதி காலம் முதலே காணப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன.

 

நாட்டை ஆட்சி செய்த பல மன்னர்கள், பல இந்து ஆலயங்களை நிர்மாணித்து, வழிபாடுகளை நடத்தியமைக்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன.

குறிப்பாக மன்னர்கள் சிவ வழிபாட்டிலேயே ஈடுபட்டிருந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், முதலாம் இராஜசிங்க மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்து ஆலயமொன்று சிதைவடைந்த நிலையில், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆலயம் கொழும்பின் புறநகர்ப் பகுதியான அவிசாவளையில் அமைந்துள்ளது.

அவிசாவளை நகரிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தல்துவை பகுதியில் இந்த ஆலயம் (பெரண்டி ஆலயம்) அமையப் பெற்றுள்ளது.

சீதாவக்கை அரசை ஆட்சி செய்த மாயாதுன்னை மன்னனின் ஆட்சிக் காலத்தில் அவரது மகனான முதலாம் இராஜசிங்க மன்னனால் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

தனது தந்தையை கொலை செய்து, ஆட்சிப் பீடத்தை கைப்பற்றிய பாவத்திலிருந்து விடுபடும் நோக்கில், மதகுருமார்களின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த ஆலயம் கி.பி. 1581 - 1593 காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து சிற்பிகள், வல்லுநர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, பெருமுயற்சி எடுத்து இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரண்டி ஆலயம்

இவ்வாறு வரழைக்கப்பட்டவர்களில் ஒருவர் அரிட்டுகே என இலங்கை வரலாற்றில் தெரிவிக்கப்படுகிறது.

அரிட்டுகே சிற்பத்துறையில் மாத்திரமன்றி, சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

சீதாவாக்கை ஆற்றை இடைமறித்து, ஆற்றை வேறு திசைக்கு திருப்பி ஆலயம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என மன்னன், சிற்பத்துறை நிபுணரான அரிட்டுகேவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆற்றை திசை திருப்பி ஆலயம் நிர்மாணிப்பது பாவச் செயல் எனவும், அவ்வாறு ஆறு திசை திருப்பப்பட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் மன்னனிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரிட்டுகேயின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாத மன்னன், ஆலயத்தை நிர்மாணிக்குமாறு பணித்துள்ளார்.

இதன்படி, சிவனின் வடிவமான பைரவரை மூலக் கடவுளாக கொண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பெரண்டி ஆலயம்

அரிட்டுகேயின் எச்சரிக்கையை மீறி இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, குறுகிய காலத்தில் முதலாம் இராஜசிங்கன் இறந்ததாக பிரதேச மக்கள் இன்றும் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்த ஆலயத்தில் காளி அம்மன் வழிபாடு நடைபெற்றதாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் அப்பகுதியில் காட்சிப்படுத்தியது அங்குள்ள தகவல் பலகைமூலம் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், அப்பகுதி மக்கள் இன்றும் அந்த இடத்தில் பைரவர் வழிபாடே இடம்பெற்றதாக நம்பி வருகின்றனர்.

பைரவர் காவல் தெய்வம் என்பதற்காக அந்த பகுதி மக்கள் 'பைரவயா எனவோ" (பைரவர் வாறார்) என இரவு நேரங்களில் கூறி அச்சப்பட்டுள்ளனர்.

இதுவே பிறகு பெரண்டி என பெயர் மருவியதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். சீதாவாக்கை ஆறு ஊடறுத்து செல்லும் சிறிய குன்றுப் பகுதியில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பெரண்டி ஆலயம்

கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும், சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் இந்த ஆலயத்திற்கான பழமை சான்றுகளை வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறான வரலாற்று சான்றுகளை கொண்ட இந்த ஆலயம், தற்போது அடித்தளத்தை மாத்திரமே கொண்டுள்ளது.

இந்த ஆலயத்தை இலங்கை தொல்பொருள் திணைக்களம் பாதுகாத்து, பராமரித்து வருகின்றமையையும் காணக்கூடியதாக இருந்தது.

பெரண்டி ஆலயம்

வரலாற்று சிறப்புமிக்க இந்து ஆலய வளாகம், புத்தமயமாகும் விதம்.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த பெரண்டி ஆலயம், இன்று முழுமையாக சிதைவடைந்துள்ள நிலையில், அதனை இலங்கையின் பெரும்பான்மை சமுகமான சிங்கள சமூகம் ஆக்கிரமித்துள்ளதைக் காண முடிகிறது.

அதற்கு சிறந்த ஆதாரமாக, இந்த ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்கும் பகுதியில் புத்தப் பெருமானின் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு அருகில், பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

அத்துடன், பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஒன்று திரண்டு, ஆலயத்தை சூழ பராமரித்தும் வருவதும் காணக்கூடியதாக உள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-47521178

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இது வரலாறுகளை திரிப்பவர்களுக்கான நக்கல் பதிவு. 😀

இஞ்சை...இந்த இடத்திலைதான்.... சரியாய் நட்டுச்சென்ரரிலை அல்லா ஐஞ்சு நேரமும் விழுந்து தொழுதவர்.

பà¯à®°à®£à¯à®à®¿ à®à®²à®¯à®®à¯

யேசுபிரான் ஒரு சிலருக்காக மட்டும் அருள் பாலித்த இடம்.

 

பà¯à®°à®£à¯à®à®¿ à®à®²à®¯à®®à¯

இந்த இடத்திலை தான் .....அந்த மரத்துக்கு கீழை புத்தர் தேத்தண்ணி வைச்சு குடிச்சவர்.

பà¯à®°à®£à¯à®à®¿ à®à®²à®¯à®®à¯

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

 இது வரலாறுகளை திரிப்பவர்களுக்கான நக்கல் பதிவு. 😀

இஞ்சை...இந்த இடத்திலைதான்.... சரியாய் நட்டுச்சென்ரரிலை அல்லா ஐஞ்சு நேரமும் விழுந்து தொழுதவர்.

பà¯à®°à®£à¯à®à®¿ à®à®²à®¯à®®à¯

யேசுபிரான் ஒரு சிலருக்காக மட்டும் அருள் பாலித்த இடம்.

 

பà¯à®°à®£à¯à®à®¿ à®à®²à®¯à®®à¯

இந்த இடத்திலை தான் .....அந்த மரத்துக்கு கீழை புத்தர் தேத்தண்ணி வைச்சு குடிச்சவர்.

பà¯à®°à®£à¯à®à®¿ à®à®²à®¯à®®à¯

ஆக, இப்போது சிவனின் பலம் குறைந்து, புத்தரின் பலம் கூடிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, thulasie said:

ஆக, இப்போது சிவனின் பலம் குறைந்து, புத்தரின் பலம் கூடிவிட்டது.

புத்தரின் பலம்,சிந்தனைகள் உலகத்தில் உள்ள பிரபலங்களுக்குள் ஊடுருவி விட்டது. உதாரணத்திற்கு பிரபல பாடகி மடோனா போன்ற ஹொலிவூட் நட்சத்திரங்கள் அமைதிக்கும் தியானத்திற்கும் புத்தரின் போதனைகளை கடைப்பிடிக்கின்றனர்.ஆனால் அவர்கள் புத்தரை கடவுளாக வணங்கவில்லை.

Link to comment
Share on other sites

22 minutes ago, குமாரசாமி said:

புத்தரின் பலம்,சிந்தனைகள் உலகத்தில் உள்ள பிரபலங்களுக்குள் ஊடுருவி விட்டது. உதாரணத்திற்கு பிரபல பாடகி மடோனா போன்ற ஹொலிவூட் நட்சத்திரங்கள் அமைதிக்கும் தியானத்திற்கும் புத்தரின் போதனைகளை கடைப்பிடிக்கின்றனர்.ஆனால் அவர்கள் புத்தரை கடவுளாக வணங்கவில்லை.

ஓரிரண்டு பிரபலங்கள், புத்தரின் போதனைகளை பின்பற்றினால் அது உண்மையென்று நம்புவதா?

தியானம், அமைதி எல்லா மதத்திலும் உள்ளதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, thulasie said:

ஓரிரண்டு பிரபலங்கள், புத்தரின் போதனைகளை பின்பற்றினால் அது உண்மையென்று நம்புவதா?

தியானம், அமைதி எல்லா மதத்திலும் உள்ளதுதான்.

 புத்தரின் போதனைகள் உண்மை இல்லை என்பதற்கு ஆதாரம் இருக்கா?

Link to comment
Share on other sites

9 minutes ago, குமாரசாமி said:

 புத்தரின் போதனைகள் உண்மை இல்லை என்பதற்கு ஆதாரம் இருக்கா?

புத்தர் எதை உண்மையில் போதித்தார் என்பது திரிவுபடுத்தப்பட்டிருக்கிறது அல்லது பதியப்படவில்லை என்பதை இலங்கையில் உள்ள புத்த மதப் பண்டிதர்கள் தற்போது சொல்கிறார்கள்.

வெளிப்படையாக இல்லை.

தியானம், அமைதி எல்லா மதத்திலும் உள்ளதுதான்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் , இயேசு , காந்தி , சிவன் , அல்லா என எல்லோருக்கும் மூக்கில இப்ப நல்லா உழைஞ்சு கொண்டிருக்கும் , யாழ் திண்ணையில் அவையைப் போட்டு உருட்டுறதைப் பார்க்க.

 ஒன்றை இங்கே குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.  புத்தம் என்பது ஒரு மதமல்ல என்பர்.  மாறாக அது ஒரு தத்துவமே.  மதங்களில் பல தத்துவங்கள் அடங்கியிருப்பதாகவும் சொல்வர்.

என்னோட ஒரு சிங்களப் பொடி ஒண்டு கொஞ்ச காலமாக வேலை செய்து போட்டு இப்ப விட்டுப் போய் விட்டது.  ஏன் என்று கேட்டேன்.  கொஞ்சம் வெளிக்கிற மாதிரி இருக்காம்; தியானம் தத்துவம் என கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டி இருக்காம் எண்டு சொல்லுது . நான் அம்பேல் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சாமானியன் said:

.

என்னோட ஒரு சிங்களப் பொடி ஒண்டு கொஞ்ச காலமாக வேலை செய்து போட்டு இப்ப விட்டுப் போய் விட்டது.  ஏன் என்று கேட்டேன்.  கொஞ்சம் வெளிக்கிற மாதிரி இருக்காம்; தியானம் தத்துவம் என கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டி இருக்காம் எண்டு சொல்லுது . நான் அம்பேல் !!

பெடிக்கு ஒரு நல்ல அழகான சிங்கள பெட்டையை அறிமுக படுத்தியிருந்தால் ....தியானம் செய்ய போயிருக்காது😀

Link to comment
Share on other sites

5 hours ago, சாமானியன் said:

புத்தன் , இயேசு , காந்தி , சிவன் , அல்லா என எல்லோருக்கும் மூக்கில இப்ப நல்லா உழைஞ்சு கொண்டிருக்கும் , யாழ் திண்ணையில் அவையைப் போட்டு உருட்டுறதைப் பார்க்க.

யாழ் திண்ணையில் அவையைப் போட்டு உருட்டுறதை விடவும், சிங்களப் பிக்குகளின் மண்டைகளில்  போட்டு உருட்டலாம். உருட்டினால் அவை அனைத்தையும் சீராக உருட்ட முடியும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆலயத்தில் இந்து வழிபாடுகள் நிகழ்ந்ததா? ஏன் இந்து சமய கலாச்சார அமைச்சு தலையிடவில்லை? இந்துக்கள் ஏன் இதை கோவிலாக தொடர்ந்து பாவிக்கவில்லை? இது சிதிலமடந்து போக காரணம் யார்? ஏன் இதை புனருத்தாரனம் செய்ய இந்துகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? 

இப்படி கைவிடப்பட்டு கிடப்பதனால்தான் சிங்களவன் புத்தர் சிலைய கொண்டு வந்து வைக்கின்றான். 

நாங்கள் எந்த தற்காப்பு முயற்சியும் எடுக்க மாட்டோம். பிறகு சிங்களவன்  பிடிக்கிறான் என்று ஆ..ஊ..என கத்துகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இந்த ஆலயத்தில் இந்து வழிபாடுகள் நிகழ்ந்ததா? ஏன் இந்து சமய கலாச்சார அமைச்சு தலையிடவில்லை? இந்துக்கள் ஏன் இதை கோவிலாக தொடர்ந்து பாவிக்கவில்லை? இது சிதிலமடந்து போக காரணம் யார்? ஏன் இதை புனருத்தாரனம் செய்ய இந்துகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? 

இப்படி கைவிடப்பட்டு கிடப்பதனால்தான் சிங்களவன் புத்தர் சிலைய கொண்டு வந்து வைக்கின்றான். 

நாங்கள் எந்த தற்காப்பு முயற்சியும் எடுக்க மாட்டோம். பிறகு சிங்களவன்  பிடிக்கிறான் என்று ஆ..ஊ..என கத்துகின்றது

கொழும்பான்,

நன்றே சொன்னீர்கள்.  ஆக்கிரமிப்பு அரசாட்சியில் இடம்பெறக்கூடிய மிகக்குறைவான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.  தமிழ் இடம் என்று சொல்லக்கூடிய ஆனானப்பட்ட வாகரை, முல்லைத்தீவு,  கிளிநொச்சி, திருகோணமலை போன்ற இடங்களே கலகலத்துப் போயிருக்கும் போது அவ்வாறு அல்லாத அவிசாவளை போன்ற இடங்களின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆக்கிரமிப்பு அரசன் கட்டுவித்த மிகப்பெரிய வழிபாட்டுத்தலத்தின் தற்போதைய நிலைமை எப்படி என்று எங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் .

 வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு இருப்பதில் என்ன ஆகப் போகிறது.  கோடுகள் சமன் செய்யப்படும் போது இவை எல்லாம் அர்த்தம் கெட்டுப் போக இருக்கும் நிகழ்வுகளே ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, thulasie said:

ஓரிரண்டு பிரபலங்கள், புத்தரின் போதனைகளை பின்பற்றினால் அது உண்மையென்று நம்புவதா?

தியானம், அமைதி எல்லா மதத்திலும் உள்ளதுதான்.

துளசி
இந்தியாவில் உள்ள திருவண்ணாமலையில் ரமணாச்சிரமத்தில் இருப்பவர்களில் முக்கால்வாசிப்பேர் வெள்ளைகள். அங்கு வீடும் வாங்கி சிவனே கதி என்று கிடக்கிறார்கள்.
பார்க்கப்போனால் இந்தியாவில் அனேகமான இடங்களில் இதுதான்நடக்குது.

Link to comment
Share on other sites

1 hour ago, paandiyan said:

துளசி
இந்தியாவில் உள்ள திருவண்ணாமலையில் ரமணாச்சிரமத்தில் இருப்பவர்களில் முக்கால்வாசிப்பேர் வெள்ளைகள். அங்கு வீடும் வாங்கி சிவனே கதி என்று கிடக்கிறார்கள்.
பார்க்கப்போனால் இந்தியாவில் அனேகமான இடங்களில் இதுதான்நடக்குது.

சிவனே கதி என்று இருக்கிறார்களா?

இந்த வெள்ளைகளில் பெரும்பாலானோர், CIA 😛கூட்டத்தினர்.

இவர்கள் பக்தியில் உச்சத்தில் இருப்பவர்களா?😍😍

Link to comment
Share on other sites

16 hours ago, thulasie said:

சிவனே கதி என்று இருக்கிறார்களா?

இந்த வெள்ளைகளில் பெரும்பாலானோர், CIA 😛கூட்டத்தினர்.

இவர்கள் பக்தியில் உச்சத்தில் இருப்பவர்களா?😍😍

அவரகள் CIA என்பதட்கு என்ன ஆதாரம் உள்ளது ? இங்கு ஆதாரம் இல்லாட்டி யாரும் நம்ப மாட்டார்கள் .....மதிப்புக்குரிய ஜஸ்டின் அவர்கள் எப்பவுமே கேட்பார் .....

Link to comment
Share on other sites

7 hours ago, பிரபாதாசன் said:

அவரகள் CIA என்பதட்கு என்ன ஆதாரம் உள்ளது ? இங்கு ஆதாரம் இல்லாட்டி யாரும் நம்ப மாட்டார்கள் .....மதிப்புக்குரிய ஜஸ்டின் அவர்கள் எப்பவுமே கேட்பார் .....

CIA ஓரிடத்தில் இருந்தால், அதை ஆதாரபூர்வமாக யாரும் வெளியிடமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, thulasie said:

CIA ஓரிடத்தில் இருந்தால், அதை ஆதாரபூர்வமாக யாரும் வெளியிடமாட்டார்கள்.

இதே போல் தான் சிலோனில் நடக்கும் சங்கதிகளும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.