Jump to content

பெண்களின் மார்பகங்கள் குறித்த கதைகளை இன்ஸ்டாகிராமில் வரையும் ஓவியர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கீதா பாண்டே பிபிசி
 
  •  
The woman in the red braபடத்தின் காப்புரிமை Indu Harikumar

எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலான ஆண்கள் மார்பகங்கள் மீது பைத்தியமாக இருப்பது குறித்து கூறுவார்கள்.

ஆனால், பல பெண்களுமே தங்கள் மார்பகங்கள் மீது ஆசையோடு இருப்பதாக தெரிவிக்கிறார் கலைஞர் இந்து ஹரிகுமார்.

கடந்த இரு மாதங்களாக ஐடென்டிட்டி (Identitty) என்ற கலைத்திட்டம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் இந்து.

பெண்களின் மார்பகங்கள் குறித்த கதைகளை வரையும் ஓவியர்படத்தின் காப்புரிமை Indu Harikumar

"ஒரு ஆண்டிற்கு முன்பாக, இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் மார்பகங்கள் குறித்து பேச ஆரம்பித்தோம். என்னுடன் பேசிக் கொண்டிருந்த பெண், அவரது மார்பகங்கள் பெரிதாக இருப்பது குறித்தும், ஆண்கள் ஒரு மாதிரி பார்ப்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு நான், என் மார்பகங்கள் சிறிதாக இருப்பது குறித்து கவலைப்பட்டேன்," என்று அவர் நினைவுக் கூர்கிறார்.

எங்கள் அனுபவங்கள் வேறு வேறாக இருந்தாலும், இறுதியில் ஒரே புள்ளியில்தான் முடிந்தது. உடனே இது குறித்து ஏதேனும் ஒரு ப்ராஜெக்ட் செய்யலாமா என்று கேட்டதற்கு அவர் ஒப்புக் கொண்டார்.

பெண்களின் மார்பகங்கள் குறித்த கதைகளை வரையும் ஓவியர்படத்தின் காப்புரிமை Indu Harikumar

பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் தனது படைப்புகளை பதியும் மும்பையை சேர்ந்த இந்து, பெண்களிடம் அவர்கள் மார்புகளின் தனிப்பட்ட கதைகளை, அதாவது மகிழ்ச்சியான மற்றும் சோகமான கதைகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

இதில் கலந்து கொள்பவர்கள், தங்கள் மார்பகங்களின் படங்களை அனுப்ப வேண்டும். ஆடை இல்லாமலோ, ஆடையுடனோ, லேஸ், பூக்கள் அல்லது மருதாணி எதனுடன் வேண்டுமானாலும் மார்பகங்களைப் படம்பிடித்து அனுப்பலாம். அவர்கள் முகத்தை காண்பிக்கலாமா அல்லது மறைத்திருக்க வேண்டுமா என்பதையும் அவர்களே தேர்வு செய்யலாம்.

பலரிடம் இருந்து படங்கள் வந்ததாக கூறுகிறார் இந்து ஹரிகுமார். ஏனெனில் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் மார்பு குறித்து ஒரு கதை உள்ளது என்று கூறும் அவர் தமது கதையையே தாமே விளக்குகிறார்.

பெண்களின் மார்பகங்கள் குறித்த கதைகளை வரையும் ஓவியர்படத்தின் காப்புரிமை Indu Harikumar

"நான் பதின்ம வயதில் இருக்கும் போது மெலிதாக இருந்தேன். எப்போது எனக்கு மார்பகங்கள் வரும் என்று கவலையாக இருப்பேன். இளைஞர்கள் நல்ல வடிவுள்ள மார்புகள் இருந்த பெண்கள் மீதுதான் கவனம் செலுத்துவார்கள். அதுவே தட்டையாக மார்பு கொண்ட என் போன்ற பெண்களை யாரும் காதலிக்க மாட்டார்கள். என் உடலில் ஏதோ குறைபாடு இருப்பதாக நினைத்தேன். அதனால் பல தீங்கான உறவுகளில் இருந்திருக்கிறேன். யாரும் என்னை காதலிக்க மாட்டார்கள் என்று எண்ணி, எனக்கு கிடைத்தவர்களுடன் உறவில் இருந்தேன்," என்கிறார் அவர்.

தற்போது 30களில் இருக்கும் அவர், தனக்கு அழகான உடல் இருப்பதாக நம்புகிறார். ஆனால், இந்த நிலைக்கு வர நீண்ட காலமானதாகவும் கூறுகிறார்.

அதனால்தான், சிறிய மார்பகங்கள் கொண்ட ஒருவர், எனக்கு எழுதியபோது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 384 பிரிட்டன் பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தியபோது, அதில் 44 சதவீத பெண்கள் பெரிய மார்பகங்கள் வேண்டும் என்று நினைப்பதாகவும், 31 சதவீத பெண்கள் சிறிய மார்புகள் வேண்டும் என்று கூறியதும் தெரிய வந்தது.

பெண்களின் மார்பகங்கள் குறித்த கதைகளை வரையும் ஓவியர்படத்தின் காப்புரிமை Indu Harikumar

சிறு மார்பகங்கள் கொண்ட பெண்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்திய அதே நேரத்தில், பெரிய மார்புகள் கொண்ட பெண்களும் அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டனர்.

"ஒரு பெண்ணுக்கு அவரது மார்பின் அளவு 36D. அவர் டி ஷர்ட் அணியவே மாட்டார். மார்பகங்களை சிறியதாக காண்பிக்க, இறுக்கமான உள்ளாடை அணிந்தார். அவரது பெரிய மார்பகங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அவருக்கு பிடிக்கவில்லை."

மற்றொருவர் இன்ஸ்டாகிராமில் எழுதும்போது, "பெரிய மார்பகங்கள் அனைவரையும் ஈர்க்கும் என்று கூறுவது கொடுமையான பொய். நான் ஓடும்போது, ஜிம் செல்லும்போதும் அடைந்த சங்கடத்தை நான் அறிவேன். அதுவும் தற்போது, நான் என் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால், என் மார்பு தற்போது மேலும் பெரிதாகிவிட்டது."

இந்தக் கதைகளில் எல்லாம் வலி இருந்தாலும், இந்த ஓவியங்களில் பெண்களின் உடல் குறித்த பெருமையும் மகிழ்ச்சியும் இருப்பதாக கூறுகிறார் இந்து ஹரிகுமார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-47498052

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தமிழை ஒரு வழி பண்ண முடிவு செய்திட்டாங்க போல கிடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தமிழ்லை வேலை செய்யிற டமில்ஸ்களை அடிச்சு கலைக்க எல்லாம் சரிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

பிபிசி தமிழ்லை வேலை செய்யிற டமில்ஸ்களை அடிச்சு கலைக்க எல்லாம் சரிவரும்.

உது லண்டன் தமிழ்ஸ் இல்லை கண்டியளே...

இப்ப டெல்லில தான் பிபிசி  ஆசியா. டெல்லி தமிழ்ஸ் கைவரிசை.....

எவ்வளோ விசயம்  இருக்க..... எங்க மினக்கெடுக்கினம் பார்த்தியளே.

உங்க லைசென்ஸ் கட்டவில்லை எண்டால், போனை போட்டு துரத்துவினம்.

வாங்குற காசுக்கு உதே தருகிறீங்கோ எண்டு ஒரு ஈமெயில்  கடதாசி, பிபிசி க்கும், எங்கண்ட mp கும், கலாசார அமைச்சருக்கும் போட , ஒழுங்கா வேலை செய்வினம்.

வேலையை இங்கே இருந்து வெளியால  கொண்டுபோன கடுப்பில இருக்கிற எங்கண்ட  எம்பிக்கு மொழி பெயர்த்து போட, நிண்டு சன்னதம் ஆடுமப்பா.... 

ஒரு அலுவல் பார்க்கத்தான் இருக்கு, சாமியார்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

இந்தக் கதைகளில் எல்லாம் வலி இருந்தாலும், இந்த ஓவியங்களில் பெண்களின் உடல் குறித்த பெருமையும் மகிழ்ச்சியும் இருப்பதாக கூறுகிறார் இந்து ஹரிகுமார்.

இந்த சிங்கனா ஒருக்கா பார்க்கணும்  இந்தியா எப்ப வல்லரசாகும் என்று கேட்கணும்

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

உது லண்டன் தமிழ்ஸ் இல்லை கண்டியளே...

இப்ப டெல்லில தான் பிபிசி  ஆசியா. டெல்லி தமிழ்ஸ் கைவரிசை.....

எவ்வளோ விசயம்  இருக்க..... எங்க மினக்கெடுக்கினம் பார்த்தியளே.

உங்க லைசென்ஸ் கட்டவில்லை எண்டால், போனை போட்டு துரத்துவினம்.

வாங்குற காசுக்கு உதே தருகிறீங்கோ எண்டு ஒரு ஈமெயில்  கடதாசி, பிபிசி க்கும், எங்கண்ட mp கும், கலாசார அமைச்சருக்கும் போட , ஒழுங்கா வேலை செய்வினம்.

வேலையை இங்கே இருந்து வெளியால  கொண்டுபோன கடுப்பில இருக்கிற எங்கண்ட  எம்பிக்கு மொழி பெயர்த்து போட, நிண்டு சன்னதம் ஆடுமப்பா.... 

ஒரு அலுவல் பார்க்கத்தான் இருக்கு, சாமியார்.... 

 

ஆங்கிலத்தில் வந்ததன் தமிழ் மொழிபெயர்ப்பு தான் இக் கட்டுரை,

https://www.bbc.com/news/world-asia-india-47466320

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

 

ஆங்கிலத்தில் வந்ததன் தமிழ் மொழிபெயர்ப்பு தான் இக் கட்டுரை,

https://www.bbc.com/news/world-asia-india-47466320

அதில விசயம் என்னென்டா, அதுவும், ஆங்கில கட்டுரை கூட டெல்லி வாலாக்கள் வேலை தான்.

அங்க இருக்கிற ஆக்கள், பிரிட்டன் ஏதோ அப்படி இப்படி நாடு எண்டு நிலைப்பாட்டில் இருப்பினம். இங்கத்தையான் மேற்படியான், இது இந்தியன் மேற்தட்டுக்கு போல எண்டு நிலைப்பாட்டில் இருப்பார்.

அதால இப்படி கட்டுரை வருகுது. உங்க சனம் கட்டுப்பெட்டி தான்.

விசயம், வாங்கிர லைசன்ஸ் காசுக்கு ஒழுங்கா விசயத்தை தாருங்கோ எண்டது தான். உங்கண்ட ஊர் மாதிரி, காசே தாறியல், விருப்பமெண்டால் பாருங்க, இல்லை எண்டால் வாசியாதையுங்க, எண்டு சொல்ல ஏலாது .

விளங்குது தானே சொல்ல வாறது. லைசன்ஸ் காசு வருசா வருசம் குடுக்கிற நாம, அதுக்கான விசயம் ஒழுங்கா வருதா எண்டு கேட்கிறது பிழை இல்லை தானே, நாட்டாமை அய்யா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவின் நவீன காளமேகமோ?

Link to comment
Share on other sites

நீங்கள் லைசென்ஸ் காசு கொடுப்பதாக் நீங்கள் விரும்பியதை மட்டும் தான் அவர்கள் போட வேண்டுமா?

பிபிசியில் சமூகம் பற்றி  இயற்கை பற்றி பல தரமான கட்டுரைகள் வருகின்றன.  காணோளி விவரணங்களிலும் நல்ல தரமான சில விடயங்கள் வருகின்றன. அது போல் பிபிசி தொலைக்காட்சி சேவையிலும் வரும் சில விவரணங்கள் மிகவும் தரமானவை. அவற்றையும் நீங்கள் பார்க்கலாம்..கொடுக்கும் லைசென்ஸ் காசுக்கு சரிவரும்.

பிபிசி தமிழ் பற்றி எனக்கு இருக்கும் ஆதங்கம் அது இந்தியாவையும் கொஞ்சூண்டு இலங்கையையும் மட்டுமே தமிழர்கள் வாழும் பகுதியாக கருதி அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்வு பற்றி மட்டுமே தமிழில் எழுதுவது.  மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் பற்றி ஒன்றுமே வருவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நீங்கள் லைசென்ஸ் காசு கொடுப்பதாக் நீங்கள் விரும்பியதை மட்டும் தான் அவர்கள் போட வேண்டுமா?

பிபிசியில் சமூகம் பற்றி  இயற்கை பற்றி பல தரமான கட்டுரைகள் வருகின்றன.  காணோளி விவரணங்களிலும் நல்ல தரமான சில விடயங்கள் வருகின்றன. அது போல் பிபிசி தொலைக்காட்சி சேவையிலும் வரும் சில விவரணங்கள் மிகவும் தரமானவை. அவற்றையும் நீங்கள் பார்க்கலாம்..கொடுக்கும் லைசென்ஸ் காசுக்கு சரிவரும்.

பிபிசி தமிழ் பற்றி எனக்கு இருக்கும் ஆதங்கம் அது இந்தியாவையும் கொஞ்சூண்டு இலங்கையையும் மட்டுமே தமிழர்கள் வாழும் பகுதியாக கருதி அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்வு பற்றி மட்டுமே தமிழில் எழுதுவது.  மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் பற்றி ஒன்றுமே வருவதில்லை.

விரும்புறது, விரும்பாதது வேறு ராஜா... அபத்தம் வேற....

எனக்கு வேலையும் இல்லை, நடக்க நேரமுமில்லை என்றால், பெண்களின் உடல் பற்றி, இன்ரகிராமில் யாரோ அலம்பறை பண்ணுவதை, நான் அங்கே வேலை செய்வதனால், ஒரு புகழ் மிக்க ஊடகத்தில் போட்டு நாறடிப்பதா?

***

மேலும் இந்தியா, இலங்கை தமிழர் பூர்வீகம். வேறு இடம், புகலிடம்.... பிரிட்டன், கனடா, ஜரோப்பிய, அவுஸ் தமிழர்கள் .....ஏன் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.