Jump to content

இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

 

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபரிக்க அணி 71 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

dekok.jpg

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லசித் மலிங்க தல‍ைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுக்களினாலும், செஞ்சூரியனில் 06 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 113 ஓட்டத்தினாலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந் நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று டர்பனில் பகலரவு ஆட்டமாக நேற்று ஆரம்பானது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுதாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை பெற்றது.

இதனால் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 332 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 332 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாட முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 35 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

அதன்டிப திக்வெல்ல 2 ஓட்டத்துடனும், அவிஸ்க பெர்னாண்டோ 23 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்காக குசல் மெண்டீஸ் மற்றும் ஓசத பெர்னாண்டோ ஜேடி சேர்ந்தாடி 16 ஓவர்களுக்கு 75 ஓட்டங்கள‍ை பெற்றவேளை மழை குறுக்கிட்டது.

D1T-nMHWkAc1Acr.jpg

இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வெர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு 24 ஓவர்களுக்கு 193 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

193 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி மீண்டும் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி வழங்கப்பட்ட 24 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்கள‍மைாத்திரம் பெற்று, 71 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

srilanka.jpg

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளையும் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி நாளைமறுதினம் போர்ட்எலிசபெத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

 

http://www.virakesari.lk/article/51632

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.