Jump to content

ஆத்தா.....நானும் பாசாயிட்டேன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனதுக்கும்…..உதடுகளுக்கும் ,

தொடுசல் அறுந்து நாளாகி விட்டது!

 

வேடம் போடுவதில்,

நாடக நடிகர்களையும்….,

மிஞ்சியாகி விட்டது!

 

மாடு மாதிரி உழைச்ச,

களைப்புப் போக,

உல்லாசப் பயணம் போனால்…,

அந்தக் கடற்கரை…..,

ஊர்க் கடற்கரையிடம்…,

பிச்சை வாங்க வேண்டும்…,

போலத் தெரிகின்றது!

 

வசதியில்லாததுகள்,

வறுமையில் வாழ்பவர்கள்…,

விற்கின்ற பொருட்களை…,

அறாத விலை பேசி வாங்குவதில்…,

ஒரு திருப்தி…!

உறுத்துகின்ற மனதுக்கு..,

நாங்களும் வாங்கா விட்டால்…,

அதுகள் பட்டினி தான்…,

என்று ஒரு சமாதானம்!

 

வங்கியட்டைகளின் கனதி….,

வீட்டுக்கடனின் பரிமாணம்,

கட்ட வேண்டிய சிட்டைகளின்…,

கடைசித் திகதிகள்!

எல்லாமே மனதை அரித்தாலும்,

போலிக் கௌரவம் …..,

வேலி தாண்டு என்கிறது!

 

அபூர்வமான பொழுதுகளில்…,

அன்றைய வாழ்வின்,

நினைவுகள் வந்து போகும்!

 

இப்போதெல்லாம்…,

தபால் பெட்டியைத் திறக்கையில்..….,

தற்பாதுகாப்புத் தேடி…,

ஓடுகின்றது மனது..!

 

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

 

இப்போதெல்லாம் நானும்…,

உண்மை பேசுவதில்லை!

 

எங்காவது கணனி கிடைத்தால்,

வங்கிக் கணக்கை ஒருக்கால்…,

எட்டிப்பார்க்க வேணும்!

 

நாட்கள் போகப்போக …,

நானும் நல்ல நடிகனாகி விட்டேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் நாட்டு நடப்பு இப்ப இப்பிடித்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

நாட்கள் போகப்போக …,

நானும் நல்ல நடிகனாகி விட்டேன்!

வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை தான்.

வந்தவரேல்லாம் விருப்பமோ விருப்பமில்லையோ நடித்தே தீரவேண்டும்.

3 hours ago, புங்கையூரன் said:

வங்கியட்டைகளின் கனதி….,

வீட்டுக்கடனின் பரிமாணம்,

கட்ட வேண்டிய சிட்டைகளின்…,

கடைசித் திகதிகள்!

எல்லாமே மனதை அரித்தாலும்,

போலிக் கௌரவம் …..,

 வேலி தாண்டு என்கிறது!

இதிலே எங்களை விட வெள்ளைகள் ரொம்ப மோசம்.எடுக்கிற சம்பளத்துக்கு முழுக்க ஏதாவது கடனடிப்படையில் வாங்கி வைத்திருப்பார்கள்.தற்செயலாக வேலை போனால் கட்ட வழி இல்லாமல் எல்லாமே போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பேசி வாங்கிக் கட்டுறதை விட மௌனம் சர்வார்த்த சாதனம்.......!  😁

நாட்டு நடப்பை கவிதை பேசுது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவிதையை ஏன் யாழின் பிறந்த நாள் பகுதியில் எழுதவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தகாலம் வருகுது. வங்கிக் கடனட்டைகளை  எடுத்து துடைத்து வையுங்கோ.  வெளிநாட்டு நடப்பை நயமாகச் சொல்லியுள்ளது கவிதை. புங்கையூரன் நடிகனாகியது சரி. எப்ப பாசாகினீங்க. 

Link to comment
Share on other sites

10 hours ago, புங்கையூரன் said:

மாடு மாதிரி உழைச்ச,

களைப்புப் போக,

உல்லாசப் பயணம் போனால்…,

அந்தக் கடற்கரை…..,

ஊர்க் கடற்கரையிடம்…,

பிச்சை வாங்க வேண்டும்…,

போலத் தெரிகின்றது!

 

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

அனுபவ வரிகள், புங்கை அண்ணா! வலிகளைக் கவிதையாக்கியுள்ளீர்கள். தொடருங்கள். 😊

1 hour ago, ரதி said:

இந்த கவிதையை ஏன் யாழின் பிறந்த நாள் பகுதியில் எழுதவில்லை ?

அதையே தான் நானும் நினைத்தேன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

மனதுக்கும்…..உதடுகளுக்கும் ,

தொடுசல் அறுந்து நாளாகி விட்டது!

 

வேடம் போடுவதில்,

நாடக நடிகர்களையும்….,

மிஞ்சியாகி விட்டது!

 

மாடு மாதிரி உழைச்ச,

களைப்புப் போக,

உல்லாசப் பயணம் போனால்…,

அந்தக் கடற்கரை…..,

ஊர்க் கடற்கரையிடம்…,

பிச்சை வாங்க வேண்டும்…,

போலத் தெரிகின்றது!

 

வசதியில்லாததுகள்,

வறுமையில் வாழ்பவர்கள்…,

விற்கின்ற பொருட்களை…,

அறாத விலை பேசி வாங்குவதில்…,

ஒரு திருப்தி…!

உறுத்துகின்ற மனதுக்கு..,

நாங்களும் வாங்கா விட்டால்…,

அதுகள் பட்டினி தான்…,

என்று ஒரு சமாதானம்!

 

வங்கியட்டைகளின் கனதி….,

வீட்டுக்கடனின் பரிமாணம்,

கட்ட வேண்டிய சிட்டைகளின்…,

கடைசித் திகதிகள்!

எல்லாமே மனதை அரித்தாலும்,

போலிக் கௌரவம் …..,

வேலி தாண்டு என்கிறது!

 

அபூர்வமான பொழுதுகளில்…,

அன்றைய வாழ்வின்,

நினைவுகள் வந்து போகும்!

 

இப்போதெல்லாம்…,

தபால் பெட்டியைத் திறக்கையில்..….,

தற்பாதுகாப்புத் தேடி…,

ஓடுகின்றது மனது..!

 

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

 

இப்போதெல்லாம் நானும்…,

உண்மை பேசுவதில்லை!

 

எங்காவது கணனி கிடைத்தால்,

வங்கிக் கணக்கை ஒருக்கால்…,

எட்டிப்பார்க்க வேணும்!

 

நாட்கள் போகப்போக …,

நானும் நல்ல நடிகனாகி விட்டேன்!

புங்கையூரான்... உங்களது கவிதையில், எதை மேற்கோள் காட்டி  கருத்து கூறுவது... 
என்ற அளவிற்கு முழுவதும், வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய யதார்த்தமான... அருமையான வரிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ம் நாட்டு நடப்பு இப்ப இப்பிடித்தான் இருக்கு.

நன்றி.....சுமே!

18 hours ago, ஈழப்பிரியன் said:

வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை தான்.

வந்தவரேல்லாம் விருப்பமோ விருப்பமில்லையோ நடித்தே தீரவேண்டும்.

இதிலே எங்களை விட வெள்ளைகள் ரொம்ப மோசம்.எடுக்கிற சம்பளத்துக்கு முழுக்க ஏதாவது கடனடிப்படையில் வாங்கி வைத்திருப்பார்கள்.தற்செயலாக வேலை போனால் கட்ட வழி இல்லாமல் எல்லாமே போகும்.

உண்மை தான்.....ஈழப்பிரியன்!

வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்குள்.....காலம் நம்மை முந்தி விடும்!

நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

உண்மை பேசி வாங்கிக் கட்டுறதை விட மௌனம் சர்வார்த்த சாதனம்.......!  😁

நாட்டு நடப்பை கவிதை பேசுது....!

கிருஷ்ண பரமாத்மா கூட.....சில இடங்களில் பொய் சொல்லுகிறார்!

தருமர் கூட அசுவத்தாமன் கொல்லப்பட்டானா என்ற துரோணரின் கேள்விக்கு...ஆம் என்றே பதிலளிக்கிறார்!

நாங்கள் எம்மாத்திரம்?

நன்றி....சுவியர்!

12 hours ago, ரதி said:

இந்த கவிதையை ஏன் யாழின் பிறந்த நாள் பகுதியில் எழுதவில்லை ?

ரதி....இது அவசரத்தில் எழுத்தப்பட்ட ஒரு கவிதை!

எழுதி முடிந்ததும்....ஏதோ ஒரு...செயற்கைத்தனம்....இருப்பது போல இருந்தது!

அதனாலேயே....அந்தப் பகுதியில்....பதியவில்லை!

ஏதாவது அங்கு பதிய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது!

நன்றி ....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழனின் துயரக்கவிதை.

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 3/12/2019 at 11:04 AM, புங்கையூரன் said:

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

 

இப்போதெல்லாம் நானும்…,

 உண்மை பேசுவதில்லை!

இங்கு வந்து பார்த்த பின் தான் புரியும்.

நல்லதொரு கவிதை, வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.