Jump to content

எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…:நடிகர் விவேக்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று (11.03.19) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய விவேக், 2ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு பழைமைவாய்ந்த, தொன்மையான பூமி இலங்கையெனவும், சுமார் 35000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்த ஒரே பூமி இலங்கையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அனைத்து வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைப் பூமியில் ஒற்றுமை மட்டும் கம்மியாக உள்ளதென குறிப்பிட்ட விவேக், அதனை சரிசெய்துவிட்டால் உலகில் இலங்கை மக்களை விஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2019/115854/

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

விவேக் பார்ப்பனரல்லவே...

Link to comment
Share on other sites

29 minutes ago, Nathamuni said:

விவேக் பார்ப்பனரல்லவே...

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, thulasie said:

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

நீங்கள் சொல்வது போன்று, விவேக் குரல் கொடுத்ததிற்கு ஆதாரம் உண்டா? இணையத்தள செய்திகள் அல்லது விடீயோக்கள்.

பார்ப்பனர் என்று சொல்வதின் அர்த்தம் உங்களுகு புரிந்து  தான் எழுதியிருக்கிறீர்களா?

இந்த பார்ப்பனர் என்ற சொல்ல தமிழ் நாட்டை பொறுத்தவரையில், ஈழத்தமிழரை பொறுத்தவரையில், ஆரிய பிராமணர்களில் ஒரு பகுதியையே குறிப்பிட்டு சொல்கிறோம்.

இந்த பாரிய பிராமணர்களின், தமிழ் நாட்டு பூர்விகம் கடந்த 1000 வருடங்களுக்கு உட்பட்டது.

உதாரணமாக, இந்து ராம் போன்றவர்கள் இந்த வரையறைக்குள் அடங்குவார்கள். இவர்களே தமிழருக்கு, தமிழ் நாட்டில் இருக்கும் தமிழருக்கே ஆப்பு வைக்கும் வேலைகளை செய்பவர்கள்.

பட்டுக்குடும்பி ராமன் (முன்னாள் செயலக RAW உளவாளி) இப்படிப்பட்ட ஆரிய பிராமணர்கள்.

இப்படிப்பட்ட ஆரிய பிராமன்கள் கையிலேயே, ஊடகம், அரசியல் செல்வாக்கு மற்றும் போதியளவு பணமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் பிராமணர்கள், தமிழே மூச்சு, பேச்சு, உயிர் என்று வாழ்பவர்கள். இவர்கள் பொதுவாக  சாதரண வாழக்கை வாழபவர்கள்.  உதாரணமாக, ராஜீவுடனும், மற்றும் கேரளா  நம்பூதிரிகளுடனும் சவுத் ப்ளாக்கில், ஈழத்தமிழருக்கு எதிரான கொள்கையைக் கண்டு கொதித்து கொள்ளுவுப்பட்டு, தனது பத்தாஹ்வியைத் துறந்த வெங்கடராமனும் பிராமணர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எதற்கெடுத்தாலும் சினிமாக்காரர்களை ஊருக்கு கூப்பிடும் பழக்கம் தோன்றியுள்ளது (நான் விவேக்கிற்கு எதிர் இல்லை)...அவர்களை கூப்பிட்டு கலை நிகழ்ச்சி வைப்பது என்பது வேறு...ஆனால் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சினிமாக்காரர்களை கூப்பிடுவது ஏற்புடையது அல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவர் சொன்னதிலை உண்மை இருக்குத்தானே.....சும்மா எடுத்துக்கெல்லாம் கொதிக்கப்படாது...ஈழத்தமிழனின் வளர்ச்சி  சிங்களவருக்கும் இந்தியாவுக்கும் நன்றாகவே தெரிகின்றது.
ஆனால் எமக்கு??????
கோபுரத்தின் அழகு கிட்ட நின்று பார்த்தால் தெரியாதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இப்ப எதற்கெடுத்தாலும் சினிமாக்காரர்களை ஊருக்கு கூப்பிடும் பழக்கம் தோன்றியுள்ளது (நான் விவேக்கிற்கு எதிர் இல்லை)...அவர்களை கூப்பிட்டு கலை நிகழ்ச்சி வைப்பது என்பது வேறு...ஆனால் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சினிமாக்காரர்களை கூப்பிடுவது ஏற்புடையது அல்ல 

முதல்லை உந்த சாமத்திய வீட்டு வீடியோ......கலியாணவீட்டு வீடியோக்களிலை சினிமாப்பாட்டு போட்டு வாழ்த்திறதை நிப்பாட்டச்சொல்லுங்கோ....:grin:

நல்லதை எடுத்து கெட்டதை விட்டுடணும்....இது நம்ம கொள்கை.😎

Link to comment
Share on other sites

7 hours ago, thulasie said:

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

 

8 hours ago, Nathamuni said:

விவேக் பார்ப்பனரல்லவே...

பல்ப்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விவேக், ஈழத் தமிழர்கள் மேல் அன்பு கொண்டவர் என்பதனை,
அவரின் பேச்சுக்களிலும், அவர் நடித்த சில படங்களிலும், ஈழத்து தமிழ் பேசி நடித்து இருப்பவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங் விவேக் தம்பி,  என்ன ஒரு சிந்தனை பட் இலங்கை டேமில்ஸ் எல்லாம் நல்ல ஒற்றுமை.

இப்ப பொள்ளாச்சி தானே issue , அதைக் கொஞ்சம் கவனிக்கிறது. . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவர் குறிப்பிட்டதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

பிழைகளை நிவர்த்தி செய்ய ஆதங்கப்பட்டு சொன்னால், "எல்லாம் எமக்குத் தெரியும்,  ஒன் வேலையைப் பார்.." என சொல்வது என்ன மனநிலையோ..? :oO:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் கூறியது முற்றிலும் உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவரையும் Quote  பண்ண விரும்பவில்லை.  உவர் சொல்லும் உந்த ஒற்றுமையில் ஒரு சத வீதமேனும் அன்று உங்களிடையே இருந்து செயல்பட்டிருந்தால் இன்று நிலை வேறு.  நாங்கள் வேரறுந்து கொண்டிருந் த நேரம்  கடைசி வரையும் உங்களையும் நம்பிக் கொண்டிருந்து தானே இருந்தோம்.  நீங்கள்   - குறிப்பாக  நீங்கள் -  எங்களிடையே ஒற்றுமை பற்றி உபதேசிப்பது  சற்றே நகை முரணாக இல்லை நண்பனே.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்லிக்கொண்டு அழிய வேண்டியதுதான்..ஒரு பயலும் தமிழர்களுக்கு உதவப்போவதில்லை..!

நன்றி.

Link to comment
Share on other sites

15 hours ago, thulasie said:

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

விவேக் என்கின்ற மனிதர் மேல் ஏன் இப்படியான வீண் வாதங்கள் ...சினிமா அவரின் தொழில் அவ்வளவு தான் ...மற்றும் படி ஈழ தமிழர் மேல் மதிப்புள்ள மனிதர் ....பாப்பனர் என்றால் ஏன் இந்த கோபம் ...
நம் நாட்டிலும் இருக்கின்றார்கள் தானே .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக்கை நான் பார்ப்பணனாகப் பார்க்கவில்லை. அவரது கருத்துக்களை நான் கேட்டிருக்கிறேன், சமூக சீர்திருத்தத்திற்காக பேசுபவர். அவர் பார்ப்பணத்தின் எடுபிடி என்பது நம்பமுடியாதது.

இங்கே அவர் குறிப்பிடும் எமக்கிடையைலான ஒற்றுமை என்பது உண்மைதானே? போராளிக்குழுக்கள், அரசியல்க் கட்சிகள் என்று எமக்குள் பேதங்களால் பிரிந்துதானே இருந்துவருகிறோம். இதைச் சுட்டிக் காட்டியதில் என்ன தவறு? 

எமக்குள் பிரிந்து அடிபட்டு அழிவதென்பது தமிழன் வாங்கிவந்த வரம். அது ஈழத் தமிழனாக இருந்தாலென்ன, தமிழகத் தமிழனாக இருந்தாலென்ன, நாம் மாறப்போவதில்லை.

எல்லோருக்குமாக ஒருத்தன் வந்தான், அவனையும் காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு தெருவில் நிற்கிறோம், இதுபோதாதா நாம் யாரென்று எமக்கு உணர்த்துவதற்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தான் இன்றய இலங்கை தமிழினம்.

 இன்றைய நிலையில் தேவைப்படுவது உணைர்ச்சிகரமான புலம்பல்கள் அன்றி சகலரும் பங்கு பற்றி நிற்கும்  செயல்பாடுகளே.

 மிகப் பலர் தாயகத்திலும் புலத்திலும் அர்ப்பணிப்புடன் இவ்வகையில் செயல்பட்டு வருவது மனதிற்கு இதமளிக்கக் கூடிய விடயம்.

 சும்மா சகட்டு மேனிக்கு யாரவது புத்திமதி சொல்ல வெளிக்கிட்டால் அதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. செயல்படுபவர்கள் மட்டுமே புத்திமதி சொல்லத் தக்கவர்கள். வியாபாரம் செய்ய வருபவர்கள் அல்ல நிச்சயமாக ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பேர்வழி இதனையே தமிழ்நாட்டு அரங்கம் ஒன்றில் ( இலங்கை சம்பந்தப் பட்ட பல நிகழ்வுகள் அங்கேயும் நடக்கின்றது )  எழுந்து நின்று புத்திமதி சொல்லி பிறழ்வை நிவர்த்தி செய்ய தன்னால் என்ன செய்ய முடியும் என்று கோடி காட்டியிருந்தால் ....ம் ம் ம். ....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் மட்டக்களப்பில் நடந்த நிகழ்வில் தமிழர்களிடையையே ஒற்றுமை இல்லை என்று சொன்னது  ஆதங்கத்தினால்தான் என்பதை புரியாமல் பார்ப்பனன் (அதுகூட உண்மையில்லை), கழிசடை என்று சொல்லி தம்மை மெச்சிக்கொள்பவர்களின் ரோதனை தாங்கமுடியவில்லை😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

முதல்லை உந்த சாமத்திய வீட்டு வீடியோ......கலியாணவீட்டு வீடியோக்களிலை சினிமாப்பாட்டு போட்டு வாழ்த்திறதை நிப்பாட்டச்சொல்லுங்கோ....:grin:

நல்லதை எடுத்து கெட்டதை விட்டுடணும்....இது நம்ம கொள்கை.😎

ஆன்மிகம் சம்மந்தப்படட ஒரு நிகழ்வில் சினிமாக்காரர்கள் தேவையில்லை என்பது என் கருத்து. சினிமாவை ரசிப்பதில் தப்பில்லை...விவேக் இதில் சொன்னதும் உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் கருத்தாடல்கள்,  திரியின் உணர்வு பூர்வமான உள்ளடங்கல்  காரணமாக, கருத்தாடலின் சில வரை முறைகளை தாண்டி செல்ல தலைப்பட்டிருக்கின்றது போலும்….

 

  1. முன்பே நினைத்தேன்,  சாதி பெயர்களை சொல்லி இணைக்கப்படும் கருத்தாடல்களை நிர்வாகம் ஏன் அனுமதித்திருக்கின்றது என.  பொதுவெளியில் இவற்றிற்கு இடமில்லை என்பது வெளிப்படை .

     

  2.  நடிகர் விவேக் தனது உரையில் தனது எல்லையத் தாண்டியே சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் அவை உண்மையா பொய்யா என்பதல்ல இங்கேயே பிரச்சினை . (  சபை அறிந்து சொல்லல் சந்தர்ப்பம் அறிந்து சொல்லல் … )  

     

  3. தமிழ் நாட்டினர் பல காலம் எங்களுக்கு புகலிடம் கொடுத்தார்கள் -- நன்றியுடையவர்களாக இருக்கிறோம் .

  4. தமிழ் நாட்டினரும் நாங்களும் ஒரே மொழியைப் பேசுகிறோம் --  நட்பாக இருக்கிறோம் .

     

  5. தமிழ் நாட்டினரின் சக்தி மிக்க ஒரு பகுதி எங்களை வியாபார சந்தையாக பார்க்கின்றனர் --  அவதானமாக இருக்கிறோம்  (  சில காலத்திற்கு முன்னர் எனது மகளின் நாட்டிய அர்நாகேற்றத்திற்கு சென்னையில் இருந்த ஒரு இசை வல்லுனரை பாட வர முடியமா என கேட்டிருந்தேன் .  பாட வருவற்கில்லை  , “ Chief Guest”  ஆக வேண்டுமென்றால் வருகின்றேன் என்கிறார் ?  கடுப்பாகி அதை கைவிடடேன்.  தொடர்ந்து வந்த மேலும் பல அனுபவங்களின் அடிப்படையில் , சுரண்டுவதற்கு இலகுவான இலக்குகள் என்று இலங்கைத் தமிழரை கணித்து வைத்திருக்கின்றனர் என தோன்றிற்று )

     

  6. 1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே , களத்திலும்  சரி புலத்திலும் சரி. இல்லாவிட்டால் , (தர்க்க ரீதியாக  பார்த்தாலும் கூட)  சம கால கட்டத்தில் தெரிந்தெடுக்கப் படாத  அரசாங்கம் அல்லாத  ஒரு அமைப்பு முப்படைகளையும் கொண்டு வருடக் கணக்காக இயங்கியிருக்க முடியாது.   பின்னடைவிற்கு   பல காரணங்கள் உண்டு,  தமிழ் நாட்டு காரணி உட்பட.

     

    ஆகவே விவேக் சார் , இலங்கைத் தமிழரின் ஒற்றுமை பற்றி போகிற போக்கில் கமெண்ட் அடிப்பதை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வலிக்கின்றது

 

Link to comment
Share on other sites

இலங்கைத் தமிழர் நிலைமைகளைப் பார்த்து தனது மனதுக்கு தோன்றியதை தனது பாணியில் சொல்லியிருக்கிறார். இதில் தவறிருப்பதாக தெரியவில்லை!

மேலும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் செல்வது அந்த மக்களின் நிலைமைகளை நேரடியாக அறிய ஒருவாய்ப்பாக இருக்கும்.

காந்தி சிலைகளுக்கு மாலை போடுவதை தவிர்த்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்திக்க வைத்திருக்கலாம். இது விவேக்கின் தவறல்ல, மாறாக இது ஏற்பாடு செய்தவர்களின் வறட்டு / பிற்போக்கு மனநிலையை காட்டுகிறது.

விவேக் உண்மையில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள ஒருவரா என்பதை அவரது  எதிர்கால செயற்பாடுகள் உணர்த்தும். 

Link to comment
Share on other sites

10 hours ago, சாமானியன் said:

1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே ,

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

அது ஒற்றுமையே இல்லை.

வன்முறை.

இதையே இன்றும் யாழ் தொடர்வதும்  வேதனையானது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

முன்பே நினைத்தேன்,  சாதி பெயர்களை சொல்லி இணைக்கப்படும் கருத்தாடல்களை நிர்வாகம் ஏன் அனுமதித்திருக்கின்றது என.  பொதுவெளியில் இவற்றிற்கு இடமில்லை என்பது வெளிப்படை .

சாதி என்பது உண்மைகளை, அதுவும் வரலாற்று அல்லது நிகழ்கால உண்மைகளை சொல்வதத்திற்கும், சாதியால்  எப்படி ஒருவரை ஒருவர் வேறுபடுத்தி, சாதியின் அடிப்படையில் ஒருவரை உயர்த்தியும் ஏனெயயோரை தாழ்த்தியும்  வேறுபடுத்துதல் என்பது தவிர்க்கப்படுதல்  வேண்டும் என்ற நிர்வாகத்தின் உயர்ந்த கொள்கைக்கும் இடையேயான வெளியில், சாதி என்ற சொல்லின் விருப்புரிமை பிரயோகத்தின் உங்களின்(தவறான ) புரிதலே இது.

நான் நிர்வாகத்தின் ஓர் அங்கம் அன்று.   

மறுவளமாக, இங்கு சாதி என்ற சொல்லின் பிரயோகம் எப்படி அந்த குறித்த சாதியின்  ஓர் பகுதியினர், அவர்களது  தேசிய குழுமத்திற்கு  (அதாவது தமிழரை) எவ்வாறு பங்கம் விளைவிக்கின்றனர் எனும் கருத்தை முன்வைப்பதிற்கே பிரோயோகிப்பட்டது.

 சாதி (அல்லது வேறு எந்த சர்ச்சைக்குரிய சொல்லாகட்டும்) என்ற சொல்லின் இப்படிப்பட்ட பிரயோகம் தவிர்க்கப்பட முடியாதது.
 
சுருக்கமாக, சர்ச்சைக்குரிய சொல்லை பாவிக்கும் பொது எந்த நோக்கத்திற்காக பவிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அந்த சொல்லின் சகிப்புடமை,  ஏற்புடைமையோ அல்லது வெறுப்புடைமையோ தீர்மானிக்கப்படுகிறது.

இதை அடிப்படையாக வைத்தே, இதுவரையிலும் யாழில் எனது கருத்துக்களை பதிவிட்டிருக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.