Jump to content

எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…:நடிகர் விவேக்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று (11.03.19) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய விவேக், 2ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு பழைமைவாய்ந்த, தொன்மையான பூமி இலங்கையெனவும், சுமார் 35000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்த ஒரே பூமி இலங்கையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அனைத்து வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைப் பூமியில் ஒற்றுமை மட்டும் கம்மியாக உள்ளதென குறிப்பிட்ட விவேக், அதனை சரிசெய்துவிட்டால் உலகில் இலங்கை மக்களை விஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2019/115854/

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

விவேக் பார்ப்பனரல்லவே...

Link to comment
Share on other sites

29 minutes ago, Nathamuni said:

விவேக் பார்ப்பனரல்லவே...

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, thulasie said:

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

நீங்கள் சொல்வது போன்று, விவேக் குரல் கொடுத்ததிற்கு ஆதாரம் உண்டா? இணையத்தள செய்திகள் அல்லது விடீயோக்கள்.

பார்ப்பனர் என்று சொல்வதின் அர்த்தம் உங்களுகு புரிந்து  தான் எழுதியிருக்கிறீர்களா?

இந்த பார்ப்பனர் என்ற சொல்ல தமிழ் நாட்டை பொறுத்தவரையில், ஈழத்தமிழரை பொறுத்தவரையில், ஆரிய பிராமணர்களில் ஒரு பகுதியையே குறிப்பிட்டு சொல்கிறோம்.

இந்த பாரிய பிராமணர்களின், தமிழ் நாட்டு பூர்விகம் கடந்த 1000 வருடங்களுக்கு உட்பட்டது.

உதாரணமாக, இந்து ராம் போன்றவர்கள் இந்த வரையறைக்குள் அடங்குவார்கள். இவர்களே தமிழருக்கு, தமிழ் நாட்டில் இருக்கும் தமிழருக்கே ஆப்பு வைக்கும் வேலைகளை செய்பவர்கள்.

பட்டுக்குடும்பி ராமன் (முன்னாள் செயலக RAW உளவாளி) இப்படிப்பட்ட ஆரிய பிராமணர்கள்.

இப்படிப்பட்ட ஆரிய பிராமன்கள் கையிலேயே, ஊடகம், அரசியல் செல்வாக்கு மற்றும் போதியளவு பணமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் பிராமணர்கள், தமிழே மூச்சு, பேச்சு, உயிர் என்று வாழ்பவர்கள். இவர்கள் பொதுவாக  சாதரண வாழக்கை வாழபவர்கள்.  உதாரணமாக, ராஜீவுடனும், மற்றும் கேரளா  நம்பூதிரிகளுடனும் சவுத் ப்ளாக்கில், ஈழத்தமிழருக்கு எதிரான கொள்கையைக் கண்டு கொதித்து கொள்ளுவுப்பட்டு, தனது பத்தாஹ்வியைத் துறந்த வெங்கடராமனும் பிராமணர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எதற்கெடுத்தாலும் சினிமாக்காரர்களை ஊருக்கு கூப்பிடும் பழக்கம் தோன்றியுள்ளது (நான் விவேக்கிற்கு எதிர் இல்லை)...அவர்களை கூப்பிட்டு கலை நிகழ்ச்சி வைப்பது என்பது வேறு...ஆனால் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சினிமாக்காரர்களை கூப்பிடுவது ஏற்புடையது அல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவர் சொன்னதிலை உண்மை இருக்குத்தானே.....சும்மா எடுத்துக்கெல்லாம் கொதிக்கப்படாது...ஈழத்தமிழனின் வளர்ச்சி  சிங்களவருக்கும் இந்தியாவுக்கும் நன்றாகவே தெரிகின்றது.
ஆனால் எமக்கு??????
கோபுரத்தின் அழகு கிட்ட நின்று பார்த்தால் தெரியாதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இப்ப எதற்கெடுத்தாலும் சினிமாக்காரர்களை ஊருக்கு கூப்பிடும் பழக்கம் தோன்றியுள்ளது (நான் விவேக்கிற்கு எதிர் இல்லை)...அவர்களை கூப்பிட்டு கலை நிகழ்ச்சி வைப்பது என்பது வேறு...ஆனால் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சினிமாக்காரர்களை கூப்பிடுவது ஏற்புடையது அல்ல 

முதல்லை உந்த சாமத்திய வீட்டு வீடியோ......கலியாணவீட்டு வீடியோக்களிலை சினிமாப்பாட்டு போட்டு வாழ்த்திறதை நிப்பாட்டச்சொல்லுங்கோ....:grin:

நல்லதை எடுத்து கெட்டதை விட்டுடணும்....இது நம்ம கொள்கை.😎

Link to comment
Share on other sites

7 hours ago, thulasie said:

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

 

8 hours ago, Nathamuni said:

விவேக் பார்ப்பனரல்லவே...

பல்ப்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விவேக், ஈழத் தமிழர்கள் மேல் அன்பு கொண்டவர் என்பதனை,
அவரின் பேச்சுக்களிலும், அவர் நடித்த சில படங்களிலும், ஈழத்து தமிழ் பேசி நடித்து இருப்பவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங் விவேக் தம்பி,  என்ன ஒரு சிந்தனை பட் இலங்கை டேமில்ஸ் எல்லாம் நல்ல ஒற்றுமை.

இப்ப பொள்ளாச்சி தானே issue , அதைக் கொஞ்சம் கவனிக்கிறது. . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவர் குறிப்பிட்டதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

பிழைகளை நிவர்த்தி செய்ய ஆதங்கப்பட்டு சொன்னால், "எல்லாம் எமக்குத் தெரியும்,  ஒன் வேலையைப் பார்.." என சொல்வது என்ன மனநிலையோ..? :oO:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் கூறியது முற்றிலும் உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவரையும் Quote  பண்ண விரும்பவில்லை.  உவர் சொல்லும் உந்த ஒற்றுமையில் ஒரு சத வீதமேனும் அன்று உங்களிடையே இருந்து செயல்பட்டிருந்தால் இன்று நிலை வேறு.  நாங்கள் வேரறுந்து கொண்டிருந் த நேரம்  கடைசி வரையும் உங்களையும் நம்பிக் கொண்டிருந்து தானே இருந்தோம்.  நீங்கள்   - குறிப்பாக  நீங்கள் -  எங்களிடையே ஒற்றுமை பற்றி உபதேசிப்பது  சற்றே நகை முரணாக இல்லை நண்பனே.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்லிக்கொண்டு அழிய வேண்டியதுதான்..ஒரு பயலும் தமிழர்களுக்கு உதவப்போவதில்லை..!

நன்றி.

Link to comment
Share on other sites

15 hours ago, thulasie said:

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

விவேக் என்கின்ற மனிதர் மேல் ஏன் இப்படியான வீண் வாதங்கள் ...சினிமா அவரின் தொழில் அவ்வளவு தான் ...மற்றும் படி ஈழ தமிழர் மேல் மதிப்புள்ள மனிதர் ....பாப்பனர் என்றால் ஏன் இந்த கோபம் ...
நம் நாட்டிலும் இருக்கின்றார்கள் தானே .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக்கை நான் பார்ப்பணனாகப் பார்க்கவில்லை. அவரது கருத்துக்களை நான் கேட்டிருக்கிறேன், சமூக சீர்திருத்தத்திற்காக பேசுபவர். அவர் பார்ப்பணத்தின் எடுபிடி என்பது நம்பமுடியாதது.

இங்கே அவர் குறிப்பிடும் எமக்கிடையைலான ஒற்றுமை என்பது உண்மைதானே? போராளிக்குழுக்கள், அரசியல்க் கட்சிகள் என்று எமக்குள் பேதங்களால் பிரிந்துதானே இருந்துவருகிறோம். இதைச் சுட்டிக் காட்டியதில் என்ன தவறு? 

எமக்குள் பிரிந்து அடிபட்டு அழிவதென்பது தமிழன் வாங்கிவந்த வரம். அது ஈழத் தமிழனாக இருந்தாலென்ன, தமிழகத் தமிழனாக இருந்தாலென்ன, நாம் மாறப்போவதில்லை.

எல்லோருக்குமாக ஒருத்தன் வந்தான், அவனையும் காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு தெருவில் நிற்கிறோம், இதுபோதாதா நாம் யாரென்று எமக்கு உணர்த்துவதற்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தான் இன்றய இலங்கை தமிழினம்.

 இன்றைய நிலையில் தேவைப்படுவது உணைர்ச்சிகரமான புலம்பல்கள் அன்றி சகலரும் பங்கு பற்றி நிற்கும்  செயல்பாடுகளே.

 மிகப் பலர் தாயகத்திலும் புலத்திலும் அர்ப்பணிப்புடன் இவ்வகையில் செயல்பட்டு வருவது மனதிற்கு இதமளிக்கக் கூடிய விடயம்.

 சும்மா சகட்டு மேனிக்கு யாரவது புத்திமதி சொல்ல வெளிக்கிட்டால் அதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. செயல்படுபவர்கள் மட்டுமே புத்திமதி சொல்லத் தக்கவர்கள். வியாபாரம் செய்ய வருபவர்கள் அல்ல நிச்சயமாக ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பேர்வழி இதனையே தமிழ்நாட்டு அரங்கம் ஒன்றில் ( இலங்கை சம்பந்தப் பட்ட பல நிகழ்வுகள் அங்கேயும் நடக்கின்றது )  எழுந்து நின்று புத்திமதி சொல்லி பிறழ்வை நிவர்த்தி செய்ய தன்னால் என்ன செய்ய முடியும் என்று கோடி காட்டியிருந்தால் ....ம் ம் ம். ....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் மட்டக்களப்பில் நடந்த நிகழ்வில் தமிழர்களிடையையே ஒற்றுமை இல்லை என்று சொன்னது  ஆதங்கத்தினால்தான் என்பதை புரியாமல் பார்ப்பனன் (அதுகூட உண்மையில்லை), கழிசடை என்று சொல்லி தம்மை மெச்சிக்கொள்பவர்களின் ரோதனை தாங்கமுடியவில்லை😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

முதல்லை உந்த சாமத்திய வீட்டு வீடியோ......கலியாணவீட்டு வீடியோக்களிலை சினிமாப்பாட்டு போட்டு வாழ்த்திறதை நிப்பாட்டச்சொல்லுங்கோ....:grin:

நல்லதை எடுத்து கெட்டதை விட்டுடணும்....இது நம்ம கொள்கை.😎

ஆன்மிகம் சம்மந்தப்படட ஒரு நிகழ்வில் சினிமாக்காரர்கள் தேவையில்லை என்பது என் கருத்து. சினிமாவை ரசிப்பதில் தப்பில்லை...விவேக் இதில் சொன்னதும் உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் கருத்தாடல்கள்,  திரியின் உணர்வு பூர்வமான உள்ளடங்கல்  காரணமாக, கருத்தாடலின் சில வரை முறைகளை தாண்டி செல்ல தலைப்பட்டிருக்கின்றது போலும்….

 

  1. முன்பே நினைத்தேன்,  சாதி பெயர்களை சொல்லி இணைக்கப்படும் கருத்தாடல்களை நிர்வாகம் ஏன் அனுமதித்திருக்கின்றது என.  பொதுவெளியில் இவற்றிற்கு இடமில்லை என்பது வெளிப்படை .

     

  2.  நடிகர் விவேக் தனது உரையில் தனது எல்லையத் தாண்டியே சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் அவை உண்மையா பொய்யா என்பதல்ல இங்கேயே பிரச்சினை . (  சபை அறிந்து சொல்லல் சந்தர்ப்பம் அறிந்து சொல்லல் … )  

     

  3. தமிழ் நாட்டினர் பல காலம் எங்களுக்கு புகலிடம் கொடுத்தார்கள் -- நன்றியுடையவர்களாக இருக்கிறோம் .

  4. தமிழ் நாட்டினரும் நாங்களும் ஒரே மொழியைப் பேசுகிறோம் --  நட்பாக இருக்கிறோம் .

     

  5. தமிழ் நாட்டினரின் சக்தி மிக்க ஒரு பகுதி எங்களை வியாபார சந்தையாக பார்க்கின்றனர் --  அவதானமாக இருக்கிறோம்  (  சில காலத்திற்கு முன்னர் எனது மகளின் நாட்டிய அர்நாகேற்றத்திற்கு சென்னையில் இருந்த ஒரு இசை வல்லுனரை பாட வர முடியமா என கேட்டிருந்தேன் .  பாட வருவற்கில்லை  , “ Chief Guest”  ஆக வேண்டுமென்றால் வருகின்றேன் என்கிறார் ?  கடுப்பாகி அதை கைவிடடேன்.  தொடர்ந்து வந்த மேலும் பல அனுபவங்களின் அடிப்படையில் , சுரண்டுவதற்கு இலகுவான இலக்குகள் என்று இலங்கைத் தமிழரை கணித்து வைத்திருக்கின்றனர் என தோன்றிற்று )

     

  6. 1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே , களத்திலும்  சரி புலத்திலும் சரி. இல்லாவிட்டால் , (தர்க்க ரீதியாக  பார்த்தாலும் கூட)  சம கால கட்டத்தில் தெரிந்தெடுக்கப் படாத  அரசாங்கம் அல்லாத  ஒரு அமைப்பு முப்படைகளையும் கொண்டு வருடக் கணக்காக இயங்கியிருக்க முடியாது.   பின்னடைவிற்கு   பல காரணங்கள் உண்டு,  தமிழ் நாட்டு காரணி உட்பட.

     

    ஆகவே விவேக் சார் , இலங்கைத் தமிழரின் ஒற்றுமை பற்றி போகிற போக்கில் கமெண்ட் அடிப்பதை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வலிக்கின்றது

 

Link to comment
Share on other sites

இலங்கைத் தமிழர் நிலைமைகளைப் பார்த்து தனது மனதுக்கு தோன்றியதை தனது பாணியில் சொல்லியிருக்கிறார். இதில் தவறிருப்பதாக தெரியவில்லை!

மேலும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் செல்வது அந்த மக்களின் நிலைமைகளை நேரடியாக அறிய ஒருவாய்ப்பாக இருக்கும்.

காந்தி சிலைகளுக்கு மாலை போடுவதை தவிர்த்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்திக்க வைத்திருக்கலாம். இது விவேக்கின் தவறல்ல, மாறாக இது ஏற்பாடு செய்தவர்களின் வறட்டு / பிற்போக்கு மனநிலையை காட்டுகிறது.

விவேக் உண்மையில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள ஒருவரா என்பதை அவரது  எதிர்கால செயற்பாடுகள் உணர்த்தும். 

Link to comment
Share on other sites

10 hours ago, சாமானியன் said:

1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே ,

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

அது ஒற்றுமையே இல்லை.

வன்முறை.

இதையே இன்றும் யாழ் தொடர்வதும்  வேதனையானது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

முன்பே நினைத்தேன்,  சாதி பெயர்களை சொல்லி இணைக்கப்படும் கருத்தாடல்களை நிர்வாகம் ஏன் அனுமதித்திருக்கின்றது என.  பொதுவெளியில் இவற்றிற்கு இடமில்லை என்பது வெளிப்படை .

சாதி என்பது உண்மைகளை, அதுவும் வரலாற்று அல்லது நிகழ்கால உண்மைகளை சொல்வதத்திற்கும், சாதியால்  எப்படி ஒருவரை ஒருவர் வேறுபடுத்தி, சாதியின் அடிப்படையில் ஒருவரை உயர்த்தியும் ஏனெயயோரை தாழ்த்தியும்  வேறுபடுத்துதல் என்பது தவிர்க்கப்படுதல்  வேண்டும் என்ற நிர்வாகத்தின் உயர்ந்த கொள்கைக்கும் இடையேயான வெளியில், சாதி என்ற சொல்லின் விருப்புரிமை பிரயோகத்தின் உங்களின்(தவறான ) புரிதலே இது.

நான் நிர்வாகத்தின் ஓர் அங்கம் அன்று.   

மறுவளமாக, இங்கு சாதி என்ற சொல்லின் பிரயோகம் எப்படி அந்த குறித்த சாதியின்  ஓர் பகுதியினர், அவர்களது  தேசிய குழுமத்திற்கு  (அதாவது தமிழரை) எவ்வாறு பங்கம் விளைவிக்கின்றனர் எனும் கருத்தை முன்வைப்பதிற்கே பிரோயோகிப்பட்டது.

 சாதி (அல்லது வேறு எந்த சர்ச்சைக்குரிய சொல்லாகட்டும்) என்ற சொல்லின் இப்படிப்பட்ட பிரயோகம் தவிர்க்கப்பட முடியாதது.
 
சுருக்கமாக, சர்ச்சைக்குரிய சொல்லை பாவிக்கும் பொது எந்த நோக்கத்திற்காக பவிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அந்த சொல்லின் சகிப்புடமை,  ஏற்புடைமையோ அல்லது வெறுப்புடைமையோ தீர்மானிக்கப்படுகிறது.

இதை அடிப்படையாக வைத்தே, இதுவரையிலும் யாழில் எனது கருத்துக்களை பதிவிட்டிருக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.