Jump to content

எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…:நடிகர் விவேக்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று (11.03.19) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய விவேக், 2ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு பழைமைவாய்ந்த, தொன்மையான பூமி இலங்கையெனவும், சுமார் 35000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்த ஒரே பூமி இலங்கையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அனைத்து வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைப் பூமியில் ஒற்றுமை மட்டும் கம்மியாக உள்ளதென குறிப்பிட்ட விவேக், அதனை சரிசெய்துவிட்டால் உலகில் இலங்கை மக்களை விஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2019/115854/

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

விவேக் பார்ப்பனரல்லவே...

Link to comment
Share on other sites

29 minutes ago, Nathamuni said:

விவேக் பார்ப்பனரல்லவே...

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, thulasie said:

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

நீங்கள் சொல்வது போன்று, விவேக் குரல் கொடுத்ததிற்கு ஆதாரம் உண்டா? இணையத்தள செய்திகள் அல்லது விடீயோக்கள்.

பார்ப்பனர் என்று சொல்வதின் அர்த்தம் உங்களுகு புரிந்து  தான் எழுதியிருக்கிறீர்களா?

இந்த பார்ப்பனர் என்ற சொல்ல தமிழ் நாட்டை பொறுத்தவரையில், ஈழத்தமிழரை பொறுத்தவரையில், ஆரிய பிராமணர்களில் ஒரு பகுதியையே குறிப்பிட்டு சொல்கிறோம்.

இந்த பாரிய பிராமணர்களின், தமிழ் நாட்டு பூர்விகம் கடந்த 1000 வருடங்களுக்கு உட்பட்டது.

உதாரணமாக, இந்து ராம் போன்றவர்கள் இந்த வரையறைக்குள் அடங்குவார்கள். இவர்களே தமிழருக்கு, தமிழ் நாட்டில் இருக்கும் தமிழருக்கே ஆப்பு வைக்கும் வேலைகளை செய்பவர்கள்.

பட்டுக்குடும்பி ராமன் (முன்னாள் செயலக RAW உளவாளி) இப்படிப்பட்ட ஆரிய பிராமணர்கள்.

இப்படிப்பட்ட ஆரிய பிராமன்கள் கையிலேயே, ஊடகம், அரசியல் செல்வாக்கு மற்றும் போதியளவு பணமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் பிராமணர்கள், தமிழே மூச்சு, பேச்சு, உயிர் என்று வாழ்பவர்கள். இவர்கள் பொதுவாக  சாதரண வாழக்கை வாழபவர்கள்.  உதாரணமாக, ராஜீவுடனும், மற்றும் கேரளா  நம்பூதிரிகளுடனும் சவுத் ப்ளாக்கில், ஈழத்தமிழருக்கு எதிரான கொள்கையைக் கண்டு கொதித்து கொள்ளுவுப்பட்டு, தனது பத்தாஹ்வியைத் துறந்த வெங்கடராமனும் பிராமணர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எதற்கெடுத்தாலும் சினிமாக்காரர்களை ஊருக்கு கூப்பிடும் பழக்கம் தோன்றியுள்ளது (நான் விவேக்கிற்கு எதிர் இல்லை)...அவர்களை கூப்பிட்டு கலை நிகழ்ச்சி வைப்பது என்பது வேறு...ஆனால் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சினிமாக்காரர்களை கூப்பிடுவது ஏற்புடையது அல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவர் சொன்னதிலை உண்மை இருக்குத்தானே.....சும்மா எடுத்துக்கெல்லாம் கொதிக்கப்படாது...ஈழத்தமிழனின் வளர்ச்சி  சிங்களவருக்கும் இந்தியாவுக்கும் நன்றாகவே தெரிகின்றது.
ஆனால் எமக்கு??????
கோபுரத்தின் அழகு கிட்ட நின்று பார்த்தால் தெரியாதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இப்ப எதற்கெடுத்தாலும் சினிமாக்காரர்களை ஊருக்கு கூப்பிடும் பழக்கம் தோன்றியுள்ளது (நான் விவேக்கிற்கு எதிர் இல்லை)...அவர்களை கூப்பிட்டு கலை நிகழ்ச்சி வைப்பது என்பது வேறு...ஆனால் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சினிமாக்காரர்களை கூப்பிடுவது ஏற்புடையது அல்ல 

முதல்லை உந்த சாமத்திய வீட்டு வீடியோ......கலியாணவீட்டு வீடியோக்களிலை சினிமாப்பாட்டு போட்டு வாழ்த்திறதை நிப்பாட்டச்சொல்லுங்கோ....:grin:

நல்லதை எடுத்து கெட்டதை விட்டுடணும்....இது நம்ம கொள்கை.😎

Link to comment
Share on other sites

7 hours ago, thulasie said:

பார்ப்பானுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பவன் 

 

8 hours ago, Nathamuni said:

விவேக் பார்ப்பனரல்லவே...

பல்ப்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விவேக், ஈழத் தமிழர்கள் மேல் அன்பு கொண்டவர் என்பதனை,
அவரின் பேச்சுக்களிலும், அவர் நடித்த சில படங்களிலும், ஈழத்து தமிழ் பேசி நடித்து இருப்பவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங் விவேக் தம்பி,  என்ன ஒரு சிந்தனை பட் இலங்கை டேமில்ஸ் எல்லாம் நல்ல ஒற்றுமை.

இப்ப பொள்ளாச்சி தானே issue , அதைக் கொஞ்சம் கவனிக்கிறது. . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவர் குறிப்பிட்டதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

பிழைகளை நிவர்த்தி செய்ய ஆதங்கப்பட்டு சொன்னால், "எல்லாம் எமக்குத் தெரியும்,  ஒன் வேலையைப் பார்.." என சொல்வது என்ன மனநிலையோ..? :oO:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் கூறியது முற்றிலும் உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவரையும் Quote  பண்ண விரும்பவில்லை.  உவர் சொல்லும் உந்த ஒற்றுமையில் ஒரு சத வீதமேனும் அன்று உங்களிடையே இருந்து செயல்பட்டிருந்தால் இன்று நிலை வேறு.  நாங்கள் வேரறுந்து கொண்டிருந் த நேரம்  கடைசி வரையும் உங்களையும் நம்பிக் கொண்டிருந்து தானே இருந்தோம்.  நீங்கள்   - குறிப்பாக  நீங்கள் -  எங்களிடையே ஒற்றுமை பற்றி உபதேசிப்பது  சற்றே நகை முரணாக இல்லை நண்பனே.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்லிக்கொண்டு அழிய வேண்டியதுதான்..ஒரு பயலும் தமிழர்களுக்கு உதவப்போவதில்லை..!

நன்றி.

Link to comment
Share on other sites

15 hours ago, thulasie said:

இவனுக்கு பார்ப்பனப் புத்தி ஒருபோதும் விட்டகலாது.

தமிழரான தலித்துகள், சாதி குறைந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை சரிசமமாக கவனிப்பதுமில்லை. அரவணைப்பதும்  இல்லை - தமிழகத்தில்.

ஒற்றுமையைப்பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டார், தமிழ் நாட்டு சினிமாக் கழிசடை விவேக்.

விவேக் என்கின்ற மனிதர் மேல் ஏன் இப்படியான வீண் வாதங்கள் ...சினிமா அவரின் தொழில் அவ்வளவு தான் ...மற்றும் படி ஈழ தமிழர் மேல் மதிப்புள்ள மனிதர் ....பாப்பனர் என்றால் ஏன் இந்த கோபம் ...
நம் நாட்டிலும் இருக்கின்றார்கள் தானே .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக்கை நான் பார்ப்பணனாகப் பார்க்கவில்லை. அவரது கருத்துக்களை நான் கேட்டிருக்கிறேன், சமூக சீர்திருத்தத்திற்காக பேசுபவர். அவர் பார்ப்பணத்தின் எடுபிடி என்பது நம்பமுடியாதது.

இங்கே அவர் குறிப்பிடும் எமக்கிடையைலான ஒற்றுமை என்பது உண்மைதானே? போராளிக்குழுக்கள், அரசியல்க் கட்சிகள் என்று எமக்குள் பேதங்களால் பிரிந்துதானே இருந்துவருகிறோம். இதைச் சுட்டிக் காட்டியதில் என்ன தவறு? 

எமக்குள் பிரிந்து அடிபட்டு அழிவதென்பது தமிழன் வாங்கிவந்த வரம். அது ஈழத் தமிழனாக இருந்தாலென்ன, தமிழகத் தமிழனாக இருந்தாலென்ன, நாம் மாறப்போவதில்லை.

எல்லோருக்குமாக ஒருத்தன் வந்தான், அவனையும் காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு தெருவில் நிற்கிறோம், இதுபோதாதா நாம் யாரென்று எமக்கு உணர்த்துவதற்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தான் இன்றய இலங்கை தமிழினம்.

 இன்றைய நிலையில் தேவைப்படுவது உணைர்ச்சிகரமான புலம்பல்கள் அன்றி சகலரும் பங்கு பற்றி நிற்கும்  செயல்பாடுகளே.

 மிகப் பலர் தாயகத்திலும் புலத்திலும் அர்ப்பணிப்புடன் இவ்வகையில் செயல்பட்டு வருவது மனதிற்கு இதமளிக்கக் கூடிய விடயம்.

 சும்மா சகட்டு மேனிக்கு யாரவது புத்திமதி சொல்ல வெளிக்கிட்டால் அதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. செயல்படுபவர்கள் மட்டுமே புத்திமதி சொல்லத் தக்கவர்கள். வியாபாரம் செய்ய வருபவர்கள் அல்ல நிச்சயமாக ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பேர்வழி இதனையே தமிழ்நாட்டு அரங்கம் ஒன்றில் ( இலங்கை சம்பந்தப் பட்ட பல நிகழ்வுகள் அங்கேயும் நடக்கின்றது )  எழுந்து நின்று புத்திமதி சொல்லி பிறழ்வை நிவர்த்தி செய்ய தன்னால் என்ன செய்ய முடியும் என்று கோடி காட்டியிருந்தால் ....ம் ம் ம். ....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் மட்டக்களப்பில் நடந்த நிகழ்வில் தமிழர்களிடையையே ஒற்றுமை இல்லை என்று சொன்னது  ஆதங்கத்தினால்தான் என்பதை புரியாமல் பார்ப்பனன் (அதுகூட உண்மையில்லை), கழிசடை என்று சொல்லி தம்மை மெச்சிக்கொள்பவர்களின் ரோதனை தாங்கமுடியவில்லை😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

முதல்லை உந்த சாமத்திய வீட்டு வீடியோ......கலியாணவீட்டு வீடியோக்களிலை சினிமாப்பாட்டு போட்டு வாழ்த்திறதை நிப்பாட்டச்சொல்லுங்கோ....:grin:

நல்லதை எடுத்து கெட்டதை விட்டுடணும்....இது நம்ம கொள்கை.😎

ஆன்மிகம் சம்மந்தப்படட ஒரு நிகழ்வில் சினிமாக்காரர்கள் தேவையில்லை என்பது என் கருத்து. சினிமாவை ரசிப்பதில் தப்பில்லை...விவேக் இதில் சொன்னதும் உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் கருத்தாடல்கள்,  திரியின் உணர்வு பூர்வமான உள்ளடங்கல்  காரணமாக, கருத்தாடலின் சில வரை முறைகளை தாண்டி செல்ல தலைப்பட்டிருக்கின்றது போலும்….

 

  1. முன்பே நினைத்தேன்,  சாதி பெயர்களை சொல்லி இணைக்கப்படும் கருத்தாடல்களை நிர்வாகம் ஏன் அனுமதித்திருக்கின்றது என.  பொதுவெளியில் இவற்றிற்கு இடமில்லை என்பது வெளிப்படை .

     

  2.  நடிகர் விவேக் தனது உரையில் தனது எல்லையத் தாண்டியே சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் அவை உண்மையா பொய்யா என்பதல்ல இங்கேயே பிரச்சினை . (  சபை அறிந்து சொல்லல் சந்தர்ப்பம் அறிந்து சொல்லல் … )  

     

  3. தமிழ் நாட்டினர் பல காலம் எங்களுக்கு புகலிடம் கொடுத்தார்கள் -- நன்றியுடையவர்களாக இருக்கிறோம் .

  4. தமிழ் நாட்டினரும் நாங்களும் ஒரே மொழியைப் பேசுகிறோம் --  நட்பாக இருக்கிறோம் .

     

  5. தமிழ் நாட்டினரின் சக்தி மிக்க ஒரு பகுதி எங்களை வியாபார சந்தையாக பார்க்கின்றனர் --  அவதானமாக இருக்கிறோம்  (  சில காலத்திற்கு முன்னர் எனது மகளின் நாட்டிய அர்நாகேற்றத்திற்கு சென்னையில் இருந்த ஒரு இசை வல்லுனரை பாட வர முடியமா என கேட்டிருந்தேன் .  பாட வருவற்கில்லை  , “ Chief Guest”  ஆக வேண்டுமென்றால் வருகின்றேன் என்கிறார் ?  கடுப்பாகி அதை கைவிடடேன்.  தொடர்ந்து வந்த மேலும் பல அனுபவங்களின் அடிப்படையில் , சுரண்டுவதற்கு இலகுவான இலக்குகள் என்று இலங்கைத் தமிழரை கணித்து வைத்திருக்கின்றனர் என தோன்றிற்று )

     

  6. 1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே , களத்திலும்  சரி புலத்திலும் சரி. இல்லாவிட்டால் , (தர்க்க ரீதியாக  பார்த்தாலும் கூட)  சம கால கட்டத்தில் தெரிந்தெடுக்கப் படாத  அரசாங்கம் அல்லாத  ஒரு அமைப்பு முப்படைகளையும் கொண்டு வருடக் கணக்காக இயங்கியிருக்க முடியாது.   பின்னடைவிற்கு   பல காரணங்கள் உண்டு,  தமிழ் நாட்டு காரணி உட்பட.

     

    ஆகவே விவேக் சார் , இலங்கைத் தமிழரின் ஒற்றுமை பற்றி போகிற போக்கில் கமெண்ட் அடிப்பதை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வலிக்கின்றது

 

Link to comment
Share on other sites

இலங்கைத் தமிழர் நிலைமைகளைப் பார்த்து தனது மனதுக்கு தோன்றியதை தனது பாணியில் சொல்லியிருக்கிறார். இதில் தவறிருப்பதாக தெரியவில்லை!

மேலும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் செல்வது அந்த மக்களின் நிலைமைகளை நேரடியாக அறிய ஒருவாய்ப்பாக இருக்கும்.

காந்தி சிலைகளுக்கு மாலை போடுவதை தவிர்த்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்திக்க வைத்திருக்கலாம். இது விவேக்கின் தவறல்ல, மாறாக இது ஏற்பாடு செய்தவர்களின் வறட்டு / பிற்போக்கு மனநிலையை காட்டுகிறது.

விவேக் உண்மையில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள ஒருவரா என்பதை அவரது  எதிர்கால செயற்பாடுகள் உணர்த்தும். 

Link to comment
Share on other sites

10 hours ago, சாமானியன் said:

1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே ,

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

அது ஒற்றுமையே இல்லை.

வன்முறை.

இதையே இன்றும் யாழ் தொடர்வதும்  வேதனையானது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

முன்பே நினைத்தேன்,  சாதி பெயர்களை சொல்லி இணைக்கப்படும் கருத்தாடல்களை நிர்வாகம் ஏன் அனுமதித்திருக்கின்றது என.  பொதுவெளியில் இவற்றிற்கு இடமில்லை என்பது வெளிப்படை .

சாதி என்பது உண்மைகளை, அதுவும் வரலாற்று அல்லது நிகழ்கால உண்மைகளை சொல்வதத்திற்கும், சாதியால்  எப்படி ஒருவரை ஒருவர் வேறுபடுத்தி, சாதியின் அடிப்படையில் ஒருவரை உயர்த்தியும் ஏனெயயோரை தாழ்த்தியும்  வேறுபடுத்துதல் என்பது தவிர்க்கப்படுதல்  வேண்டும் என்ற நிர்வாகத்தின் உயர்ந்த கொள்கைக்கும் இடையேயான வெளியில், சாதி என்ற சொல்லின் விருப்புரிமை பிரயோகத்தின் உங்களின்(தவறான ) புரிதலே இது.

நான் நிர்வாகத்தின் ஓர் அங்கம் அன்று.   

மறுவளமாக, இங்கு சாதி என்ற சொல்லின் பிரயோகம் எப்படி அந்த குறித்த சாதியின்  ஓர் பகுதியினர், அவர்களது  தேசிய குழுமத்திற்கு  (அதாவது தமிழரை) எவ்வாறு பங்கம் விளைவிக்கின்றனர் எனும் கருத்தை முன்வைப்பதிற்கே பிரோயோகிப்பட்டது.

 சாதி (அல்லது வேறு எந்த சர்ச்சைக்குரிய சொல்லாகட்டும்) என்ற சொல்லின் இப்படிப்பட்ட பிரயோகம் தவிர்க்கப்பட முடியாதது.
 
சுருக்கமாக, சர்ச்சைக்குரிய சொல்லை பாவிக்கும் பொது எந்த நோக்கத்திற்காக பவிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அந்த சொல்லின் சகிப்புடமை,  ஏற்புடைமையோ அல்லது வெறுப்புடைமையோ தீர்மானிக்கப்படுகிறது.

இதை அடிப்படையாக வைத்தே, இதுவரையிலும் யாழில் எனது கருத்துக்களை பதிவிட்டிருக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.