Jump to content

எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…:நடிகர் விவேக்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

அது ஒற்றுமையே இல்லை.

வன்முறை.

இதையே இன்றும் யாழ் தொடர்வதும்  வேதனையானது 

வாருங்கள் ஜீவன் , 

1990- 2000  காலகட்டத்தின்  ஏறக்குறைய அரைப் பகுதியை  திருமலை , யாழ் , கொழும்பு ஆகிய பகுதிகளிலும் மீதியை புலம் பெயர் நாடுகளிலும் கழித்தவன் என்ற முறையிலும் , இயக்கங்கள் எதிலும் நேரடி அங்கத்துவம் வகித்திராத ஒரு சராசரி குடிமகனாக , அதே வேலை பலதரப்பட்ட இயக்க உறுப்பினர்களுடன் அலுவலக மற்றும் தனிப்பட்ட ரிபீதியில்   தொடர்பு கொண்டிருக்க வேண்டியிருந்த  ஒருவன் என்ற முறையில் , மன்னிக்கவும் , நான் உங்கள் கருத்துடன் ஒத்துப் போக முடியாது நிற்கின்றேன்। 

விடயங்களை குறுகிய மற்றும் நெடும் போக்கு பார்வைகளில் பார்க்கும் போது வேறு வகையாக தெரிவது இயற்கை

1) ஒரு சுவாமியார் ஒரு சமயம் என்னிடம் குறிப்பிடடார் " அவர்கள் சில விடயங்களை வேறு மாதிரி கையாண்டிருந்திருக்கலாம் , நான் அவர்களின் பாதங்களை கழுவி அந்த நீரை அருந்துவேன்,   இதன் மூலம்  அவர்கள் செய்திருக்கக் கூடிய பாவங்களை என்னிடம் மாற்றி விடுமாறு நான் வேண்டிக்  கொள்வேன் என்று.   இதனை நான் ஒற்றுமை என்று எடுத்துக் கொள்கிறேன் , இங்கே அடக்கு முறை இருப்பதாக நினைக்கவில்லை

2) ஈச்சிலம்பற்று கிராமத்துக்கு தேர்தல் கடமையாக போய் கொண்டிருந்த போது இயக்கமொன்றை சேர்ந்த இளவல்கள் வழி மறித்து  ஏறிக் கொண்டனர் கதைகளின் நடுவில் ஒருவர் சொன்னார் " தம்பியை மாத்திரம் சந்திக்க என்னை அனுமதித்தால் , எல்லாவற்றையும் நான் நேர் செய்து விடுவேன்"  என்று  இஙகேயும் அந்த எல்லோரையும் ஒன்று சேர்க்கும் ஒற்றுமையத் தான் காண முடிந்தது  

3) முரண்பாடுகளின் முடிவில் விளையும் வன்முறைகள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் தான்  , முரண்பாடுகள்  இரு  கை ஓசையினால் விளைவன,   அதன் தீர்வுகள் பொதுவாக  நேர் சீராக இருப்பதில்லை   இதனையும் " கூட்டு ஒற்றுமையினையும் " சேர்த்துப் பார்த்து குழப்பமடையத் தேவையில்லை   

 

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply
51 minutes ago, சாமானியன் said:

வாருங்கள் ஜீவன்

ஒரு அராஜகம் தாண்டவமாடின காலம் அது.

பயங்கரவாதம் தலைவிரி கோலமாய் கோலோச்சின நாட்கள் அவை 

அந்த பயங்கரவாதத்தைத்தான் நான் சொல்கின்றேன்.

நீங்கள் அதை ஒற்றுமையான காலம் என்கிறீர்களே 

அதுதான் இங்கு பிரச்சனை.

...................................

இப்போது இங்கு ஒரு முன்னாள் போராளிக்கு உதவ ஒரு திரி திறந்து பாருங்கள் 

விசுகுவைத் தவிர அநேகமானவர்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

சரி, அப்படியே இருக்கட்டும். இந்தக் காலத்திற்கு முன்னரும், அதற்குப் பின்னரும், அதனோடு ஒருமித்தும் தமிழருக்கெதிராக எதுவுமே, எவராலுமே நடத்தப்படவில்லையா? அல்லது அது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?  நீங்கள் போட்டிருக்கும் கண்ணாடி, அவை எல்லாவற்றையும் வடித்தகற்றிவிட்டு, வெறும் புலியெதிர்ப்பை மட்டுமே பாருங்கள் என்று கூறியதா?

உங்களின் சாக்கடைப் புலியெதிர்ப்பு அரசியலில், கடந்த 70 ஆண்டுகளாய் சிங்களப் பேரினவாதம் தமிழருக்கெதிராக நிகழ்த்திவரும் திட்டமிட்ட இனக்கொலை தெரியாமல்ப் போனது துரதிஷ்ட்டம்தான்! அல்லது அது தமிழரின் அதிஷ்ட்டம் என்று கருதுகிறீர்களோ என்னவோ?

உங்களின் இந்தப் புலியெதிர்ப்பு அரசியல் அருவருக்கிறது. சீ...தூ!

Link to comment
Share on other sites

13 minutes ago, ragunathan said:

சரி, அப்படியே இருக்கட்டும். இந்தக் காலத்திற்கு முன்னரும், அதற்குப் பின்னரும், அதனோடு ஒருமித்தும் தமிழருக்கெதிராக எதுவுமே, எவராலுமே நடத்தப்படவில்லையா? அல்லது அது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?  


  


புலிக்கூட்டம் செய்த கொலைகள் அப்படியே இருக்கட்டுமா?

அவைகளைக் கண்ணாடி போட்டு பார்க்க மாட்டீர்களா?

ஜீவன் சொல்வது, புலிகளின் காலத்தில் புலிகளால் நிகழ்த்தப்பட்ட காட்டு தர்பாரை.

புலிகளின் முன் அல்லது பின்னால் நடத்தப்பட்ட/நடத்தப்படும் நிகழ்வுகள் அல்ல இங்கு பேசுபொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, thulasie said:


  


புலிக்கூட்டம் செய்த கொலைகள் அப்படியே இருக்கட்டுமா?

அவைகளைக் கண்ணாடி போட்டு பார்க்க மாட்டீர்களா?

ஜீவன் சொல்வது, புலிகளின் காலத்தில் புலிகளால் நிகழ்த்தப்பட்ட காட்டு தர்பாரை.

புலிகளின் முன் அல்லது பின்னால் நடத்தப்பட்ட/நடத்தப்படும் நிகழ்வுகள் அல்ல இங்கு பேசுபொருள்.

இங்கு பேசுபொருள் உங்களின் புலியெதிர்ப்பு அரசியல் இல்லை. அதை இன்னொரு திரி திறந்து பேசுங்கள்.  உங்களின் சாக்கடைகளை அங்கே கொட்டுங்கள், உங்களைப்போன்றவர்கள் கிளறியெடுத்து மென்று விழுங்கவும், மீண்டும் கக்கவும் அது உதவியாக இருக்கும். 

நடிகர் விவேக்கின் கருத்துப்பற்றித்தான் இங்கு பேசுகிறோம். அவர் எங்கும் புலியெதிர்ப்புப் பற்றிப் பேசவில்லை. தெரியாவிட்டால் மீண்டும் திரியின் தலைப்பைப் பார்த்துவிட்டு வாருங்கள். முதல் கருத்தில் சொல்லியதை, இல்லை என்று மறுக்கும் உங்களுக்கு இது தெரியப்போவதில்லை.

எது பேசுபொருளாக இருந்தாலும் உங்களுக்கு புலிவாந்தியெடுக்கக் களம் அமைக்கப் பாடுபடுகிறீர்கள். போகுமிடமெல்லாம் கக்கி விடவேண்டும் என்கிற அவா உங்களுக்கு. 

Link to comment
Share on other sites

1 minute ago, ragunathan said:

இங்கு பேசுபொருள் உங்களின் புலியெதிர்ப்பு அரசியல் இல்லை. அதை இன்னொரு திரி திறந்து பேசுங்கள்.  உங்களின் சாக்கடைகளை அங்கே கொட்டுங்கள், உங்களைப்போன்றவர்கள் கிளறியெடுத்து மென்று விழுங்கவும், மீண்டும் கக்கவும் அது உதவியாக இருக்கும். 

நடிகர் விவேக்கின் கருத்துப்பற்றித்தான் இங்கு பேசுகிறோம். அவர் எங்கும் புலியெதிர்ப்புப் பற்றிப் பேசவில்லை. தெரியாவிட்டால் மீண்டும் திரியின் தலைப்பைப் பார்த்துவிட்டு வாருங்கள். முதல் கருத்தில் சொல்லியதை, இல்லை என்று மறுக்கும் உங்களுக்கு இது தெரியப்போவதில்லை.

எது பேசுபொருளாக இருந்தாலும் உங்களுக்கு புலிவாந்தியெடுக்கக் களம் அமைக்கப் பாடுபடுகிறீர்கள். போகுமிடமெல்லாம் கக்கி விடவேண்டும் என்கிற அவா உங்களுக்கு. 

ஜீவனின் கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்தால், அவர் என்ன சொன்னாரோ அதைப்பற்றித்தான் தங்களது கருத்தும் இருக்க  வேண்டும்.

அவர் விவேக்கைபற்றி எழுதவில்லை. புலிகளின் அராஜகங்களை எழுதியிருக்கிறார். புலிகளின் பயங்கரவாதம்தான் இங்கு பேசுபொருள்.

அதைச் சுற்றி எழுதுவதை விட்டுவிட்டு, புலிகளின் பயங்கரவாதத்திற்கு முன்னும் பின்னும் கதைப்பது, பேசுபொருளுக்கு முரண் அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

ஜீவனின் கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்தால், அவர் என்ன சொன்னாரோ அதைப்பற்றித்தான் தங்களது கருத்தும் இருக்க  வேண்டும்.

அவர் விவேக்கைபற்றி எழுதவில்லை. புலிகளின் அராஜகங்களை எழுதியிருக்கிறார். புலிகளின் பயங்கரவாதம்தான் இங்கு பேசுபொருள்.

அதைச் சுற்றி எழுதுவதை விட்டுவிட்டு, புலிகளின் பயங்கரவாதத்திற்கு முன்னும் பின்னும் கதைப்பது, பேசுபொருளுக்கு முரண் அல்லவா? 

 

எது? ? ஜீவனின் கருத்துக்கு பதிலெழுதுவதா?

அவர் சம்பந்தமேயில்லாமல் திரியைத் திசை திருப்பி புலிவாந்தி எடுப்பார், நாங்கள் அதற்குச் சங்கு ஊதிச் சல்லரிரியைத் தட்டவேண்டும் என்கிறீர்களா? 

கருத்து தலைப்புடன் சம்பந்தப்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உங்களின் சாக்கடைகளுக்குப் பதில்தரவேண்டிய தேவை இல்லை. 

4 minutes ago, thulasie said:

ஜீவனின் கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்தால், அவர் என்ன சொன்னாரோ அதைப்பற்றித்தான் தங்களது கருத்தும் இருக்க  வேண்டும்.

அவர் விவேக்கைபற்றி எழுதவில்லை. புலிகளின் அராஜகங்களை எழுதியிருக்கிறார். புலிகளின் பயங்கரவாதம்தான் இங்கு பேசுபொருள்.

அதைச் சுற்றி எழுதுவதை விட்டுவிட்டு, புலிகளின் பயங்கரவாதத்திற்கு முன்னும் பின்னும் கதைப்பது, பேசுபொருளுக்கு முரண் அல்லவா? 

பேசுபொருளின் முரண் பற்றி நீங்க்கள் பேசுமுன், பேசுபொருளைத் திசை திருப்பாமல், புலிவாந்தியெடுக்காமல் கருத்துக்கு கருத்தினால் பதில் சொல்லமுடியுமா என்று பாருங்கள். இல்லையென்றால், உங்களுக்கென்றே இயங்கும் களங்களில் வாந்தியெடுங்கள், உங்களுக்கும் திருப்தியாக இருக்கும். 

Link to comment
Share on other sites

2 minutes ago, ragunathan said:

 

எது? ? ஜீவனின் கருத்துக்கு பதிலெழுதுவதா?

அவர் சம்பந்தமேயில்லாமல் திரியைத் திசை திருப்பி புலிவாந்தி எடுப்பார், நாங்கள் அதற்குச் சங்கு ஊதிச் சல்லரிரியைத் தட்டவேண்டும் என்கிறீர்களா? 

கருத்து தலைப்புடன் சம்பந்தப்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உங்களின் சாக்கடைகளுக்குப் பதில்தரவேண்டிய தேவை இல்லை. 

ஒரு திரி ஒன்றைப்பற்றிச் சொல்ல, அதற்கு சம்பந்தமில்லாதவைகளைத்தான் பலர் எழுதுகிறார்கள்.

அப்படி சம்பந்தமில்லாதவைகளை எழுதும்போது, உங்களுக்கு சீரணிக்க முடிகிறது. 

அப்படி சம்பந்தமில்லவைகள் ஒரு போதும் புலியெதிர்ப்பாக இருக்கக் கூடாது என்பதில் ஏன் கரிசனையாக இருக்கிறீர்கள்?

திரிக்கு சம்பந்தமில்லாதவைகள், புலிக்கு எதிர்ப்பாக இருந்தாலென்ன, சார்பாக இருந்தாலென்ன - அவைகளையும் சீரணிக்கப் பழகிக்கொள்வதில் உங்களுக்கு யார் முட்டுக்கட்டை போடுகிறார்கள்?

புலிகள் செய்த படுகொலைகள் ஏன் உங்களின் கண்களுக்கு தெரிவதில்லை.

ஒட்டுமொத்த தமிழின ஒற்றுமைக்கும் பங்கம்  விளைத்தவர்கள் அவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, thulasie said:

ஒரு திரி ஒன்றைப்பற்றிச் சொல்ல, அதற்கு சம்பந்தமில்லாதவைகளைத்தான் பலர் எழுதுகிறார்கள்.

அப்படி சம்பந்தமில்லாதவைகளை எழுதும்போது, உங்களுக்கு சீரணிக்க முடிகிறது. 

அப்படி சம்பந்தமில்லவைகள் ஒரு போதும் புலியெதிர்ப்பாக இருக்கக் கூடாது என்பதில் ஏன் கரிசனையாக இருக்கிறீர்கள்?

திரிக்கு சம்பந்தமில்லாதவைகள், புலிக்கு எதிர்ப்பாக இருந்தாலென்ன, சார்பாக இருந்தாலென்ன - அவைகளையும் சீரணிக்கப் பழகிக்கொள்வதில் உங்களுக்கு யார் முட்டுக்கட்டை போடுகிறார்கள்?

புலிகள் செய்த படுகொலைகள் ஏன் உங்களின் கண்களுக்கு தெரிவதில்லை.

ஒட்டுமொத்த தமிழின ஒற்றுமைக்கும் பங்கம்  விளைத்தவர்கள் அவர்கள்.

ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவித்தவர்கள் நீங்கள் இன்று காவடியெடுக்கும் கூட்டணியும், இந்திய வல்லாதிக்கத்தினதும், சிங்களப் பேரினவாதத்திந்தும் ஐந்தாம் படைகளாகவும், கொலைக் குழுக்களாகவும்  மாறி தமிழ்மக்களைப் பலியிட்ட உங்களின் "மாற்று: இயக்கங்களும் தான்.

புலிகளின் தவறுகள் பற்றி நான் பேசத் தயங்கியதில்லை. இங்கே தொடர்ந்து வாசித்துவருபவராக இருந்தால், எனது கருத்துக்களில் அவற்றைக் கண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் இப்போது வந்தவராச்சே!

Link to comment
Share on other sites

1 hour ago, ragunathan said:

ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவித்தவர்கள் நீங்கள் இன்று காவடியெடுக்கும் கூட்டணியும், இந்திய வல்லாதிக்கத்தினதும், சிங்களப் பேரினவாதத்திந்தும் ஐந்தாம் படைகளாகவும், கொலைக் குழுக்களாகவும்  மாறி தமிழ்மக்களைப் பலியிட்ட உங்களின் "மாற்று: இயக்கங்களும் தான்.

புலிகளின் தவறுகள் பற்றி நான் பேசத் தயங்கியதில்லை. இங்கே தொடர்ந்து வாசித்துவருபவராக இருந்தால், எனது கருத்துக்களில் அவற்றைக் கண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் இப்போது வந்தவராச்சே!

புலிகள் மாற்று இயக்கங்களுக்கு எதிராக திரண்டால், அவர்களும் என்ன செய்வார்கள்?

அராஜகம்தான் தலைவிரித்தாடும்.  ஒற்றுமை குழையும்.

சும்மா இருந்த தமிழ் அரசியல்வாதிகளின் படுகொலைகள்.

இன்னொரு தமிழ் சமூகமான இசுலாமியர்களின் இனச் சுத்திகரிப்பு.

ஆக, ஒட்டு மொத்த தமிழ் இனத்தினதும் ஒற்றுமைக்கு களங்கம் விளைத்தவர்கள்தான் புலிகள்.

இப்போது தமிழின ஒற்றுமைக்கு பாடம் எடுக்க வந்த தென்னிந்திய ----- ------உரைக்கு, எல்லாரும் அரோகரா பாடுகிறீர்கள்.

இவரை விட, பாராளுமன்றத்தில் அமைச்சராக இருக்கும் (?) ரஞ்சன் ராமநாயக்க என்ற ------- கூப்பிட்டிருந்தால், அவர் விவேக்கை விட - விவேகமாக சொற்பொழிவை (?) நிகழ்த்தி இருப்பார்.

இந்திய, இலங்கை அரசுகளை குறை சொல்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை.

தமிழன் ஒழுங்காக, ஒற்றுமையாக இருந்திருந்தால் - பிறர் வாலாட்டி இருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

புலிகள் மாற்று இயக்கங்களுக்கு எதிராக திரண்டால், அவர்களும் என்ன செய்வார்கள்?

அராஜகம்தான் தலைவிரித்தாடும்.  ஒற்றுமை குழையும்.

சும்மா இருந்த தமிழ் அரசியல்வாதிகளின் படுகொலைகள்.

இன்னொரு தமிழ் சமூகமான இசுலாமியர்களின் இனச் சுத்திகரிப்பு.

ஆக, ஒட்டு மொத்த தமிழ் இனத்தினதும் ஒற்றுமைக்கு களங்கம் விளைத்தவர்கள்தான் புலிகள்.

இப்போது தமிழின ஒற்றுமைக்கு பாடம் எடுக்க வந்த தென்னிந்திய ----- ------உரைக்கு, எல்லாரும் அரோகரா பாடுகிறீர்கள்.

இவரை விட, பாராளுமன்றத்தில் அமைச்சராக இருக்கும் (?) ரஞ்சன் ராமநாயக்க என்ற ------- கூப்பிட்டிருந்தால், அவர் விவேக்கை விட - விவேகமாக சொற்பொழிவை (?) நிகழ்த்தி இருப்பார்.

இந்திய, இலங்கை அரசுகளை குறை சொல்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை.

தமிழன் ஒழுங்காக, ஒற்றுமையாக இருந்திருந்தால் - பிறர் வாலாட்டி இருக்க மாட்டார்கள்.

ஓ, சும்மாயிருந்த அரசியல்வாதிகளா? அவர்கள் சும்மாயிருந்தால் ஏன் புலிகள் அவர்களை இலக்கு வைக்கவேண்டும்? அமிரும் யோகேஸ்வரனும் செய்த வேலைகள் தெரியாதா? தமிழரின் இரத்தம் கேட்டு இந்தியப் பேய்கள் தமிழர் தாயகமெங்கும் அலைந்துகொண்டிருக்க, இந்தியாவிலிருந்து அமிரும் அவரது கூட்டாளிகளும் பேசாமலிருக்காமல் இந்தியப் பேய்களுக்கு தமிழ்மக்கள் உதவவேண்டும், புலிகளை அழிக்கும் அவர்களது நடவடிக்கை வெற்றிபெறவேண்டும் என்று சொல்லவேண்டிய தேவை என்ன? 

உமா மகேஸ்வரனும் சிறீயும் செய்தவை ஊர் அறிந்ததுதானே? உள்வீட்டுக் கொலைகளை முதன் முதலில் செய்துகாட்டியது உமா மகேஸ்வரன் என்பதை மாற்றியக்க மாமணியான உங்களுக்கு எப்படித் தெரியாமல்ப் போனது? செம்மணியில் சிங்களப் பேய்கள் மனிதப் புதைகுழிகளை அமைக்கலாம் என்று செய்துகாட்டியவர்கள் உமாவும் அவரது தோழர்களும்தான் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?  நல்லூர் வீதிகளில் தமக்குள் அடிபடுகிறோம் என்கிற போர்வையில் அப்பாவிகள் மீது துப்பாகிப் பிரயோகம் செய்து தமது வீரத்தைக் காட்டிய டெலோவின் பொபியும் தாஸும் உங்களுக்கு மாற்றியக்க மாமணிகளாகத் தெரிவது எப்படி? சமாதானம் செய்ய வந்த புலிகளைக் கொன்று தமது வீரத்தைக் காட்டிய டெலோவின் சும்மாயிருத்தல் உங்களுக்குத் தெரியுமா? 

அதுசரி, புலிகள் உங்களை இயங்க விடவில்லையென்றால், உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியது தானே? எதுக்குப் போய் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் கூஜா தூக்கினீர்கள்? டக்கிளஸ், புளொட் மோகன், ராசீக் என்று நீள்கின்ற வரிசையில் வந்த உங்களின் மாற்றுக்கருத்து - மாற்றியக்க மாணிக்கங்கள் செய்தவை உங்களுக்கு மறந்து போச்சா??? இந்திய நாய்களுடன் சேர்ந்து இரண்டுவருடங்களில் அந்த பயங்கரவாத மிருகங்கள் செய்த படுகொலைகளும், மனித வேட்டைகளும், விசாரணை என்கிற பெயரில் பெண்பிள்ளைகளைக் கூட்டிவந்து வீட்டில் அடைத்துவைத்து தாமும் அனுபவித்து, இந்திய நாய்களுக்கும் உணவாக்கிய உங்களின் சும்மாயிருந்த மாற்றியக்க மாமணிகளின் வீரம்  உங்களுக்குத் தெரியாமல்ப் போயிற்றா? அல்லது அந்தப் பயங்கரவாத கொலைகார நாய்களை நீங்கள் இன்றும் ஆதரிப்பதால் அது உங்க்களுக்குத் தெரியாமல்ப் போனதா? 

மேலே நான் குறிப்பிட்ட பயங்கரவாத பேய்களில் எவர் பேசாமலிருக்கப் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? 

முஸ்லீம்களை யாழில் இருந்து வெளியேற்றியது தவறுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. 

விவேக் உங்களின் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பற்றிப் பேசவில்லை. தமிழருக்கு ஒற்றுமை வேண்டும் என்கிறார். அதில் தவறில்லை என்பதுதான் எனது வாதம். அவரை உங்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் பிடிக்கவில்லை என்பதற்காக, பார்ப்பணன், பார்ப்பணருக்காக கூலிவேலை செய்பவன், கூத்தாடி என்று விழிக்கிறீர்கள்.  விவேக் சொல்வது பிழையென்று சொல்லிவிட்டு, புலிகளால்த்தான் ஒற்றுமையில்லாமல்ப் போனது என்கிறீர்கள். நீங்கள் சொல்வது உங்களுக்கே தவறென்று நன்கு தெரிந்தும் விதண்டாவாதத்திற்காக மீண்டும் மீண்டும் அதே தவறை விடுகிறீர்கள்.
இதே இடத்தில் அவரைப் பார்ப்பணன் என்றும் கழிசடை என்றும் கூறிவிட்டு, நான் அப்படிச் சொல்லவில்லை என்று சத்தியம் செய்கிறீர்கள். 
உங்களின் நம்பகத்தன்மையை இங்கே மிக நன்றாக எங்களுக்குக் காட்டியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, thulasie said:

இந்திய, இலங்கை அரசுகளை குறை சொல்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை.

தமிழன் ஒழுங்காக, ஒற்றுமையாக இருந்திருந்தால் - பிறர் வாலாட்டி இருக்க மாட்டார்கள்.

தமிழன் ஒழுங்காக ஒற்றுமையாகவா? ஏனிதை இப்போது கேட்கிறீர்கள்? தமிழரசுக் கட்சி, விடுதலைக் கூட்டணி, காங்கிரஸ் என்று புலிகள் இல்லாத காலத்திலேயே ஒற்றுமையிருக்கவில்லையே? அதுபற்றிப் பேசலாமே? 

சும்மாயிருந்த இளைஞர்களை ரத்தத் திலகமிட்டு, தனி ஈழம்தான் தீர்வென்று உசுப்பேற்றிவிட்டு தமிழரின் ரத்தச் சகதியில் குளித்த அமிரும் அவரது தோழர்களும் அன்று சும்மாயிருந்திருக்கலாமே? எதற்கு உசுப்பேற்றினார்கள்?

இந்தியனும் சிங்களவனும் உங்களுக்கு நல்லவனா? புலிகள் தோன்றுவதற்கு 20 - 25 வருடங்களுக்கு முன்னமே உங்களின் கூட்டணியும், தமிழரசும் சிங்களவனிடம் அடிபட்டு இனிக் கடவுள்தான் தமிழனைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டபோது, சிங்களவன் செய்தது சரியென்று எப்படித் தோன்றுகிறது உங்களுக்கு? 

தனது சொந்த நலனுக்காக ஈழத் தமிழனின் உயிர்வாழ்தலுக்கான போராட்டத்தை பகடைக் காயாகப் பாவித்த இந்தியன் உங்களுக்கு நல்லவனாகத் தெரிவது எப்படி?

எந்த விவரமும் இல்லாமல், நானும் கருத்தெழுதுகிறேன் பேர்வழியென்று அதிமேதாவித்தனமாக் (சுத்த மொக்கை) கருத்தெழுதுவதை விடுத்து "சும்மாயிருங்கள்" !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு
எத்தனையோ வருட தமிழர் வரலாற்றை போராட்டத்தை மிக சுருக்கமாகவும் பக்க சார்பில்லாமலும் எல்லோருக்கும் விளங்கக் கூடியவாறு எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

4 hours ago, ragunathan said:
4 hours ago, ragunathan said:

தமிழன் ஒழுங்காக ஒற்றுமையாகவா? ஏனிதை இப்போது கேட்கிறீர்கள்? தமிழரசுக் கட்சி, விடுதலைக் கூட்டணி, காங்கிரஸ் என்று புலிகள் இல்லாத காலத்திலேயே ஒற்றுமையிருக்கவில்லையே? அதுபற்றிப் பேசலாமே? 

 

 

தமிழரசுக் கட்சி, விடுதலைக் கூட்டணி, காங்கிரஸ்  புலிகள் இல்லாத காலத்தில், புலிகள் போல தம்மை எதிர்த்தவன் எல்லாரையும் சுட்டுப் பொசுக்கவில்லை.

மேற்படியான கட்சிகள் எல்லாம் ஜனநாயக ரீதியிலானவை.

ஒவ்வொரு கட்சிக்கும் வேறுபட்ட கொள்கைகள்.

வேற்றுமையில் ஒற்றுமையாகத்தான் இருந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, thulasie said:

தமிழரசுக் கட்சி, விடுதலைக் கூட்டணி, காங்கிரஸ்  புலிகள் இல்லாத காலத்தில், புலிகள் போல தம்மை எதிர்த்தவன் எல்லாரையும் சுட்டுப் பொசுக்கவில்லை.

மேற்படியான கட்சிகள் எல்லாம் ஜனநாயக ரீதியிலானவை.

ஒவ்வொரு கட்சிக்கும் வேறுபட்ட கொள்கைகள்.

வேற்றுமையில் ஒற்றுமையாகத்தான் இருந்தன.

வேற்றுமையில் ஒற்றுமை எங்கை எப்பிடியிருந்தது? உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை சொல்லுங்கோ பாப்பம்? ஜீ.ஜீ பொன்னம்பலம் விட்ட கிர்தா வேலையெல்லாம் எங்களுக்கும் தெரியும்.
அந்தக்காலத்து  தமிழ் பெரிசுகள் ஒற்றுமையாய் இருந்திருந்தால் தமிழர்விடுதலைக்கூட்டணியும் தோன்றியிருக்காது. அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை எண்ட பேப்பட்டமும் வந்திருக்காது. மிச்சம் சொல்லத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

5 hours ago, ragunathan said:

ஓ, சும்மாயிருந்த அரசியல்வாதிகளா? அவர்கள் சும்மாயிருந்தால் ஏன் புலிகள் அவர்களை இலக்கு வைக்கவேண்டும்? அமிரும் யோகேஸ்வரனும் செய்த வேலைகள் தெரியாதா? தமிழரின் இரத்தம் கேட்டு இந்தியப் பேய்கள் தமிழர் தாயகமெங்கும் அலைந்துகொண்டிருக்க, இந்தியாவிலிருந்து அமிரும் அவரது கூட்டாளிகளும் பேசாமலிருக்காமல் இந்தியப் பேய்களுக்கு தமிழ்மக்கள் உதவவேண்டும், புலிகளை அழிக்கும் அவர்களது நடவடிக்கை வெற்றிபெறவேண்டும் என்று சொல்லவேண்டிய தேவை என்ன? 

உமா மகேஸ்வரனும் சிறீயும் செய்தவை ஊர் அறிந்ததுதானே? உள்வீட்டுக் கொலைகளை முதன் முதலில் செய்துகாட்டியது உமா மகேஸ்வரன் என்பதை மாற்றியக்க மாமணியான உங்களுக்கு எப்படித் தெரியாமல்ப் போனது? செம்மணியில் சிங்களப் பேய்கள் மனிதப் புதைகுழிகளை அமைக்கலாம் என்று செய்துகாட்டியவர்கள் உமாவும் அவரது தோழர்களும்தான் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?  நல்லூர் வீதிகளில் தமக்குள் அடிபடுகிறோம் என்கிற போர்வையில் அப்பாவிகள் மீது துப்பாகிப் பிரயோகம் செய்து தமது வீரத்தைக் காட்டிய டெலோவின் பொபியும் தாஸும் உங்களுக்கு மாற்றியக்க மாமணிகளாகத் தெரிவது எப்படி? சமாதானம் செய்ய வந்த புலிகளைக் கொன்று தமது வீரத்தைக் காட்டிய டெலோவின் சும்மாயிருத்தல் உங்களுக்குத் தெரியுமா? 

அதுசரி, புலிகள் உங்களை இயங்க விடவில்லையென்றால், உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியது தானே? எதுக்குப் போய் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் கூஜா தூக்கினீர்கள்? டக்கிளஸ், புளொட் மோகன், ராசீக் என்று நீள்கின்ற வரிசையில் வந்த உங்களின் மாற்றுக்கருத்து - மாற்றியக்க மாணிக்கங்கள் செய்தவை உங்களுக்கு மறந்து போச்சா??? இந்திய நாய்களுடன் சேர்ந்து இரண்டுவருடங்களில் அந்த பயங்கரவாத மிருகங்கள் செய்த படுகொலைகளும், மனித வேட்டைகளும், விசாரணை என்கிற பெயரில் பெண்பிள்ளைகளைக் கூட்டிவந்து வீட்டில் அடைத்துவைத்து தாமும் அனுபவித்து, இந்திய நாய்களுக்கும் உணவாக்கிய உங்களின் சும்மாயிருந்த மாற்றியக்க மாமணிகளின் வீரம்  உங்களுக்குத் தெரியாமல்ப் போயிற்றா? அல்லது அந்தப் பயங்கரவாத கொலைகார நாய்களை நீங்கள் இன்றும் ஆதரிப்பதால் அது உங்க்களுக்குத் தெரியாமல்ப் போனதா? 

மேலே நான் குறிப்பிட்ட பயங்கரவாத பேய்களில் எவர் பேசாமலிருக்கப் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? 

 

மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை பட்டியலிட்டு, புலிகள் செய்த அட்டூழியங்கள் ஒன்றுமே இல்லையென்று ஆசுவாசப்படுகிறீர்கள்.

புலிகள் செய்த அராஜகங்களை பட்டியல் போட ஏன் உங்களுக்கு தயக்கம்?

ஏன் அவர்கள் செய்தது, பூவுலகத்திற்கு தெரியக்கூடாது என்று உங்கள் ஆழ்மனம் விரும்புகிறது?

என்னமோ மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை நான் ஏற்றுக்கொண்டது போலவும், இந்தியாவிற்கு நான் ஆதரவு கொடுப்பவனைப் போலவும் கொக்கரிக்கிறீர்கள்.

புலிகள் எப்படிப்பட்ட மனித விரோதிகளோ, அதுபோலத்தான் மாற்று இயக்கங்களும் இந்திய அரசும். 

மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட காடைத்தனங்கள் வேண்டுமானால் கூட, குறைவாக இருக்கலாம்.

பயங்கரவாதத்தில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

ஒரு அராஜகம் தாண்டவமாடின காலம் அது.

பயங்கரவாதம் தலைவிரி கோலமாய் கோலோச்சின நாட்கள் அவை 

அந்த பயங்கரவாதத்தைத்தான் நான் சொல்கின்றேன்.

நீங்கள் அதை ஒற்றுமையான காலம் என்கிறீர்களே 

அதுதான் இங்கு பிரச்சனை.

...................................

இப்போது இங்கு ஒரு முன்னாள் போராளிக்கு உதவ ஒரு திரி திறந்து பாருங்கள் 

விசுகுவைத் தவிர அநேகமானவர்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.

 

சரி சரி தேவையில்லாத இடத்திலையெல்லாம் புத்தர் சிலை சிலையாய் முளைக்குதாம்.....போய் என்னெண்டு விசாரிச்சு சொல்லுங்கோ. நீங்கள் தான் ஊரிலை இருக்கிறியள் எல்லோ......எல்லாம் ஏன் என்னத்துக்கு எண்டு நல்லவடிவாய் தெரிஞ்சிருக்கும்.
ஊருக்குள்ளை  போர் முடிஞ்சும் திருத்தப்படாத கட்டிடங்கள் கனக்க இருக்காம்.....குளங்கள் தூர்வாரப்படாமல் இருக்காம்....ரோட்டுகள் கிடங்கும் கிண்டியுமாய் இருக்காம்......அதுகளையெல்லாம் படமெடுத்து போடுங்கோ....நாலு சனத்துக்கு தெரியட்டும்........சும்மா லென்ஸ் பூட்டி நாரை நன்னாரியளை படம் எடுத்து சேக்கஸ்காட்டாமல்-.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை பட்டியலிட்டு, புலிகள் செய்த அட்டூழியங்கள் ஒன்றுமே இல்லையென்று ஆசுவாசப்படுகிறீர்கள்.

 புலிகள் செய்த அராஜகங்களை பட்டியல் போட ஏன் உங்களுக்கு தயக்கம்?

ஏன் அவர்கள் செய்தது, பூவுலகத்திற்கு தெரியக்கூடாது என்று உங்கள் ஆழ்மனம் விரும்புகிறது?

துளசி
நீங்கள் ஆளை மாறி ஏழுதுகிறீர்கள் போல தெரிகிறது.
ரகுநாதனைப் பொறுத்தவரை மாவீரர் குடும்பத்தில் இருந்து துணிந்து பலதடவை புலிகளின் குறைகுற்றங்களை பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நீங்கள் புலிக்கு எதிராக மட்டுமே எழுதுகிறீர்கள்.ஆனால் அவரோ நடுநலையாகவே எப்போதும் எழுதுகிறார்.
சிலவேளை நீங்கள் புதிதாக வந்தபடியால் அப்படி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ragunathan said:

சரி, அப்படியே இருக்கட்டும். இந்தக் காலத்திற்கு முன்னரும், அதற்குப் பின்னரும், அதனோடு ஒருமித்தும் தமிழருக்கெதிராக எதுவுமே, எவராலுமே நடத்தப்படவில்லையா? அல்லது அது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?  நீங்கள் போட்டிருக்கும் கண்ணாடி, அவை எல்லாவற்றையும் வடித்தகற்றிவிட்டு, வெறும் புலியெதிர்ப்பை மட்டுமே பாருங்கள் என்று கூறியதா?

உங்களின் சாக்கடைப் புலியெதிர்ப்பு அரசியலில், கடந்த 70 ஆண்டுகளாய் சிங்களப் பேரினவாதம் தமிழருக்கெதிராக நிகழ்த்திவரும் திட்டமிட்ட இனக்கொலை தெரியாமல்ப் போனது துரதிஷ்ட்டம்தான்! அல்லது அது தமிழரின் அதிஷ்ட்டம் என்று கருதுகிறீர்களோ என்னவோ?

உங்களின் இந்தப் புலியெதிர்ப்பு அரசியல் அருவருக்கிறது. சீ...தூ!

நீங்கள் உங்கள் நேரத்தை வீண் அடித்து வீண் விவாதத்தை வளர்கிறீர்கள் 
இது  எதோ இப்போதான் நீங்கள் புதிதாக இங்க பார்க்கும் விடயம் இல்லை 
நானும் இருக்கிறேன் ... நானும் இருக்கிறேன் என்று 
செத்தவீட்டில் பிணமாகவும்  திருமண வீட்டில் மாப்பிளை யாகவும் 
இருக்கவேண்டும் எனும் நினைப்பில் உலகில் பல உயிர்கள் நடமாடுது. 

கண்டும் காணாமல் செல்வதுதான் சிறப்பு மட்டுமல்ல 
காலப்போக்கில் சில ஜீவராசிகள் திருந்தவும் நீங்கள் மறைமுகமாக 
உதவுகிறீர்கள்.

7 hours ago, thulasie said:

மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை பட்டியலிட்டு, புலிகள் செய்த அட்டூழியங்கள் ஒன்றுமே இல்லையென்று ஆசுவாசப்படுகிறீர்கள்.

புலிகள் செய்த அராஜகங்களை பட்டியல் போட ஏன் உங்களுக்கு தயக்கம்?

ஏன் அவர்கள் செய்தது, பூவுலகத்திற்கு தெரியக்கூடாது என்று உங்கள் ஆழ்மனம் விரும்புகிறது?

என்னமோ மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை நான் ஏற்றுக்கொண்டது போலவும், இந்தியாவிற்கு நான் ஆதரவு கொடுப்பவனைப் போலவும் கொக்கரிக்கிறீர்கள்.

புலிகள் எப்படிப்பட்ட மனித விரோதிகளோ, அதுபோலத்தான் மாற்று இயக்கங்களும் இந்திய அரசும். 

மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட காடைத்தனங்கள் வேண்டுமானால் கூட, குறைவாக இருக்கலாம்.

பயங்கரவாதத்தில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

ஆ அப்படியா சங்கதி?
நான் அறிந்திருக்கவில்லை .

ஐயோ புலிகள் எவ்ளவு கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள் 
பாழாய்ப்போன சிங்களவன் கூட வாய்திறக்காமால் இருந்து இருக்கிறான்.

நல்ல வேளை நீங்கள் பூமியில் பிறந்து உள்ளீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பிலிருந்து... விவேக்கின் பேட்டி. 
"இலங்கையில் கடைசி தமிழன் இருக்கும் வரை, தமிழ் வாழும்."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2019 at 12:46 AM, சாமானியன் said:

தமிழ் நாட்டினரின் சக்தி மிக்க ஒரு பகுதி எங்களை வியாபார சந்தையாக பார்க்கின்றனர் --  அவதானமாக இருக்கிறோம்  (  சில காலத்திற்கு முன்னர் எனது மகளின் நாட்டிய அர்நாகேற்றத்திற்கு சென்னையில் இருந்த ஒரு இசை வல்லுனரை பாட வர முடியமா என கேட்டிருந்தேன் .  பாட வருவற்கில்லை  , “ Chief Guest”  ஆக வேண்டுமென்றால் வருகின்றேன் என்கிறார் ?  கடுப்பாகி அதை கைவிடடேன்.

உங்களின் மீது தனிப்பட்ட விமர்சனம் இல்லை இது.

இதில் வியாபாரத்தை தொடக்கியது நீங்களா அல்லது அந்த இசை வல்லுநரா? சிந்தித்து பாருங்கள்.

விருப்புக்கு இணங்கி வரவில்லை என்றால், அவர்கள் எம்மை சரண்டக் கூடிய பொருளாக பார்க்கிறார்கள் என்று எவ்வாறு கற்பிதம் கொள்வது?

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

மட்டக்களப்பிலிருந்து... விவேக்கின் பேட்டி. 
"இலங்கையில் கடைசி தமிழன் இருக்கும் வரை, தமிழ் வாழும்."

தமிழ் வாழாது என்று சூட்சுமமாக சொல்கிறார்.

Link to comment
Share on other sites

7 hours ago, Maruthankerny said:

ஆ அப்படியா சங்கதி?

நான் அறிந்திருக்கவில்லை .

ஐயோ புலிகள் எவ்ளவு கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள் 
பாழாய்ப்போன சிங்களவன் கூட வாய்திறக்காமால் இருந்து இருக்கிறான்.

நல்ல வேளை நீங்கள் பூமியில் பிறந்து உள்ளீர்கள் 

🌹🌹🙏🙏

Link to comment
Share on other sites

21 hours ago, ragunathan said:

எது? ? ஜீவனின் கருத்துக்கு பதிலெழுதுவதா?

அவர் சம்பந்தமேயில்லாமல் திரியைத் திசை திருப்பி புலிவாந்தி எடுப்பார், நாங்கள் அதற்குச் சங்கு ஊதிச் சல்லரிரியைத் தட்டவேண்டும் என்கிறீர்களா? 

கருத்து தலைப்புடன் சம்பந்தப்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உங்களின் சாக்கடைகளுக்குப் பதில்தரவேண்டிய தேவை இல்லை. 

இங்கு திசை திருப்பி வாந்தி எடுத்தது நானா இல்லை புலிவாலுகளா 

கேவலமான பதிவு ரகு 

உங்களில் மதிப்பு வைத்திருந்தேன் - நீங்களாக உங்களைக் காட்டிக்கொடுத்ததிற்கு நன்றிகள் பல்லாயிரம்.

 

20 hours ago, ragunathan said:

அதுசரி, புலிகள் உங்களை இயங்க விடவில்லையென்றால், உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியது தானே? எதுக்குப் போய் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் கூஜா தூக்கினீர்கள்?

பிரேமதாச காலத்தில் புலிகள் தூக்கினால் அது கூஜா இல்லையாம் இராஜதந்திரமாம் 

நம்பினால் நம்புங்கள் 

 நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, thulasie said:

தமிழ் வாழாது என்று சூட்சுமமாக சொல்கிறார்.

துளசி....  விவேக் நல்லதை பெருமைப் பட்டு சொல்ல...
நீங்கள், ஏன்...  தரம் குறைந்து, எம் இனத்தின்,  தாய்  மொழியை.. மதிப்பிடுகின்றீர்கள்?  
உங்களுக்கு... இந்த, தாழ்வு மனப் பான்மை வர, உண்மையான காரணம் எது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.