Jump to content

நெட்டிசம்: இணையத்தில் வலை விரிக்கும் போலிகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெட்டிசம்: இணையத்தில் வலை விரிக்கும் போலிகள்!

18.jpg

ஆசிரியர்களும் சில பல ‘லைக்’குகளும்! - சரா சுப்ரமணியம்

செய்தி ஊடகங்களில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் என்றுமே நெஞ்சை நெகிழ்ச்சியுடன் வருடும் ‘பாசிட்டிவ் ஸ்டோரி’களுக்கு மவுசு அதிகம். எட்டுத் திசைகளிலிருந்தும் ‘நெகட்டிவ்’ மிகு செய்திகளே நம்மைத் தாக்குவதுதான் இதற்குக் காரணம். தாகமாக இருக்கும் சாலையோர முதியவருக்கு ஒரு சிறுவன் தண்ணீர் தரும் தருணத்தைப் பதிந்த புகைப்படம் ஒன்று பல்லாண்டுகளாகப் பரவசத்துடன் பகிரப்படுவதைப் பார்த்திருப்போம். அது ஓர் இயல்பான நிகழ்ச்சி. எந்த அளவுக்கு நம் நெஞ்சில் ஈரம் வற்றிக்கொண்டிருந்தால், அந்தப் படத்தை இன்றளவும் பகிர்ந்து நம் நெகிழ்ச்சி தாகத்தைத் தீர்த்துக்கொண்டிருப்போம்?

நான் பணிபுரிந்த செய்தி வலைதளம் ஒன்றில், ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சியால் மாணவர் சேர்க்கை வெகுவாக கூட்டப்பட்ட அரசுப் பள்ளி ஒன்று குறித்த செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டது. ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு மணி நேரத்தில், ஆயிரக்கணக்கான லைக்குகளையும், நூற்றுக்கணக்கான ஷேர்களையும் பெற்றது அந்தக் கட்டுரை. ‘அன்றைய நாளில் அந்தச் செய்திதான் நம் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட பக்கமாக இருக்கும்’ என்று நினைத்தேன். மறுநாள் காலை அதிகம் வாசிக்கப்பட்ட டாப் 10 செய்திகளின் ‘வியூஸ்’ எண்ணிக்கையைப் பார்த்தபோது, முதல் இடத்தில் நடிகர் அஜித் குறித்த செய்தியும், இரண்டாவது இடத்தில் கிரிக்கெட்டர் தோனி பற்றிய செய்தியும் இடம்பெற்றிருந்தது. முதல் 10 இடங்களிலாவது அந்தப் பள்ளிச் செய்தி இருக்கும் என்று பார்த்தால், அதுவும் இல்லை.

சரி, அந்தக் குறிப்பிட்ட செய்திக்கு எத்தனை பேஜ் வியூஸ்தான் கிடைத்திருக்கிறது என்று தேடிப் பார்த்தால், அந்த எண்ணிக்கையைப் பார்த்து தலைசுற்றிவிட்டது. வெறும் இரட்டை இலக்க பேஜ் வியூஸ் எண்ணிக்கை. உடனடியாக, தேடிச் சென்று ஃபேஸ்புக்கில் அந்தச் செய்தியின் நிலவரத்தைத் தேடிக் கண்டேன். லைக்ஸ் - 11K, ஷேர்ஸ் - 3.5K, கமெண்ட்ஸ் - 50.

படிக்காமலே லைக், படிக்காமலே ஷேர்!

அப்போதுதான் தெரிந்தது, நம்மில் பலரும் கண்ணில் படுகின்ற பாசிட்டிவ் செய்திகளை வாசிக்கிறோமோ, இல்லையோ, அவற்றை முன்யோசனையின்றிப் பகிர்ந்து நேர்மறை எண்ணங்களைப் பரப்புவதை முழுமுதற் கடமையாகக் கொண்டிருக்கிறோம். நம் டைம்லைனை உன்னதமாகப் போற்றிக் காக்கிறோம். அதுபோன்ற பகிர்வுக்கு அன்பு விருப்பங்களை அள்ளித் தெளிக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் மக்களால் அதிகம் ஈர்க்கப்படும் விஷயங்களில் ஒன்று: அரசுப்பள்ளி, அரசுப்பள்ளி மாணவர்கள் குறித்த பதிவுகள். அரசுப்பள்ளி மாணவர்கள் குறித்த வேதனைகள் தொடங்கி சாதனைகள் வரை எல்லாவிதமான செய்திகளும் பதிவுகளும் வேறெந்த நெகிழ்ச்சியான விஷயங்களைக் காட்டிலும் அதிக கவனம் பெறுவதைக் காண முடிகிறது. இது, நம் மக்களுக்கு அரசுப்பள்ளி - அரசுப்பள்ளி மாணவர்கள் மீதான உளபூர்வ ஈடுபாட்டையும் அக்கறையையுமே காட்டுகிறது.

இந்த இடத்தில்தான் ‘ஆக்டிவ்’ ஆன ஆசிரியர்கள் குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. பொதுவாக, நாம் எந்தத் துறையில் செயலாற்றினாலும், நம் திறன்களை உலகுக்குக் காட்ட மிக எளிதாகக் களம் அமைத்துக் கொடுக்கும் இடமாகவும் சமூக வலைதளம் உள்ளது. அது மட்டுமின்றி, நம் புதுமுயற்சிகளையும் வெற்றிகளையும் வெளிப்படுத்துவதன் மூலம் அதே துறையில் இருக்கும் மற்றவர்கள் பின்பற்றவும் வழிவகுக்கிறோம். இதை மிகச் சிறப்பாக செய்து வருகிறது ஆசிரியர் சமூகம். குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்.

தங்கள் வகுப்பறையில் பின்பற்றும் புதுவிதமான கற்பித்த முறைகள், கல்வி சார்ந்த முன்முயற்சிகள், மாணவர்களின் திறமைகளைப் பறைசாற்றும் ஆக்கங்கள், தங்கள் முயற்சிகளால் கிடைத்த பலன்கள் முதலானவற்றை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பலரும் தொடர்ச்சியாகச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதைப் பார்க்கிறேன். மாணவர்கள் மீதான அக்கறையையும், கல்வித் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளும் அவர்களின் முன்னெடுப்புகளையும் புரிந்துகொள்ள முடிகிறது. அரசுப்பள்ளிகள் மீதான தவறான பிம்பங்களை உடைக்கும் அம்சமாகவும் இதைப் பார்க்க வேண்டும். குறிப்பாக, மற்ற ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் சார்ந்த வழிகாட்டுதலாகவும் முன்னுதாரணமாகவும் இந்த அணுகுமுறை இருப்பது தெளிவு.

இதுபோன்ற ஆர்வமும் அக்கறையும் மிகுந்த ஆசிரியர்களைச் செய்தி ஊடகங்கள் அடையாளப்படுத்துவதும், பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி அங்கீகரித்துக் கவுரவிப்பதும் நடப்பது மற்றொரு நேர்மைறை விஷயம். ஆனால், அவ்வாறாக அடையாளப்படுத்தும்போது வெறும் சமூக வலைதள போஸ்டுகளையும், அவற்றுக்குக் கிடைக்கின்ற வரவேற்புகளை மட்டுமே பார்த்துத் தெரிவு செய்வது சரியான அணுகுமுறை அல்ல.

18a.jpg

ஏனெனில், சமூக வலைதளம் என்பது நிஜங்களும் போலிகளும் சரிவிகிதத்தில் கலந்து கிடக்கும் பேரிடம் என்பதை மறந்துவிடக் கூடாது. நம்பகத்தன்மை கொண்ட பல ஆசிரியர்களுக்கு மத்தியில், தங்கள் புகழுக்கான அடித்தளமாகவே சமூக வலைதளத்தை சில ஆசிரியர்கள் பயன்படுத்திவருவதையும் கவனிக்க முடிகிறது. அரசுப்பள்ளியையும், அரசுப்பள்ளி மாணவர்களையும் லைக்குகளை அள்ளுவதற்கான மூலதனமாகக் கொண்டு மட்டுமே சிலர் இயங்குகின்றன. கற்றல், கற்பித்தல், செயல்வழிக் கற்றல், முன்முயற்சிகள் போன்ற எதுவுமே அவர்களிடம் ஆழமாக இருக்காது. ஆனால், எந்த மாதிரி நெகிழ்ச்சி வார்த்தைகளைக் கொட்டினால், எந்த மாதிரியான புகைப்படங்களைப் பகிர்ந்தால் கவனம் ஈர்க்கப்படும் என்ற சமூக ஊடக உளவியலில் அவர்கள் வல்லவர்களாகத் திகழ்வர்.

போலிகள் ஜாக்கிரதை!

செய்தி ஊடகங்களில் ‘டெஸ்க் வொர்க்’கில் சிறந்து விளங்கும் செய்தியாளர்கள் தங்கள் ஃபேஸ்புக் ஃபீல்டுக்கு வருகின்ற இதுபோன்ற போலியானவர்களை எளிதில் அடையாளப்படுத்தி விடுகின்றனர். அவர்களின் செயல்பாடுகளின் உண்மைத் தன்மையின் அளவைச் சரியாகக் கண்டறிந்து, தங்கள் செய்திக்கு நம்பகத்தன்மையைக் கூட்டுவதில் கோட்டைவிடுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சம்பந்தமில்லாத சம்பந்தப்பட்டவர்களுக்கு விருதுகளும் அங்கீகாரமும் குவிவதும் கண்கூடு. உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் சிறப்பாக கல்விப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை புகழும் இவர்களுக்குக் கிடைக்கிறது.

இதற்கு, ஒருவர் மீதான நம்பகத்தன்மையைச் சரிபார்த்தல் என்பது தீர்வாக இருக்கும். அதேவேளையில், தங்கள் வகுப்பறையில் புத்தாக்க முயற்சிகளுடன் கல்விப் புரட்சி நிகழ்த்திவரும் ஆசிரியர்கள் பலரும், அவை குறித்து தங்களது பக்கத்து வகுப்பறையின் ஆசிரியருக்குக்கூடத் தெரியாமல் கவனித்துக்கொள்ளும் ஆசிரியர்கள் தங்கள் தயக்கங்களைக் கழற்றி வைக்க வேண்டும். அவர்களுக்கான இடமாகவும் சமூக வலைதளங்கள் இருக்கின்றன என்பதை உணர வேண்டும். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேர்மையாக இயங்கக்கூடிய ஆசிரியர்களைப் பின்பற்றி அவர்களும் இங்கே தீவிரம் காட்டத் தொடங்க வேண்டும். நிஜங்களின் எண்ணிக்கை கூடும்போது போலிகள் பொலிவிழந்துபோகும். அப்படி அவர்கள் தயக்கம் காட்டும்போது, அவர்களுக்குரிய இடத்தை தவறான ஒருவர் நிரப்பிவிடுவார் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

ஃபேஸ்புக்கில் தீவிரமாக இயங்கும் பள்ளி ஆசிரியர்களில் நிஜ முகங்களைச் சமீபத்தில் ஒரு கல்விப் பிரச்சினை மூலம் கண்டுகொள்ள முடிந்தது. 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த முனைந்த தமிழக அரசுக்கு எதிராக, கச்சிதமான காரணங்களுடன் அழுத்தமாகக் குரல் கொடுத்த ஆசிரியர்களுக்கும், இந்தப் பிரச்சினை பற்றி பெரிதாகப் பேசாமல் அன்றாட போஸ்டுகளில் மும்முரம் காட்டிய ஆசிரியர்களுக்கும் இடையிலான ‘இடைவெளி’யைக் காண முடிந்தது.

ஆசிரியர்களிடையே நிழலுக்கும் நிஜத்துக்குமான இடைவெளி குறித்து யோசிக்கும்போது, ஒரு பள்ளியின் முதல்வர் என் நினைவுக்கு வருகிறார்.

எழுத்து, கலைகளில் ஈடுபாடு உள்ளவர். கல்வி சார்ந்த பிரச்சினைகள் என்றால் அவரது மேற்கோளுக்கும் கருத்துக்கும் நிச்சயம் முதன்மை இடம் உண்டு. அந்தப் பள்ளி முதல்வர் மீது எனக்குப் பெருமதிப்பு இருந்தது. ஒருநாள் அவரது பள்ளிக்குச் செல்ல நேர்ந்தது. அவரது அறையில் அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, அவரது அறைக்கு ஏதோ தகவல் சொல்ல ஒரு மாணவர் வந்தார். முதல்வரின் மென்மையான குரல் டீஃபால்டாகக் கரடு முரடு ஆனதைக் கவனிக்க முடிந்தது. அந்த மாணவர் தன் கைகளைக் கட்டிக்கொண்டு பயத்துடனும் பதற்றத்துடனும் பேசினார். கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக உரத்த குரல் கொடுத்துவந்த அந்த முதல்வரின் எழுத்து - பேச்சுகளில் மலிந்துள்ள நடுக்கங்களைப் போல.

படங்கள்: ந.வசந்தகுமார்

(கட்டுரையாளர் சரா சுப்ரமணியம் பத்திரிகையாளர், சினிமா ஆர்வலர்.

 

https://minnambalam.com/k/2019/02/28/18

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.