Jump to content

ஐ.நாவைச் சீண்டி விடுமா- அரச தலைவரின் சவால்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவைச் சீண்டி விடுமா- அரச தலைவரின் சவால்!!

பதிவேற்றிய காலம்: Mar 13, 2019

ஐ.நாவுக்கே சவால் விடும் வகை­யில் அரச தலை­வர் கருத்து வெளி­யிட்­டுள்­ளார். இலங்­கைக்கு எதி­ராக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இனி­மேல் தீர்­மா­னம் ஏதா­வது நிறை­வேற்­றப்­பட்­டால் அதை ஏற்­ப­தற்­குத் தாம் தயா­ரில்­லை­யெ­ன­வும் அவர் தெரி­வித்­துள்­ளார். அவ­ரது கருத்­துக்­க­ளைக் கேட்­கும்­போது இலங்கை ஐ.நாவின் ஓர் உறுப்பு நாடா என்ற சந்­தே­கம்­தான் மன­தில் எழு­கின்­றது.

அரச தலை­வர் தெரி­வித்த இன்­னு­மொரு கருத்­தும் சிந்­த­னை­யைத் தூண்­டு­கின்­றது. ஏற்­க­னவே இலங்­கைக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள் கலா­வ­தி­யா­கி­விட்ட நிலை­யில் அவை தொடர்­பாக இனி­யும் பேசிக்­கொண்­டி­ருப்­பது வீண் வேலை என்று குறிப்­பிட்­டுள்­ளார். ஐ.நாவைக் கிள்­ளுக் கீரை­யாக நினைக்­கின்ற அரச தலை­வ­ரின் மனப்­பான்மை இதன் மூல­மா­கத் தெளி­வா­கத் தெரி­கின்­றது.

வல்­ல­ரசு நாடு­க­ளும் வளர்ந்த நாடு­க­ளும் ஐ.நாவுக்கு மதிப்­ப­ளிக்­காத நிலை­யில் இலங்கை போன்ற அபி­வி­ருத்தி காணாத சிறிய நாடு­க­ளும் அந்த வழி­யில் செல்­வதை எந்­த­வ­கை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

பான் கீ மூன் ஐ.நா. பொதுச் செய­ல­ராக இருந்­த­போது அவர் இலங்­கைக்கு வருகை தந்து போரின் பின்­ன­ரான நில­மை­களை ஆய்வு செய்­தார். அரச தலை­வர் பத­வி­யில் அமர்ந்­தி­ருந்த மகிந்த ராஜ­பக்ச அவ­ருக்­குச் சில உறு­தி­மொ­ழி­க­ளை­யும் வழங்­கி­யி­ருந்­தார். அவற்­றில் எவை­யுமே நிறை­ வேற்­றப்­ப­ட­ வில்லை.

உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ போர்க் குற்­றங்­கள் தொடர்­பா­கத் தம்­மு­டன் எவ­ருமே கலந்­து­ரை­யாட முடி­யா­தென அரச தலை­வர் தெரி­வித்­தமை அவர் இலங்­கை­யின் அரச தலை­வர் பத­வியை இன்­ன­மும் வகிக்­கி­றாரா என்ற சந்­தே­கத்­தைப் பல­ரி­ட­மும் எழுப்­பி­யி­ருக்­கக்­கூ­டும். ஒரு நாட்­டில் நடந்து முடிந்த விட­யம் தொடர்­பாக அந்த நாட்­டின் அரச தலை­வ­ரு­டன் பேசாது வேறு எவ­ரு­டன் பேச முடி­யும்?

இரண்­டா­வது உல­கப் போர் முடிந்த கையோடு இன்­னு­மொரு உல­கப்­போர் இந்­த­வு­ல­கில் இடம்­பெ­றக்­கூ­டாது என்ற நல்ல நோக்­கத்­து­டன் அமைக்­கப்­பட்­டது ஐக்­கிய நாடு­கள் சபை. இரு­நூ­றுக்­கும் மேற்­பட்ட நாடு­கள் இதில் அங்­கம் வகிக்­கின்­றன. மனித உரி­மை­கள் சபை ஐ.நாவின் மிக­வும் முக்­கி­ய­மா­ன­தொரு அமைப்­பா­கும். மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் இதற்­குப் பொறுப்­பா­க­வுள்­ளார்.

இறு­திப் போர் இடம்­பெற்­ற­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர்­கள் கொன்­றொ­ழிக்­கப்­பட்­ட­து­டன் போர்க்­குற்­றங்­க­ளும், மனி­த­உ­ரிமை மீறல்­க­ளும் தாரா­ள­மா­கவே இடம்­பெற்­றுள்­ளன. ஆனால் இவற்றை மூடி மறைக்­கின்ற செயற்­பா­டு­க­ளில் இலங்கை அரசு மட்­டு­மல்­லாது பெரும்­பான்­மை­யி­னத்­தைச் சேர்ந்த பல­ரும் ஈடு­பட்­டுள்­ள­னர். அரச தலை­வர் இதில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­தைக் காண முடி­கின்­றது. ஐ.நாவின் பல­வீ­னத்தை அவர் நன்­றா­கவே பயன்­ப­டுத்­து­கி­றார். இல்­லா­விட்­டால் ஐ.நா.தொடர்­பாக இறு­மாப்­பு­டன் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருக்க மாட்­டார்.

 

இதே­வேளை ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் இலங்கை மெத்­த­ன­மா­கவே நடந்துள்­ளது. இலங்­கைக்கு எதி­ரா­கக் கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டு­மென ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரான மிச்லே பச்­செ­லெட் அம்­மை­யார் அறிக்­கை­யில் பரிந்­துரை செய்­துள்­ளார். இத­ன­டிப்­ப­டை­யில் இலங்­கைக்கு எதி­ராக நட­வ­டிக்கை மேற்­கொள்ள முடி­யும். இந்த நிலை­யில்­தான் இலங்­கை­யின் அரச தலை­வர் ஐ.நாவுக்­குச் சவால் விடுத்­துள்­ளார்.

ஐ.நா. இனி­யா­வது எந்­த­வொரு நாட்­டின் விவ­கா­ரங்­க­ளி­லும் உறு­தி­யான தீர்­மா­னத்தை மேற்­கொள்­வ­து­டன் உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கும் முன்­வர வேண்­டும். பெரிய நாடு­க­ளின் கைப்பொம்­மை­யாக இருப்­ப­தால் அது அமைக்­கப்­பட்­ட­தன் நோக்­கமே திசை மாறிப்­போய்­விட்­டது. தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி வைப்­ப­தும் காலத்­துக்­குக் காலம் கால அவ­கா­சத்தை வழங்­கு­வ­தும் மட்­டுமே ஐ.நா. அமைப்­புக்­க­ளின் பணி­யாக இருக்­கக்­கூ­டாது.

நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டு­வ­தி­லும் கண்­ணும் கருத்­து­மா­கச் செயற்­பட வேண்­டும். இதில் தவறு ஏற்­பட்­ட­தன் கார­ண­மா­கவே இலங்­கை­யின் அரச தலை­வர் சவால் விடு­ம­ள­வுக்கு நிலைமை எல்லை மீறிச் சென்று விட்­டது. அரச தலை­வர் என்ற வகை­யில் படை­யி­ன­ரால் இழைக்­கப்­பட்ட போர்க் குற்­றங்­க­ளுக்கு மைத்­தி­ரி­பால சிறி­சேன பொறுப்­புக் கூற­வேண்­டும். அதி­லி­ருந்து மைத்­தி­ரி­பால நழுவ முடி­யாது. ஐ.நாவும் அவரை நழுவ அனு­ம­திக்­கக் கூடாது.

 

https://newuthayan.com/story/10/ஐ-நாவைச்-சீண்டி-விடுமா-அர.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.