Jump to content

சம்பந்தன், சுமந்திரன்; சாதிப்பார்களா, சரிவார்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரன்; சாதிப்பார்களா, சரிவார்களா?

காரை துர்க்கா / 2019 மார்ச் 12 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:24 Comments - 0

image_469cd34274.jpg

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துக்கு (2009) பின்னராகக் கடந்துவந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களின் தலைமை, தமிழ் மக்களைச் சிறப்பான செல்நெறியில் வழிநடத்தத் தவறிவிட்டது.   

இவ்வாறாக, தமிழ் மக்கள் தங்களுக்குள்ளும் பொது வெளியிலும் உள்ளம் குமுறுகின்றார்கள், மனம் வெதும்புகின்றார்கள். அவ்வாறெனின், தமிழ் மக்களின் தலைமை என்றால் யார்?   

2009 மே 19க்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, ஈழத்தமிழ் மக்களின் தலைமையைத் தத்தெடுத்தது. ஆனால் அவர்கள், தமிழ் மக்களது அபிலாஷைகளை அடையக்கூடிய வகையிலும் தமிழ் மக்கள், தங்களுடைய தலைமையை நம்பக்கூடிய வகையிலும் காய் நகர்த்துகின்றார்களா என்பது, தொடர்ந்தும் வினாக்குறிக்கு உட்பட்டே உள்ளது.   

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில், தமிழ் மக்களின் தலைமை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆகும். கூட்டமைப்பின் தலைமையாகத் தமிழரசுக் கட்சியைக் கருதலாம். தமிழரசுக் கட்சியின் தலைமையாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனும் சுமந்திரனும் இருப்பதாகவே நடப்பு நிலைமைகள் உள்ளன. இவர்கள் இருவருமே, முடிவுகளை மேற்கொள்ளும் முக்கியஸ்தர்களாக உள்ளனர். ஆகவே, கூட்டமைப்பின் இணைத் தலைவர்களாக இவர்கள் இருவரும் உள்ளனரென்று கூறினாலும் பிழையில்லை.   

கடந்த ஒக்டோபர் 26இல் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக, சிறுபான்மைக் கட்சிகள் கிளர்ந்து எழுந்தன. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும், அது சாகடிக்கப்படக் கூடாதெனக் கோஷமிட்டார்கள்.   
இது, பிறிதொரு வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகத் தோள் கொடுப்பது போன்றதே. இதில், கூட்டமைப்பின் பங்கு அளப்பரியது. 

அதிலும், நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனின் பங்கு மிகப்பெரியது. (இலங்கையில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமென, 1948ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கையர்கள் அனைவரும் உண்மையாகக் கோஷமிட்டிருந்தால் இனப்பிணக்கும் ஆயுத வன்முறையும் ஏற்பட்டிருக்காது.)  

இவ்வாறாக அவர்களை அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்த்தவர்களால், இதற்கு மாற்றீடாகப் போரால் சிதைந்த தம் தமிழ்ச் சமூகத்துக்கு எவற்றைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது? கூட்டிக் கழித்துப் பார்த்தால், பூச்சியமாக அல்லது பூச்சியத்துக்கு அண்மித்தே விடை இருப்பதாக, தமிழ் மக்கள் கருதுகின்றார்கள், உணருகின்றார்கள்.   

வடக்கு, கிழக்குத் தமிழர் பிரதேசங்களில், சுகாதாரத்துறை சார்ந்த வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள்,  தாதியர்களாக, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றார்கள்.   

இதேவேளை, அப்பிரதேசங்களில் அவ்வேலையை நிரப்பக்கூடிய ஆளணியில், கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றது. ஆனாலும், வைத்திய சேவையானது, அத்தியாவசியத் தேவையாகக் காணப்படுவதால், இவ்வாறான நியமனங்களை அங்குள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.   

ஆனால், வடக்குக் கிழக்கில் நல்லாட்சி நிலவும் இக்காலங்களில், சிற்றூழியர்கள், சாரதிகளாகக் கூட பெரும்பான்மை இனத்தவர்கள் பெருவாரியாக நியமிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில், அங்கு வேலைவாய்ப்பின்றி பல ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் வேலை தேடி அலைகின்றார்கள்.   

ஆனால், இந்த அநியாயங்களைத் தடுத்து நிறுத்தி, தமிழ் இளைஞர்கள், யுவதிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியாதவர்களாகவே, ஜனநாயகத்தைப் பாதுகாத்தவர்கள் உள்ளனர். வெறும் தொழில்வாய்ப்பே கைகூடாத நிலையில், புதிய அரசமைப்பு பற்றியும் புதிய தீர்வுத்திட்டம் பற்றியும் கதைப்பது, வெறும் வீணான காலவிரயமன்றி வேறு என்ன?   

சர்வதேசத்துக்கு அளித்த வாக்கை இலங்கை நிறைவேற்ற வேண்டுமென, கடந்த வாரம் வரவு - செலவுத்திட்டம் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.    

இலங்கை அரசாங்கம், தமிழர்கள் விடயத்தில் அற்ப விடயத்துக்குக் கொடுத்த வாக்கைக் கூட, நாணயம் தவறாது நிறைவேற்றுவதில், எந்தக் காலத்திலுமே பழக்கப்படவில்லை. சர்வதேசத்தாலேயே எம்மை ஒன்றும் செய்யமுடியாதென வெளிப்படையாகவே பேரினவாதம் கொக்கரிக்கின்றது.   

ஆயுத யுத்தம் நடைபெற்ற காலங்களில், இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அடுத்தபடியாக எல்லோராலும் நன்கு உச்சிரிக்கப்பட்ட இடமே கிளிநொச்சி ஆகும். அங்கேயே தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தி குடி(நிலை) கொண்டிருந்தது.   

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாதம் அங்கு சென்று சில அபிவிருத்தித் திட்டங்களை தொடக்கி வைத்தார். அதன் போது, கடந்தகாலப் போர்க்குற்றங்களை மறப்போம் மன்னிப்போம் என்றும் புதிய பாதையில் பயணிப்போம் என்றும் தெரிவித்திருந்தார். 

தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளுக்கு, எதிர்காலத்தில் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவுள்ள பல்வேறு மூலங்களில், போர்க்குற்றங்கள் என்பது பிரதானமானது.   

அதாவது, தமிழர் தரப்புக்கு பலமாக இருக்கக்கூடியதும் தமிழர் பக்கம் உலகின் கவனத்தைத் திருப்பக்கூடியதுமான போர்க்குற்றத்தை நீர்த்துப்போகச் சொல்லிக் கேட்கின்றார் பிரதமர் ரணில். அதையும், கிளிநொச்சியில் வைத்துக் கேட்கின்றார்.   

நிலைமைகள் இவ்வாறு இருக்கையில், வன்னியில் நடைபெற்ற போர்க்குற்றங்களை, முழுமூச்சில் சர்வதேச அளவில் பெரும் பரப்புரை செய்ய, கூட்டமைப்பு தவறி விட்டது. செனல் 4 செய்த, செய்கின்ற காரியங்களைக் கூட, போரால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தலைமைகள் ஆற்றத் தவறிவிட்டார்கள்.   

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனும் சுமந்திரனும், போர்க்குற்ற விசாரனையை தீவிரப்படுத்தித் தீர்வைக் காண்பதிலும் பார்க்க, புதிய அரசாங்கம், புதிய அரசமைப்பின் ஊடாகப் புதுமையான தீர்வைக் காணமுடியுமெனக்  கனவு கண்டார்கள். இதனால், அரசாங்கத்தை எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஆதரித்தார்கள்.   

இவ்விடத்தில், சர்வதேச ரீதியாகப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுதல் ஊடாக, தமிழ் மக்களுக்கு நடந்த அக்கிரமங்களை அம்பலப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, உள்ளூரில் அரசமைப்பு விடயங்களிலும் கவனத்தைச் செலுத்தி, இரண்டு விடயங்களிலும், கூட்டமைப்பின் தலைமை சமாந்தரமாகச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாது, புதிய அரசமைப்பு என்ற ஒற்றைக் கயிற்றிலேயே இவர்கள் தொங்கியதால், தற்போது அறுந்து வீழ்ந்துள்ளார்கள்; அறுத்தி வீழ்த்தப்பட்டுள்ளார்கள்.  

ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனாலும் சுமந்திரனாலும், அரசமைப்பு விடயங்களைக் கண்காணித்தல், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கெடுத்தல், சர்வதேசப் போர்க்குற்ற விசாரனைகளுக்கு வலுவூட்டுவதென, தமிழர் அரசியல் சார்ந்த ஒட்டுமொத்த அனைத்து விடயங்களையும் தனியே கையாள முடியாது. இவ்விடத்திலேயே, பல தளங்களில் தமிழர் அரசியலை கொண்டு நடத்த, மீண்டும் ஒற்றுமை தேவைப்படுகின்றது.  

இதற்கிடையில், எம் தேசத்தை விட்டுப் புலம்பெயர்ந்த உறவுகள், அவ்வப்போது அவர்களது தேவைகள் கருதி தாயகம் வருவார்கள். நம்நாட்டில் வாழும் எனது நண்பர் ஒருவர், அவ்வேளைகளில் அவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று சந்திப்பதில்லை. ஏனெனில், ஒருமுறை இவர் அவர்களது வதிவிடம் தேடிச் சென்று சந்தித்தவேளை, இவர் ஏதேனும் நிதி ரீதியான உதவிகளை நாடியே தம்மைத் தேடி வந்ததாக, அவர்கள் நினைத்துக் கொண்டார்களாம். இது, எனது நண்பரால் கசப்பான பட்டறிவாகக் கருதப்படுகின்றது. அன்று தொடக்கம், அவர்களது இருப்பிடம் தேடிச்செல்வதை உதறித் தள்ளிவிட்டார்.   

ஆகவே, இது போல ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள், தலைவர்கள், கூட்டமைப்பை நாடிவரட்டும் எனப்பார்த்திராது, கூட்டமைப்பு அவர்களை நாடிச்செல்ல வேண்டும். தங்களது சொந்த கௌரவங்களைப் பொருட்படுத்தாது, தமிழ் மக்களது சுபீட்சம் என்பதை மட்டும் முன்னிறுத்தி, புதுமை படைக்க வேண்டும். ஏனைய கட்சிகளது தலைவர்கள் உறுப்பினர்களும், இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.   

தமிழ் மக்களுக்காக, தமிழ் மண்ணுக்காகத் தங்கள் உயிர்களையே துறந்தவர்கள் வாழும் ஒப்பற்ற மண்ணில், தமிழ் மக்களுக்காக தமிழ் மண்ணுக்காக, தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளைத் துறந்து ஓரணியில் களமிறங்குதல், காலத்தின் முக்கிய தேவையாக உள்ளது.   

காய்க்கின்ற மரத்துக்கே கல் எறிவார்கள். அது போலவே, தமிழ் மக்களது சுதந்திர வாழ்வு என்ற மரத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனும் சுமந்திரனும் வேராக இருக்க வேண்டும் என்பதே, தமிழ் மக்களது பேரவா.   

தமிழன் என்ற ஒற்றைச் சொல்லில் ஒன்றுபட்ட தமிழினத்தை, பல கூறுபோட பலர் வெளிக்கிளம்பியுள்ள வேளையில், உண்மையான தமிழக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.   

இதற்கு முன்னோடியாக, தமிழரசுக் கட்சியை முன்னிறுத்துவதைத் தூக்கியெறிந்து, கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யும் நடவடிக்கைகளைத் தூசு தட்ட வேண்டும்.

தட்டுவார்களா? ஒற்றுமை முழக்கம் கொட்டுவார்களா?  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சம்பந்தன்-சுமந்திரன்-சாதிப்பார்களா-சரிவார்களா/91-230651

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.