Jump to content

காணாமல்போனவர்களை தேடும் பெண்களிற்கு நேர்ந்த அவலம்- அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போனவர்களை தேடும் பெண்களிற்கு நேர்ந்த அவலம்- அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

 

காணாமல்போன தங்கள் கணவன்மார்கள் குறித்து தகவல்களை கோரிய மனைவிமார் அரசாங்க அதிகாரிகளாலும்  பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகளாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கா  தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள் 2018 இல் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நீண்ட அறிக்கையை முன்வைத்துள்ள அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

யுத்தத்தில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதிஉதவியை  பெறமுயலும்வேளை பாலியல் துஸ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.  

அரசாங்கமோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டனர் என தகவல்கள் கிடைத்துள்ளளன என அமெரிக்காவின் அறிக்கையி;ல் தெரிவிக்கப்பட்டுள்ளது

யுத்தத்தி;ன் போதும் அதன் பின்னரும் காணாமல்போதல் என்பது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாக காணப்படுகின்றது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை தொடர்பில் வருட இறுதிவரை அதிகாரிகள் எவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரவதை உட்பட ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தண்டனைகளை இலங்கையின் அரசமைப்பும் சட்டமும் தடை செய்துள்ள போதிலும் அதிகாரிகள் அதனை தொடர்ந்து பின்பற்றுக்கின்றனர் என அமெரி;க்கா தனது மனித உரிமை அறி;க்கையில் தெரிவித்துள்ளது.

குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை பெறுவதற்காக காவல்துறையினர் பொதுமக்களை சித்திரவதை செய்வதுடன் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்குகின்றனர் எனவும்  அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 2017 இல் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்த போதிலும் எனினும் கடந்த வருடம் இலங்கை அரசாங்கம் ஆகக்குறைந்தது நான்கு பேரையாவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சித்திரவதைகளை வழமையான நடைமுறையாக நாடுமுழுவதும் பின்பற்றுகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணையகம் கடந்த யூன் மாதம் வரை உடல்உள சித்திரவதைகள் குறித்து 193 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது எனவும் அமெரிக்காவி;ன அறிக்கை தெரிவித்துள்ளது

மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வின் போது இலங்கை முழுவதும் சித்திரவதைகள் பரவலாக பின்பற்றப்படுவது தெரியவந்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை போன்று யுத்தம் முடிவடைந்த பின்னரும்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நபர்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பலவந்தமாக வாக்குமூலம் தங்களிடமிருந்து பெறப்பட்டதாகவும்,சட்டத்தரணிகளையும் குடும்பத்தவர்களையும் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர் என அமெரிக்க அறிக்கை தெரிவித்துள்ளது

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட சித்திரவதைகள் மோசமாக நடத்தப்படுதல் போன்றவற்றை புனர்வாழ்வு முகாம்களிலும் விடுதலையின் பின்னரும் தாங்கள் அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளனர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pompeooo.jpg

பொதுமக்களிற்கு எதிராக படையினரும் பொலிஸாரும் அளவுக்கதிகமான வன்முறைகளை பயன்படுத்துவதும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது

காணாமல்போன தங்கள் கணவன்மார்கள் குறித்து தகவல்களை கோரிய மனைவிமார் அரசாங்க அதிகாரிகளாலும் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகளாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்காவின் மனித உரிமை அறிக்கை தெரிவித்துள்ளது

யுத்தத்தில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதிஉதவியை  பெறமுயலும்வேளை பாலியல் துஸ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

Link to comment
Share on other sites

இந்தியாவும், சிறீலங்காவும் செய்யும் குறும்புகள் எங்களுக்குத் தெரியும். செரிந்தாலும் நாங்கள் அவர்களைத் தண்டிக்கமாட்டோம், ஏனெனில் அவர்கள் எங்கள் செல்லப் பிள்ளைகள்.

- இப்படிக்கு அமெரிக்கா. 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mic-720x450.jpg

உறவுகளை தேடும் பெண்கள் அரச அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்தோடு இலங்கை பொலிஸார் தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகின்றனரென்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையினை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பம்பியோ நேற்று முன்தினம் (புதன்கிழமை) வெளியிட்டார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களில் சித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதத்தன்மையற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படைகள் இருந்தாலும், இராணுவம் மற்றும் பொலிஸ் என்பன, பொதுமக்களைத் துன்புறுத்துகின்றன. அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையும் தொடர்கிறது.

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இதுவரையில் உருவாக்கப்படவில்லை

எனினும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக, விசாரணை செய்வதற்கும், சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டனை விதிக்கவும், கடந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அரசாங்கப் படைகளால் தன்னிச்சையாக தடுத்து வைத்தல், இணைய முடக்கம், ஊழல் உள்ளிட்ட மனித உரிமை பிரச்சினைகள் தொடர்கின்றன.

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்’என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://athavannews.com/காணாமலாக்கப்பட்ட-உறவுகள/

Link to comment
Share on other sites

சிறிலங்காவில் தொடரும் மனித உரிமை மீறல்கள்- அமெரிக்கா குற்றச்சாட்டு

 

Mike-Pompeo-300x200.jpgஉள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதத்தன்மையற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் சிறிலங்காவில் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படைகள் இருந்தாலும்,  சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறை என்பன, பொதுமக்களைத் துன்புறுத்துகின்றன. அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையும் தொடர்கிறது.

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை

எனினும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக, விசாரணை செய்வதற்கும், சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டனை விதிக்கவும், கடந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அரசாங்கப் படைகளால் தன்னிச்சையாக தடுத்து வைத்தல், இணைய முடக்கம், ஊழல் உள்ளிட்ட மனித உரிமை பிரச்சினைகள் சிறிலங்காவில் தொடருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்ட தமது கணவன் பற்றிய தகவலை தேடும் பெண்களும், கணவனை இழந்த பெண்கள் நன்மைகளைப் பெற முனையும் போதும், சிறிலங்கா பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சிறிலங்கா காவல்துறை தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகிறது.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பம்பியோ நேற்று முன்தினம் வெளியிட்டார்.

http://www.puthinappalakai.net/2019/03/15/news/36890

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    • இதே பொலுசன் பிரச்சனை தமிழ்  நாட்டில் அரியலூர், ஆலங்குளம் போன்ற பழைய சிமிண்ட் ஆலைகளிலும் உண்டு. ஊருக்குள் போனால் சாலை, மரங்கள், வீட்டு கூரைகளில் மணல் போன்ற தூசுகள் படிந்திருக்கும். இம்மாதிரி ஆலையின் மாசுகளால் அருகே வசிக்கும் பலருக்கும் உடலில் சுகாதாரக் கேடுகள் விளைகிறது என அறிந்துள்ளேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் (Classmates) இந்த ஆலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.🙏
    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.