Jump to content

காவிரியில் மணல் சிற்பம் அமைத்து குமரி இளைஞர் விழிப்புணர்வு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காவிரியில் மணல் சிற்பம் அமைத்து குமரி இளைஞர் விழிப்புணர்வு.!

 

வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் எனும் நோக்கத்தில், கன்னியாகுமரி இளைஞர் ஒருவர் திருச்சி காவிரி ஆற்றில் மணல் சிற்பம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ART_By_VARMA.JPG

வரும் ஏப்ரல் 18ம் திகதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனத் தேர்தல் கமிஷன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்துடன், 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக, வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஓசரவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓவியர்,திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள காவிரி ஆற்றில், வரும் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மணல் சிற்பம் ஒன்றை அமைத்து மக்களை கவர்ந்துள்ளார்.

3 லாரி மணலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பத்தில், இந்திய பாராளுமன்றத்தின் முகப்புத் தோற்றம், அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் ‘எனது வாக்கு; எனது உரிமை’ எனும் ஆங்கில வாசகம் மற்றும் தேர்தல் கமிஷனின் சின்னம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த மணல் சிற்பத்தை பொதுமக்கள் பலரும் வந்து பார்வையிட்டதுடன், அதை தங்கள் செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து ஓவியர் கூறியதாவது; 

இயற்கை மருத்துவ சிகிச்சை மூலம் மக்களுக்குச் சேவை செய்துவரும் எனக்கு, சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதிக ஆர்வம். அதன் தொடர்ச்சியாகத்தான், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறேன்.இது எனது 122வது படைப்பு.

லோக்சபா தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வாக்காளர்களிடம் வலியுறுத்தி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு மணல் சிற்பம் வடிவமைக்க வேண்டும்’ என அதிகாரிகள் கேட்டிருந்தனர். அதன்படி, இதை உருவாக்கியுள்ளேன். இந்தச் சிற்பத்தை உருவாக்க 6 மணி நேரம் ஆனது. இதற்கு, எனது இரண்டு நண்பர்கள் பெரும் உதவி செய்தனர். ஓட்டுரிமை உள்ள அனைவரும், தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/51922

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.