Jump to content

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
இலங்கை

புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி.

நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போது, தமது இடது காலினை அவர் இழந்தார். தன் 15ஆவது வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 7 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய அந்த இளைஞன், இப்போது அன்றாட உணவுக்கான வருமானத்தைத் தேடிக் கொள்வதற்கே மிகவும் போராடுகிறார்.

இலங்கை அம்பாறை மாவட்டம் - விநாயகபுரத்தில் மனைவி மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையுடன், ஜெகன் வசிக்கிறார். அவருக்கு இப்போது 32 வயதாகிறது. கூலி வேலைக்காக, 20 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் ஒற்றைக் காலால், சைக்கிள் மிதித்து பயணிக்கிறார். "ஆனால், ஒவ்வொரு நாளும் தொழில் கிடைப்பதில்லை. கிடைக்கும் வருமானத்தில் பாதிக்கும் மேல் குழந்தைக்கான பால்மாவு உள்ளிட்ட செலவுகளுக்கே போய்விடுகிறது" என்கிறார் ஜெகன்.

"ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, 2002ஆம் ஆண்டு எனது 15 வயதில் இயக்கத்தில் சேர்ந்தேன். கஞ்சிகுடியாறுக்கு அழைத்துச் சென்றார்கள். பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு தரவைக்குச் சென்று, 8 மாதங்கள் பயிற்சி பெற்றேன்".

இலங்கை

"2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்தபோது முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக் கடல் பகுதியில் ஆயுதமேந்தி சண்டையிட்டேன். அப்போது எனது இடது காலில் காயமேற்பட்டது. விஸ்வமடு பகுதியில் தற்காலிகமாக இயங்கிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றேன். அப்போது என் காலைத் துண்டிக்க வேண்டியேற்பட்டது" என சொல்லி விட்டுசிறிது நேரம் மௌனம் காத்தார் ஜெகன்.

"இறுதி யுத்தத்தின் ஒரு கட்டத்தில் படையினரிடம் சரணடையுமாறு இயக்கத்தின் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. பெருந்தொகையானோர் படையினரிடம் சரணடைந்தனர்; நானும் சரணடைந்தேன். பின்னர், வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டேன். 2010ஆம் ஆண்டு விடுதலையானேன்".

புனர்வாழ்வு முகாமுக்குச் சென்று 2 மாதத்துக்குப் பின்னர்தான் 'விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார்' எனும் செய்தி தனக்குத் தெரிய வந்ததாக கூறுகிறார் ஜெகன்.

இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது, சூசை மற்றும் தமிழ்ச் செல்வன் போன்ற தளபதிகளை தான் சந்தித்துள்ள போதும், பிரபாகரனை நேரில் கண்டதில்லை என்கிறார் இவர்.

2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு, இரண்டு வயதில் பெண் குழந்தையொன்று உள்ளது.

"கச்சான் (நிலக்கடலை) தோட்டத்தில் கூலி வேலை செய்கிறேன், ஆடுகளை கூலிக்காக மேய்த்துக் கொடுக்கிறேன். இதற்காக 20 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சைக்கிள் மிதித்துப் பயணிக்கிறேன். வருமானம் போதாது. கிடைக்கும் கூலியில் குழந்தைக்கான பால் மாவு உள்ளிட்ட பொருள்களுக்கே அதிகம் செலவாகி விடுகிறது" என்றார்.

தனக்கு இதுவரை எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் உதவவில்லை என்கிறார் ஜெகன்.

இலங்கை

இவர் குடியிருக்கும் வீடு கூட, அரசு வழங்கிய நிதி உதவியில் கட்டப்பட்டதாகும். 8 லட்சம் ரூபாயினை இதற்காக அரசு வழங்கியுள்ளது.

"ஓடும் சைக்கிளும் மிகவும் பழையதாகிவிட்டது. புதிதாக வாங்கவும் பணமில்லை. புதிதாக ஊன்றுகோல் ஒன்றும் வாங்க வேண்டும். அதற்கும் வசதியில்லை" என்கிறார், அந்த முன்னாள் போராளி.

விநாயகபுரத்தில் தன்னைப் போலவே, வாழ்வாதாரத்துக்காகப் போராடும் இன்னும் பல முன்னாள் போராளிகள் உள்ளனர் என்கிற தகவலையும் அவர் தெரியப்படுத்தினார்.

தனக்கு அரசு வேலை கிடைத்தால், நிம்மதியாக வாழ முடியும் என்று கூறும் ஜெகன், குறைந்தது, ஒரு மூன்று சக்கர வண்டி (ஆட்டோ) இருந்தாலும், அதனை ஓட்டி பிழைப்பு நடத்த முடியும் என்கிறார்.

இலங்கையில், அரச தொழில்கள் வழங்கும் போது, அவற்றில் 3 சத வீதத்தினை, அந்தந்த தொழில்களுக்கான தகைமைகளைக் கொண்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்கிற சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தின் விடுதலைக்காக தான் போராடிய போதும், தன்னுடைய சமூகத்திடமிருந்து, எந்தவித ஆதரவும் தனக்குக் கிடைக்கவில்லை என்கிற வருத்தமும் ஏமாற்றமும் தனக்கு இருப்பதாக ஜெகன் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-47555936

Link to comment
Share on other sites

எவராலும் கவனிக்கபடாமல் அல்லது கவனிக்க விருப்பமில்லாமல் அல்லது கவனித்தும் கவனிக்கப்படாமல் ஆனால் கவனிக்க பட வேண்டிய திரி.

அங்குள்ள எவராவது இவரது நேரடி தொடர்புகளை எடுத்து தர முடிந்தாலோ அல்லது உதவ முற்பட்டாலோ அறியத் தரவும்.

Link to comment
Share on other sites

இதுக்கு எனது பங்களிப்பு நிச்சயம் உண்டு.

அதற்கு தனியாக ஒரு திரி திறவுங்கள் நிழலி 

 

Link to comment
Share on other sites

On 3/15/2019 at 9:04 PM, நிழலி said:

எவராலும் கவனிக்கபடாமல் அல்லது கவனிக்க விருப்பமில்லாமல் அல்லது கவனித்தும் கவனிக்கப்படாமல் ஆனால் கவனிக்க பட வேண்டிய திரி.

2 replies

322 views

இன்னுமா இவர்களை நம்புகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2019 at 5:00 PM, ஜீவன் சிவா said:

இதுக்கு எனது பங்களிப்பு நிச்சயம் உண்டு.

அதற்கு தனியாக ஒரு திரி திறவுங்கள் நிழலி 

 

ஊரில்தானே இருக்கின்றீர்கள். நேரே சென்று நிலவரத்தை பார்த்து உதவி செய்ய வேண்டியது தானே. இதற்கு ஏன் தனித்திரி?

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

ஊரில்தானே இருக்கின்றீர்கள். நேரே சென்று நிலவரத்தை பார்த்து உதவி செய்ய வேண்டியது தானே. இதற்கு ஏன் தனித்திரி?

ஊரில் இருப்பவனுக்கு வேறு தொழிலே இல்லையா?

உங்கை இருந்து கூவினது காணும் 

முடிந்தால் உதவி செய்யுங்கோ இல்லை கம்முன்னு இருங்கோ 

6 நாட்களாக கவனிப்பாரற்றிருந்த இந்த திரி உங்கள் விதண்டா வாதத்தினால் உயிர் பெறுகின்றது மறுபடியும்.

முடிந்தால் அந்த முன்னாள் போராளிக்கு உதவி செய்யுங்கள் இல்லை கப் சிப் 

இது எனது இறுதிப்பதிவு இந்த திரியில் - ஆனால் உதவி செய்தால் எனது பங்களிப்பு நிச்சயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

ஊரில் இருப்பவனுக்கு வேறு தொழிலே இல்லையா?

உங்கை இருந்து கூவினது காணும் 

முடிந்தால் உதவி செய்யுங்கோ இல்லை கம்முன்னு இருங்கோ 

6 நாட்களாக கவனிப்பாரற்றிருந்த இந்த திரி உங்கள் விதண்டா வாதத்தினால் உயிர் பெறுகின்றது மறுபடியும்.

முடிந்தால் அந்த முன்னாள் போராளிக்கு உதவி செய்யுங்கள் இல்லை கப் சிப் 

இது எனது இறுதிப்பதிவு இந்த திரியில் - ஆனால் உதவி செய்தால் எனது பங்களிப்பு நிச்சயம்.

 

எனது மனச்சாட்சிக்கு ஜேர்மனிக்கு வந்த நாள்முதல் ஏதோ ஒருவகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றேன். அது ஒவ்வொன்றையும் உங்களைப்போன்றவர்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியம் இங்கில்லை. அது போக யாழ்களத்தில் ஈழமக்களுக்கான  உதவிபற்றிய பல பழைய திரிகள் இங்குள்ளன. அவற்றையேல்லாம் வாசித்துவிட்டு திரும்ப இங்கே....இந்த திரிக்கு வாருங்கள். அதுவரைக்கும்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் யாழ் உறவு ஜஸ்ரின் அவர்கள்  உதவி  சம்பந்தமாக எனக்கு தந்த பதில் கருத்தையும் வாசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

  நிழலி! அண்மையில் யாழ் உறவு ஜஸ்ரின் அவர்கள்  உதவி  சம்பந்தமாக எனக்கு தந்த பதில் கருத்தையும் வாசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

1 minute ago, ஜீவன் சிவா said:

 

நான் எப்போதும் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். முதலில் நீங்கள் கப் சிப்.அதுக்கு பிறகு மற்றவைக்கு சொல்லும்.

Link to comment
Share on other sites

யாழ் இணைய உறவுகள் நேசக்கரத்தின் ஊடாகவும், யாழ் இணையத்தின் ஊடாகவும், பாதிக்கப்பட்ட உறவுகள் பலருக்கு  நிறைய உதவிகள் செய்து இருக்கின்றனர் / இருக்கின்றோம். அதில் உடனடி உதவிகளில் இருந்து பிள்ளைகளை பொறுப்பெடுத்து மாதாமாதம் பணம் அனுப்புவது வரை தொடர்கின்றது.

உதவி என்று ஒரு திரி திறந்து காத்திரமான முறையில் கேட்டால், கருத்துக்களத்தில் அதிகளவு பங்கு கொள்ளாது 'உறங்கு நிலையில்' இருக்கும் உறவுகள் கூட ஓடி வந்து உதவிகள் செய்து இருக்கின்றனர்.

செய்தவர்கள் எவர் எவர் என்று பட்டியலிடுவதனூடாக அவர்கள் செய்த பேருதவிகளை மதிப்பிழக்க வைக்க விரும்பவில்லை என்பதால் பெயர்களை குறிப்பிடுவதை தவிர்க்கின்றேன்.

இந்த திரி கவனிப்பாரற்று கிடப்பதால் இதை மீண்டும் மேலே கொண்டு வருவதற்காகவே 'கவனிக்காமல் இருக்கு' என்று பதில் இட்டு இருந்தேன். ஆனால் அதை பார்த்த பின் மற்றவர்களை மட்டம் தட்டி, நக்கலடித்து, எப்பவும் தன்னை முன்னிலைப்படுத்தி மற்றவர்களை கேவலப்படுத்தும் விதமாக தொடர்ந்து பதில் இடுவதன் மூலமாக எந்த நோக்கத்திற்காக நான் எழுதினேனோ அந்த நோக்கத்தை மழுங்கடித்ததை தான் காண முடிகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2019 at 4:34 PM, நிழலி said:

அங்குள்ள எவராவது இவரது நேரடி தொடர்புகளை எடுத்து தர முடிந்தாலோ அல்லது உதவ முற்பட்டாலோ அறியத் தரவும்.

தனிக்காட்டு ராசா 

ஒரு  முறை அவரை  சந்தித்து

நிலைமையை  அறியத்தர முடியுமா?

(அம்பாறை  என்பதால் தங்களிடம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

தனிக்காட்டு ராசா 

ஒரு  முறை அவரை  சந்தித்து

நிலைமையை  அறியத்தர முடியுமா?

(அம்மாறை  என்பதால் தங்களிடம்)

தொடர்புகள் சரி வந்தால் எனக்கும் அறியதாருங்கள் விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்புகள் சரிவந்தால் என்னுடைய பங்களிப்பும் இருக்கு விசுகர் .

அல்லது அவரின் வங்கி இலக்கம் இருந்தால் அறியத்தாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

தொடர்புகள் சரி வந்தால் எனக்கும் அறியதாருங்கள் விசுகு.

தனிக்காட்டு ராசா  வரட்டும்  அண்ணா

6 minutes ago, பெருமாள் said:

தொடர்புகள் சரிவந்தால் என்னுடைய பங்களிப்பும் இருக்கு விசுகர் .

அல்லது அவரின் வங்கி இலக்கம் இருந்தால் அறியத்தாருங்கள் .

பொறுங்கள்  சகோ

எம்மைப்போல்  பலரும்   உதவ  இருக்கக்கூடும்

உதவிகள்  சென்று விட்டால்....??

தனிக்காட்டு ராசா  வரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்யும் பொறிமுறையை அறியத்தரவும். 

ஜீவன்,

நீங்கள் இன்னும் இவர்களோடு மல்லுக் கட்டுவதை அடிக்கடி காண்பேன்.

ஏனப்பா இந்த விசர் வேலை 😂

I thought you were an enlightened soul 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

யாழ் இணைய உறவுகள் நேசக்கரத்தின் ஊடாகவும், யாழ் இணையத்தின் ஊடாகவும், பாதிக்கப்பட்ட உறவுகள் பலருக்கு  நிறைய உதவிகள் செய்து இருக்கின்றனர் / இருக்கின்றோம். அதில் உடனடி உதவிகளில் இருந்து பிள்ளைகளை பொறுப்பெடுத்து மாதாமாதம் பணம் அனுப்புவது வரை தொடர்கின்றது.

உதவி என்று ஒரு திரி திறந்து காத்திரமான முறையில் கேட்டால், கருத்துக்களத்தில் அதிகளவு பங்கு கொள்ளாது 'உறங்கு நிலையில்' இருக்கும் உறவுகள் கூட ஓடி வந்து உதவிகள் செய்து இருக்கின்றனர்.

செய்தவர்கள் எவர் எவர் என்று பட்டியலிடுவதனூடாக அவர்கள் செய்த பேருதவிகளை மதிப்பிழக்க வைக்க விரும்பவில்லை என்பதால் பெயர்களை குறிப்பிடுவதை தவிர்க்கின்றேன்.

இந்த திரி கவனிப்பாரற்று கிடப்பதால் இதை மீண்டும் மேலே கொண்டு வருவதற்காகவே 'கவனிக்காமல் இருக்கு' என்று பதில் இட்டு இருந்தேன். ஆனால் அதை பார்த்த பின் மற்றவர்களை மட்டம் தட்டி, நக்கலடித்து, எப்பவும் தன்னை முன்னிலைப்படுத்தி மற்றவர்களை கேவலப்படுத்தும் விதமாக தொடர்ந்து பதில் இடுவதன் மூலமாக எந்த நோக்கத்திற்காக நான் எழுதினேனோ அந்த நோக்கத்தை மழுங்கடித்ததை தான் காண முடிகின்றது.

 

நிழலி,

இவருடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வழி உங்களுக்கு இருக்கிறதா?

முடிந்தால்ச் சொல்லுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

21 minutes ago, ragunathan said:

நிழலி,

இவருடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வழி உங்களுக்கு இருக்கிறதா?

முடிந்தால்ச் சொல்லுங்கள்.

நன்றி

இல்லை ரகு. எனக்கு கிழக்கில் தெரிந்தவர்கள் என்று இப்ப எவரும் இல்லை.

இந்த போராளி பற்றி, பிபிசி தமிழிலும்  globaltamilnews இலும் தகவல் வந்திருப்பதால் பலர் இவர் பற்றிய விபரங்களை பெற முயன்று இருப்பர். எனவே அவரை நேரடியாக சந்தித்து விபரம் பெற்ற பின் அடுத்த கட்டத்தை பற்றி சிந்திப்பது நல்லது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

இல்லை ரகு. எனக்கு கிழக்கில் தெரிந்தவர்கள் என்று இப்ப எவரும் இல்லை.

இந்த போராளி பற்றி, பிபிசி தமிழிலும்  globaltamilnews இலும் தகவல் வந்திருப்பதால் பலர் இவர் பற்றிய விபரங்களை பெற முயன்று இருப்பர். எனவே அவரை நேரடியாக சந்தித்து விபரம் பெற்ற பின் அடுத்த கட்டத்தை பற்றி சிந்திப்பது நல்லது

 

நன்றி நிழலி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனி கிழமை அல்லது    ஞாயிற்றுக்கிழமை இவருடை தகவல்களை தருகிறேன் முகநூலிலும் (பேக்) இவருக்கான உதவிக்கரங்களை கோரியும் இருந்தோம்  உதவிகள் கிடைத்ததா அல்லது கிடைக்கவில்லையா என்பது தெரியாது  இருந்தாலும் அந்த கிராம சேவகர் / பிரதேச செயலாளரிடம் கேட்டும் அறியத்தருகிறேன். நேரில் சென்று பார்க்கலாம் ஆனால் சமூகம் பல கண்களுடன் தான் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது . (***) விடுதலை செய்யப்பட்டவர்கள் எல்லோரும் ஓர் வட்டத்துக்குள் தான்.  என்பதையும் கூற முனைகிறேன் 

அல்லது வங்கி விபரங்களை தரவேண்டுமா என நீங்களே சொல்லுங்கள்
 

On 3/15/2019 at 9:04 PM, நிழலி said:

எவராலும் கவனிக்கபடாமல் அல்லது கவனிக்க விருப்பமில்லாமல் அல்லது கவனித்தும் கவனிக்கப்படாமல் ஆனால் கவனிக்க பட வேண்டிய திரி.

அங்குள்ள எவராவது இவரது நேரடி தொடர்புகளை எடுத்து தர முடிந்தாலோ அல்லது உதவ முற்பட்டாலோ அறியத் தரவும்.

 

14 hours ago, விசுகு said:

தனிக்காட்டு ராசா 

ஒரு  முறை அவரை  சந்தித்து

நிலைமையை  அறியத்தர முடியுமா?

(அம்பாறை  என்பதால் தங்களிடம்)

 

11 hours ago, ragunathan said:

நிழலி,

இவருடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வழி உங்களுக்கு இருக்கிறதா?

முடிந்தால்ச் சொல்லுங்கள்.

நன்றி

 

11 hours ago, goshan_che said:

உதவி செய்யும் பொறிமுறையை அறியத்தரவும். 

ஜீவன்,

நீங்கள் இன்னும் இவர்களோடு மல்லுக் கட்டுவதை அடிக்கடி காண்பேன்.

ஏனப்பா இந்த விசர் வேலை 😂

I thought you were an enlightened soul 🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி த.கா. ராஜா.

எல்லாரும் தனித்தனியே போடாமல் நீங்கள் ஒருங்கிணைத்தால் நல்லம். முடியாவிட்டால் பரவாயில்லை. இது என் கருத்து மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய உதவி மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கான ஓரளவு உதவிகள் கிடைக்க்பெற்றுள்ளதோடு ஆடு வளர்புக்கு ஆடும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது , அவரும் சுயதொழிலில் ஈடுபட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அதனை வைத்து வெற்றிக்கொள்வாரானால் வெற்றி 

அவரின்ற மகளின்ற வங்கி கணக்கு இலக்கம் கிடைக்கவில்லை கிடைத்தால் தருகிறேன் அந்த பிள்ளைக்கு நீங்கள் விரும்பிய உதவிகளை செய்யலாம்  படித்த பிறகு அவருக்கு அந்த உதவிகளை எடுத்து ஏதாவது செய்யலாம் 

Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இவருக்கான ஓரளவு உதவிகள் கிடைக்க்பெற்றுள்ளதோடு ஆடு வளர்புக்கு ஆடும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது , அவரும் சுயதொழிலில் ஈடுபட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அதனை வைத்து வெற்றிக்கொள்வாரானால் வெற்றி 

அவரின்ற மகளின்ற வங்கி கணக்கு இலக்கம் கிடைக்கவில்லை கிடைத்தால் தருகிறேன் அந்த பிள்ளைக்கு நீங்கள் விரும்பிய உதவிகளை செய்யலாம்  படித்த பிறகு அவருக்கு அந்த உதவிகளை எடுத்து ஏதாவது செய்யலாம் 

மிக்க நன்றி தனி

இதுவரை எவரும் / எந்த அமைப்பும் அவர் மகளின் வளர்ச்சிக்கு உதவாவிடின், மகளின் கணக்கில் இலங்கை ரூபா 150,000 இனை வைப்புச் செய்தால் அவர் 18 வயதை அடையும் போது அதை எடுத்து பயன்படுத்துவது போன்று செய்யலாம்.

Link to comment
Share on other sites

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரின்ற மகளின்ற வங்கி கணக்கு இலக்கம் கிடைக்கவில்லை கிடைத்தால் தருகிறேன் அந்த பிள்ளைக்கு நீங்கள் விரும்பிய உதவிகளை செய்யலாம்

11 hours ago, நிழலி said:

இதுவரை எவரும் / எந்த அமைப்பும் அவர் மகளின் வளர்ச்சிக்கு உதவாவிடின்,

தனிக்காட்டு ராஜா, அவரது முகவரியையும் கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் தனிமடலில் தந்தால், அவர்களுக்கு இதுவரை வேறு நீண்டகால உதவிகள் கிடைக்கவில்லை என்றால், அவரது ஒரு பிள்ளையின் கல்விக்கு / படிப்புக்கு நீண்டகால உதவிக்கான ஏற்பாடுகளை எங்களால் செய்ய முடியும்.

அவர்களுக்கு உண்மையில் உதவி தேவைப்பட்டால் (இதுவரை வேறு நீண்டகால உதவிகள் கிடைக்கவில்லை என்றால்) இது போன்ற நீண்டகால உதவிகளை எமது நண்பர்கள் நேரடி சந்திப்புக்களுக்கு பிறகே செய்வதால், உதவிகளை ஆரம்பிக்க சில மாதங்கள் செல்லும்! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உதவித் திட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் (  முன்னர்நேசக்கரத்திலும் சில பங்களிப்பு செய்திருந்தேன் ) , ஆனால் பிள்ளைக்காக உதவி செய்யாமல் பெற்றோருக்கு உதவி செய்தல் தான் பொருத்தம் எனநினைக்கிறேன் , அவர்களின் பொருளாதார மேம்பாடு தான் முதலில் முக்கியம். இப்படியான ஒரு மனிதர் தன் பிள்ளையையும்  நிச்சயம் நன்றாக கவனிப்பார் . வரப்புயர ............ உயரும்....... இது என் தனிப்பட்ட கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2019 at 5:03 AM, போல் said:

தனிக்காட்டு ராஜா, அவரது முகவரியையும் கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் தனிமடலில் தந்தால், அவர்களுக்கு இதுவரை வேறு நீண்டகால உதவிகள் கிடைக்கவில்லை என்றால், அவரது ஒரு பிள்ளையின் கல்விக்கு / படிப்புக்கு நீண்டகால உதவிக்கான ஏற்பாடுகளை எங்களால் செய்ய முடியும்.

அவர்களுக்கு உண்மையில் உதவி தேவைப்பட்டால் (இதுவரை வேறு நீண்டகால உதவிகள் கிடைக்கவில்லை என்றால்) இது போன்ற நீண்டகால உதவிகளை எமது நண்பர்கள் நேரடி சந்திப்புக்களுக்கு பிறகே செய்வதால், உதவிகளை ஆரம்பிக்க சில மாதங்கள் செல்லும்! 

 

அவர் சுயதொழிலில் ஈடுபடுவதால் தூர ஊர் சென்றாக அறிய முடிகிறது கிடைத்தால் தருகிறேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.