Jump to content

இண்டர்போலினால் தேடப்படும் 14 இலங்கையர்கள்


Recommended Posts

 

இண்டர்போலினால் தேடப்படும் 14 இலங்கையர்கள்

 தேடப்படும் குற்றவாளிகள் என்ற ‘சிவப்பு அறிக்கையில்’ 6872 பெயர்களை இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை தனது இணையத் தளத்தில் பிரசுரித்துள்ளது. அதில் 14 பேர் இலங்கையர்கள் ஆகும்

இவர்களில்  கொஸ்கொட சுஜீ என அழைக்கப்படும் டி சொய்சா ஜகமுனி சுஜீவா (வயது 34), அன்ரனி எமில் லக்ஸ்மி காந்தன் (வயது 42), முனிசாமி தர்மசீலன் (46), விக்னராசா செல்வநாதன் (வயது 31) ஆகியவர்கள் சிறீலங்கா காவல்துறையினால் தேடப்படுபவர்கள் ஆகும்.

கொஸ்கொட சுஜீ மீது கொலை வழக்கு சம்பந்தமாகவும், எமில் காந்தன் மீது குற்ற மோசடி சம்பந்தமாகவும் சிவப்பு அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.  இரண்டு கைக்குண்டுகள் மற்றும் 200 ரவைகளையும் வைத்திருந்ததற்காக தர்மசீலன் மீதும், களவு மற்றும் கொலைக் குற்றச்சாட்டில் செல்வநாதன் மீதும் வழக்குகள் பதியப்பட்டிருந்தன.

இவர்களைவிட மேலும் பத்துப் பேர்களின் மீது சர்வதேசங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து சிவப்பு அறிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் வாழும் வெளிநாடுகளில் இக் குற்றங்கள் இழைக்கப்பட்டதனால் இண்டர்போலிடம் அந்நாடுகள் கைது கோரிக்கையைச் சமர்ப்பித்திருந்தன.

பத்து சிவப்பு அறிக்கைகள் வழங்கப்பட்ட ஏழு இலங்கையர்கள் இந்தியாவினால் தேடப்படுபவர்கள் என்றும் இன்னும் மூன்று பேர் றோமானியா, கனடா மற்றும் சைப்பிரஸ் நாடுகளினால் தேடப்படுபவர்கள் ஆகும்.

யாழ். காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்மலிங்கம் சண்முகம் குமரன் என்பவர் குற்றமிழைக்கத் திட்டமிட்டதாக பயங்கரவாதச் சட்டம் மற்றும் இந்திய வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்படுகிறார். கொழும்பை வதிவிடமாகக் கொண்ட எம்.கே,எம். ராம்சி மொகாமெட் என்பவர் குற்றமிழைக்கத் திட்டமிட்டவர் எனத் தேடப்படுகிறார்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 53 வயதுடைய பாலமுரளி கிருஷ்ணா என்பவர் ஹெறோயின் போதைப்பொருள் கடத்தியமைக்காகவும், 57 வயதுடைய நிஹால் என்பவர் ஹெறோயின் போதைப்பொருளை வைத்திருந்ததற்காகவும் தேடப்படுகிறார்கள்.

ராமசாமி அளகேசன் மாதவன் என்பவர் குற்றமிழைக்கத் திட்டம் தீட்டியதற்காகவும், எலபோடகமவைச் சேர்ந்த 56 வயதுடைய மொகாமட் பெளமி கள்ள நோட்டு விவகாரத்திலும், கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜன் மாறன் உதயகுமார் என்பவர் ஏமாற்றியமை, குற்றமிழைக்கத் திட்டமிட்டமை என்பவற்றுக்காக இந்தியாவினானும் தேடப்படுபவர்களாகும்.

வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 48 வயதுடைய குமாரசாமி நவனீதன் என்பவர் கொலைக் குற்றத்துக்காக றோமானியாவினாலும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 37 வயதுடைய மாணிக்கவாசகர் விஜயராஜா கொலைக் குற்றத்துக்காக கனடாவினாலும் தேடப்படிகிறார்கள்.

40 வயதுடைய ரணசிங்க ஆராச்சிகே சஞ்சீவ பிரசன்னா என்பவர் களவிற்காக சைப்பிரஸ் நாட்டினால் தேடப்படுபவராகும்.

சிவப்பறிக்கை என்பது இக் குறிக்கப்பட்ட குற்றவாளிகள் எங்கிருந்தாலும் அவர்களைக் கைது செய்து சட்டத்திற்கு முன் கொண்டுவருவதற்கான ஆணையை உலகம் முழுவதுமுள்ள காவல் துறையினருக்கு வழங்குவதாகும் என இண்டர்போல் வர்ணிக்கிறது. அதே வேளை காணாமற் போனவர்களைத் தேடுவதற்காக அது மஞ்சள் அறிக்கைகளையும் அது அப்பப்போ பிரசுரிக்கிறது. காணாமற் போபவர்கள் பெரும்பாலும் குழந்தைகள், இளையர்களாக இருப்பார்கள் எனவும் சில வேளைகளில் தம்மை அடையாளம் காண்பதற்கு முடியாத முதியவர்களையும் மஞ்சள் அறிக்கைகளில் பிரசுரிப்பதாகவும் அது கூறுகிறது.

கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட 16 வயதுடைய காயிண்டு கித்முக மதுரப்பெருமா என்ற இளம் பெண் 2008ம் ஆண்டு ஐந்து வயதாயிருக்கும் போது காணாமற் போயிருந்தார். அதே போல் 34 வயதுடைய யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கனேசமூர்த்தி கஜாந்தினி என்பவர் 2009 ம் ஆண்டு அவர்து 24 வயதில் காணாமற் போயிருந்தார். இவ்விருவர் மீதும் மஞ்சள் அறிக்கைகள் இண்டர்போலினால் பிரசுரிக்கப்பட்டன.

http://marumoli.com/இண்டர்போலினால்-தேடப்படு/?fbclid=IwAR3jqRZYBntGIVlfC_09XNDJBaqV7QVMYN93a80OPDfP3GWu8qRGYlONiMo

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.