Jump to content

மஹாபாரதத்திலிருந்து என்ன கற்கலாம்?


Recommended Posts

மஹாபாரதம்

அரசாளும் குடும்பத்திற்குள் நடந்த ஒரு சண்டை.

அரசாளுபவர்கள் சண்டையிட்டால் மாளுவது சாதாரண மக்கள். போர் யாருக்கும் நல்லது அல்ல.

முடிந்தால் போரை தவிர்ப்பது தான் வீரம். வாய்மையே வெல்லும். வாய்மையை வெல்ல வைக்க சில பொய்கள் அவசியமாகிறது. ஆனால் அப்படி சொல்லப்படாத பொய்களினால் வாய்மையே தோற்கவேண்டி நிலை வந்தால் அது ஆபத்து.

பாண்டவர்கள்

தாய் சொல்லை தட்டாதவர்கள்

சகோதரத்துவத்திற்கு மதிப்பு கொடுத்தவர்கள்

சூதாட்டம் எனும் தவறு செய்ததால் நாட்டை இழந்தவர்கள். அதனால் பல கஷ்டமும் பட்டவர்கள்.

கௌரவர்கள்

சொன்ன வார்த்தையை காப்பாற்றாதவர்கள்.

தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் மீறியவர்கள்

சூழ்ச்சியினால் நேர்மையை வெல்ல நினைத்தவர்கள்.

பல நேர்மையற்ற காரியத்தை செய்தவர்கள்

ஒரு பெண்ணை அவமானப்படுத்தியவர்கள்.

திரெளபதி

மிகவும் காராசாரமாக இணையத்தில் விவாதிக்கப்படும் ஒரு பாத்திரம்.

அவள் விலைமாதா - இல்லை. காசுக்கு உறவு கொண்டால் தான் ஒரு பெண் விலைமாதாகிறாள்.

அவள் கள்ள உறவு கொண்டவளா - இல்லை. கணவனுக்கு அறியாமல் இன்னொரு ஆண்மகனுடன் உறவு கொண்டால் தான் அது கள்ள உறவு. இங்கு அவள் அந்த ஐவரையும் மணந்தாள். ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் உறவு கொள்ளவில்லை.

ஒரு பெண் 5 பேரை மணப்பதா - ஒரு ஆண் 5 பெண்களை மணக்கும் போது ஒரு பெண்ணும் 5 பேரை மணக்கலாம். சமத்துவும் என்று பார்த்தால் அந்த காலத்திலேயே. ஒரு பெண் பல பேரை மணப்பதா - மீண்டும் நாம் கதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த காலகட்டம் சமூக கட்டமைப்பு அப்படி மணப்பதில் ஏதாவது கட்டுபாடு இருந்து அவள் அந்த கட்டுப்பாட்டை உடைத்தாளா என்று. அப்படி இல்லை. கதைப்படி.

அர்ஜூனன்

கிருட்டிணரிடம் அறிவுரைகள் கேட்கிறார். அதுவே பிறகு பகவத் கீதையாகிறது. அதில் ஒரு மனிதனின் கடமைகளையே விளக்கியுள்ளனர் கிருட்டிணன் வாயிலாக.

பொய் புரட்டு செய்கிறான் பாண்டவர்களை ஜெயிக்க வைக்க

ஒரு வேளை நேர்மையான யுத்தம் பாண்டவர்கள் பூண்டிருந்தால் துரியோதனனின் சூழ்ச்சி வென்று மஹாபாரதத்தையே மாற்றி எழுதியிருப்பான். அதற்காக நேர்மை வெல்ல பொய்மையும் சில நேரம் ஆயுதமாக எடுக்க வேண்டும் என்று பல counter-attacks களை கிருட்டிணர் செய்வதாக கதை.

கர்ணன்

நட்பில் சிறந்தவன். தானத்தில் சிறந்தவன். தானம் கொடுப்பவர்கள் இன்றும் கூட நீ என்ன கர்ணனா என்று சொல்லும் அளவிற்கு காலங்கள் கடந்து மனதில் நின்றவன். தான் பாண்டவர்களுக்கு மூத்தவன் என்று அறிந்தும் பாண்டவர்கள் பக்கம் சேராமல் தன் நண்பனுடன் நின்றவன். இன்று யாராவது நம்மிடம் வந்து நீதான் நிஜமாகவே அம்பானியின் பிள்ளை என்று சொன்னால் நாம் ஓடிப்போய்விடுவோம். நட்புக்கு இலக்கணம் இங்கிருந்து கற்கலாம்.

துரியோதனன்

அவன் கர்ணனை பயன்படுத்தியிருந்தாலும் அவனுக்கு உரிய மரியாதை பெற்றுத் தந்தவன். தன் நண்பனுக்கு தன் மனைவிக்கும் உள்ள நட்பை சந்தேகப்படாமல் இருவர் மீதும் அளிவில்லா நம்பிக்கை கொண்டவன். நண்பனின் மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும் எனும் பாடம்.

பீஷ்மர்

அதர்மத்தின் பக்கம் இருந்தாலும் நாட்டை காப்பது தன் கடமை என்று துரியோதனின் பக்கமாக நின்று போர் புரிகிறார். தேசப்பற்றுக்கு உதாரணம்.

திருதிராஷ்டிரன்

கண்ணில்லாதவர். மகன் மீது அளிவிலா பாசம் கொண்டவர். தான் அடையாத ராஜ்ஜியத்தை எப்படியாவது தன் மகன் அடைய வேண்டும் என்று ஆசை கொண்டவர். நடப்பது தவறுகள் என்றிருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே காதையும் மூடிக் கொண்டவர். இவர் ஒரு

துணைபாத்திரம் தான். ஒரு Helpless character depicted nicely. இவர் மனைவி தன் கணவன் பார்க்காத உலகை தானும் பார்க்க மாட்டேன் என்று கண்ணை மூடிக் கொண்டவள். கணவன் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. நல்ல பட்டிமன்ற தலைப்பு. கண்களை கட்டிக் கொள்ளாமல் தன் கணவனுக்கு சேவை செய்வது தானே நியாயம் என்பார்கள் சிலர்.

குந்தி

தவறாக குழந்தை பெற்றவள். அந்த தவறுக்காக கடைசி வரையில் வாடுகிறாள். கணவனை இழக்கிறாள். பிறகு பிள்ளைகளுடன் அவதிப்படுகிறாள்.

யுத்தம்

யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடப்பதாக கதை.

மேலும் பல துணை கதைகள் நீதி நேர்மை வாய்மை இவற்றை அறிவுறுத்துவதாகவே உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டுமொத்தமாக இது ஒரு கற்பனை கதைதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! பாரதமும் ராமாயணமும் குழம்பிப் போயிற்று எனக்கு!

Link to comment
Share on other sites

நான் பார்த்த மகாபாரத நாடகத்தில் பாண்டவரின் மனைவி அவமானப்படும் போது கர்ணன் பார்த்து கொண்டுதானிருந்தார். அது எப்படி சரியாகும்? கொடைவள்ளலாக மட்டும் இருந்தால் போதுமா? என்னளவில் அவர் ஒரு மனிதனேயில்லை.

[மனைவியை வைத்து சூதாடியவன் மட்டும் நல்லவனா என கேட்காதீர்கள், இவர்கள் எல்லாம் தீயவர்கள்]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனைக் கதை என்றாலும், தர்மம் வெல்லும் என்று சொல்லப்படுகிறது. நிதி வெல்லும் என்றும் சொல்லப்படுகிறது. கெளரவர் படையில் பல படைசேனைகள் இருந்தாலும், உதவிகள் இருந்தாலும், பாண்டவர் படையே கடைசியில் வென்றது. சிங்கள அரசுக்கு அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா ,இஸ்ரெல் உட்பட பல நாடுகள் உதவி புரிய, அப்பாவித்தமிழர்களை குண்டு போட்டு அழிக்கிறது சிங்களப் படை. என்றாலும் தர்மத்தின் பால் நீதியின் பால் செயற்படும் தலைவர் பிரபாகரன் படை, வெளினாடுகள் உதவி இன்றி பெரும் வெற்றிகளை ஈட்டு ஈழத்தை மீட்பது உறுதி. ஆனால் மகாபாரதம், பகவத்கீதையை நம்புகிற சில ஈழத்தமிழர்கள் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். சிங்களவரோடு சேர்ந்து வாழலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் பாரதப்போரில் கெளரவர்களிடம் பாண்டவர்கள், நாடு கேட்டு, ஊர் கேட்டு, 5 வீடுகள் கேட்டு கிடைக்காததினால் உரிமையினை பெறுவதற்காகவே போரிட்டார்கள். அதே போலத்தான் தமிழர்களும் உரிமைகள் கேட்டு ஏலாமல் போரிடத்துணிந்து வீரசாதனை படைத்து வருகிறார்கள். இது பற்றி இந்த ஈழத்தமிழர்களிடம் கேட்டால் அது வேற , இது வேற என்று எதோ கதைக்கிறார்கள்.

பகவத்கீதையில் உள்ள வாக்கியம்' எது நடந்ததோ அது நன்றாக நடந்தது' - இதனை செஞ்சோலையில் இறந்த பிள்ளைகளின் பெற்றோர்களைப் பார்த்துக் கேக்கலாமா?. நடை முறைக்கு இது சாத்தியமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகாபாரதம் என்றொரு மெகாபொய்

மகாபாரதம் உண்மையாக நடந்த வரலாறு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போது மகாபாரத காலத்தை நினைவூட்டும் வகையில் இருந்து வரு வதைக் கண்கூடாகக் காணலாம். இருபுறம் திறந்த நிலையில் இப்போதும் நீண்ட குகை மகாபாரதம் கதையல்ல; நிஜம் என்பதை விளக்குவதாக இருக்கிறது.

ஆதாரம் கிடைத்தனவாம்! 12.6.2005 நாளிட்ட 'தினமலர்' - நாளிதழில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. "மகாபாரதம் கற்பனையல்ல; வரலாறு. ஆதாரங்களுடன் உ.பி. அரசு உறுதி இவ்வாறு உ.பி . அமைச்சர் கோகல் ஹமீத் கூறியுள்ளார். இதுதான் 'தினமலர்' செய்தியின் சில பகுதிகள்.

முதன்முதலாகப் பார்த்தபோது. இப்பொழுது, நாம் மகாபாரதம் கற்பனைக் கதையா? வரலாறா? என்பதுபற்றி ஆய்வு முறையில் அலச இருக்கிறோம்.

இந்த மகாபாரதமானது முதலில் அஸ்வலாயனா என்பவரின் 'கிருஹ்ய சூத்ரம்' என்னும் நூலிலும், பாணினியின் 'அஷ்டத்யாயி' என்னும் நூலிலும் குறிக்கப்பட்டுள்ளது. முழுமையாக, மகாபாரதம் என்ற பெயரானது, முதல் தடவையாக குப்தர் காலக் கல்வெட்டில் தான் பொறிக்கப்பட்டுள்ளது.

கண்ணன் இறந்த காலம்: மகாபாரதப் போர், துவாபர யுகத்தின் இறுதியிலும், கலியுகத்தின் தொடக்கத்திலும் நடந்ததாகக் கூறி, இந்நிகழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்று பழம்பெருமை பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு, மகாபாரதம் : ஆதிபர்வம் :

அத்தியாயம் - 2; சுலோகம் 10 கூறுகிறது.

இந்தக் கலியுகம் எப்பொழுது தொடங்கியது? கண்ணன் இறந்த அந்த நாளில்!

கண்ணன் இறந்தது எப்பொழுது? மகாபாரதப் போர் முடிந்து, 36 ஆண்டுகளுக்குப் பின் கண்ணன் மடிந்தான்.

இவ்வாறு ஸ்ரீமத் மகாபாகவதம்: முதல் °கந்தம்:

அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது.

கலிகாலப் பிறப்பு:கலியுகம் தொடங்கி இப்பொழுது எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?

ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துப்புரட்டி பார்த்தால் கலியுகம் தொடங்கி 5107 ஆண்டுகள் ஆகின் றன எனத் தெரிந்து கொள்கின்றன. இந்த 5107-லிருந்து 36 ஆண்டுகளைக் கழித்தால் வருவது 5071.

ஆக, இதிலிருந்து 5071 ஆண்டு களுக்கு முன் மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதாகப் பாகவதம் பகர்கிறது.

ஆனால், மகாபாரதக் கணக்குப்படி கண்ணன் உயிருடன் இருந்து மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாய் அதாவது பார்த்த சாரதியாய் இருந்தபோது கலியுகம் பிறந்து விட்டது என்கிறது மகாபாரதம். இரண்டில் எது சரி? எது சரி அன்று? அந்த வியாசருக்குத்தான் வெளிச்சம்!

வேறுபாடு வரலாமா? மகாபாரத நூலையும், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்களையும் பாடியவர் இந்தப் பராசரப் புத்திரர் வியாசர்தானே?

ஒருவரே, தாம் எழுதிய இரண்டு நூல்களிலும் கணக்கில் வித்தியாசம் வரும்படி எழுதலாமா? வேதம் வகுத்த வியாச முனிவருக்கு கணக்கில் கலக்கமான அறிவா?

தப்புக்கணக்கு போடுபவர் வேத வியாசர் என்று அழைக்கப்படும் தகுதியுடையவர் ஆவாரா?

ஒத்த கருத்து உண்டா?மகாபாரதப் போர் ஸ்ரீமத் மகாபாகவதப்படி கி.மு. 3007 வாக்கில் நிகழ்ந்தது. அது இருக்கட்டும், இந்தக் கலியுகம் தோன்றியது எப்போது என்பது பற்றிய செய்தியிலிருந்து வடமொழி அறிவாளர் களிடை ஒத்தக் கருத்து உண்டா?

"கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியது" என்கிறார். கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார்.

"கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது" - என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார்.

ஆக, மகாபாரதம் - கலியுகம் பற்றி இத்துணை குளறுபடி இருக்கையில் மகாபாரதம் வரலாறு என்பது பொருந்துமா?

என்ன கணக்கு, இந்தக் கணக்கு?குருச்சேத்திரத்தில் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கவுரவரின் 11 அக்ரோணி சேனையும் பாண்டவரின் 7 அக்ரோணி சேனையும் ஆக மொத்தம் 18 அக் ரோணி சேனை ஈடுபட்டதாக மகாபாரதம் கூறுகிறது.

ஓர் அக்ரோணி படை என்பது,

21870 தேர்கள்;

21870 யானைகள்;

65610 குதிரைகள்;

109350 காலாட்படைகள்

அடங்கியது ஆகும்.

18 அக்ரோணி சேனைகள் என்றால்,

21870 ஒ 18 = 393660 தேர்கள் (ரத)

21870 ஒ 18 = 393660 யானைகள் (கஜ)

65610 ஒ 18 = 1180980 குதிரைகள் (துரக)

109350 ஒ 18 = 1978300 காலாட்கள் (பதாதிகள்) அடங்கியது என்பதாகிறது,

தேர் ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால் 3,93,660 தேர்ப்படை வீரர்கள்; யானை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 3,93,660 யானைப் படை வீரர்கள்; குதிரை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 11,80,980 வீரர்கள்.

இத்தோடு, காலாட்படை வீரர்கள் 19,78,300 வீரர்கள்.

இவற்றைக் கூட்டினால் மொத்த நாற்படை வீரர்கள் 39,46,540 எண்ணிக்கையாகிறது.

போரில் பங்குபெற்ற நாற்படை வீரர்கள் ஏறத்தாழ 40 இலட்சம் பேர்; யானைகள் 4 இலட்சம்; தேர்கள் 4 இலட்சம்; குதிரைகள் 1 1/4 இலட்சம்; நம்பமுடியவில்லை, இல்லை!எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு படை வீரர்கள், யானை, தேர், குதிரைகள் நிறுத்தி வைக்க இவ்வளவு பெரிய மைதானம் இருக்க வாய்ப்பு உண்டா?

அவற்றை மோதுமான இடைவெளியில் அணி வகுத்து நிறுத்த இடம் இருக்க முடியுமா?

நிறுத்தி, அணிவகுத்து நிற்கவே இடமிராது என்றால் அப்படையினர் அங்கும் இங்கும் பாய்ந்து திரிந்து ஓடிப் போரிட அத்தனை பெரிய போர்த்திடல் இருக்க வேண்டுமே? அதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையே!

இத்துணை எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை; இல்லை; இல்லவே இல்லை!!

எல்லாம் ஒரே 'கப்ஸா' ஆகவல்லவா இருக்கிறது?

இவ்வெண்ணிக்கை, உண்மையாக இருக்க வேண்டும் எனில், படைவீரர்களுக்கும், மொத்த மக்கள் தொகைக்கும் இயல்பான விகிதாசாரப்படி மக்கள் தொகை 20 கோடியாக இருக்கவேண்டும். இது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை!

எல்லாம் இல்லை மயம்!மகாபாரதம் பற்றி, வரலாற்று அறிஞர் பெருமகன், டி.டி. கோசாம்பி முதலியோர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம்.

1. கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான எந்த இலக்கியத்திலும் மகாபாரதம், மகாபாரத யுத்தம் பற்றிய செய்திகளே இல்லை!

2. மகாபாரத யுத்தம் எப்போது நடந்தது? என எவராலும் வரையறுத்துக் கூறப்படவில்லை!

3. இன்றைய அஸ்ஸாம் என்று கருதப்படுகிற மகாபாரத 'பிரஜியோதிஷா' மன்னனைப் பற்றி அஸ்ஸாமிய இலக்கியம், வரலாறு எவற்றிலும் எந்தக் குறிப்புகளும் இல்லை !

4. போரில் கலந்துகொண்ட படைவீரர்கள் எண்ணிக்கை நம்பவே முடியாத கற்பனையாகும்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக, யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் பல ஆயுதங்களைச் செய்வதற்கு, பெருவாரியான இரும்பு தேவைப்பட்டிருக்கும். ஆனால், மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இரும்பு அரிதாகவே இருந்திருக்கிறது.

(உலகின் இரும்புக் காலம் என்பது, 3300 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்).

இந்தக் காலகட்டத்தில்தான் இரும்பை உலகில் மனிதன் இனம் மிகுதியாகக் கையாளத் தொடங்கியது என்பது மனித இன வரலாற்றுச் செய்தி. மகாபாரத காலம் எனக் கூறப்படுவதோ கி.மு. 3000 வாக்கில் - (ஆதாரம்: 'சண்டே', 5-11, ஜூன் 1988)

வரலாற்று அடிப்படையற்றது:வரலாற்று ஆய்வு அறிவாளர்களின் கருத்து இவ்வண்ணம் இருக்க, உத்திரபிரதேச அமைச்சர் பெருமகன் மான்புமிகு ஹமீத் பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போதும் மகாபாரத காலத்தை நினைவூட்டுவதாக இருந்து வருவதாக எதன் அடிப்படையில் இயம்புகிறார்?

தலைமுறை தலைமுறையாக:ஏதோ ஒரு சமயம் குருச்சேத்திரம் எனப்படும் பகுதியில், பாண்டவர் என்பவர்களுக்கும் கவுரவர் என்பவர் களுக்கும் இடையே பங்காளிச் சண்டை என்று சிறிய அளவில் நிகழ்ந்திருக்கலாம். இம்மாதிரியான சண்டை எங்கும் நடப்பது தான்! இயல்பானதுதான்! ஆனால், ஒவ்வொரு தலை முறையினரும், இந்தச் சண்டை நிகழ்ச்சியை அடுத்த தலைமுறையினருக்கு விவரிக்கும்போது பல, புதிய, புதிய தகவல்களைக் காலப் போக்கில் கற்பனை வளம் மிளிர சேர்த்திருக்கின்றனர்.

வளர்த்த கலை மறந்துவிட்டாய் ஏனடா, கண்ணா?"முதன் முதலாக, வியாசர் எழுதிய மகாபாரதக் காவி யத்தில் 8000 செய்யுள்களே இருந்தன. இதற்கு 'ஜெய பாரதம்' எனப் பெயர்! இதுவே, காலப்போக்கில், 24 ஆயிரம் செய்யுள் களையும், பின்னர், 1 லட்சம் செய்யுள்களையும் கொண்ட 'மகாபாரதம்' ஆக வளர்ந்துவிட்டது.

உண்மை ஒருநாள் வெளியானால்?இதுவரை, ஜெயபாரதம் நமக்குக் கிடைக்கவில்லை! அதைப் படித்தால், ஒருவேளை பாரதக் கதையின் உண்மை உருவத்தை நாம் தெரிந்து கொள்ள வழியிருக்கிறது?" என்கிறார், குருச்சேத்திரப் பல்கலைக் கழகத்துத் தொல் பொருள் ஆய்வுத் துறைப் பேராசிரியர் டாக்டர் உதய்வீர் சிங் அவர்கள். இவர், மகாபாரத ஆய்வுப் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருபவர்.

கேள்வி (கேலி)க் குறி:"40 இலட்சம் பேர் கொண்ட பெரிய படைகள் இந்தக் குறுகிய இடத்தில் போரில் எப்படிப் பங்கு கொண்டன? என்பது கேள்விக் குறியான விஷயமாக இருக்கிறது!

இத்தனை பெரிய எண்ணிக்கை, கவியின் கற்பனை யாக இருக்கலாம்" - என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் உதயவீர்சிங்.

ஒன்றும் காணவில்லை!அவர் மேலும் கூறுகிறார்: "குருச் சேத்திரத்திலிருந்து, சுற்றிலும் மேட்டுப் பகுதிகள் இருக்கின்றன.

இங்கிருந்து 2 கல் தொலைவில் அஸ்திபூர் என்று ஓர் இடம் இருக்கிறது. இங்குதான், பாரதப் போரில் உயிரிழந்த போர்வீரர்களின் உடல்கள் எரிக்கப் பட்டன - என்பது அய்தீகம்.

இப்போது, இந்த அஸ்திபூருக்குப் போனால் ஒரு அஸ்திக்குன்றைக் கூட (எலும்புச் சாம்பல் மேடு)ப் பார்க்க முடியாது" - (தகவல்: நூல் - 'கண்ணனைத் தேடி' - டி.கே.வி. இராஜன்)

எதுவும் கிடைக்கவில்லையே?

"மகாபாரதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் அரசர்களின் கல் வெட்டுகளோ, செப்பேடுகளோ, காசுகளோ இதுவரை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை!" - என்கிறார், மய்ய அரசுத் தொல் பொருள் துறையின் மேனாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பி.பி. வால் அவர்கள்.

பானை ஓடும், பாரத காலமும்:தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங் களை வைத்துக் கொண்டு பார்க்கும் போது, அஸ்தினா புரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பானை ஓட்டின் காலம் கி.மு. 1100 எனக் கணக்கிடப் பட்டுள்ளது. எனவே, இப்பானை பாரத காலத்தைச் சேர்ந்ததில்லை என்று தெரிய வந்துள்ளது. மகாபாரத காலம் கி.மு. 3000 வாக்கில் - என்பது முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம்.

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!

மகாபாரதக் கதை நிகழ்வு பற்றிய எந்தத் தடயங்களும் உ.பி. அமைச்சர் கூறும், குருச்சேத்திரப் பகுதியில் அதாவது புதுடில்லியிலி ருந்து 150 கி.மீ. வடமேற்கில் கிடைக்கவில்லை! இந்நிலையில், உ.பி. அமைச்சர் ஹமீத் அவர்கள் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பாக்பத் - பர்னாலா இடையிலான 60 கி.மீ. தூரம் மகா பாரத காலத்தினை நினைவூட்டுவதாக, ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - என்று கூறுகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை!

உங்கள் விருப்பம்!

"நீண்ட குகை அப்பகுதியில் இருப்பதால் மகா பாரதம் நிஜம்" என்கிறார் அமைச்சர். அது, மெய்ப் பிக்கப்பட வேண்டாமா? மெய்ப்பிக்கப்பட்டதா? அந்தக் குகை, கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஏதேனும் வரலாற்று அறிவியல் ஆய்வு கூறியுள்ளதா? ஒரு பகுதியில், குகை ஒன்று இருப்பதாலேயே, 'பார், பார்! அது மகாபாரத காலக் குகை!' என்று எப்படிக் கூறலாம்?

வெறும் கற்பனை, யூகத்தை, தன் விருப்பத்தை உண்மை - என்று அவர் எப்படிக் கூறலாம்? இது என்ன 'உங்கள் விருப்பமா'?

கற்பனையின் விற்பனை!

வரலாற்று ஆய்வு முடிபுகளிலிருந்து மகாபாரதம் 'நிஜம்' அல்ல; வரலாறு அன்று; கற்பனைக் கதை என்றுதான் கூறமுடியும். கற்பனையை வரலாறு என்று விற்பனை செய்யலாமா? இது தகுமா? முறையா? சரியா?

காரணம் புரிகிறதா?

"இந்துத்வா என்ற பெயரில் உ.பி.யிலும், மத்தியி லும் ஆட்சி நடத்திய தே.ஜ. அரசு செய்யாத இந்த முயற்சியை சமாஜ் வாடி அரசு செய்ய முன் வந்துள் ளது குறிப்பிடத்தக்கது" - என்று 'தினமலர்'க்காரர் புல்லரித்துப் போய் எழுதுகிறாரே? என் செய்ய?

நமது சமுதாயம் ஏன், பிற்படுத்தப்பட்டு தாழ்த்தப் பட்டுப் போய்க் கிடக்கிறது? என்பதற்கு சமாஜ்வாடிக் கட்சி அரசின் செயல்பாடு உலகுக்குத் தெரிவித்து நிற்கிறதே? இப்படிச் 'சூத்திர' அரசு இந்துத்வாவுக்கு வெண்சாமரம் வீசலாமா? இதைக் கண்டு நாம் வெட்கப்படுகிறோம்!

வேதனைப்படுகிறோம்! வேறு என்ன செய்ய? -

நன்றி: மறுமலர்ச்சி

Link to comment
Share on other sites

மகாபாரதம் உண்மையோ பொய்யோ, அந்தக் கதை மூலம் பல செய்திகளும் , மிக சிறந்த நூலான பகவத் கீதையும் கிடைத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதம் உண்மையோ பொய்யோ, அந்தக் கதை மூலம் பல செய்திகளும் , மிக சிறந்த நூலான பகவத் கீதையும் கிடைத்தது

நாங்கள் கொப்பி பெஸ்ட் செய்ய எவ்வளவு விசயம் இருக்கிறது.. இவவர்கள் சும்மா சரி பிழை பார்த்துக்கொன்டுஇருக்கினம்..

..... :D:blink::D:D:D:D

Link to comment
Share on other sites

மஹாபாரதத்திலிருந்து என்ன கற்கலாம்?

மெகா சீரியல்கள் அந்தக்காலத்திலேயும் இருந்திருக்கு :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாபரதம் எங்களின் புத்தகம் தானெ

திரெளபதி.....திருகோனமலை தான் பிறந்தவ.

பான்டவர்கள் ..பன்டதெறிப்பில் பிறந்தவர்கள்

ஏன் மகாபாரத்ப்போர் அனுராதபுரத்தில்தான் நடந்தது .........அன்னியரின் படை எடுப்பால் எல்லாம் மாற்றம் அடைந்து போயிற்றுது.....

Link to comment
Share on other sites

மகாபரதம் எங்களின் புத்தகம் தானெ

திரெளபதி.....திருகோனமலை தான் பிறந்தவ.

பான்டவர்கள் ..பன்டதெறிப்பில் பிறந்தவர்கள்

ஏன் மகாபாரத்ப்போர் அனுராதபுரத்தில்தான் நடந்தது .........அன்னியரின் படை எடுப்பால் எல்லாம் மாற்றம் அடைந்து போயிற்றுது.....

கண்ணன் கண்ணாதிட்டியிலேயே அவதரிச்சவர் :P

Link to comment
Share on other sites

மஹாபாரதத்திலிருந்து என்ன கற்கலாம்?

மெகா சீரியல்கள் அந்தக்காலத்திலேயும் இருந்திருக்கு :P

ஆஹா குட்டித்தம்பி என்ன கண்டுபிடிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப குந்தவை குப்பிளானோ?

யாழ் களத்தில குப்பிளான் வாசி இருக்கிறார் கேட்டு சொல்லுறன் ...சில நேரம் அவருடைய வகுப்பில படிச்சிருக்கலாம்........... :D:blink::D:D:D .

கண்ணன் கண்ணாதிட்டியிலேயே அவதரிச்சவர் :P

நான் நினைச்சன் நீங்கள் சொல்லிட்டிங்கள்....... :D:D

சும்மா இதில இருந்து அரட்டை அடிகவேன்டாம்......சைக்கிளில் டபிள்ஸ் வான்கோ யாழ்சந்திக்கு..........

Link to comment
Share on other sites

மகாபாரதம், இராமாயணம் போன்றவைகள் புத்தர் காலத்திலோ அல்லது அதற்கு பின்போ எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு.

புத்தர் உயிர்க்கொலை, வர்ணக்கோட்பாடு போன்றவைகளுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு எதிராக, அவைகளை நியாயப்படுத்துவதற்கு எழுதப்பட்ட நூல்களே மகாபாரதம், பகவத்கீதை, இராமாயணம் போன்றன என்று கருதப்படுகிறது.

மகாபாரதம், பகவத்கீதை ஆகியன பிறப்பினால் உருவாகின்ற சாதியத்தை கட்டிக்காக்கின்ற வேலையை செய்கின்றன.

இவைகளில் இருந்து எதையுமே கற்கமுடியாது. ஒரு பரபரப்பான கற்பனைக் கதை என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதம், இராமாயணம் போன்றவைகள் புத்தர் காலத்திலோ அல்லது அதற்கு பின்போ எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு.

புத்தர் உயிர்க்கொலை, வர்ணக்கோட்பாடு போன்றவைகளுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு எதிராக, அவைகளை நியாயப்படுத்துவதற்கு எழுதப்பட்ட நூல்களே மகாபாரதம், பகவத்கீதை, இராமாயணம் போன்றன என்று கருதப்படுகிறது.

மகாபாரதம், பகவத்கீதை ஆகியன பிறப்பினால் உருவாகின்ற சாதியத்தை கட்டிக்காக்கின்ற வேலையை செய்கின்றன.

இவைகளில் இருந்து எதையுமே கற்கமுடியாது. ஒரு பரபரப்பான கற்பனைக் கதை என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் சொல்வது சரி ஆனால் அதை ஏற்க கூடிய நிலையில் இந்துவாதிகளாகிய நாம் தயார் இல்லை

இந்து,இந்து,இந்து(இது யார் வைத்த பெயர்)வெள்ளைகாரன் வைத்த பெயர் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாபரதம் எங்களின் புத்தகம் தானெ

திரெளபதி.....திருகோனமலை தான் பிறந்தவ.

பான்டவர்கள் ..பன்டதெறிப்பில் பிறந்தவர்கள்

ஏன் மகாபாரத்ப்போர் அனுராதபுரத்தில்தான் நடந்தது .........அன்னியரின் படை எடுப்பால் எல்லாம் மாற்றம் அடைந்து போயிற்றுது.....

ஹலோ புத்து எடுத்தபாட்டுக்கெல்லாம் விசுக்கோத்துக்கதை கதைக்கக்கூடாது கண்டீரோ?பேந்து உங்களுக்கெதிராய் சர்வசன வாக்கெடுப்பு நடத்தவேண்டிவரும்

Link to comment
Share on other sites

மகாபாரதம், இராமாயணம் போன்றவைகள் புத்தர் காலத்திலோ அல்லது அதற்கு பின்போ எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு.

புத்தர் உயிர்க்கொலை, வர்ணக்கோட்பாடு போன்றவைகளுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு எதிராக, அவைகளை நியாயப்படுத்துவதற்கு எழுதப்பட்ட நூல்களே மகாபாரதம், பகவத்கீதை, இராமாயணம் போன்றன என்று கருதப்படுகிறது.

மகாபாரதம், பகவத்கீதை ஆகியன பிறப்பினால் உருவாகின்ற சாதியத்தை கட்டிக்காக்கின்ற வேலையை செய்கின்றன.

இவைகளில் இருந்து எதையுமே கற்கமுடியாது. ஒரு பரபரப்பான கற்பனைக் கதை என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

மகாவம்சமே படிச்சனிங்கள் :P

Link to comment
Share on other sites

ஹலோ புத்து எடுத்தபாட்டுக்கெல்லாம் விசுக்கோத்துக்கதை கதைக்கக்கூடாது கண்டீரோ?பேந்து உங்களுக்கெதிராய் சர்வசன வாக்கெடுப்பு நடத்தவேண்டிவரும்

தாத்தா டைகர்பமிலி அவருக்கு ஆதரவாக தான் வாக்களிக்கும்

:rolleyes:

Link to comment
Share on other sites

மகாபாரதம், இராமாயணம் போன்றவைகள் புத்தர் காலத்திலோ அல்லது அதற்கு பின்போ எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு.

புத்தர் உயிர்க்கொலை, வர்ணக்கோட்பாடு போன்றவைகளுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு எதிராக, அவைகளை நியாயப்படுத்துவதற்கு எழுதப்பட்ட நூல்களே மகாபாரதம், பகவத்கீதை, இராமாயணம் போன்றன என்று கருதப்படுகிறது.

மகாபாரதம், பகவத்கீதை ஆகியன பிறப்பினால் உருவாகின்ற சாதியத்தை கட்டிக்காக்கின்ற வேலையை செய்கின்றன.

இவைகளில் இருந்து எதையுமே கற்கமுடியாது. ஒரு பரபரப்பான கற்பனைக் கதை என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

கண்ணன் இறந்த காலம்: மகாபாரதப் போர், துவாபர யுகத்தின் இறுதியிலும், கலியுகத்தின் தொடக்கத்திலும் நடந்ததாகக் கூறி, இந்நிகழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்று பழம்பெருமை பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு, மகாபாரதம் : ஆதிபர்வம் :

அத்தியாயம் - 2; சுலோகம் 10 கூறுகிறது.

இந்தக் கலியுகம் எப்பொழுது தொடங்கியது? கண்ணன் இறந்த அந்த நாளில்!

கண்ணன் இறந்தது எப்பொழுது? மகாபாரதப் போர் முடிந்து, 36 ஆண்டுகளுக்குப் பின் கண்ணன் மடிந்தான்.

இவ்வாறு ஸ்ரீமத் மகாபாகவதம்: முதல் °கந்தம்:

அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது.

கலிகாலப் பிறப்பு:கலியுகம் தொடங்கி இப்பொழுது எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?

ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துப்புரட்டி பார்த்தால் கலியுகம் தொடங்கி 5107 ஆண்டுகள் ஆகின் றன எனத் தெரிந்து கொள்கின்றன. இந்த 5107-லிருந்து 36 ஆண்டுகளைக் கழித்தால் வருவது 5071.

ஆக, இதிலிருந்து 5071 ஆண்டு களுக்கு முன் மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதாகப் பாகவதம் பகர்கிறது.

ஆனால், மகாபாரதக் கணக்குப்படி கண்ணன் உயிருடன் இருந்து மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாய் அதாவது பார்த்த சாரதியாய் இருந்தபோது கலியுகம் பிறந்து விட்டது என்கிறது மகாபாரதம். இரண்டில் எது சரி? எது சரி அன்று? அந்த வியாசருக்குத்தான் வெளிச்சம்!

வேறுபாடு வரலாமா? மகாபாரத நூலையும், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்களையும் பாடியவர் இந்தப் பராசரப் புத்திரர் வியாசர்தானே?

ஒருவரே, தாம் எழுதிய இரண்டு நூல்களிலும் கணக்கில் வித்தியாசம் வரும்படி எழுதலாமா? வேதம் வகுத்த வியாச முனிவருக்கு கணக்கில் கலக்கமான அறிவா?

தப்புக்கணக்கு போடுபவர் வேத வியாசர் என்று அழைக்கப்படும் தகுதியுடையவர் ஆவாரா?

ஒத்த கருத்து உண்டா?மகாபாரதப் போர் ஸ்ரீமத் மகாபாகவதப்படி கி.மு. 3007 வாக்கில் நிகழ்ந்தது. அது இருக்கட்டும், இந்தக் கலியுகம் தோன்றியது எப்போது என்பது பற்றிய செய்தியிலிருந்து வடமொழி அறிவாளர் களிடை ஒத்தக் கருத்து உண்டா?

"கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியது" என்கிறார். கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார்.

"கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது" - என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார்.

ஆக, மகாபாரதம் - கலியுகம் பற்றி இத்துணை குளறுபடி இருக்கையில் மகாபாரதம் வரலாறு என்பது பொருந்துமா?

என்ன கணக்கு, இந்தக் கணக்கு?குருச்சேத்திரத்தில் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கவுரவரின் 11 அக்ரோணி சேனையும் பாண்டவரின் 7 அக்ரோணி சேனையும் ஆக மொத்தம் 18 அக் ரோணி சேனை ஈடுபட்டதாக மகாபாரதம் கூறுகிறது.

ஓர் அக்ரோணி படை என்பது,

21870 தேர்கள்;

21870 யானைகள்;

65610 குதிரைகள்;

109350 காலாட்படைகள்

அடங்கியது ஆகும்.

18 அக்ரோணி சேனைகள் என்றால்,

21870 ஒ 18 = 393660 தேர்கள் (ரத)

21870 ஒ 18 = 393660 யானைகள் (கஜ)

65610 ஒ 18 = 1180980 குதிரைகள் (துரக)

109350 ஒ 18 = 1978300 காலாட்கள் (பதாதிகள்) அடங்கியது என்பதாகிறது,

தேர் ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால் 3,93,660 தேர்ப்படை வீரர்கள்; யானை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 3,93,660 யானைப் படை வீரர்கள்; குதிரை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 11,80,980 வீரர்கள்.

இத்தோடு, காலாட்படை வீரர்கள் 19,78,300 வீரர்கள்.

இவற்றைக் கூட்டினால் மொத்த நாற்படை வீரர்கள் 39,46,540 எண்ணிக்கையாகிறது.

போரில் பங்குபெற்ற நாற்படை வீரர்கள் ஏறத்தாழ 40 இலட்சம் பேர்; யானைகள் 4 இலட்சம்; தேர்கள் 4 இலட்சம்; குதிரைகள் 1 1/4 இலட்சம்; நம்பமுடியவில்லை, இல்லை!எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு படை வீரர்கள், யானை, தேர், குதிரைகள் நிறுத்தி வைக்க இவ்வளவு பெரிய மைதானம் இருக்க வாய்ப்பு உண்டா?

அவற்றை மோதுமான இடைவெளியில் அணி வகுத்து நிறுத்த இடம் இருக்க முடியுமா?

நிறுத்தி, அணிவகுத்து நிற்கவே இடமிராது என்றால் அப்படையினர் அங்கும் இங்கும் பாய்ந்து திரிந்து ஓடிப் போரிட அத்தனை பெரிய போர்த்திடல் இருக்க வேண்டுமே? அதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையே!

இத்துணை எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை; இல்லை; இல்லவே இல்லை!!

எல்லாம் ஒரே 'கப்ஸா' ஆகவல்லவா இருக்கிறது?

இவ்வெண்ணிக்கை, உண்மையாக இருக்க வேண்டும் எனில், படைவீரர்களுக்கும், மொத்த மக்கள் தொகைக்கும் இயல்பான விகிதாசாரப்படி மக்கள் தொகை 20 கோடியாக இருக்கவேண்டும். இது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை!

எல்லாம் இல்லை மயம்!மகாபாரதம் பற்றி, வரலாற்று அறிஞர் பெருமகன், டி.டி. கோசாம்பி முதலியோர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம்.

1. கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான எந்த இலக்கியத்திலும் மகாபாரதம், மகாபாரத யுத்தம் பற்றிய செய்திகளே இல்லை!

2. மகாபாரத யுத்தம் எப்போது நடந்தது? என எவராலும் வரையறுத்துக் கூறப்படவில்லை!

3. இன்றைய அஸ்ஸாம் என்று கருதப்படுகிற மகாபாரத 'பிரஜியோதிஷா' மன்னனைப் பற்றி அஸ்ஸாமிய இலக்கியம், வரலாறு எவற்றிலும் எந்தக் குறிப்புகளும் இல்லை !

4. போரில் கலந்துகொண்ட படைவீரர்கள் எண்ணிக்கை நம்பவே முடியாத கற்பனையாகும்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக, யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் பல ஆயுதங்களைச் செய்வதற்கு, பெருவாரியான இரும்பு தேவைப்பட்டிருக்கும். ஆனால், மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இரும்பு அரிதாகவே இருந்திருக்கிறது.

(உலகின் இரும்புக் காலம் என்பது, 3300 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்).

இந்தக் காலகட்டத்தில்தான் இரும்பை உலகில் மனிதன் இனம் மிகுதியாகக் கையாளத் தொடங்கியது என்பது மனித இன வரலாற்றுச் செய்தி. மகாபாரத காலம் எனக் கூறப்படுவதோ கி.மு. 3000 வாக்கில் - (ஆதாரம்: 'சண்டே', 5-11, ஜூன் 1988)

வரலாற்று அடிப்படையற்றது:வரலாற்று ஆய்வு அறிவாளர்களின் கருத்து இவ்வண்ணம் இருக்க, உத்திரபிரதேச அமைச்சர் பெருமகன் மான்புமிகு ஹமீத் பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போதும் மகாபாரத காலத்தை நினைவூட்டுவதாக இருந்து வருவதாக எதன் அடிப்படையில் இயம்புகிறார்?

தலைமுறை தலைமுறையாக:ஏதோ ஒரு சமயம் குருச்சேத்திரம் எனப்படும் பகுதியில், பாண்டவர் என்பவர்களுக்கும் கவுரவர் என்பவர் களுக்கும் இடையே பங்காளிச் சண்டை என்று சிறிய அளவில் நிகழ்ந்திருக்கலாம். இம்மாதிரியான சண்டை எங்கும் நடப்பது தான்! இயல்பானதுதான்! ஆனால், ஒவ்வொரு தலை முறையினரும், இந்தச் சண்டை நிகழ்ச்சியை அடுத்த தலைமுறையினருக்கு விவரிக்கும்போது பல, புதிய, புதிய தகவல்களைக் காலப் போக்கில் கற்பனை வளம் மிளிர சேர்த்திருக்கின்றனர்.

வளர்த்த கலை மறந்துவிட்டாய் ஏனடா, கண்ணா?"முதன் முதலாக, வியாசர் எழுதிய மகாபாரதக் காவி யத்தில் 8000 செய்யுள்களே இருந்தன. இதற்கு 'ஜெய பாரதம்' எனப் பெயர்! இதுவே, காலப்போக்கில், 24 ஆயிரம் செய்யுள் களையும், பின்னர், 1 லட்சம் செய்யுள்களையும் கொண்ட 'மகாபாரதம்' ஆக வளர்ந்துவிட்டது.

உண்மை ஒருநாள் வெளியானால்?இதுவரை, ஜெயபாரதம் நமக்குக் கிடைக்கவில்லை! அதைப் படித்தால், ஒருவேளை பாரதக் கதையின் உண்மை உருவத்தை நாம் தெரிந்து கொள்ள வழியிருக்கிறது?" என்கிறார், குருச்சேத்திரப் பல்கலைக் கழகத்துத் தொல் பொருள் ஆய்வுத் துறைப் பேராசிரியர் டாக்டர் உதய்வீர் சிங் அவர்கள். இவர், மகாபாரத ஆய்வுப் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருபவர்.

கேள்வி (கேலி)க் குறி:"40 இலட்சம் பேர் கொண்ட பெரிய படைகள் இந்தக் குறுகிய இடத்தில் போரில் எப்படிப் பங்கு கொண்டன? என்பது கேள்விக் குறியான விஷயமாக இருக்கிறது!

இத்தனை பெரிய எண்ணிக்கை, கவியின் கற்பனை யாக இருக்கலாம்" - என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் உதயவீர்சிங்.

ஒன்றும் காணவில்லை!அவர் மேலும் கூறுகிறார்: "குருச் சேத்திரத்திலிருந்து, சுற்றிலும் மேட்டுப் பகுதிகள் இருக்கின்றன.

இங்கிருந்து 2 கல் தொலைவில் அஸ்திபூர் என்று ஓர் இடம் இருக்கிறது. இங்குதான், பாரதப் போரில் உயிரிழந்த போர்வீரர்களின் உடல்கள் எரிக்கப் பட்டன - என்பது அய்தீகம்.

இப்போது, இந்த அஸ்திபூருக்குப் போனால் ஒரு அஸ்திக்குன்றைக் கூட (எலும்புச் சாம்பல் மேடு)ப் பார்க்க முடியாது" - (தகவல்: நூல் - 'கண்ணனைத் தேடி' - டி.கே.வி. இராஜன்)

எதுவும் கிடைக்கவில்லையே?

"மகாபாரதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் அரசர்களின் கல் வெட்டுகளோ, செப்பேடுகளோ, காசுகளோ இதுவரை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை!" - என்கிறார், மய்ய அரசுத் தொல் பொருள் துறையின் மேனாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பி.பி. வால் அவர்கள்.

பானை ஓடும், பாரத காலமும்:தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங் களை வைத்துக் கொண்டு பார்க்கும் போது, அஸ்தினா புரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பானை ஓட்டின் காலம் கி.மு. 1100 எனக் கணக்கிடப் பட்டுள்ளது. எனவே, இப்பானை பாரத காலத்தைச் சேர்ந்ததில்லை என்று தெரிய வந்துள்ளது. மகாபாரத காலம் கி.மு. 3000 வாக்கில் - என்பது முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம்.

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!

மகாபாரதக் கதை நிகழ்வு பற்றிய எந்தத் தடயங்களும் உ.பி. அமைச்சர் கூறும், குருச்சேத்திரப் பகுதியில் அதாவது புதுடில்லியிலி ருந்து 150 கி.மீ. வடமேற்கில் கிடைக்கவில்லை! இந்நிலையில், உ.பி. அமைச்சர் ஹமீத் அவர்கள் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பாக்பத் - பர்னாலா இடையிலான 60 கி.மீ. தூரம் மகா பாரத காலத்தினை நினைவூட்டுவதாக, ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - என்று கூறுகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை!

மறுமலர்ச்சி

Link to comment
Share on other sites

மகாபாரதம் நடந்த கதையா? - வன்னியில் இருந்து புலோலியூரான்

மகாபாரதம் உண்மையில் நடந்த கதை என்ற நம்பிக்கை பல பக்தர்கள் மத்தியில் உண்டு. விவாதங்களை நடத்தும் பொழுது மகாபாரத கதாபாத்திரங்களை உதாரணம் காட்டி பேசுகின்ற பழக்கம் கூட இவர்களிடம் உண்டு. மகாபாரதம் உண்மையில் நடந்ததா? இது குறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி அவர்கள் எழுதிய "கீதையின் மறுபக்கம்" பின்வரும் விடயங்களை சொல்கிறது.

வேதகால இலக்கியங்களில் கவுரவர்கள் மட்டும்தான் குறிப்பிடப்படுகிறார்கள் என்று எட்வேட் ஆங்கின்ஸ் என்று மகாபாரத ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு வேதகால இலக்கியங்களில் இல்லை. பிராமணங்களிலோ, சூத்திரங்களிலோ பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு எங்குமே காணப்படவில்லை. மார்க்ஸ் முல்லர் என்னும் ஆராய்ச்சியாளரின் கருத்தும் இதேதான். இதிலிருந்து கி.மு 5ஆம் நூற்றாண்டில் பாண்டவர்கள் பற்றிய குறிப்பு இல்லை என்பது தெரிகிறது.

ரிக் வேதத்திலே பரதவர்களின் அரசன் சுதாஸ்கும் ரவி நதிக்கரையில் அமைந்த 10 அரசுகளின் கூட்டாட்சிக்கும் நடைபெற்று போரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய அளவில் நடைபெற்ற இந்தப் போர் பற்றி குறிப்பிடப்படும் பொழுது, தேசிய அளவில் நடைபெற்றதாக சொல்லப்படுகின்ற மகாபாராப் போர் பற்றி எந்தக் குறிப்பும் ரிக் வேதத்திலே இல்லை. மகாபாராதப் போர் நடைபெற்று இருந்தால் நிச்சயமாக அது ரிக் வேதத்திலோ அல்லது மற்றைய வேத கால இலக்கியங்களிலோ குறிப்பிடப்பட்டு இருக்கும்.

மகாபாரதப் போர் நடைபெற்ற இடம் என்று சொல்லப்படுகின்ற குருத்திரத்தை ஒரு புனித இடம் என்று மட்டுமே வேத இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றனவே தவிர ஒரு போர் நடைபெற்ற இடமாக அது எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை.

இவைகளை விட மகாபாரத பாத்திரங்கள் குறித்தும் மகாபாரதப் போர் குறித்தும் பல முரண்பாடான தகவல்கள் மகாபாரதக் கதையிலும் வேறு இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

மகாபாரதத்தில் அர்ச்சுனன் இந்திரனின் புதல்வனாவான். ஆனால் சதபத பிராமணத்தில் இந்திரனும் அர்ச்சுனனும் ஒன்றே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை விட போரில் பங்கு பற்றிய படைகள் குறித்து மகாபாரதத்தில் தெரிவிக்கப்படுகின்ற கணக்குகள் மிகவும் வேடிக்கையானவை. மகாபாரதப் போரில் 18 "அக்ரோணிப்" படைகள் பங்குபற்றியதாக மகாபாரதம் கூறுகிறது. இதில் 11 அக்ரோணிப் படைகள் கவுரவரவர்களுடையதும், 7 பாண்டவர்களுடையதும் ஆகும்.

ஒரு அக்ரோணிப் படை என்பது பின்வரும் கணக்கை கொண்டது.

21 870 ரதங்கள்

21 800 யானைகள்

65 610 குதிரைகள்

109 350 கலாட்படையினர்

ஆகவே குருசோத்திரத்தில் அணிவகுத்து நின்ற படைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

21870 ரதங்கள் X 18 = 393 660 ரதங்கள்

21800 யானைகள் X 18 = 392 400 யானைகள்

65610 குதிரைகள் X 18 = 1 180 980 குதிரைகள்

109350 கலாட்படையினர் X 18 = 19 78 300 வீரர்கள்

எந்த ஒரு நாட்டிலாவது இத்தனை பெரிய படைகள் நிற்கக் கூடிய போர்க்கள மைதானம் உண்டா? இத்தனை பெரிய படை கி.மு 5ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க முடியுமா? கி.மு 5ஆம் நூற்றாண்டில் இருந்த மிகக் குறைந்த மக்கள் தொகையில் இவ்வளவு பேர் படைகளில் இருந்திருக்க வாய்ப்பு உண்டா? அக் காலத்தின் போக்குவரத்து வசதிகள் இத்தனை பெரிய படைகள் வருவதை அனுமதித்து இருக்குமா? ஆகவே மகாபாரதம் என்பது ஒரு அதீத கற்பனை அல்லாமல் வெறு ஒன்றும் இல்லை.

அத்துடன் மகாபாரதப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி கூறப்பட்டது பகுத்தறிவுக்கு எவ்விதத்தில் ஒவ்வாதது. 1660 மில்லியன் மக்கள் இறந்ததாக குறிப்பிடப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகும்?

அக் காலத்தில் இருந்த போர்க்கருவிகள் எப்படிப்பட்டவை என்பதை தொல்பொருள் ஆராய்சியாளர்கள் பல சான்றுகளுடன் நிரூபித்திருக்கிறார்கள். ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீக காலத்தின் ஆயுதங்களாக கற்கருவிகள், கோடரிகள், சிறிய ஈட்டிகள் போன்றவைகள் விளங்குகின்றன. இவ்வாறான நிலையில் குரோசோத்திரப் போர் நடைபெற்று இருந்தால், போர்க்கருவிகளும் இவைகளை விட தரம் குறைந்தவைகளாகவே இருந்திருக்க முடியும்.

"கீதையைப் பற்றிய உண்மைகள்" என்ற ஆங்கில நூல் இன்னும் ஒரு வேடிக்கையான விடயத்தைப் பற்றி கூறுகிறது.

பாரதப் போரில் பங்கு பற்றிய சேனைகள் - 18 ஆக்ரோணிப் படைகள்

போர் நடைபெற்ற நாட்கள் - 18

பாரதப் போர் வர்ணிக்கப்படும் காண்டங்கள் - 18

பகவத் கீதையின் அத்தியாயங்கள் - 18

போரின் பின்பு பாண்டவர் தரப்பில் எஞ்சியவர் - 6 இது 18இல் மூன்றில் ஒரு பங்கு

கவுரவர் தரப்பில் எஞ்சியவர் - 3 இது 18 இல் ஆறில் ஒரு பங்கு

யுதிஸ்டிரர் ஆண்ட ஆண்டுகள் - 36 இது 18இன் இரு மடங்கு

போர் முடிந்து கிருஸ்ணன் வாழ்ந்த ஆண்டுகள் - 36 இதுவும் 18இன் இரு மடங்குகள்.

இப்படி இந்த 18 என்ற இலக்கம் மகாபாரதக் கதையில் முக்கியத்துவம் பெற்ற இலக்கமாக மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது. பாரதக் கதை எழுதியவர் எண்ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் போலும்.

இந்த மகாபாரதம், இராமாயணம் எல்லாமே சுத்தப் புரட்டு என்று தந்தை பெரியார் சொல்வார். இராமாயணம் "திரேதாயுகத்தில்" நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு யுகம் என்பது 1 296 000 வருடங்கள் என்று கணக்கு சொல்லப்படுகிறது. ஆனால் ராமன் 5 000 000 வருடங்கள் ஆண்டான் என்று இராமாயணம் சொல்லுகிறது. இப்படி பகுத்தறிவுக்கு எந்த வகையிலும் பொருந்தாத கணக்குகள் மகாபாரதத்தலும் , இராமாயணத்திலும் விரவிக் கிடக்கின்றன.

மகாபாரதம் எழுதப்பட்ட காலம் காட்டுமிராண்டிக் காலம். நீதி, ஒழுக்கம், கற்பு, அகிம்சை போன்ற சிந்தனைகள் வளராத காலம். ஆனால் பிற்காலத்தில் கற்பு, ஒழுக்கம் போன்ற சிந்தனைகள் வளர்ந்தன. இராமாயணம் புனையப்பட்டதன் காரணங்களில் ஒன்றாக இதையும் தந்தை பெரியார் சுட்டிக்காட்டுவார்.

மொத்தத்தில் மகாபாரதமோ, இராமாயணமோ, புராணக் கதைகளோ நடந்த வரலாறுகள் அல்ல. இதை எமது மக்கள் பகுத்தறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

இது சில மாதங்களிற்கு முன்பு வெப்ஈழத்தில் வெளிவந்த கட்டுரை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.