Jump to content

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று

May 12, 2019

1 Min Read

ipl-2019.png?resize=800%2C43112 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்றையதினம் நடைபெறவுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டி, ஹைதராபத்தில் இன்றிரவு ஆரம்பமாகவுள்ளது.

ஐபிஎல்லின் இந்தக் சீசனில் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டி உட்பட 3 போட்டிகளிலும் மும்பை அணியே வென்றுள்ள நிலையில் இவ்விரு அணிகளும் நான்காவது தடவையாக போட்டியிடவுள்ளன.

சென்னை அணி இதுவரை 8ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளதுடன், 3 போட்டிகளில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ள அதேவேளை மும்பை அணி 5 ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 ஆண்டுகளிலும் மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/121410/

 

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொலார்ட் அதிரடி – சென்னை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

polard.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணிக்கு 150 ஓட்டங்களை மும்பை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இன்று சென்னை சுப்பர் கிங் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் நாணய வென்ற மும்பை அணி தலைவர் ரோஹித் ஷர்மா துடுப்பெடுத்தாட தேர்வு செய்துள்ளார். இதை தொடர்ந்து மும்பை அணி களமிறங்கியது.

அதன்பிரகாரம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் மும்பை அணி 8 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக பொலார்ட் அட்டமிழக்கத்து 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மேலும் குயின்டன் டி கொக் 29 ஓட்டங்களையும் ஈசன் ஹிசான் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை அணி சார்பாக பந்து வீச்சில் தீபக் சஹார்3 விக்கெட்களையும் ஷர்டுல் தாகூர் இம்ரான் தஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

mu-csk3.jpg

mu-csk2.jpg

mu-csk1.jpg

mu-csk.jpg

 

 

http://athavannews.com/பொலார்ட்-அதிரடி-சென்னை-அ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி

4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி

ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன் கொடுத்தார். அடுத்த ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில்  டி காக் மூன்று சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 3 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது.

டி காக் விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கையில், சர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 4 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா எம்எஸ் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 45 ரன்களாக இருந்தது.

3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். தொடக்க ஜோடி ஆட்டமிழந்ததும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. அந்த அணி 7 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், இஷான் கிஷன் 23 ரன்னிலும், குருணால் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 14.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.  3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன் ஜோடி 36 பந்தில் 37 ரன்களே எடுத்தது.

6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். அப்போது 14.4 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

பொல்லார்டு அவ்வப்போது சிக்ஸ் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 18-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸ் தூக்கினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது பந்தில் சாஹர் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்திலும் சாஹர் ரன் விட்டுக்கொடுக்கவில்லை.

கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.  பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் 

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது.  வாட்சன், டு பிளிசிஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். டு பிளிசிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் குர்ணால் பாண்டியா ஓவரில் ஸ்டேம்பிங் என்ற முறையில் வெளியேறினார். அடுத்த வந்த ரெய்னா 14 பந்துகளில் 8 ரன்களும் ராயுடு 1 ரன்களிலும் டோனி 2 ரன்களிலும் வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. மலிங்கா வீசிய 16 ஓவரில் பிராவோ ஒரு சிக்சர் வாட்சன் 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 16 ஓவரில் 108 ரன்கள் குவித்தது. வாட்சனுக்கு 3 கேட்சகளை தவற விட்டனர் மும்பை இந்தியன்ஸ் அணி.
 

சென்னை அணிக்கு 18 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டது. குர்ணால் பாண்டியா வீசிய 17-வது ஓவரில் வாட்சன் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சென்னை அணிக்கு 12 பந்துகளில் 18 மட்டுமே தேவைப்பட்டது.  

 

கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி.

 

https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/12233544/1241380/ipl-2019-final-MIvsCSK.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                  Résultat de recherche d'images pour "mumbai indian cricket team gif"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.vikatan.com/news/sports/157362-can-you-guys-see-blood-on-watson-knee.html?fbclid=IwAR1jN0Y-EvLwvkH6Si89dMW-jvAnuk3zfCIB4nrutUUcJ3T3xUeRCLny5Yc

 

``வாட்சன் காலில் ரத்தக்கறையைக் கவனித்தீர்களா?"- இன்ஸ்டாகிராமில் படத்துடன் கேள்வியெழுப்பிய ஹர்பஜன்!

வாட்சன்

வாட்சன் எதுக்கு பாஸ் மேட்ச்ல வச்சிருக்காங்க. ஐபிஎல் ஃபைனல் போட்டி வரை இந்தக் கேள்வி இருந்தது. இந்தக் கேள்விக்கு ஃபைனலில் பதிலடி கொடுத்தார் வாட்சன். போராட்ட குணமே ஒரு போர் வீரனுக்கான அடையாளம். வாட்சன் களத்தில் இருக்கும் வரை போராடிக்கொண்டே இருந்தார். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக்கட்டிக்கொண்டு இருக்க வாட்சன் வெற்றியை நோக்கிப் பயணப்பட்டார். சில தருணங்களில் அதிர்ஷ்டமும் வாட்சனுக்குக் கைகொடுத்தது. சில கேட்ச்களை மும்பை வீரர்கள் கோட்டை விடவும் செய்தனர். ஃபிட்னஸ் பிரச்னையாக இருந்தாலும் நாம் விளையாடிக்கொண்டிருப்பது ஃ பைனல். இந்த நாளை தவறவிடக் கூடாது என விளையாடிக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் முதல் ஓவரில் களமிறங்கிய வீரர் கடைசி ஓவர் வரை களத்தில் இருந்தால் எதிரணிக்கு பயம் இருக்கத்தான் செய்யும். மும்பை அணியிடம் அந்த பயம் இருந்தது. கடைசியில் விதி விளையாடியது ரன் அவுட்டில் வீழ்ந்தார் வாட்சன்.  போட்டி கைமாறியது மும்பை கோப்பையை ஏந்தியது.

ஐபிஎல்

 

 

 

 

கோப்பையை இழந்தாலும் வாட்சனின் போராட்ட குணத்தைப் பாராட்டி சி.எஸ்.கே ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டிருந்தனர். வாட்சனின் ஒரு புகைப்படத்தில் அவரது காலில் ரத்தம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. இந்தப் புகைப்படம் குறித்து ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ``நேற்றைய போட்டியின் போது வாட்சன் ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை விளையாடியுள்ளார். போட்டிக்குப் பின்னர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.