Jump to content

பரந்தன் இரசாயன தொழிற்சாலை- வாக்குறுதியை மறந்த மைத்திரி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி பரந்­தன் இர­சா­ய­னத் தொழிற்­சாலை என்­னும் பெய­ரில் கொழும்­பில் இயங்­கும் தொழிற்­சா­லையை பரந்­தன் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று அரச தலை­வர் கூறி 3மாதங் ­கள் கடந்­த­போ­தும் அந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­ வில்லை.

2018 ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் 17 ஆம் திகதி அரச தலை­வ­ரின் வடக்கு கிழக்­குக்­கான அபி­வி­ருத்­திச் செய­ல­ணிக் கூட்­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை­யில் அரச தலை­வர் அலு­வ­ல­கத்­தில் இடம்­பெற்­றது. வடக்­கில் இயங்­கிய பெரும் தொழிற்­சா­லை­க­ளில் ஒன்­றான பரந்­தன் இர­சா­ய­னத் தொழிற்­சாலை நாட்­டில் தற்­போது இயங்­கு­கின்­றதா? இல்­லையா? என்­ப­தனை உரிய அமைச்­சின் அதி­கா­ரி­கள் தெரி­யப்படுத்த வேண்­டும் என்று அந்­தக் கூட்­டத்­தில் அரச தலை­வ­ரி­டம் கோரப்­பட்­டது. உரிய அமைச்­சின் அதி­கா­ரி­கள் அது தொடர்­பில் விளக்க வேண்­டும் என்று அரச தலை­வர் தெரி­வித்­தி­ருந்­தார்.

பரந்­த­னில் இர­சா­யன தொழிற் ­சா­லைக்கு 120 ஏக்­கர் நிலம் உள்­ளது. போரால் அழி­வ­டை­துள்ள அந்­தத் தொழிற்­சாலை சீர­மைக்­கப்­பட்டு இயங்க வைக்­கப்­ப­டும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அந்­தத் தொழில்­சா­லை­யின் பெய­ரில் கொழும்­பில் தொழிற்­சாலை ஒன்று இயங்­கு­கின்­றது. அந்­தத் தொழிற்­சா­லை­யின் பெய­ரில் பல வாக­னங்­கள் திரி­கின்­றன. பரந்­தன் இர­சா­ய­னத் தொழிற்­சா­லை­யில் பணி­யாற்­றிய பலர் தற்­போ­தும் தொழில் இல்­லா­தி­ருக்­கின்­ற­னர். ஆனால் அந்­தத் தொழிற்­சா­லை­யின் பெய­ரில் இப்­போது கொழும்­பில் பலர் பணி­யாற்­று­கின்­ற­னர் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறி­த­ரன் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால இந்த விட­யங்­கள் தொடர்­பாக அதி­கா­ரி­க­ளி­டம் கேட்­ட­போது, அதி­கா­ரி­கள் ஆம் எனப் பதி­ல­ளித்­தி­ருந்­த­னர். அப்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா அந்­தத் தொழிற்­சாலை எங்­கே­னும் இயங்­கு­வது தொடர்­பில் வர­வேற்க வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தார்.

அதற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறி­த­ரன் பரந்­தன் இரா­சா­ய­னத் தொழிற்­சாலை எனில் அது பரந்­த­னில் இயங்க வேண்­டும், கொழும்­பில் இயங்­கு­வ­தா­னால் அதைக் கொழும்பு இர­சா­ய­னத் தொழிற்­சாலை எனப் பெயர் மாற்ற வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தார்.

அதை­ய­டுத்­துப் பரந்­தன் இர­சா­ய­னத் தொழிற்­சாலை என்ற பெய­ரில் இயங்­கும் தொற்­சா­லையை உட­ன­டி­யாகப் பரந்­த­னுக்கே கொண்டு செல்ல வேண்­டும் என்று அரச தலை­வர் உத்­த­ர­விட்­டார். அந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு 3 மாதங்­கள் கடந்­துள்­ள­போ­தும் அந்த விட­யத்­தில் எந்த முன்­னேற்­ற­மும் இல்லை. அரச தலை­வ­ரின் இந்த வாக்­கு­று­தி­யும் காற்­றில் பறக்­க­வி­டப்­பட்­டுள்­ளது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் குறிப்­பிட்­டுள்­ளார்.

https://newuthayan.com/story/16/பரந்தன்-இரசாயன-தொழிற்சால.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அவங்களா நன்மை செய்தாலும் நீங்கள் விடமாட்டியள் போல!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.