Jump to content

சிறுவர்கள், இளைஞர்கள் மது அருந்துவதை தடுக்க ஏன்.சிசிடிவி பொருத்தக்கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்கள், இளைஞர்கள் மது அருந்துவதை தடுக்க ஏன்.சிசிடிவி பொருத்தக்கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி

Published :  15 Mar 2019  22:00 IST
Updated :  15 Mar 2019  22:01 IST
 
 
download-17jpg

டாஸ்மாக் கடை, சிசிடிவி கேமரா- கோப்புப் படம்

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லசாமி நாச்சிமுத்து. இவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

டாஸ்மாக் கடை உள்ள இடத்துக்கு அருகே விவசாயம் நடைபெறுகிறது. இந்த இடம் வழியாக செல்லும் சாலையைதான் மாணவர்களும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக்கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் அமைத்துள்ளனர்.

அதனால், விவசாய நிலத்தில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்.” என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை? என விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்துவதை தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஏன் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை ஏன் பொருத்தக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் செயல்படும் 3000 டாஸ்மாக் கடைகளில் தற்போது சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள கடைகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் 110 கடைகள் விவசாய நிலங்களில் திட்ட அனுமதி பெறாமல் செயல்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. அதனால் திட்ட அனுமதி இல்லாமல் விவசாய நிலத்தில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும், கடைகள் மூடியதற்கான அறிக்கையை வரும் 18-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26547714.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

சிறுவர்கள், இளைஞர்கள் மது அருந்துவதை தடுக்க ஏன்.சிசிடிவி பொருத்தக்கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி

ஏராளன்... சென்னையில் மட்டும், இரண்டரை லட்சம்  சிசிடிவி கமெராக்கள்,  பொருத்தப் பட்டுள்ளதாம்.
ஆனால்... அரசுக்கு ஆபத்தான விடயங்களில், அந்தக் கமெரா பழுதாகி, 
வேலை செய்யவில்லை என்று சொல்லி விடுவார்கள்.

தமிழ் உணர்வாளர் முகிலன் காணாமல் போய்... ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது.
அவர் ஒரு ரயில் நிலையத்துக்கு செல்லும் போது...  சிசிடிவி கமெராவில் பதிவாகி உள்ளது.
அதன் பின், என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.

ஏன்... முன்னாள் முதல்வர், தனியார் வைத்திய சாலையான அப்பலோவில்  இருந்த போது...
அவரின் அறையில்,    சிசிடிவி கமெரா இருந்தது. 
அவர் மர்மமான முறையில்.. இறந்த பின், அந்தக்  கமெரா பதிவுகளை... 
இன்னும் நீதிமன்றத்தால் கூட எடுக்க முடியவில்லை.  இதுதான்.... இந்தியாவின் நிலைமை.

தமிழ் நாட்டின்  முதல்வராக... இருக்கும் போதே, ஒருவர் மர்மமான முறையில் இறந்தும்,
உண்மைகளை கொண்டு வரமுடியாத நிலையில் தான்... தமிழக நீதிமன்றங்கள் உள்ளது.

பெரும்பாலான  மது ஆலைகளின் முதலாளிகள் எல்லோருமே...
தி.மு.க., அ தி.மு.க. கட்சிகளின்.. முதல் தரத்திலுள்ள  தலைவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

இப்படி... இருக்க, அவர்கள் எப்படி... மதுவால் வரும் வருமானத்தை இழக்க விரும்புவார்கள்?
அவர்களுக்கு... சிறுவன் குடித்தால் என்ன, குடும்பத்து தலைவன் குடித்தால் என்ன... 
என்ற மன நிலையில், காசை எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள்.

நீதி மன்றம் ஒழுங்காக இருந்தால், குற்றம் குறைந்து விடும்.
இதுக்கு.... சோமாலிய நீதிமன்றத்தில், நீதிபதியே...  வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற மாதிரி...
தீர்ப்பு வழங்கினால் தான்... அரசியல் வாதிகள் திருந்துவார்கள்.

பிற் குறிப்பு:  சோமாலிய நீதிபதியின், தீர்ப்பை நீங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால்..
ஒரு சொல்லு சொல்லுங்கள், உடனே... இணைத்து விடுகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பிற் குறிப்பு:  சோமாலிய நீதிபதியின், தீர்ப்பை நீங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால்..
ஒரு சொல்லு சொல்லுங்கள், உடனே... இணைத்து விடுகின்றேன். 

இண்டைக்கு வேண்டாம்  சிறித்தம்பி...😎

பிறகு இன்னொரு நாளைக்கு அவருக்கு போட்டு காட்டுவம். ஏனெண்டால் இண்டைக்கு வெள்ளிக்கிழமை......நிர்வாகம் கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு திரியிற நாள் சரியோ.....


வெள்ளிக்கிழமையிலை இப்பிடி பக்தி பரவசமாய் இருந்திட்டால்  சோலியில்லை---:grin:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்ட சாராயத்தில் கொஞ்சூண்டு தேத்தண்ணி "டிகாசன்" கலப்பதற்கு பேர் சரக்கு எண்டால் அப்போ உண்மையாக வெளிநாட்டில் விற்பதற்கு பேர் என்ன ..? இப்படியான சரக்கை அடித்து மட்டையாகி, காலையில் தலைவலி வந்து ,  கிட்னி எல்லாம் சட்னி ஆகி மாண்டவர் கோடான கோடியப்பா .. ரப்பா சரக்கு .. 🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.