Jump to content

தமிழை ஏந்திய திருமகனார் -


Recommended Posts

Tribute to the profound personality who created Ariviyalnagar University Complex - தமிழை ஏந்திய திருமகனார் -
        தடங்களை வரிக்கும் பெருங்கவிதை!
******-*****-******-******-******-*****-******
தாயகத்துப் பயணத்திலே
வழித்துணையாய் வாழ்ந்தவன்
தலைமகனுக்கோர் அண்ணனாகி
தனித்துவனாய் நின்றவன்!.

கருத்தினிலே கண்ணியத்தை
குருத்தினிலே கண்டதனால்
உருத்துடனே உத்தமனின்
உறவுமாகிக் கொண்டவன்!

பெருத்தவோர் வங்கியை
அழுத்தமாய் ஆண்டதால்
பொருத்தமாய்ப் பொறுப்பினை
விருத்தமாய்ப் பெற்றவன்!

நிதித்துறை என்றவோர்
நிகருயர் அலகினை
மதிப்புடன் ஆண்டிடும்
பொறுப்பினைப் பெற்றவன்!.
 
இரண்டு பவுண் தங்கத்தினால்
திரண்டு வந்த பங்களிப்பால்
இருண்ட எங்கள் கிழக்கினுக்கோர்
இன்பவொளி ஏற்றுவித்தான்!.

விதவிதமாய்ப் பாடுபட்டுச்
சதக்கணக்கில் சேர்த்தபணம்
வீண்விரையம் ஆகிடாமல்
வினைத்திறனாய்ச் சேகரித்தான்!.

பட்டகடன் தீர்த்துவைக்கப்
பகலிரவாய் உழைக்க வைத்தே
மீட்புநிதி மீளளிப்பில்
மீண்டுபெரு மூச்சு விட்டான்!.

வருவாய்க்கோர் பகுதியினை
பெருவாயாய் உருவாக்கி
வரியாலே நிதியீட்டும்
வளம்தன்னைக் காட்டுவித்தான்!.

ஆயத்தின் அலகுக்கோர்
ஆளுகையை அமைத்தன்று
ஆடம்பரம் அத்தனைக்கும்
ஆயத்தீர்வை விதிக்க வைத்தான்!.

வந்த வருவாயை வைத்து
சொந்தமாக உழைத்திடவே
அந்த நாளின் மன்னர்பேரில்
வாணிபங்கள் பலவும் வைத்தான்!.

காட்டு நிலம் பண்படுத்தி
மேட்டுநிலமாய்ப் பெருக்கி
வாட்டும்பசி வதையைப்போக்க
தோட்டங்களும் தோற்றுவித்தான்!

கால்நடைகள் வளம்பெருக்க
கால்நடையாய்க் காடலைந்து
கண்ணயர்வைத் தள்ளிவைத்து
பண்ணைகளைப் பெருக்குவித்தான்!

சதக்கணக்கும் சிதறிடாமல்
முழுக்கணக்கும் செவ்வையிட
அதற்கெனவோர் கணக்காய்வை
அழுத்தமாகத் தானமைத்தான்!.

கணக்கியலும் கணக்காய்வும்
நிதியாள்கைக் கொள்கையதும்
நுணுக்கங்களை ஆய்ந்தறியக்
கல்லூரிகள் தோற்றுவித்தான்!. 

நாமுழைத்த உழைப்பில்வந்த
நாலு தேட்டம் சேர்த்துவைக்க
நமக்கெனவோர் வைப்பகத்தை
நம்ம நாட்டில் தந்துவைத்தான்!.

சேரமன்னன் பேரினிலோ
செம்மையுறு வணிகம் வைத்தான்
சேர்ந்து பலர் பணிபுரிய
செயலுறநெல் ஆலைவைத்தான்!

சோழமக ராசன் பேரில்
சொந்தமாகக் கடைகளிட்டான்
சோற்றுப் பஞ்சம் தீர்த்துவைக்க
சோர்வுநீங்கி உழைக்கவைத்தான்!

பாண்டியனார் பேரில்நல்ல
பல்சரக்கைப் போட்டுவித்தான்
வேண்டியநம் தேவைகளை
ஒருகுடையில் வாங்கவைத்தான்!.

வன்னியனின் வளப்பெயரால்
வலைத்தளத்தை வளர்த்துவிட்டான்
வன்னியரின் தேவைக்கேற்பத்
தோலைபேசித் தொடர்புமிட்டான்!.

இளவேனில் என்றபெரு
விருட்சமொன்றை நாட்டுவித்தான்
அதனடியில் அந்தரித்தோர்
இழைப்பாற இடம்கொடுத்தார்!.

தாயகத்தில் தனித்துவமாய்
தங்கநகைத் தளங்களிட்டான்
தரம்குறையாத் தங்கங்களைத்
தக்கவிலைக் குவந்தளித்தான்!.

வன்னியெங்கும் வலம்வரவே
வசுவண்டிச் சேவையிட்டான்
ஆக்கபூர்வச் சேவையாகப்
போக்குவரவுக் கழகம் வைத்தான்!.

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை
பெருந்திரளாய் நாட்டிவைத்தான்
பெருந்தோட்டப் பகுதியினால்
பெரும் இலாபம் ஈட்ட வைத்தான்!.

வணகவள நலன் பெருக்க
நலன்பேணல் நிருவகித்தான்!
வாணிபத்தால் வளம்பெருக்க
ஒன்றியத்தை ஒருங்கமைத்தான்!.

நாட்டில் நல்ல வளத்தையாக்கி
நாலுடைமை சேர்த்துவைத்தான்
கடமையினில் கண்ணைவைத்தே
உடமைப் பகுதி தோற்றுவித்தான்!.

நிலங்களெங்கும் பரந்தபேர்க்குத்
தேவைகளைத் தீர்த்துவைத்தான்
வளங்களதைப் பகிர்ந்தளிக்க
வழங்கல் பகுதி ஆக்கிவைத்தான்!.

தரிசுநிலத் தரையிலெல்லாம்
தக்கபயிர் விதை விதைத்தான்
தெரிவுசெய்த நிலத்திலெல்லாம்
போகப் பயிர் பலவளர்த்தான்!.

காசுப் பயிர் கண்டாய்ந்து
காரியத்தை முன்னெடுத்தான்
"கயூ" மரத்தில் காடுவைத்தே
காசுழைக்க முனைப்பெடுத்தான்!

வேப்பமர விலையறிந்து
வேப்பங்காடும் வளர்த்தெடுத்தான்
புளியமரப் பயனறிந்து
புளியங்காடும் புனரமைத்தான்!.

தேக்குமரத் தேவைதீர்க்கத்
தெருவில்கூடத் தேக்குவைத்தான்
பூக்குமரத் தரவையெங்கும்
பயன்மரத்தை ஊக்குவித்தான்!

தாய்நிலத்தில் தன்நிறைவாய்ப்
பல்மரத்தை நாட்டுவித்தான்
தன்வாழ்வில் துணையுமின்றித்
தனிமரமாய்த் தனித்துநின்றான்!.

தமிழ்விந்தில் பிறந்தவர்க்குத்
தமிழ்ப்பெயரைச் சூட்டு என்றான்
தமிழிச்சி பால்குடித்தால்
தமிழ்பேசிப் பழகென்றான்!.

தமிழர் நாம் அறிந்திருக்காத்
தமிழ்ச் சொற்கள் காட்டுவித்தான்
தமிழ்மொழியில் பிறமொழியின்
கலப்படத்தை நீக்குவித்தான்!.

நிதித்துறையில் ஓய்வுபெற்றே
படைத்துறையில் பணியை ஏற்றான்
தனித்துவமாய் படைத்துறையில்
செயலரெனச் சேவையிட்டான்!.

தமிழையேந்தித் தாய்நிலத்தில்
தனிப்பெருமை நாட்டி நின்றான்
தமிழுக்காக வாழ்ந்து இன்று
தமிழ்வரலாறாகி வீழ்ந்தான்!.
               - நன்றி -
        வன்னியூர்- வரன்
              10/03/2019

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.