Jump to content

திருகோணமலையில் அமெரிக்காவின் படைத்தளமா? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யதீந்திரா 
திருகோணமலையில், அமெரிக்கா படைத்தளத்தளமொன்றை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதான செய்திகளை ஆங்காங்கே காணக் கூடியதாக இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், சீனாவின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில், சீனாவின் முன்னணி படைத்தளமாக மாறுவதற்கான வாய்ப்;புக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சீனாவின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலேயே ஹம்பாந்தோட்டை சீனாவின் கைகளுக்கு சென்றிருக்கிறது. இது சீனாவின் கடன்பொறி ராஜதந்திரத்தின் (debt diplomacy ) வெற்றி என்றும் பென்ஸ் குறிப்பிட்டிருந்தார். இதே வேளை கடந்த ஆண்டு செம்டம்பரில், அமெரிக்க செனட்டர்கள் 14பேர் இணைந்து, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மார்ட்டிக்கு (James Mattis) ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர். பார்க்கிஸ்தானின் ஹவுடார் மற்றும் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் சீனா கால் பதித்திருப்பதானது, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், சீன மக்கள் இராணுவத்தின் (PLA) நிரந்தரமான இருப்புக்கு வழிவகுக்கலாம் – என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர் இதனை கருத்தில்கொண்ட, ஜேம்ஸ், ஹம்பாந்தோட்டை சீனாவின் கடற்படைத்தளமாக பயன்படுத்தப்படுமாயின், ஹம்பாந்தோட்டை ஒரு அச்சுறுத்தலாகமே அமையும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், தற்போது திருகோணமலையில் அமெரிக்கா படைத்தளமொன்றை நிறுவ முற்படுவதான செய்திகள் வெளியாகியிருக்கின்றன. லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் மகிந்த முகாமைச் சேர்ந்தவருமான, பேராசிரியர் திஸ்ஸவிதாரண, கடந்த ஜனவரியில் இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதே வேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகரவும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் இலங்கைக்குள் இடம்பெறுவதாக குறிப்பிட்டிருந்தார். இதே வேளை, கடந்த பெப்பிரவரி மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதமொன்றின் போது, ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரகசிய உடன்பாடு ஒன்று, இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். படைகளை வெளிநாடுகளில் நிறுத்தி வைப்பதை ஏற்றுக்கொள்ளும் உடன்பாடான Status of Forces Agreement (SOFA) எனப்படும், புதிய ஒப்பந்தமொன்ளறில், இலங்கை கையெழுத்திடவுள்ளதாகவும் ரத்நாயகக்க குற்றம்சாட்டியிருந்தார்.

இராணுவ தேவைகளுக்கான பொருட்கள், போக்குவரத்து தொடர்புகள் மற்றும் அயூத தளபாடங்களின் பரிவர்த்தனை ஆகியவற்றுக்காக குறித்த நாடுகளை பயன்படுத்திக்கொள்வதற்கான Acquisition and Cross-Servicing Agreement (ACSA) எனப்படும், உடன்பாடு ஏற்கனவே அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கிறது. இந்த உடன்பாடு முதல்முதலாக 2007ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த உடன்பாட்டில் இலங்கை சார்பில் கோத்தபாய ராஜபக்சவே கையெழுத்திட்டிருந்தார். இந்த உடன்பாடு மீண்டும் 2017ஆம் ஆண்டு, மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் புதுப்பிக்கப்பட்டது. அமெரிக்கா மேற்படி உடன்பாட்டை 76 நாடுகளுடன் செய்திருக்கிறது. ரத்நாயக்க குறிப்பிடுவது போன்று, படைகள் தரித்து நிற்பதற்கான ‘சோபா’ உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடுமாயின், அதன் பின்னர் அமெரிக்க படைத்தளம் என்பது ஒரு விடயமல்ல. ஆனால் திருகோணமலையில் அமெரிக்கப் படைத்தளம் என்னும் கருத்தை அமெரிக்க தூதரகம் நிராகரித்திருக்கிறது. அதே போன்று அரசாங்கமும் நிராகரித்திருகின்றது.

z_p-29-Trinco-02-500x454

ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில், திருகோணமலையை அமெரிக்காவின் கடற்படை தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கான உடன்பாடு காணப்பட்டது. அந்தக் காலத்தில அமெரிக்கா, திருகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை நிறுவப்போவதான கதைகளும் அடிபட்டன. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்தியா அதில் தலையீடு செய்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில், திருகோணமலை துறைமுகம் மற்றும் இலங்கையின் ஏனைய எந்தவொரு துறைமுகங்களையும் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஏனைய நாடுகளின் இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது என்னும் ஏற்பாடும் உள்நுழைக்கப்பட்டது. இந்த உடன்பாடு இப்போதும் உண்டு. ஆனால் அப்போதிருந்த இந்தியாவும் அமெரிக்காவும் இப்போதில்லை. சீனாவை ஒரு வரையறைக்குள் முடக்குதல் என்னும் அமெரிக்க மூலோபாயத்தின் பிரதான பங்காளியாக இந்தியாவே இருக்கிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில், இலங்கையை மையப்படுத்தி அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு நேர்கோட்டில் சந்திப்பதற்கான வாய்புக்களே ஏராளம்.

மூலோபாய ரீதியில், இலங்கை, குறிப்பாக திருகோணமலை கடற்படை தளத்தை உருவாக்குவதற்கு ஏற்றவாறான, அமைவிடத்தை கொண்டிருக்கிறது என்றே பல்வேறு இராணுவ நிபுனர்களும் கருதுகின்றனர். இது தொடர்பில் ளுஅயடட றயச துழரசயெட தளத்தில் எழுதியிருக்கும், ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை அதிகாரியும் முலோபாய கற்கைகள் தொடர்பான பேராசிரியருமான டேவிட் அன்டர்சன் (Dr. David A. Anderson) மூலோபாய நோக்கிலும், பாதுகாப்பு நலன்களின் அடிப்படையிலும் பார்த்தால், இலங்கை மிகவும் பொருத்தமானதொரு அமைவிடத்தில் இருக்கிறது. இது அமெரிக்காவின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியா மற்றும் இலங்கையினது, பல்வேறு நலன்களுக்குமான ஒன்று. அதாவது, கடல் பாதுகாப்பு, அனுவாயுத பரவல், கடற்கொள்ளை, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல் அது மட்டுமன்றி சீனச் செல்வாக்கின் விஸ்தரிப்பை குறைத்தல் என பல்வேறு விடயங்களை கையாளுவதற்கு ஏற்றவாறான ஒரு கடற்படை தளத்திற்கு இலங்கை மிகவும் பொருத்தமானது என்கிறார் அன்டர்சன்.

இந்த பின்புலத்தில் பார்த்தால், திருகோணமலையை இலக்கு வைப்பதற்கான அனைத்து அவசியப்பாடுகளும் உண்டு. ஆனால் தெற்கின் சில அரசியல்வாதிகள் கூறுவது போன்று அது உண்மைதானா என்பதுதான் இங்கு கேள்வி. தமிழ் நிலையில் நோக்கினால் அது உண்மையாக இருப்பின் அது ஒரு பிரச்சினைக்குரிய விடயமுமல்ல. ஆனால் இவற்றை எவ்வாறு விளங்கிக் கொண்டு செயலாற்றுவது என்பதுதான ;பிரச்சினையானது? அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கு இலங்கைக்குள் அதிகரித்துவருதாக, சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. ஆனால் தற்போது அவ்வாறானதொரு கட்சியுடன், கொள்கைசார்ந்து உடன்பாடு கண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகிறது. அமெரிக்காவின் தலையீடுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் கூட்டமைப்பும், அமெரிக்காவின் தலையீடுகளை, ஜெனிவா பிரேரரணை உள்ளடங்களால, கடுமையாக எதிர்த்துவரும் ஜே.வி.பியும் எவ்வாறு கொள்கைசார்ந்து உடன்பட முடியும்?

z_p-29-Trinco-u

2011இல் ஒபாமா நிர்வாகம் ‘ஆசிய மையக் கொள்கை’ (pivot to Asia) யை பிரகடணம் செய்தது. அமெரிக்காவின் மூன்றில் இரண்டு கடற்படையையும் விமானப் படையையும் ( two-thirds of US naval and air forces) ஆசிய – பசுபிக் பிராந்தியத்தை நோக்கி நகர்;த்துவதுதான் மேற்படி கொள்கையின் பிரதான இலக்கு. இது முற்றிலும் சீன விரிவாக்கத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இதன் விளைவாக தற்போது சீனாவை சுற்றி 400 அமெரிக்க படைத்தளங்கள் நிலைகொண்டுள்ளன. ஜப்பானிய தீவான ஒக்கினாவா மற்றும் தென்கொரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ஏவுகணைகள் சீனாவை நேரடியாகவே குறிவைத்துள்ளது. உண்மையில் ஓபாமாவின் ஆசிய மையக் கொள்கையின் பின்னர்தான் சீனாவும் தனது கடற்படையை விரிவாக்குவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டியது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்திருந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சீனா, இலங்கைக்குள் தனது கால்களை வலுவாக ஊன்றத் தொடங்கியது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுண்டு. அதாவது, ஒபாமா நிர்வாகம் ஆசிய மையக் கொள்கையை பிரகடணம் செய்த பின்புலத்தில்தான், இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற, மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்பு கூறல் என்னும் அடிப்படையில், மகிந்த ராஜபக்ச அரசின் மிது, அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியது. இதன் விளைவாகவே, 2012இல் இலங்கையின் மீதான முதலாவது அமெரிக்கப் பிரேரணை ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்கள் தொடர்ந்தன. இவ்வாறானதொரு சூழலில்தான், 2015 ஜனவரி 8இல் மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/திருகோணமலையில்-அமெரிக்-2/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.