Jump to content

சென்னையில் ஒரே வாரத்தில் போலீஸ் என மிரட்டி 2 கோடி ரூபாய் பறிப்பு: அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் ஒரே வாரத்தில் போலீஸ் என மிரட்டி 2 கோடி ரூபாய் பறிப்பு: அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published :  16 Mar 2019  16:55 IST
Updated :  16 Mar 2019  16:55 IST
 

download-4jpg

சித்தரிப்புப் படம்

சென்னையில் கடந்த வாரம் போலீஸ் எனக்கூறி ஒருவரை வேனில் ஏற்றி கடத்திச் சென்று ரூ.98 லட்சத்தை பறித்துச் சென்ற கும்பலை தேடி வரும் நிலையில் நேற்று சைதாப்பேட்டையில் மீண்டும் தனியார் நிறுவன மேலாளரிடம் அதேபாணியில் ரூ.1 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வளசரவாக்கம், பிருந்தாவன் நகரில் வசிப்பவர் உதய குமார் (40). இவர் தண்டலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Kotec Auto) அக்கவுண்ட் மேனேஜராக பணியாற்றுகிறார்.

கடந்த 14-ம் தேதி மாலை 5.30 மணியளவில் கம்பெனி ஊழியர்களின் சம்பளப் பணம் ரூ 1கோடியே 07 லட்சத்து 83 ஆயிரத்து 563 ரூபாய் ரொக்கப்பணத்துடன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அடையார் சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள அவர்களது நிறுவனத்தின் சேர்மன் சாங் மான்சிம் என்பவரைப் பார்க்க அவரது காரில் சென்றுக்கொண்டிருந்தார்.

அவருடன் காரில் அக்கவுண்ட் அசிஸ்டெண்ட் இளங்கோ இருந்தார். காரை ஓட்டுநர் வேணுகோபால் ஓட்டிச் சென்றார். கார் சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோயில் அருகில் சென்றது.

அப்போது பின்பக்கமாக அரசாங்க பொலீரோ ஜீப் போன்று ஒரு வாகனம் அவர்களை விரட்டி வந்து மடக்கி நிறுத்தியுள்ளது. காரிலிருந்து காக்கி பேன்ட், வெள்ளை சட்டையணிந்த 6 நபர்கள் இறங்கியுள்ளனர். ஆஜானுபாகுவாக இருந்த அவர்களைப்பார்த்து பயந்துப்போன உதயகுமார் யார் நீங்கள் எங்கள் காரை ஏன் மடக்கினீர்கள் என கேட்டுள்ளார்.

நாங்கள் போலீஸ் என்று கூறிய அவர்கள் உங்கள் அனைவர்மீதும் சந்தேகம் இருக்கிறது, வாருங்கள் விசாரிக்கவேண்டும் என அனைவரையும் தங்கள் பொலீரோ ஜீப்பில் ஏற்றிக்கொள்ள அதில் ஒரு நபர் உதயகுமார் வந்த காரை எடுத்துக் கொண்டும், மற்றவர்களை பொலீரோ வாகனத்தில் ஏற்றிக் கொண்டும் பூந்தமல்லி வழியாக வண்டலூர் செல்லும் சாலையில் சென்றுள்ளனர்.

போலீஸ் என்கிறீர்கள் எங்கே எங்களைக் கொண்டுச் செல்கிறீர்கள், எங்கள் முதலாளியுடன் பேசவேண்டும் என உதயகுமார் கூற பேசாமல் வாருங்கள் நாங்கள் ஸ்பெஷல் டீம் எனக்கூறிய அவர்கள் அனைவரது செல்போனையும் பிடுங்கிகொண்டனர்.

பின்னர் பூந்தமல்லிக்கு முன்பாக 8 கி.மீ. தொலைவில் மூன்று பேரையும் இறக்கி விட்டு விட்டு பணம் மற்றும் மூன்று செல் போனுடன் உதயகுமாரின் காரையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து மறுநாள் மாலை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் உதயகுமார் மற்றும் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் ஐபிசி 341, 323, 392 , 397, 319, 506(ii)  ஆகியப்பிரிவின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்தவர்களுடன் போராடாமல், வாகனத்தில் தப்பிச் சென்றவர்களை விரட்டியும் பிடிக்காமல், உடனடியாக போலீஸுக்கும் சொல்லாமல் நேரம் கடத்தியதால் போலீஸாருக்கு, உதயகுமார், இளங்கோ, ஓட்டுநர் வேணுகோபால் மற்றும் பொது மேலாளரின் ஓட்டுநர் மாசிலாமணி (50) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களிடம் தெற்கு கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்,  தெற்கு, இணை ஆணையாளர் மகேஷ்வரி, துணை ஆணையர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்துள்ள இடங்களிலிருந்து சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

வழிப்பறி சம்பவம் தொடர்பாக  கிண்டி உதவி ஆணையர், சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மாலை நேரத்தில் ஜன சந்தடிமிக்க இடத்தில் திட்டம்போட்டு தெளிவாக கொள்ளைச்சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த 10-ம் தேதி கீழ்ப்பாக்கத்தில் பேருந்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவரிடம் ரூ.98 லட்சத்தை போலீஸ் எனக்கூறி பேருந்தைவிட்டு இறக்கி தங்கள் வாகனத்தில் ஏற்றிச்சென்று பணத்தைப்பறித்துவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ஏழுகிணறு, பெரியண்ணன் முதலி தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (26), இவரது மாமா கண்ணன் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 9-ம் தேதி, பர்மா பஜார் பகுதியில் வியாபாரம் செய்யும் 1) கிருஷ்ணன், 2) முனுசாமி, 3) விஜயகுமார் 4) பிரதீப்குமார், 5) சுல்தான் ஆகியோரிடம் பணம் ரூபாய். 80 லட்சம் பெற்றுள்ளார், உடன் கடையில் இருந்த பணம் ரூ.18 லட்சம் என மொத்தம் ரூ.98 லட்சத்தை கோபிநாத்திடம் கொடுத்தனுப்பியுள்ளார்.

பணத்துடன் கோபிநாத் கடந்த 09-ம் தேதி இரவு பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து 15F பேருந்தில் ஏறி கோயம்பேடு சென்றுள்ளார். இரவு 9 மணியளவில் பேருந்து டெயிலர்ஸ் ரோடு பேருந்து நிறுத்தம் வந்தபோது இன்னோவா கார் ஒன்று பேருந்தை மறித்து நின்றுள்ளது.

உடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் சேர்ந்து பேருந்துக்குள் ஏறி தாங்கள் போலீஸ் எனக்கூறி, கஞ்சா கடத்துகிறாயா என மிரட்டி, கோபிநாத்தை பிடித்து வலுக்கட்டாயமாக பேருந்தைவிட்டு இறக்கி கைவிலங்குப்போட்டு தாங்கள் வந்த காரில் ஏற்றி கடத்தியுள்ளனர்.

கார் வண்டலூர் அருகே சென்றபோது கோபிநாத்தை தாக்கி அடித்து கீழே இறக்கிவிட்டு பணத்துடன் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து மறுநாள் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் கோபிநாத் அளித்த புகாரின்பேரில் போலீஸார் ஐபிசி 363, 392, 394 ஆகியப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் தொடர்பாக கோபிநாத், அவரது சித்தப்பா  கண்ணன் (39), ஏழுகிணற்றைச் சேர்ந்த சகாபுதீன் (52),  முகமது ரசாக் (26) ஆகியோரிடம் விசாரணை நடத்தி விடுவித்தனர். சமபவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேற்படி சம்பவம் நடந்த ஐந்து நாட்களில் மீண்டும் சைதாப்பேட்டையில் அதே பாணியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் இரண்டுச் சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாமோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

https://tamil.thehindu.com/tamilnadu/article26554429.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.